செய்திகள் (Tamil News)

ராமநாதபுரம் அருகே கார்-வேன் நேருக்கு நேர் மோதல்- 4 பேர் பலி

Published On 2018-10-29 13:08 GMT   |   Update On 2018-10-29 13:08 GMT
கார்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்:

மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 7-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது60). இவர் தனது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக மனைவி அம்பிகா (56) ஆகியோருடன் காரில் நேற்று ராமேசுவரத்துக்கு புறப்பட்டார்.

அவர்களுடன் பரமக்குடி அருகே உள்ள அரியக்குடி, போகலூரைச் சேர்ந்த உறவினர்கள் சித்திவிநாயகம், சுரேஷ் குடும்பத்தினரும் சென்றனர்.

சாமிகும்பிட்ட பின் இன்று காலை ராஜேந்திரன் குடும்பத்துடன் காரில் ஊருக்கு புறப்பட்டார். பகல் 11 மணிக்கு ராமநாதபுரம் அருகே உள்ள குயவன்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

அப்போது எதிரே வந்த சுற்றுலா வேன் எதிர்பாராத விதமாக கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார்-வேனின் முன் பகுதி பலத்த சேதமடைந்தது.

காரில் பயணம் செய்த ராஜேந்திரன், சித்திவிநாயகத்தின் மகன்கள் திருமுருகன் (3), சாய்ராம் (4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

சித்திவிநாயகம், அவரது மகள் சாதனாஸ்ரீ (6), உறவினர்கள் ராகசுதா (26), அம்பிகா, சுரேஷ் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதேபோல் வேனில் பயணம் செய்த நேபாள நாட்டைச் சேர்ந்த 21 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த உடனேயே அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் மருத்து வனைக்கு கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்திலேயே அம்பிகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News