செய்திகள் (Tamil News)

திருச்சுழி அருகே ஓடும் பஸ்சில் நர்சிடம் சில்மி‌ஷம்

Published On 2019-05-31 16:48 GMT   |   Update On 2019-05-31 16:48 GMT
திருச்சுழி அருகே ஓடும் பஸ்சில் நர்சிடம் சில்மி‌ஷம் செய்ததால் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

விருதுநகர்:

திருச்சுழி அருகேயுள்ள சிலுக்குபட்டியைச் சேர்ந் தவர் வேல்லட்சுமி (வயது 28). இவர் அருப்புக் கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.

வேலை முடிந்து ஊருக்கு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்தார். அதே பஸ்சில் காவலாளியாக வேலை பார்க்கும் கருப்பசாமி என்பவரும் பயணம் செய்தார். அவர் வேல்லட்சுமியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து வேல்லட்சுமி தனது உறவினர்களுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். பஸ் நிறுத்தத்தில் வேல்லட்சுமியின் உறவினர்கள் காத்திருந்தனர். பஸ் வந்ததும் கருப்பசாமியை சரமாரியாக தாக்கினர். இது குறித்து கருப்பசாமி தனது நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். இரு தரப்பினரும் ஒருவரை யொருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர். இதில் 9 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து எம்.ரெட்டியபட்டி போலீசில புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News