தமிழ்நாடு (Tamil Nadu)

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பி ஓட்டம்

Published On 2024-07-29 04:14 GMT   |   Update On 2024-07-29 04:14 GMT
  • தப்பியோடிய விசாரணை கைதியான மணிகண்டனை தேடி வருகின்றனர்.
  • சோதனை சாவடிகளிலும் போலீசார் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

நெல்லை:

நெல்லை தச்சநல்லூரை அடுத்த கரையிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மணிகண்டன்(வயது 37).

இவர் தற்போது கரையிருப்பு ரைஸ்மில் தெருவில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் மீது தூத்துக்குடி, மானூர் உள்ளிட்ட பகுதிகளில் குட்கா கடத்திய வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கடந்த 25-ந்தேதி இவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளை மத்தியச்சிறையில் அடைத்தனர்.

நேற்று முன்தினம் அவருக்கு வயிறு வலிப்பதாக கூறி உள்ளார். இதனால் ஜெயில் அதிகாரிகள் அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கைதிகள் சிகிச்சை பெறும் வார்டில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய விசாரணை கைதியான மணி கண்டனை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தச்சநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மணிகண்டனின் உறவினர் வீடுகளில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் மாநகர பகுதி முழுவதும் சோதனை சாவடிகளிலும் போலீசார் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த

Tags:    

Similar News