தமிழ்நாடு (Tamil Nadu)

திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Published On 2024-04-12 15:23 GMT   |   Update On 2024-04-12 15:29 GMT
  • கோவை, பொள்ளாச்சி, கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர்.
  • 10 ஆண்டுகால பாஜகவின் சாதனையை பற்றி பிரதமர் ஏன் பேசவில்லை என்றார்.

கோவை:

கோவையில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் கோவை, பொள்ளாச்சி, கரூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தான் ஹீரோ.

திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரசோடு துணை நிற்கும்.

நாட்டுக்கும், மாநிலங்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் ராகுல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்.

10 ஆண்டுகால பாஜகவின் சாதனையை பற்றி பிரதமர் ஏன் பேசவில்லை?

வேண்டாம் மோடி என தெற்கில் இருந்து வரும் குரல் இந்தியா முழுவதும் கேட்கட்டும்.

பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டதால் ராகுலின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற பா.ஜ.க. அரசின் நடவடிக்கையால் ஏழை மக்களின் பாக்கெட்டில் இருந்த பணம் பறிக்கப்பட்டது.

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியும், தொழில் வளர்ச்சிக்கும் போய்விடும்.

அதிமுக பற்றி சொல்ல எதுவும் இல்லை, சிம்ப்ளி வேஸ்ட் என தெரிவித்தார்.

Tags:    

Similar News