கள்ளச்சாராய விவகாரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் அமைச்சர்கள் குழு
- கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
- தற்போதைய களநிலவரம், வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூற உள்ளனர்.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் போலீஸ் நிலையத்துக்கு பின்பகுதியில் அமைந்துள்ள கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளது. மேலும் கள்ளச்சாராயத்தை குடித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த உடனே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் ஆகியோரை கள்ளக்குறிச்சிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதன்படி, சம்பவ இடத்தில் கள நிலவரங்களை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க உள்ளனர். தற்போதைய களநிலவரம், வழங்கப்படக் கூடிய சிகிச்சைகள் உள்ளிட்டவை குறித்து எடுத்து கூற உள்ளனர்.