தமிழ்நாடு
நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவன்- பெண்கள் படுகாயம் - வைரல் வீடியோ
- அங்கு இருந்த சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கினான்.
- 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் அரசு மருத்துவமனையில் வழக்கமாக பொதுமக்கள் சிகிச்சைகாக வந்து கொண்டிருந்தனர். அப்போது சிகிச்சைக்காக நோயாளியுடன் ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை இறக்கி உள்ளே அழைத்து சென்றார்.
இந்நிலையில் அங்கு இருந்த சிறுவன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏறி வாகனத்தை இயக்கினான். அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்று அங்கு நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. அதில் 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அந்த 2 பெண்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
ஆம்புலன்சை இயக்கிய சிறுவன் - 2 பெண்கள் மீது மோதல்#Cuddalore #Ambulance #Accident #MMNews #Maalaimalar pic.twitter.com/cBrtF1OX5O
— Maalai Malar தமிழ் (@maalaimalar) May 23, 2024