search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது.
    • இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.

    இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் ஏற்கனவே ஈரமான அவுட்பீல்டு காரணமாக டாஸ் தாமதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அரைமணி நேர தாமதத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.

    அப்போது காயின் எங்க என்று கேட்ட ரோகித் சர்மா, டாஸ் காயினை பேண்ட் பாக்கெட்டிற்குள் போட்டு அதனை மறந்து காணாமல் தேடியுள்ளார். அப்போது பாபர் அசாம் பாக்கெட்டில் இருக்கிறது என்று சிரித்து கொண்டார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங் தேர்வு செய்தார்.

    இதேபோன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பிறகு பந்து வீச்சா அல்லது பேட்டிங்கா என்பது குறித்து அந்த நேரத்தில் மறந்து விட்டார். பின்பு சிறிது நேரம் யோசித்து பதில் அளித்து இது தொடர்பான வீடியோ அந்த சமயத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
    • யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

    இந்த தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியிலேயே அமெரிக்காவிடம் தோற்றது.

    இந்நிலையில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் சுமாராக செயல்படும் பாபர் அசாம் இந்திய வீரர் விராட் கோலியின் காலணிகளுக்கு கூட நெருங்க முடியாது என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியா கடுமையாக விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    பாபர் அசாம் சதமடித்ததும் அடுத்த நாள் அவரை விராட் கோலியுடன் ஒப்பிடுவதை உங்களால் பார்க்க முடியும். ஆனால் அவரால் விராட் கோலியின் காலணிகளை கூட நெருங்க முடியாது. அமெரிக்க பவுலர்கள் அவரை சிக்க வைத்தனர். அவர்களுக்கு எதிராக பாபர் அசாம் விளையாட முடியாமல் திணறினார். 40+ ரன்களில் அவுட்டான அவர் கடைசி வரை நின்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அது பாகிஸ்தான் ஒரு தலைப்பட்சமாக வெல்ல வேண்டிய போட்டியாகும். இந்தியாவை தோற்கடிக்கும் திறமை அவர்களிடம் இல்லை.

    உலகக் கோப்பை வரும் போதெல்லாம் அவர்கள் தங்களுடைய பவுலிங் பற்றி பாராட்டுகின்றனர். ஆனால் அது தான் முதல் போட்டியில் அவர்களுடைய தோல்விக்கு காரணமாகும். அவர்களுடைய ஈகோ எப்போதும் முடிவடைவதில்லை. பாகிஸ்தான் அணி குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. யாரும் நாட்டைப் பற்றி நினைப்பதில்லை. சில வீரர்களின் கேரியரில் நீங்கள் விளையாடினால் இதுவே நடக்கும்.

    இவ்வாறு கனேரியா கூறினார்.

    • இந்த தொடரில் அமெரிக்காவிடம் தோற்று பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
    • இதனால் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 19-வது லீக் போட்டி இன்று நியூயார்க்கில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யபடவில்லை.

    இந்த தொடரில் அமெரிக்காவிடம் தோற்று பாகிஸ்தான் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேற வேண்டுமானால், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


    • வெஸ்ட் இண்டீஸ் அணியானது 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தியது.
    • இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களைக் குவித்தது.

    இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய உகாண்டா அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சீட்டுக்கட்டுப்போல் சரிந்தது. இதன் காரணமாக உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 134 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய அகீல் ஹொசைன் 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    இந்நிலையில் 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியதன் மூலம், டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் எனும் சாதனையை தனதாக்கியுள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எந்த ஒரு வீரரும் டி20 உலகக்கோப்பை தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றாதது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் இன்று தொடங்குகிறது.
    • இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரிகளில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    இதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்திய அணியின் பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது.

    இந்நிலையில் வீரர்களின் பயிற்சியை பார்க்க வந்த ரசிகர்கள் கம்பி வேலி போட்டிருந்ததற்கு வெளியே நின்று பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரோகித், ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களை பக்கத்தில் சென்று சந்தித்தார். அப்போது ஒரு ரசிகர் ரோகித் சர்மாவை கட்டியணைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    உடனே ரோகித், கம்பி வேலி மத்தியில் இருக்கும் போது எப்படி கட்டியணைப்பது என யோசித்தாவறு நிற்க, உடனே பரவாயில்லை என்பது போல கம்பி வேலியுடன் சேர்ந்து அந்த ரசிகரை கட்டியணைத்தார். உடனே ரசிகர் மற்றும் ரோகித் சிரித்தவாறு அந்த இடத்தில் இருந்து விலகி சென்றனர்.

    இந்த வீடியோ Cute-ஆ இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    • உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    கயானா:

    9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - உகாண்டா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் குவித்தது.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 44 ரன்கள் எடுத்தார். ரசல் 17 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். உகாண்டா தரப்பில் பிரையன் மசாபா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து களம் இறங்கிய உகாண்டா அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    இறுதியில் உகாண்டா அணி 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இந்நிலையில் உகாண்டா அணி இந்த ஆட்டத்தில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனதன் மூலம் டி20 உலககோப்பை வரலாற்றில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி என்ற நெதர்லாந்தின் சாதனையை சமன் செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நெதர்லாந்து 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.

    டி20 உலககோப்பை தொடரில் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆன அணி:-

    39 ரன் - நெதர்லாந்து - இலங்கை - 2014

    39 ரன் - உகாண்டா - வெஸ்ட் இண்டீஸ் - 2024

    44 ரன் - நெதர்லாந்து - இலங்கை - 2021

    55 ரன் - வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து - 2021

    58 ரன் - உகாண்டா - ஆப்கானிஸ்தான் - 2024

    • வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் உகாண்டா 39 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அபாரமாக பந்துவீசிய அகேல் ஹொசைன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    கயானா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கயானாவில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், உகாண்டா அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 173 ரன்கள் குவித்தது. ஜான்சன் சார்லஸ் 44 ரன்னும், ரசல் 130 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து, 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சியாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில், உகாண்டா அணி 12 ஓவரில் 39 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் 5 விக்கெட் வீழ்த்திய அகேல் ஹொசைனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.

    • அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது.
    • பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இன்றிரவு நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. உலகக் கோப்பை தொடரின் அதிகம் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றாக இந்தியா-பாகிஸ்தான் அணிகளின் மோதல் இருக்கிறது.

    அந்த வகையில், இன்றைய போட்டிக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு அணியாக அனைவரும் சிறப்பாக பங்காற்ற வேண்டும் என்று தான் நினைப்பதாக தெரிவித்தார்.

    இது குறித்து பேசிய அவர், "போட்டியில் வெற்றி பெற ஒன்றிரண்டு வீரர்களை மட்டும் சார்ந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஒரு அணியாக நான் உள்பட 11 பேரும் பங்காற்ற வேண்டும். அணியில் முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் போட்டியில் முக்கிய பங்காற்ற போகின்றார்கள். ஆனாலும், அனைவரும் அவர்களால் முடிந்த பங்களிப்பை வழங்க வேண்டும்."

    "வங்காளதேசம் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விராட் கோலி விளையாடவில்லை. ஆனால் இந்த போட்டிக்கு முன்பு அவர் போதுமான பயிற்சியை எடுத்துக் கொண்டுள்ளார். உலகின் பல்வேறு பகுதிகளிலும், மிக முக்கிய தொடர்களில் விளையாடிய அனுபவம் கொண்டவர் விராட். அந்த அனுபவத்தை எதுவும் வீழ்த்த முடியாது," என்று தெரிவித்தார். 

    • டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
    • நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று அரங்கேறுகிறது.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா ஒரு முறை மோதுகின்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

    இந்த கிரிக்கெட் திருவிழாவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்நோக்கும் பரம எதிரிகளான இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் (ஏ பிரிவு) நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அரங்கேறுகிறது.

    34 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்திற்கு இந்திய ரசிகர்களின் வருகையே அதிகமாக இருக்கும் என்பதால், அவர்களின் உற்சாகம் நமது வீரர்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும்.

    இந்திய அணி

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடியது. அயர்லாந்தை 96 ரன்னில் மடக்கிய இந்தியா 12.2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது.

    கேப்டன் ரோகித் சர்மாவின் அரைசதமும், துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (3 விக்கெட்), அர்ஷ்தீப்சிங் (2 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (2 விக்கெட்) ஆகியோரது விக்கெட் ஜாலமும் வெற்றியை சுலபமாக்கின.

    ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான சவால் வேறு மாதிரியானது. அந்த அணியில் ஷகீன் ஷா அப்ரிடி, முகமது அமிர், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப் என்று அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

    நியூயார்க் ஆடுகளத்தில் பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆவதால், இவர்களை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு கிட்டும். அதை மனதில் வைத்து விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா சிறப்பு பயிற்சியில் ஈடுபட்டனர்.

    பயிற்சியின் போது கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பந்து தாக்கி பெருவிரலில் காயம் ஏற்பட்டது. ஆனால் களம் இறங்குவதில் சிக்கல் இருக்காது என்று தெரிகிறது. சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஷிவம் துபே ஆகியோரும் பேட்டிங்கில் கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் பும்ரா, அர்ஷ்தீப்சிங், சிராஜ், பாண்ட்யா கூட்டணி மிரட்ட காத்திருக்கிறது.

    பாகிஸ்தான் அணி

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் அமெரிக்காவிடம் சூப்பர் ஓவரில் மண்ணை கவ்வியது. இதனால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகம். ஏனெனில் இந்தியாவிடமும் தோற்றால் ஏறக்குறைய அவர்களின் சூப்பர்8 கனவு கலைந்து விடும்.

    எனவே களத்தில் முழுமூச்சுடன் போராடுவார்கள். பாபர் அசாம், முகமது ரிஸ்வான், இப்திகர் அகமது, பஹர் ஜமான் ஆகியோரைத் தான் அந்த அணி பேட்டிங்கில் நம்பி இருக்கிறது. இவர்கள் நிலைத்து நின்று ஆடினால் வலுவான ஸ்கோரை எட்ட முடியும்.

    இந்த தொடரை பொறுத்தவரை ஆடுகளம் தான் இப்போது ஹீரோ. வழக்கத்துக்கு மாறாக பந்து வீச்சுக்கு நிறையவே ஒத்துழைக்கிறது. இந்த ஆடுகளத்தில் நிறைய வெடிப்புகள் காணப்படுவதால் சீரற்ற பவுன்ஸ்களை எதிர்கொள்ள முடியாமல் பேட்ஸ்மேன்கள் திணறுகிறார்கள்.

    ஆடுகளம் சரியில்லை என்று ஐ.சி.சி. வரை புகார் சென்று விட்டது. 150-160 ரன் எடுத்தாலே அது பெரும்பாலும் வெற்றிக்குரிய ஸ்கோராக பார்க்கப்படுகிறது. அதனால் நெருக்கடியை சாதுர்யமாக கையாண்டு, சூழலுக்கு ஏற்ப தங்களை கனகச்சிதமாக மாற்றிக் கொண்டு எந்த அணி ஆடுகிறதோ அந்த அணியின் கையே ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்துக்கு பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இதனால் போட்டிக்கு மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே அல்லது ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், பும்ரா, அர்ஷ்தீப்சிங், முகமது சிராஜ்.

    பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), உஸ்மான் கான், பஹர் ஜமான், ஷதப் கான், அசம் கான் அல்லது சைம் அயுப், இப்திகர் அகமது, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், நசீம் ஷா, முகமது அமிர் அல்லது அப்பாஸ் அப்ரிடி.

    இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
    • மிட்செல் மார்ஷ் 35 ரன்களையும், மேக்ஸ்வெல் 28 ரன்களையும் சேர்த்தனர்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற 17-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    இதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முறையே 34 மற்றும் 39 ரன்களில் ஆட்டமிழந்ததுய அடுத்து வந்த கேப்டன் மிட்செல் மார்ஷ் 35 ரன்களையும், கிளென் மேக்ஸ்வெல் 28 ரன்களையும் சேர்த்தனர்.

    இவர்களை தொடர்ந்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டாயினிஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை குவித்தது. இங்கிலாந்து சார்பில் கிரிஸ் ஜார்டன் 2 விக்கெட்டுகளையும், மொயின் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    202 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் கேப்டன் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான துவக்கம் கொடுத்தது. இருவரும் முறையே 37 மற்றும் 42 ரன்களை சேர்த்தனர். அடுத்து வந்த வில் ஜாக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோ தலா 10 மற்றும் 7 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    மொயின் அலி மற்றும் ஹாரி புரூக் முறையே 25 மற்றும் 20 ரன்களை சேர்த்தனர். ஒருபக்கம் ரன்கள் சேர்த்த போதிலும், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன. இதன் காரணமாக இங்கிலாந்து அணி போட்டி முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • லோகன் வான் பெக் 23 ரன்களை சேர்த்தார்.
    • டேவிட் மில்லர் ரன் கவிப்பில் ஈடுபட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய நெதர்லாந்து அணி 103 ரன்களை சேர்த்தது. நெதர்லாந்து அணி சார்பில் பொறுமையாக விளையாடிய சிப்ராண்ட் 40 ரன்களை சேர்த்தார். இறுதியில் போராடிய லோகன் வான் பெக் 23 ரன்களை சேர்த்தார்.

    இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய குவிண்டன் டி கார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரமும் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

    இதையடுத்து ஸ்டப்ஸ் நிதானமாக ஆடி 33 ரன்களை சேர்த்தார். இவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் ரன் கவிப்பில் ஈடுபட தென் ஆப்பிரிக்கா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிவில் டேவிட் மில்லர் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நெதர்லாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய கிங்மா மற்றும் வான் பெக் தலா 2 விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய நெதர்லாந்து 103 ரன்களை எடுத்தது.

    நியூயார்க்:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் நடக்கும் 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. தொடக்கம் முதலே தென் ஆப்பிரிக்கா வீரர்கள் துல்லியமாகப் பந்துவீசினர். இதனால் நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு இணைந்த சைப்ரண்ட், வான் பீக் ஜோடி 50 ரன்களுக்கும் மேல் எடுத்தது. அந்த அணியில் சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் ஒட்னீல் பார்ட்மேன் 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன், அன்ரிச் நார்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்குகிறது.

    ×