search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi"

    • கர்நாடகாவில் மசூதி அருகே விநாயகர் சிலை ஊர்வலம் சென்றபோது வன்முறை வெடித்தது.
    • போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை போலீஸ் வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 7-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

    இந்நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் நாகமங்கலா என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டுத் தலம் அமைந்துள்ள பகுதி அருகே ஊர்வலம் சென்றது. அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையானது.

    இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறையை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். பின்பு போராட்டக்காரர்களை கைது செய்து விநாயகர் சிலையை காவல்துறை வாகனத்தில் போலீசார் ஏற்றினர்.

    இந்த வன்முறை சம்பவத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், அரியானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இந்த வன்முறை சம்பவத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

    குருஷேத்ராவில் உரையாற்றிய மோடி, "நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி அதை தடுக்கிறது. இன்று இருப்பது பழைய காங்கிரஸ் கட்சி அல்ல. இன்றைய காங்கிரஸ் நகர்ப்புற நக்சல்களின் புதிய வடிவமாக மாறிவிட்டது. பொய் பேசுவதற்கு காங்கிரஸ் வெட்கப்படாது. இன்று காங்கிரஸ் ஆளும் கர்நாடக மாநிலத்தில் கணபதியைக் கூட சிறையில் அடைக்கும் சூழல் உருவாகியுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    • ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார்
    • பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார்.

    உக்ரைன் போரும் இந்தியாவும் 

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவால் உதவ முடியும் என அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட மேற்கு நாடுகள் கூறி வரும் நிலையில் மோடியின் ரஷிய பயணம் மற்றும் அதன்பின்னான உக்ரைன் பயணம் சர்வதேச கவனம் பெற்றது. ரஷியாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் இந்த பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமே என்று மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியுடன் மோடி ரஷியா உடனான போர் நிறுத்தம் குறித்தும் இந்தியா- உக்ரைன் வர்த்தக உறவுகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இந்தியா அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் தேசிய மாநாடு பணிகள் தொடர்பாக நேற்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜித் தோவல் ரஷியா சென்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

     

    அஜித் தோவல் தூது 

    மேலும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்த அஜித் தோவல் மோடியின் உக்ரைன் பயணம் குறித்து விரிவாக விளக்கினார். மோடி உக்ரைன் சென்று சரியாக இரண்டரை வாரங்கள் கழிந்து ரஷியா சென்றுள்ள அஜித் தோவல் அதிபர் புதினை சந்தித்து கைகுலுக்கி பேசுகையில், பிரதமர்[மோடி] உங்களிடம் டெலிபோன் மூலம் பேசியிருந்தபடி அவரது உக்ரைன் பயணம் குறித்தும், அதிபர் ஜெலென்ஸ்கி உடனான சந்திப்பு குறித்தும் உங்களிடம் விரிவாக எடுத்துரைக்க விரும்புகிறார். எனவே உங்களை சந்தித்து இதுபற்றி விளக்கமாக கூற என்னை தனிப்பட்ட முறையில் பிரதமர் [மோடி] அனுப்பி வைத்துள்ளார் என்று பேசியுள்ளார்.  அதிபர் புதின் மற்றும் அஜித் தோவல் சந்திப்பின்போது இருவரும் தனியே உரையாடியுள்ளனர். அப்போது உக்ரைன் போரை நிறுத்துவதற்காக மோடியின் அமைதி திட்டத்தை அஜித் தோவல் புதினிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தீவிரமாகும் போர் 

    இதற்கிடையே அக்டோபர் 22 முதல் 24 வரை நடக்க உள்ள பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வரவேண்டும் என பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் உக்ரைன் போர் தொடர்பாக அதிபர் புதினின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மோடி உக்ரைன் சென்று திரும்பிய சில நாட்களிலேயே ரஷியா- உக்ரைன் இடையிலான போர் தீவிரமடைய தொடங்கியது. இருவரும் மாறி மாறி டிரோன்கள் மூலமும் ராக்கெட்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தி வருகிறனர். உக்ரைன் தலைங்கர் கீவில் மின்சார கட்டமைப்பைக் குறிவைத்து ரஷியா பெரிய அளவில் தாக்குதல் நடத்தி இருந்தது குறிப்பிடத்தத்க்து.

    • பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், உணவு சமைக்க வேண்டும் என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது.
    • பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

    அமெரிக்கா சென்றுள்ள மக்களவை எதிர்க்கட்சி தலைவர் தலைவர் ராகுல் காந்தி டல்லாஸ் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், "இந்தியா ஒரே சிந்தனையை கொண்டுள்ளது என்று ஆர்.எஸ்.எஸ். நம்புகிறது. இந்தியா பல சிந்தனைகளை கொண்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இதுதான் எங்களுக்குள் இருக்கும் சண்டை.

    பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும், உணவு சமைக்க வேண்டும், அவர்கள் அதிகம் பேசக்கூடாது என்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் விரும்புகிறது. பெண்கள் எதைச் செய்ய விரும்புகிறார்களோ அதை அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

    மக்களவை தேர்தல் முடிவு வந்த பிறகு பாஜக மற்றும் பிரதமரைக் கண்டு இந்திய மக்கள் பயப்படவில்லை என்பது தெரிந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பிரதமர் தாக்குகிறார் என்பதை இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் புரிந்து கொண்டனர்.

    எங்கள் அரசியல் அமைப்புகளிலும், கட்சிகளிலும் அன்பு, மரியாதை மற்றும் பணிவு ஆகியவை இல்லை என்று நான் நினைக்கிறேன். ஒரு மதம், ஒரு சமூகம், ஒரு சாதி , ஒரு மாநிலம் அல்லது ஒரு மொழி பேசுபவர்கள் மீது மட்டும் அன்பு செலுத்த வேண்டிய அவசியமில்லை. அனைத்து மனிதர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும்.

    எல்லோரும் கனவு காண அனுமதிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் அவர்களின் சாதி, மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    இந்தியாவில் வேலைவாய்ப்பு பிரச்சனை உள்ளது. ஆனால் உலகில் பல நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லை. சீனாவில் நிச்சயமாக வேலைவாய்ப்பு பிரச்சனை இல்லை. வியட்நாமில் வேலை வாய்ப்பு பிரச்சனை இல்லை. எனவே வேலையின்மை இல்லாத நாடுகளும் பூமியில் உள்ளன. இன்று உலக உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது" என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தியின் இத்தகைய கருத்துக்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

    பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "ராகுலின் பேச்சு பாரதத்திற்கு எதிரானது. இந்தியப் பெண்களுக்கு எதிரானது. அதனால்தான் இந்திய மக்கள் 2014 முதல் 2024 வரை ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் நிராகரித்தனர். 2029 ஆம் ஆண்டும் பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்" என்று தெரிவித்தார். 

    • மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார்.
    • ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர் பொன்முடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது,மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் ஆளுநரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். இரவி கூறியுள்ளார்.

    புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை.

    தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு" என்று பதிவிட்டுள்ளார்.

    அண்மையில் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாடு பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் பல சிறப்பான புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
    • சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவித்திட வேண்டும்.

    தமிழ்நாட்டிற்கு "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் மத்திய அரசு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை விரைந்து வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், "நாட்டின் கல்வித் துறையில், மத்திய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தின்கீழ் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது மிகவும் அவசியம் .

    ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்கு திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) ஒப்புதலுக்கு உட்பட்டு நிதி விடுவிக்கப்படுகிறது.

    அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டிற்கு 3,586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மத்திய அரசின் பங்கு 2,152 கோடி ரூபாய் (60 விழுக்காடு) ,மத்திய அரசின் அந்த பங்களிப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024-லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான 573 கோடி ரூபாயினை விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது . இதுதவிர, முந்தைய ஆண்டுக்கான 249 கோடி ரூபாயையும் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை .

    இதற்கு முன்பும், தமிழ்நாட்டிற்கு நிதி விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய கல்வி மந்திரி அவர்களுக்கு தான் கடிதம் எழுதிய பின்னரே நிலுவையில் உள்ள நிதியில் ஒரு பகுதி கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்டது.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, மத்திய மந்திரியை சந்தித்து, உரிய நேரத்தில் மானியங்களை விடுவிக்கக் கோரி ஜூலை மாதம் கோரிக்கை வைத்த நிலையிலும், இதுவரை "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை.

    சமீபத்தில், பி.எம்.ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க மத்திய அரசு முயற்சிப்பது தெரிய வந்துள்ளது .புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .தேசிய கல்விக் கொள்கை 2020-ல் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை என்றும், பி.எம்.ஸ்ரீ. பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை .

    தமிழ்நாடு போன்ற முன்னோடி மாநிலங்கள், பள்ளிக் கல்வியிலும், உயர்கல்வியிலும் பல சிறப்பான புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருவது அனைவரும் அறிந்த ஒன்று பிராந்திய அடிப்படையில் சமூக-பொருளாதார நிலைமைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களை பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும் போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும்

    "சமக்ரா சிக்ஷா" என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிதியினை நிறுத்தி வைக்கும் மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய நிலையில் வாழும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாக பாதிக்கும். இத்தகைய நடவடிக்கை "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின் நோக்கமான "எந்தவொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது" என்பதற்கு எதிரானது .

    எனவே, "சமக்ரா சிக்ஷா" திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவித்திட வேண்டும். இதில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட வேண்டும்.விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது" என்று தெரிவித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆகஸ்ட் 23 அன்று உக்ரைன் நாட்டுக்கு அரசுமுறை பயணமாக மோடி சென்றிருந்தார்.
    • ரஷிய அதிபர் புதனுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அண்மையில், அரசு முறை பயணமாக பிரதமர் மோடி உக்ரைன் சென்றார். அங்கு, உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி சந்தித்தார். ரஷியா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்நிலையில், உக்ரைன் நாட்டு பயணம் குறித்து ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன் என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "ரஷிய அதிபர் புதினுடன் பேசினேன். இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான கூட்டாண்மை மற்றும் பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தோம். ரஷியா -உக்ரைன் போர் பற்றிய எனது கருத்துகள் மற்றும் சமீபத்தில் நான் உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டது குறித்து உரையாடினோம். போரை கைவிட்டு, அமைதியான தீர்வுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வலியுறுத்தினேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கடந்த ஜூலை 9 அன்று நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ரஷியா சென்றிருந்தார். அப்போது மோடியை புதின் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதினை மோடி கட்டி பிடித்தது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி காட்டமாக விமர்சித்திருந்தார்.
    • மக்கள் ஒருவரை ஒருவரை சந்திக்கும்போது அரவணைத்துக்கொள்கிறார்கள். இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி.

    ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஜூலை 9 அன்று நடந்த 22 வது இந்தியா - ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி ரஷியா சென்றிருந்தார். அப்போது மோடியை புதின் காட்டித் தழுவி வரவேற்றார்.

    புதினை மோடி கட்டி பிடித்தது அப்போது விமர்சனத்துக்கு உள்ளாகியது. குறிப்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இதை காட்டமாக விமர்சித்திருந்தார்.

    அவரது எக்ஸ் பதிவில், "இது மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை சேர்ந்த தலைவர் ஒருவர் உலகின் கொடூரமான குற்றவாளியோடு மாஸ்கோவில் இன்று கட்டித் தழுவியுள்ளது அமைதிக்கான முயற்சிகள் மீது விழுந்த பெருத்த அடியாக உள்ளது' என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், நேற்று உக்ரைன் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் மோடி நடத்திய சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார்.

    அப்போது, கடந்த மாதம் பிரதமர் மோடியின் மாஸ்கோ பயணம் குறித்து நீங்கள் பேசினீர்கள். இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. ரஷ்யாவிலிருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் நாம் இறக்குமதி செய்கிறோம். உக்ரைன் மீதான ஆக்கிரமிப்புக்கு இந்தியா வெளிப்படையான கண்டனம் தெரிவிக்கவில்லை. அப்படியிருக்க இந்தியா ரஷியாவுக்கும் ஆதரவு தெரிவிக்காமல் அணிசேரா கொள்கையை பின்பற்றுகிறது என்று ஜெலென்ஸ்கியை நம்ப வைப்பதற்கு உங்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டதா? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

    மோடி புதின் சந்திப்பு குறித்து எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த ஜெய்சங்கர் "மக்கள் ஒருவரை ஒருவரை சந்திக்கும்போது அரவணைத்துக்கொள்கிறார்கள். இது எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. ஒருவேளை உங்களது கலாச்சாரத்தில் அவ்வாறு இல்லாமல் இருக்கலாம். நேற்று உக்ரைன் சென்ற பிரதமர் மோடி ஜெலன்ஸ்கியை கட்டி பிடித்ததையும் நான் பார்த்தேன். பல இடங்களில் பல தலைவர்களை பிரதமர் மோடி கட்டி அணைத்திருக்கிறார்" என்று கூறினார்.

    • வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார்.
    • புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுப் பயணமாக போலந்து செல்ல இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்பிடி இரண்டு நாள் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து போலந்து புறப்பட்டார். சுமார் 45 வருடங்களுக்கு முன் இந்திய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். அதன்பின் போலந்து செல்லும் முதல் பிரதமர் மோடி ஆவார்.

    போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன செல்ல இருக்கிறார். உக்ரைனுக்கு சுமார் 10 மணி ரெயில் பயணம் மூலமாக போலந்தில் இருந்து செல்ல இருக்கிறார்.

    அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசும் மோடி, வர்சாவில் இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலதிபர்களை சந்தித்து உரையாடுகிறார். போலந்து- இந்தியா தூதரக உறவின் 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் மோடி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    பிரதமரின் இந்த பயணத்தின்போது, புவிசார் அரசியல் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    • பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு அடல் சேது பாலத்தை திறந்து வைத்தார்.
    • அடல் சேது பாலத்தில் விரிசல்கள் விழுந்ததாக பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது.

    ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமாக வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்தப் பாலத்துக்கு 2016 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி 2024 ஆம் ஆண்டு திறந்து வைத்தார்.

    இந்நிலையில், இந்த அடல் சேது பாலத்தின் கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. இப்பாலத்தில் விரிசல்கள் விழுந்ததாக பல புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால் பாலத்தில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை என்று மாநில அரசு தெரிவித்தது.

    ஆனால், கடந்த ஜூன் மாதம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பின்னர் சரிசெய்யபட்டது என்றும் இதற்காக பாலத்தை கட்டிய ஸ்டார்பக் ஒப்பந்ததாரருக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் வழியாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

    • பாராளுமன்ற கூட்டத்தொடர் திங்கட்கிழமை முடிவடைய இருந்த நிலையில் இன்றுடன் நிறைவடைந்தது.
    • பிரதமர் மோடி மற்றும் ஓம் பிர்லா தலைமையில் தேனீர் விருந்து நடைபெற்றது.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (ஜூலை) 22-ந்தேதி தொடங்கியது. வரும் திங்கட்கிழமை வரை கூட்டத்தொடர் நடைபெற இருந்தது.

    ஆனால் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா இன்றுடன் சபை நிறைவடைவதாக அறிவித்து அத்துடன் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைத்தார்.

    இந்த நிலையில் அறிவிக்கப்படாத தேனீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் மக்களவை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த விருந்தில் சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். கனிமொழி எம்.பி., துரை வைகோ உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    ஷோபா ஒன்றில் ஓம் பிர்லா மற்றும் பிரதமர் அமர்ந்திருக்க, பிரதமருக்கு இடது பக்கம் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். வலது பக்கம் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

    ராகுல் காந்தில் வந்தபோது பிரதமர் மோடியும் அவரும் பரஸ்பர நமஸ்காரம் (வாழ்த்து) தெரிவித்துக் கொண்டதாகவும், போட்டோவுக்கு இருவரும் புன்னகையுடன் போஸ் கொடுத்ததாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்ததாக என்டிடிவி செயதி வெளியிட்டுள்ளது.

    மக்களவையில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தாமரை வடிவிலான சக்கரவியூகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட ஆறு பேர் கட்டுப்படுத்துகிறார்கள். இவர்கள் அச்சம் என்ற சக்கரவியூகத்தில் மக்களை சிக்கவைத்துள்ளனர். தற்போதைய நிலையில் பாஜக எம்.பி.க்கள் கூட அச்சத்தில் உள்ளனர் என கடுமையாக விமர்சித்திருந்தார்.

    • சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர் மிகப்பெரிய மாற்றம் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை மோசமடைந்தது.
    • இங்கு ஒரு இடம், கிராமம் கூட தெரியாத அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இதுதான் மாற்றம்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு 2019-ம் ஆண்டு அகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கியது.

    சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு 4 வருடங்கள் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி, சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது இந்தியாவின் முக்கியமான தருணம் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இதற்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறியதாவது:-

    சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது நாட்டிற்கு வரலாறு கிடையாது. அது அவர்களுடைய கட்சியின் வரலாறு. நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் இந்து இந்தியாவை விரும்பினார்கள். ஆனால் நேரு, பட்டேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் அந்த நேரத்தில் அதற்கு முடியாது எனத் தெரிவித்தார்கள்.

    இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையை நம்பும் மதசார்பற்ற நாடு. காஷ்மீர்- தமிழ்நாடு அல்லது அசாம் அல்லது மகாராஷ்டிரா இடையிலான பொதுவானது என்ன? நாம் மற்றவர்கள் மொழியை கூட பேசவில்லை. ஒரே மாதிரியான கலாசார விசங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. நம்முடைய உணவு பழக்க வழக்கம் மாறுபட்டவை. மதம், ஜாதி, மொழி, கலாச்சாரம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் பிரகாசமான, வலிமையான இந்தியாவைக் கொண்டுவருவதற்கு ஒன்றிணைக்கிறது.

    பாகிஸ்தான் முஸ்லிம் நாடானது. நாம் அவ்வாறு இல்லை. நாம் பல மதங்கள் கொண்ட நாடு. பன்மொழி நாடு, அப்படியே இருப்போம்.

    சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்த பின்னர் மிகப்பெரிய மாற்றம் அடைந்துள்ளது. மக்கள் வேலைவாய்ப்பின்மை, பொருளாதார நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு ஒரு இடம், கிராமம் கூட தெரியாத அதிகாரிகள் பணிபுரிகின்றனர். இதுதான் மாற்றம்.

    இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்த சட்டப்பிரிவு 370 2019-ம் ஆண்டு நீக்கப்பட்டது.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான சட்டப்பிரிவு 370 கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி நீக்கப்பட்டது. அத்துடன் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டது.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி 5 வருடங்கள் முடிவடைந்த நிலையில், 6-வது வருடம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க தருணம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    மேலும், "ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்காக எங்கள் அரசாங்கம் தொடர்ந்து உழைத்து அவர்களின் அபிலாஷைகளை வரும் காலங்களில் நிறைவேற்றும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

    ரத்து செய்யப்பட்டதன் மூலம் வளர்ச்சியின் பலன்களை இழந்த பெண்கள், இளைஞர்கள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் விளிம்புநிலை சமூகங்களுக்கு பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் வாய்ப்பு கிடைத்ததுள்ளன.

    அதே நேரத்தில், ஜம்மு காஷ்மீரில் பல தசாப்தங்களாக ஆட்கொள்ளப்பட்ட ஊழலைத் தடுத்து நிறுத்துவதை உறுதி செய்துள்ளது" என பிரதமர் மோடி தெரிவித்தார்.

    ×