search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Doctor Killed"

    • எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர்.
    • நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல.

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜுனியர் மருத்துவர்கள் அம்மாநில சுகாதார அமைச்சகமான சுவஸ்திய பவன் [Swasthya Bhawan] பவன் முன் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்துவர்களின் பிரதிநிதிகளை இரண்டு நாட்களுக்கு முன் தலைமைச் செயலகத்தில் வைத்து சந்திப்புக்கு மம்தா அழைத்திருந்தார்.

    ஆனால் சந்திப்பை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் வர மறுத்துவிட்டனர். இதனால் 2 மணி நேரமாக மம்தா காலை இருக்கைகளுக்கு முன் காத்துக்கிடக்க நேர்ந்தது. இதற்கிடையே மருத்துவர்கள் போராட்டத்தால் சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை கிடைக்காமல் இதுவரை உயிரிழந்த 29 பேரின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் மம்தா. உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் கேட்காமல் தொடரும் மருத்துவர்கள் போராட்டம் மம்தா அரசுக்கு தலைவலியாக மாறியுள்ளது.

    இந்நிலையில்சுவஸ்திய பவன் முன் போராடும் மருத்துவர்களைச் சந்திக்க மம்தா நேரிலேயே சென்றுள்ளார். எங்களுக்கு நீதி வேண்டும் என்று மருத்துவர்கள் மம்தாவை நோக்கி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் முன் உரையாற்றிய மம்தா, நான் உங்களின் மூத்த சகோதரியாக [didi] இங்கு வந்துள்ளேன், முதலமைச்சராக அல்ல. எனது பதவி பெரிதல்ல. நேற்று இரவு நீங்கள் கொட்டும் மழையில் இங்கு போராடிக்கொண்டிருந்தீர்கள். இதனால் நேற்று இரவு நான் தூங்கவேயில்லை. தயவு செய்து இப்படி செய்யாதீர்கள் என்று கூறுவதற்காக நான் இங்கு வந்துள்ளேன்.

    உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என நான் வாக்களிக்கிறேன். உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசு மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் நல வாரியங்களை உடனடியாக தான் கலைப்பதாக மம்தா தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனையைத் தீர்க்க இதுவே தனது கடைசி முயற்சி என்று மம்தா தெரிவித்திருந்தார். மம்தா அங்கிருந்து சென்ற பின்னர் ஊடகத்திடம் பேசிய பேசிய மருத்துவர்கள், பேச்சுவார்த்தை நடத்தப்படாமல் எங்களின் கோரிக்கைகளில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளப்போவதில்லை என்று தெரிவித்தனர். 

     

    • மம்தா வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன்.
    • மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும்.

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நீதி கேட்டு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். கொல்கத்தாவில் அமைந்துள்ள சுகாதார அமைச்சகத்தின் முன் போராடி வரும் மருத்துவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா நேரடி பேசுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் பேசுவார்த்தயை நேரலையில் ஒளிபரப்பினால் மட்டுமே தாங்கள் வருவோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் இதனை ஏற்க மருத்த மம்தா, யாரும் வராததால் 2 மணி நேரம் காலி இருக்கைகளுக்கு மத்தியில் மம்தா காத்துக்கிடந்தார். மேலும், இந்த விவகாரத்தால் தான் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவும் தாயாராக உள்ளதாகத் தெரிவித்த மம்தா போராடும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்தார். ஆனால் இந்த விஷயத்தில் சிலர் நீதியை விரும்பவில்லை தனது நாற்காலியையே விரும்புகின்றனர் என்று மறைமுகமாக விமர்சித்திருந்தார்.

     

    இந்நிலையில் மம்தா குறித்து மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார். 'மம்தா பானர்ஜி வங்கத்தின் பெண் மாக்பெத், அவருடன் நான் இனி ஒன்றாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடையை பகிர்ந்து கொள்ள மாட்டேன். பொதுவெளியில் அவரை புறக்கணிப்பேன். மம்தா உள்துறை அமைச்சர் பொறுப்பையும் அதே சமயம் சுகாதர அமைச்சர் பொறுப்பையும் தன்வசம் வைத்துள்ளது இந்த நேரத்தில் நகை முரணாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்தின் லேடி மாக்பெத், ஹூக்லி நீரை கையில் வைத்திருந்தும் தனது கரை படிந்த கரங்களை கழுவ முடியாமல் விழிக்கிறார். மாநிலத்தின் முதல்வர் பாதுகாப்பதற்குப் பதிலாகப் போராடுகிறார். நகரங்களிலும், தெருக்களிலும், மருத்துவமனைகளிலும் என அனைத்து இடங்களிலும் வன்முறை தான் மலிந்துள்ளது என்று ஆனந்தா போஸ் விமர்சித்துள்ளார்.

    மாக்பெத் என்பது நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர் எழுதிய பிரபலமான நாடகம் ஆகும். ஸ்காட்லாந்தை சேர்ந்த மாக்பெத் என்ற படைத் தலைவன் தனது மனைவியின் பேச்சைக் கேட்டு மன்னரைக் கொலை செய்து அரியணையைக் கைப்பற்றுவான். இதனால் ஏற்பட்ட குற்ற உணர்வாலும், தனக்கு ஆபத்து வரும் என்ற அச்சத்தாலும் மேலும் பலரை கொன்று குவிப்பான். இதனால் நாட்டு மக்களிடையே கலவரம் வெடித்து உள்நாட்டு போர் உருவாகும்.

    தற்போது மாக்பெத்தின் சூழலில் மம்தா உள்ளதாக ஆளுநர் விமர்சித்துள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநர் பொறுப்பில் உள்ள ஒருவர் அரசியல்வாதி போல் பேசி வருவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக ஆளுநர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஒருவர் புகார் அளித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

    • ஜுனியர் மருத்துவர்கள் குழு போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது.
    • அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?' என்ற வசனம் வரும்

    பெண் மருத்துவர் கொலை 

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செமினார் ஹாலில் வைத்து பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் மருத்துவர்கள் வெகுண்டெழுந்த நிலையில் கொல்கத்தாவில் இன்னும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை.

    அரசும் போலீசும் 

    மேற்கு வங்க மம்தா அரசும், போலீசும் சரியாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டைப் போராடும் மருத்துவர்கள் முன்வைக்கின்றனர். குறிப்பாக அன்றைய தினம் மருத்துவமனைக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவற்றைச் சூறையாடியது. இதைக் கொல்கத்தா போலீஸ் கை கட்டி வேடிக்கை பார்த்தது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கொலை தொடர்பாக சஞ்சய் ராய் என்பவன் குற்றவாளியாக கண்டறியப்பட்டு போலீசால் கைது செய்யப் பட்டான். ஆனால் உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து வழக்கு விசாரணை சிபிஐ வசம் சென்றது.

    ஜுனியர் மருத்துவர்கள் போராட்டம் 

    இந்நிலையில் கொல்கத்தா மாநகர காவல் ஆணையர் (போலீஸ் கமிஷனர்) வினீத் கோயல் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி கடந்த நேற்று முன் தினம் முதல் ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திங்கள்கிழமை இரவு, லால்பஜார் பகுதியில் நடுவீதியில் அமர்ந்து விடிய விடிய போராட்டம் நடத்திய அவர்கள் நேற்றைய தினம் லால்பஜார் பகுதியில் அமைந்துள்ள கொல்கத்தா போலீஸ் தலைமையகம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.

     

    கமிஷனருடன் சந்திப்பு 

    இதனையடுத்து போராட்டக்காரர்கள் சார்பாக ஜுனியர் மருத்துவர்கள் குழு ஒன்று போலீஸ் தலைமையகத்தில் கமிஷனர் வினீத் கோயலை நேரடியாக சந்தித்தது. குற்றம் நடத்த அன்றைய தினம் உங்களின் நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே நீங்கள் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியதாகப் பின்னர் அவர்கள் தெரிவித்தனர். தான் பதவி விலக வேண்டுமா என்பதை மேலிடம் தான் முடிவு செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    முதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா? 

    இதற்கிடையில் வினீத் கோயலிடம் செயற்கையாக கையால் தயாரிக்கப்பட்ட முதுகுத்தண்டை ஜூனியர் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். இது போலீசால் கோழைத்தனமாக இல்லாமல்  முதுகெலும்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணர்த்துவதாக அமைந்துள்ளது. கமல் நடித்த அன்பே சிவம் படத்தில், எல்லாவற்றிற்கும் வளைத்து கொடுப்பதால் 'உங்களுக்கு இருப்பது முதுகுத் தாண்டாமுதுகுத் தாண்டா? ரப்பர் துண்டா?..ரப்பர் துண்டா?' என்று சந்தேகம் வருகிறது  என இடம்பெற்றிருந்த வசனத்தை இது நினைவுபடுத்தும் வண்ணம் உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் வினீத் கோயால் ராஜினாமா செய்யும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என்று ஜூனியர் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிபிஐ திறப்பு விளக்கிக் கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.
    • இதனால் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எரிச்சலடைந்தார்

    கொல்கத்தா R.G கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் மாநில காவல் துறையின் விசாரணையில் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை சிபஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கொல்கத்தா விரைந்த சிபிஐ குழுவினர் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையே விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும், மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் வாதாட மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும் வாதாடுகின்றனர்.

    இந்த விவகாரத்தில் சிபிஐ தரப்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை முன்வைத்து சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பேசுகையில், 'கொல்கத்தா காவல் துறை சார்பில் பயன்படுத்தப்பட்டு வரும் தினசரி டைரியில் இந்த சம்பவம் தொடர்பாகக் காலை 10.10 மணிக்கு பதிவிடப்பட்டு இருக்கிறது. எனினும், அன்று மாலையில் தான் போலீசார் சம்பவ இடத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர்' என்று விளக்கிக்கொண்டிருந்தபோது மேற்கு வங்காள போலீஸ் தரப்பில் ஆஜரான கபில் சிபில் சிரித்ததாகத் தெரிகிறது.

    இதனால் எரிச்சலடைந்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கபில் சிபிலை நோக்கி, 'ஒரு பெண் குரூரமான முறையிலும் கண்ணியக்குறைவான வகையிலும் உயிரிழந்துள்ளாள். அதற்காக குறைந்தபட்சம் சிரிக்காமலாவது இருங்கள்' என்று காட்டமாக பேசியுள்ளார்.

    • ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து பெண் டாக்டரை பாலியல் சித்ரவதை செய்து இருக்கிறான்.
    • இது தொடர்பாக அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலமும் கொடுத்துள்ளான்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தொடர்பாக 31 வயதான சஞ்சய்ராய் என்பவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

    இவன் போலீசாரிடம் தன்னார்வ தொண்டனாக பணிபுரிந்து வந்தவன். அதை பயன்படுத்தி தான் அவன் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து பெண் டாக்டரை பாலியல் சித்ரவதை செய்து இருக்கிறான்.

    இது தொடர்பாக அவன் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலமும் கொடுத்துள்ளான். அதில் அவன் கூறி இருப்பதாவது:-

    கடந்த 8-ந்தேதி இரவு நானும், எனது நண்பனும் வடக்கு கொல்கத்தாவில் விபசாரம் நடக்கும் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றோம். அங்கு நாங்கள் நள்ளிரவு வரை உல்லாசமாக இருந்தோம்.

    பிறகு நள்ளிரவு 2 மணிக்கு மற்றொரு சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றோம். அங்கும் நீண்ட நேரம் பெண்களுடன் இருந்தோம். அதன் பிறகு தனது நண்பன் மோட்டார் சைக்கிளில் அவனது வீட்டுக்கு சென்று விட்டான்.

    அதிகாலை 3.50 மணிக்கு நான் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனைக்கு வந்தேன். வளாகத்தில் அமர்ந்து மது அருந்தினேன். 4 மணி அளவில் கருத்தரங்கு நடக்கும் கூடத்துக்கு தூங்கலாம் என்று சென்றேன்.

    அப்போது அங்கு பயிற்சி பெண் டாக்டர் தூங்கிக் கொண்டிருந்தார். அதை பார்த்ததும் எனக்கு ஆசை ஏற்பட்டது. இதனால் அவர் மீது பாய்ந்து கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டேன். அவர் அலறினார். இதனால் அவரது கழுத்தை நெரித்தேன். அதன் பிறகு என்ன நடந்தது எனக்கு தெரியாது.

    இவ்வாறு அவன் வாக்கு மூலத்தில் கூறியுள்ளான்.

    மேலும் அவன் கூறுகையில், "மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா மூலம் நான் சிக்கி விட்டேன். என்னிடம் விசாரிப்பது போல கல்லூரி முதல்வரையும் விசாரிக்க வேண்டும். அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டால் மேலும் பல தகவல்கள் கிடைக்கும்," என்றான்.

    • பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
    • பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன.

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கொல்லப்பட்ட [பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது.

    இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. நாளை[ஆகஸ்ட் 17] காலை 6 மணி முதல் [ஆகஸ்ட்18] காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்நிலையில், "கொல்கத்தா பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவேக் கூடாது" என இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

    சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், " கொல்கத்தாவில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்ணுக்காக மருத்துவர்கள் ஒன்றிணைவது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

    நீதி கிடைப்பதில் தாமதம் ஆகலாம், ஆனால் கிடைக்காமலே போய்விடக்கூடாது என்று கூறுவார்கள்.

    அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவேக் கூடாது" என்றார்.

    • எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.
    • மருத்துவ சங்கங்களோடு சேர்ந்து மருத்துவர்கள் நாடு முழுவதும் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட [பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது .

    இந்நிலையில் பல்வேறு மருத்துவ சங்கங்கள் இன்று நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்களை முன்னெடுத்துள்ளன. நாளை[ஆகஸ்ட் 17] காலை 6 மணி முதல் [ஆகஸ்ட்18] காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த 24 மணிநேரத்தில், எமெர்ஜென்சி சேவைகளை தவிர்த்து வழக்கம்போல் நடைபெறும் வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியன நடைபெறாது.

    அம்ரிஸ்தரில் பஞ்சாப் அரசு மருத்துவமனை கல்லூரி, ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் உள்ளிட்டவை இன்று முதலே காலவரையின்றி இந்த சேவைகளை நிறுத்தியுள்ளன.

    மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள காந்தி மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் PCMS உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள், சிவில் மருத்துவமனை, குரு நானக் மருத்துவமனை பயிற்சி ஜூனியர் மருத்துவர்கள், டெல்லியின் RMS மருத்துவமனை மருத்துவர்கள், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ரெசிடெண்ட் டாக்டர் அசோசியேசன் மருத்துவர்கள், ஹைதராபாத்தில் இயங்கி வரும் காந்தி மருத்துவமனை மருத்துவர்கள், மும்பையில் செயல்படும் மருத்துவமனை டாக்டர்கள், கால்கத்தாவில் உள்ள பல்வேறு மருத்துவர்கள் என நாடு முழுவதும் இன்று தீவிரமான போராட்டம் நடந்து வருகிறது. 

    ×