search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shop"

    • ரூ.10 லட்சம் செலவில் கல்வெட்டு பாலம் கட்டப்பட்டது.
    • ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட வேம்பதேவன்காடு பகுதிலிருந்து அருகிலுள்ள பக்தர்குளம் மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் இணைப்பு சாலையில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட கல்வெட்டு பாலத்தையும், அதே பகுதியில் ரூ. 10.75 லட்சம் செலவில் கட்டப்பட்ட பகுதி நேர கூட்டுறவு அங்காடி கட்டிடத்தையும் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருள்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், நகராட்சி கவுன்சிலர் நமசிவாயம், முன்னாள் கவுன்சிலர்கள் சுரேஷ்பாபு, ராஜகிளி, மாரியப்பன் உள்பட பிரமுகர்கள், கூட்டுறவு சங்க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்.

    • டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர்.
    • 21 வகையான காய்கறிகளை கொண்ட தொகுப்பு ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி நெல்லை மார்க்கெட்டுகளில் காய்கறிகள், பழங்கள், கரும்பு கட்டுகள், கிழங்கு வகைகள், மஞ்சள் குலைகள் விற்பனை களைகட்டி உள்ளது.

    கடைவீதிகளில் கூட்டம்

    கடந்த 2 நாட்களாக புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் படி கொடுப்பதற்காக காய்கறிகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்கு குடும்பம் குடும்பமாக மார்க்கெட்டுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

    குறிப்பாக டவுன் நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட், பாளை காந்தி மார்க்கெட், டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட இடங்களில் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இதுதவிர பொங்கிலிட பானைகள், பனை ஓலைகள் மற்றும் பூஜைக்கான பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    காய்கறி தொகுப்பு

    நாளை பொங்கல் என்பதால் இன்று இறுதி கட்ட விற்பனை சூடுபிடித்தது. மாநகர பகுதியில் பேட்டை, டவுன், தச்சநல்லூர், கே.டி.சி. நகர், பாளை சமாதானபுரம், மேலப்பாளையம் ரவுண்டான உள்ளிட்ட இடங்களில் மண் பானைகள், பனை ஓலைகள் மற்றும் கரும்பு கட்டுகள் விற்பனை அதிகமாக இருந்தது. அடுப்புகள், அடுப்பு கட்டிகள், வண்ணம் தீட்டப்பட்ட பானைகளின் விற்பனையும் அதிகரித்தது.

    காய்கறிகளில் முருங்கைக்காய் ஒன்று ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. 21 வகையான காய்கறிகளை கொண்ட தொகுப்பு ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்பட்டது.மோட்டார் சைக்கிள்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் மொத்தம் மொத்தமாக காய்கறிகள், கரும்பு கட்டுகளை வாங்கி சென்றனர்.

    பனங்கிழங்கு வரத்து குறைவு

    மழை குறைவால் பனங்கிழங்குள் வரத்து குறைந்தது. விற்பனைக்கு வந்த கிழங்குகளும் உயரம் குறைவானதாகவே இருந்தது. 25 கிழங்குகள் கொண்ட கட்டு ரூ.100 முதல் ரூ.120 வரை விற்கப்பட்டது. கடந்த காலங்களில் 10 கிழங்குகள் கொண்ட ஒரு கட்டு ரூ.30 வரை மட்டுமே விற்கப்பட்ட நிலையில் தற்போது விலை அதிகரித்துள்ளது.

    இதேபோல் கடந்த சில நாட்களாக ஒரு மஞ்சள் குலை ரூ.5 முதல் ரூ.20 வரை விற்பனையான நிலையில் இன்று ரூ.15 முதல் ரூ.40 வரை விற்பனையானது. கரும்பு 10 எண்ணம் கொண்ட கட்டுகள் ரூ.300 ஆக இருந்த நிலையில் இன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது.

    பயணிகள் கூட்டம் அதிகரிப்பு

    பொங்கலையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் ஏராளமானோர் நெல்லைக்கு வந்து சேர்ந்ததால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல் புதிய பஸ் நிலையத்திலும் அதிக அளவு பயணிகள் காணப்பட்டனர். இதனால் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

    வெளியூர்களில் இருந்து குடும்பத்துடன் வந்தவர்களை அழைத்து வருவதற்காக பெரும்பாலானோர் கார்களில் சென்றதால் பஸ் மற்றும் ரெயில் நிலைய சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அதனை போக்குவரத்து போலீசார் சரி செய்தனர். மார்க்கெட், ஜவுளிக்கடைகள் உள்ள பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி யால் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

    • சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம், களரம்பட்டி மெயின் ரோட்டில் வைத்தியலிங்கம் (வயது 48) என்பவர் எலக்ட்ரிகல் மற்றும் பிளம்பர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், இன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்தார்.

    அப்போது, கடையின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், கல்லாவில் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து வைத்தி யலிங்கம் கிச்சிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூக்கட்டி தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
    • பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதே மார்க்கெட்டில் கடை நடத்த அழைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தஞ்சை பூச்சந்தை பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை பூக்கார தெருவில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான பூ மார்க்கெட் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் உள்ளது. இந்த மார்க்கெட்டில் சுமார் 60 கடைகளும், மார்க்கெட்டின் வெளியே 70 மாலைக் கடைகளும் செயல்பாட்டில் உள்ளது.

    500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பூக்கட்டி தான் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் சில வியாபாரிகள் சில காரணங்களால் வெளியே சென்று வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இவர்களை திரும்பவும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அதே மார்க்கெட்டில் கடை நடத்த அழைக்க வேண்டும்.

    மேலும் வியாபாரிகளுக்குள் நல்ல இணக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும்.

    அதையும் மீறி வெளியில் சென்ற வியாபாரிகள் வராத பட்சத்தில் பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே பூச்சந்தையை நம்பி உள்ள குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில்வர் பட்டறை, சுவீட் கடை எரிந்து சேதமானது.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    செல்லூரைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் அகிம்சாபுரம் 4-வது தெருவில் சில்வர் பட்டறை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகில் சுவீட் கடை உள்ளது.

    நேற்று இரவு இவர் பட்டறையை மூடிவிட்டு சென்றார். இன்று காலை பட்டறையில் இருந்து புகை வந்தது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், செல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதற்குள் பட்டறைக்குள் தீ மளமளவென பற்றி எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து இனிப்பு கடைக்கும் தீ பரவியது. தல்லாகுளம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இரு கடைகளிலும் ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தது. இது தொடர்பாக செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் சில்வர் பட்டறையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீஸ் போல் நடித்து செல்போன் கடையில் வாலிபர் பணத்தை திருடிச்சென்றார்.
    • ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி இருந்தது.

    மதுரை

    மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாவா பக்ருதீன் (வயது 43). இவர் ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் மொபைல் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடையில் இருந்தபோது ஒரு வாலிபர் வந்தார். அவர் "தான் மதுரை மத்திய ஜெயிலில் போலீஸ்காரராக பணியாற்றி வருவதாகவும், எனக்கு செல்போன் கவர் வேண்டும்" என்று தோரணையாக கேட்டார்.

    உடனே பாவா பக்ருதீன் செல்போன் கவர் எடுப்பதற்காக கடையில் இருந்து வெளியே சென்றார். அப்போது கடையில் யாரும் இல்லாததை பயன்படுத்தி அந்த வாலிபர் மேஜையில் இருந்த ரூ. 10 ஆயிரம் ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பி சென்றார்.சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த பாவா பக்ருதீன் அந்த வாலிபர் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    அப்போது அவர் மேஜை டிராயரை திறந்து பார்த்தபோது பணம் திருடு போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் கரிமேடு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் பொருத்தப் பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கடைக்கு வந்த வாலிபர் ரூ. 10 ஆயிரத்தை திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அவர் யார்? என்ற விபரம் தெரியவில்லை. போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.

    • நாமக்கல் துறையூர் சாலையில் ஸ்ரீதர்ஷினி ஸ்டில்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது.
    • இந்த கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் சமீப காலமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நாமக்கல் துறையூர் சாலையில் ஸ்ரீதர்ஷினி ஸ்டில்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பொருட்களை திருடி கொண்டிருந்தனர். இதனை பார்த்த அந்த பகுதியினர் நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .

    உடனே அங்கு விரைந்து சென்ற எஸ். ஐ. சங்கீதா மற்றும் போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் திருச்சி மாவட்டம் முசிறி ஜம்புகாடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 33), சுரேஷ் (40), சங்கர் (27), நாமக்கல் நல்லிபாளையம் கிழக்கு வீதியை சேர்ந்த நல்லி என்ற குலசேகரன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

    4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிப்பட்ட மர்ம கும்பல் மேலும் சில இடங்களிலும் கைவரிசை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா்.
    • விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 2.80 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.

    இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 5,689 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 2,506 கிலோ. விலை கிலோ ரூ.18.25 முதல் ரூ.27.20 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.26.80.13 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 286 கிலோ. விலை கிலோ ரூ.60.90 முதல் ரூ.83.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.81.15.

    ஏலத்தில் மொத்தம் 30 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.86 ஆயிரம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 15.12.2022 முதல் 29.12.2022 வரை நடைபெறவுள்ளது.
    • மாற்றுத் திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நேர்முகத் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கூட்டுறவுத் துறை ஆள் சேர்ப்பு நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-

    கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சேலம் மாவட்டதில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 15.12.2022 முதல் 29.12.2022 வரை நடைபெறவுள்ளது.

    மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறையாக தமிழக அரசின் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரால் வழங்கப்பட்ட உதவிகள் பதிவு புத்தகம், தகுதி வாய்ந்த அரசு மருத்துவரால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றை மாற்றுத் திறனாளி உரிமை கோரலுக்கு ஆதாரமாக நேர்முகத் தேர்விற்கான சான்றிதழ் சரிபார்ப்பு குழுவிடம் சமர்ப்பிக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை மாநகராட்சியை கண்டித்து சென்ட்ரல் மார்க்கெட்டில் 7-ந் தேதி கடை அடைப்பு நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
    • மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    மதுரை

    மதுரை மாட்டுத்தா வணியில் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு 1830 கடைகள் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியை கண்டித்து நாளை மறுநாள் (7-ந் தேதி) புதன்கிழமை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கம் தெரிவித்து உள்ளது.

    இதில் மாட்டுத்தாவணி தக்காளி மற்றும் சீமை காய்கறி வியாபாரிகள் சங்கம், மதுரை வாழை இலை கமிஷன் வண்டி உரிமையாளர் சங்கம், அழுகும் பொருட்கள் மற்றும் மாத வாடகை வியாபாரிகள் பொதுநல சங்கம், ஒருங்கிணைந்த காய்கறி வணிக வளாக வியாபாரிகள் சங்கம் ஆகியவை கலந்து கொள்ள உள்ளன. இது தொடர்பாக சங்க தலைவர்கள் நீலமேகம், முருகன், சேகர், மோகன்ராஜ், கதிரேசன் ஆகியோர் கூறியதாவது:-

    நாங்கள் மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் கடந்த 118 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறோம். மாநகராட்சியின் அலட்சிய போக்கு காரணமாக எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

    தேசிய பேரிடர் காலத்தில் உயர்த்தப்பட்ட 36 மாத வாடகை உயர்வை ரத்து செய்ய பல்வேறு நிலைகளில் போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த 2016-2017ம் ஆண்டு வரை 14 மாத கால வாடகை பாக்கியை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

    அதேபோல நிலுவை தொகையை ரத்து செய்ய வேண்டும், அபராத வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் மதுரை மாநகராட்சி சென்ட்ரல் மார்க்கெட் வியாபாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    மேலும் உயர்த்தப்பட்ட வாடகையை திருத்தம் செய்ய வேண்டும். மதுரை சென்ட்ரல் மார்க்கெட்டில் 1836 கடைகள் உள்ளன. இதில் 1000 கடைகளில் எங்கள் சங்க உறுப்பினர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். சென்ட்ரல் மார்க்கெட் என்பது சுடுகாட்டு பகுதியாகும். இங்கு எங்களுக்கு தற்காலிகமாக கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    அப்போது மத்திய- மாநில அரசுகள் சார்பில் 27 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து 85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய அரசு நிதி தரவில்லை என்பதை காரணம் காட்டி அந்த திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.

    மதுரை சென்ட்ரல் மார்க்கெட் தொடர்பாக நீதிமன்றத்தில் 64 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் அலட்சியத்தை கண்டித்து வருகிற 7-ந் தேதி கடை அடைப்பு நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை திருடிய பிரபல கொள்ளையன் போலீசார் கைது செய்தனர்.
    • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பகுதி சேர்ந்தவர் பழனிவேல் (வயது 57). இவர் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் கடந்த வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பழைய பித்தளை பொருட்கள், காப்பர் பொருட்கள், மற்றும் ஒயர்கள் செல்ப் மோட்டார்கள், போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து பழனிவேல் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

    இதனிடையே பொருட்களை திருடியது சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சங்கர் (32) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் நேற்று சங்கரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறப்படுவதில்லை.
    • வியாபாரிகளிடம் மட்டும் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    குன்னத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வேளாண் வணிக உதவி வேளாண்ைம அலுவலர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குன்னத்தூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பாக புதியதாக கட்டப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 28.10.2022 முதல் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நிலக்கடலை ஏலம் நடைபெற உள்ளது.

    எனவே நிலக்கடலை அறுவடை செய்து வரும் விவசாயிகள் நிலக்கடலையை உலர வைத்து காய்ந்த நிலக்கடலையை குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம். கொண்டுவரும் நிலக்கடலையை ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதியதாக கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 350 மூட்டைகள் வரை இருப்பு வைத்துள்ளனர்.ஏலத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளிடமிருந்து எந்தவித கட்டணமும் பெறப்படுவதில்லை.

    வியாபாரிகளிடம் மட்டும் ஒரு சதவீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது .தங்களுடைய நிலக்கடலைக்கு அதிக விலை கிடைக்க தரம் பிரிப்பது அவசியமாகிறது. நிலக்கடலை காய்கள் தரம் உள்ளதாக இருக்க அதில் உள்ள கல், மண், தூசி, கெட்டுப்போன காய்கள், சுருங்கிய முதிராத காய்கள் இவைகளை தனியாக பிரித்து விட வேண்டும். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நிலக்கடலை காய்களை நல்ல கோணி பைகளில் போட்டு சிப்பமிட்டு எடுத்து வர வேண்டும்.ஏலத்தில் அதிக அளவிலான வியாபாரிகள் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நிலக்கடலைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு குன்னத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சரஸ்வதியை 9894171854 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×