search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rohit sharma"

    • ரோகித் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார்.
    • ரோகித்தை கிண்டல் செய்தவர்களை அரையிறுதி போட்டியின் நேரலையில் ஹர்ஷா போக்லே பதிலடி கொடுத்தார்.

    மும்பை:

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. நாக் அடுட் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய வீரர்கள் தடுமாறுவார்கள் என்று கணிக்கப்பட்டது.

    ஆனால் தொடக்க முதலே இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தது. ரோகித் அதிரடியான தொடக்கம் அளித்தார். அவர் 29 பந்துகளை எதிர் கொண்டு நான்கு பவுண்டரி, நான்கு இமாலயா சிக்சர்கள் என 47 ரன்களை சேர்த்தார். ரோகித் சுயநலம் இன்றி அதிரடியாக ஆடியதால் தான் இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது.

    ரோகித்தை எப்போதும் ரசிகர்கள் வட பாவ் என உருவ கேலி செய்வார்கள். ரோகித் உடல் பருமனாக இருப்பதால் அவரை வட பாவ் என கிண்டல் செய்வார்கள். இந்த நிலையில் ரோகித் தன்னுடைய பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி தம்மை கிண்டல் செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். இது குறித்து கிரிக்கெட் வர்ணனையில் பேசிக்கொண்டிருந்த ஹர்ஷா போக்லே, தமது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரோகித் சர்மா பட்டையை கிளப்பினார். மேலும் இந்தாங்க எனது வட பாவ் என்று ரோகித் சர்மா சொல்லிவிட்டார் என்று கூறினார்.

    இதனை ரோகித் சர்மா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். தம்மை வடபாவ் என கிண்டல் செய்த ரசிகர்களை ரோகித் சர்மா தனது பேட்டிங் மூலம் மூக்கை உடைத்து விட்டார் என்பதை தான் ஹர்ஷா போகலே இவ்வாறு குறிப்பிட்டிருப்பதாக ரோகித் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். 

    • 398 ரன் இலக்கை நியூசிலாந்து எட்டி விடுமோ என்ற அச்சம் ரசிகர்களுக்கு நிலவியது.
    • டேரில் மிட்செல்- வில்லியம்சன் ஜோடி அச்சுறுத்தும் வகையில் விளையாடியது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

    398 ரன் இலக்கை நோக்கி நியூசிலாந்து பயணித்தபோது, கேன் வில்லியம்சன் (69)- டேரில் மிட்செல் (134) ஜோடி சிறப்பாக விளையாடியது. அப்போது இந்தியாவுக்கு சற்று நெருக்கடி இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால், முகமது சமி சிறப்பாக பந்து வீசி 7 விக்கெட் சாய்த்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    வெற்றி பெற்றபின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் ''நான் மும்பை வான்கடே மைதானத்தில் அதிக போட்டிகளில் விளையாடி உள்ளேன். இங்கே நீங்கள் "ரிலாக்ஸ்" ஆக இருக்க முடியாது. முடிந்த வரை எதிரணியை கட்டுப்படுத்தி வெற்றி பெற வேண்டும். எங்கள் மீது நெருக்கடி இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். பீல்டிங் சற்று சொதப்பிய நிலையில், நாங்கள் பொறுமையாக இருந்தோம். இதுபோன்ற விசயம் விளையாட்டில் நடக்கத்தான் செய்யும. இருந்தபோதிலும், நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி.

    ரன்ரேட் 9-க்கு மேல் இருக்கும்போது, வாய்ப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். நாங்கள் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை. டேரில் மிட்செல், வில்லியம்சன் சிறப்பாக பேட்டிங் செய்தார்கள்.

    நாங்கள் பொறுமையாக இருக்க வேண்டியிருந்தது. ரசிகர்களும் அமைதியான நிலைக்கு சென்றார்கள். இது போட்டியில் நடக்கக் கூடியதுதான். ஆனால் போட்டியை எங்கள் பக்கம் திருப்புவோம் என்ற எங்களுக்கு தெரியும். நாங்கள் அனைத்து வகையிலும் முயிற்சித்தோம். முகமது சமி அபாரமாக செயல்பட்டார். நியூசிலாந்து அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் வீழ்த்தினார். இந்த தொடரில் ஷ்ரேயாஸ் அய்யர் விளையாடிய விதம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    கில் தொடக்கத்தில் அபாரமாக விளையாடினார். துரதிருஷ்டவசமாக அவரால் மீண்டும் களம் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. கோலி வழக்கம்போல் அவரது ஆட்டத்தை வெளிப்படுத்தினா். அனைத்து வீரர்களின் பேட்டிங் சூப்பர். நாங்கள் முன்னோக்கி செல்ல விரும்பும் டெம்ப்லேட் இதுதான்.

    இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் 230 ரன்கள்தான் இலக்கு நிர்ணயம் செய்தோம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த போட்டியில் பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி இருந்தது என்று நான் சொல்ல மாட்டேன். 9 போட்டிகளில் என்ன செய்தமோ, அதை செய்ய விரும்பினோம். அவை சிறப்பாக அமைந்தது." என்றார்.

    • உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸ்.
    • ஒரே உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ்.

    உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 3-வது ஓவரில ஒரு சிக்ஸ் அடித்தார். 4-வது ஓவரிலும் சிக்ஸ் ஒன்று பறக்கவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து 5-வது ஓவரிலும் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த சிக்ஸ் உலகக் கோப்பையைில் அவரின் 50-வது சிக்ஸ் ஆகும். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.

    இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 49 சிக்ஸ் அடித்து முதல் இடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். மேக்ஸ்வெல் 43 சிக்ஸ், டி வில்லியர்ஸ் 37 சிக்ஸ், டேவிட் வார்னர் 37 சிக்ஸ் அடித்துள்ளனர்.

    மேலும் இந்த உலகக் கோப்பையில் இது அவருடைய 27-வது சிக்ஸ் ஆகும். இதன்மூலம் ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    கிறிஸ் கெய்ல் 2015-ல் 26 சிக்ஸ் அடித்துள்ளார். 2019-ல் மோர்கன் 22 சிக்ஸ், 2023-ல் மேக்ஸ்வெல் 22 சிக்ஸ், 2015-ல் டி வில்லியர்ஸ் 21, 2023-ல் டி காக் 21 சிக்ஸ் அடித்துள்ளனர்.

    தொடர்ந்து விளையாடிய அவர் 29 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    • உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டி மும்பையில் நாளை நடைபெறுகிறது.
    • வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    மும்பை:

    உலக கோப்பை முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இதற்கிடையே, அரையிறுதிப் போட்டியில் பங்கேற்க இன்று மதியம் இந்திய அணி மும்பை வந்தடைந்தது.

    இந்நிலையில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியா முதல் உலக கோப்பையை (1983) வென்றபோது பாதி பேர் பிறக்கவில்லை. அதன்பின், இரண்டாவது உலக கோப்பையை வென்றபோது (2011) பாதி பேர் கிரிக்கெட் விளையாடவில்லை.

    எங்களைப் பொறுத்தவரை தற்போதைய வீரர்களின் மனநிலை, இன்று என்ன நடக்கக்கூடும் என்பதில் மிகவும் அதிகமாக உள்ளது.

    கடந்த உலக கோப்பை அல்லது முதல் உலக கோப்பையை நாங்கள் எப்படி வென்றோம் என்பதைப் பற்றி அவர்கள் பேசுவதை நான் பார்க்கவில்லை.

    தற்போது எவ்வாறு சிறந்து விளங்கலாம், தாங்கள் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் என்ன என்பதில் அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. எங்கள் கவனம் எப்போதும் நிகழ்காலத்தில் இருக்கும். முதல் ஆட்டத்தில் இருந்து, இன்று வெற்றி பெறுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

    கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கடந்த காலத்தில் நடந்தது கடந்த காலம். இன்றும் நாளையும் நீங்கள் என்ன செய்யலாம் என்பதைப் பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். 10 ஆண்டுக்கு முன் நடந்தது பற்றியோ அல்லது கடந்த உலக கோப்பை பற்றியோ அதிக விவாதமோ, பேச்சோ இல்லை என்று நினைக்கிறேன்.

    எப்படி விளையாட விரும்புகிறார்கள் என்பதன் அடிப்படையில் நியூசிலாந்து மிகவும் ஒழுக்கமான அணியாக இருக்கலாம். அவர்கள் கிரிக்கெட்டை மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடுகிறார்கள்.

    கடந்த 6-7 ஆண்டுகளில், 2015 முதல் அனைத்து ஐசிசி போட்டிகளிலும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் அவர்கள் பல ஆண்டுகளாக மிகவும் சீராக விளையாடி வருகின்றனர். அவர்கள் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

    அனைத்து அணிகளின் பலம் எங்கே இருக்கிறது, பலவீனம் எங்கே இருக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அதன் அடிப்படையில் அங்கு சென்று விளையாட நாங்கள் முயற்சிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

    • ஹர்திக் பாண்ட்யா காயத்தால் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களை மட்டுமே பயன்படுத்துகிறது.
    • நெதர்லாந்துக்கு எதிராக 9 பேர் பந்து வீசினர். விராட் கோலி, ரோகித் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தியா 50 ஓவர் உலகக் கோப்பையில் 9 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நாளை நடைபெறும் அரையிறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

    இந்திய அணி பும்ரா, சிராஜ், முகமது சமி, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடி வருகிறது. ஹர்திக் பாண்ட்யா காயத்தால் வெளியேறியதால் 6-வது பந்து வீச்சாளர் இல்லாமல் விளையாடி வருகிறது. ஒருவேளை இந்த ஐந்து பேர்களில் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் மாற்று பந்து வீச்சாளருக்கு என்ன செய்யும்? என்ற கேள்வியை ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் அடிக்கடி முன்வைப்பது உண்டு.

    பெரும்பாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுக்கு மேல் பயன்படுத்தும் அவசியம் இந்தியாவுக்கு ஏற்பட்டது இல்லை. ஆனால், நெதர்லாந்துக்கு எதிராக விராட் கோலி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில் ஆகியோர் பந்து வீசினர். இதில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் விக்கெட் வீழ்த்தினர்.

    எல்லோரையும் பந்து வீச வைத்தது ஏன்? என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கம் அளித்துள்ளார்.

    அவர் இதுதொடர்பாக கூறுகையில் ''இது போன்ற சில விசயங்களை செய்து பார்க்க வேண்டும் என எங்கள் மனதில் இருந்தது. இதுபோன்ற வாய்ப்புகளை அணியில் உருவாக்க விரும்பினோம். தற்போது எங்கள் அணி 9 பேர் பந்து வீசும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த விளையாட்டில் நாங்கள் சில விசயங்களை முயற்சி செய்து பார்த்தோம். வேகப்பந்து வீச்சாளர்கள் வைடு யார்க்கர்கள் வீசினார்கள். இது தேவையில்லை. என்றாலும் அவர்கள் செய்து பார்த்தார்கள்'' என்றார்.

    விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ரோகித் சர்மா சுமார் ஏழு வருடங்கள் கழித்து பந்து வீசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணியில் விளையாடும் நான்கு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • ஆஸ்திரேலியா அணியில் விளையாடும் மூன்று பேர் இடம் பிடித்துள்ளனர்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. லீக் ஆட்டங்கள் முடிவில் ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடுகளை கொண்டு கிரிக்கெட் ஆஸ்திரேலியா (ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்) 12 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது.

    அதில் இந்திய அணி கேப்டனும், அதிரடி வீரருமான ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. அதேவேளையில் விராட் கோலி, பும்ரா, முகமது சமி, ஜடேஜா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். விராட் கோலியை கேப்டனாக தேர்வு செய்துள்ளது.

    இவர்களுடன் டி காக், டேவிட் வார்னர், ரச்சின் ரவிந்த்ரா, எய்டன் மார்கிராம், மேக்ஸ்வெல், மார்கோ யான்சன், ஆடம் ஜம்பா, தில்சன் மதுஷங்கா ஆகியோர் இடம பிடித்துள்ளனர்.

    • எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.
    • முதல் ஓவரிலிருந்தே அவர் அடித்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக மாறுகிறது.

    இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.

    இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த ஆட்டத்தை பார்க்கும் போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கை பார்த்த மாதிரி உள்ளதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-


    உலக கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவைப் போல் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். நாம் கோலி, ஜோ ரூட், வில்லியம்சன் மற்றும் பாபர் அசாம் பற்றி பேசுகிறோம். ஆனால் இவர் வித்தியாசமானவர். அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்குகிறார்.

    இன்சமாம் உல் ஹக் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் நேரம் இருக்கும். அதேபோன்று ரோகித் சர்மாவிற்கும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாடும்போது கூடுதலான நேரம் கிடைக்கிறது. அவரது கை மற்றும் கண்களின் பார்வையும் வெகு சிறப்பாக இருப்பதால் அவரால் எளிதாக வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து விளையாட முடிகிறது. அவர் இப்படி ஆட்டத்தின் துவக்கத்திலேயே அதிரடியாக ரன்களை குவிப்பதால் பின்னால் வரும் வீரர்களுக்கும் ஆட்டம் சாதகமாக இருக்கிறது.

    எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். முதல் ஓவரிலிருந்தே அவர் அடித்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக மாறுகிறது. ரோகித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் இருக்கும்போது எதிரணியில் இருக்கும் பவுலர்களுக்கு நிச்சயம் சிரமமாகத்தான் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    9 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 503 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதால் அணிக்கும் நல்ல ஸ்கோர் கிடைக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 307 ரன்களை ரோகித் சர்மா அடித்து அசத்தியுள்ளார்.

    • நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா அதிரடியாக விளையாடி 61 ரன் எடுத்தார்.
    • கேப்டன் பதவியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையும் ரோகித்சர்மா படைத்தார்.

    உலகக் கோப்பை போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் ரோகித்சர்மா அதிரடியாக விளையாடி 61 ரன் எடுத்தார். அவர் 2 சிக்சர்கள் அடித்தார்.

    இதன்மூலம் ரோகித் சர்மா புதிய வரலாறு படைத்தார். ஒரே ஆண்டில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். ரோகித்சர்மா 25 ஆட்டத்தில் 60 சிச்ர்கள் அடித்துள்ளார். அவர் டிவில்லியர்ஸ் (தென்ஆப்பி ரிக்கா) சாதனையை முறி யடித்தார்.

    டிவில்லியர்ஸ் 2015-ம் ஆண்டு 58 சிக்சர்கள் (18 இன்னிங்ஸ்) அடித்து இருந்தார். கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்) 56 சிக்சர்களும் (2019), அப்ரிடி (பாகிஸ்தான்) 48 சிக்சர்களும் (2002) அடித்து அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

    கேப்டன் பதவியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையும் ரோகித்சர்மா படைத்தார். அவர் 24 சிக்சர்கள் அடித்துள்ளார்.

    இதன்மூலம் மார்கனை முந்தினார். இங்கிலாந்து கேப்டனாக பணியாற்றிய அவர் 2019 உலகக் கோப்பையில் 22 சிக்சர்கள் அடித்து இருந்தார்.

    மேலும் ரோகித்சர்மா சர்வதேச போட்டிகளில் தொடக்க வீரர் வரிசையில் 14 ஆயிரம் ரன்னை கடந்தும் சாதனை படைத்தார்.

    • தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 326 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 83 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியிலும் சிறந்த பீல்டருக்கான விருது வழங்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் சிறந்த கேட்ச் மற்றும் ரன் அவுட் செய்த வீரர்களுக்கு விருது வழங்கப்பட்ட நிலையில் இந்த முறை கேட்ச், ரன் அவுட் பிடிக்காத ரோகித்துக்கு வழக்கப்பட்டது.

    ஒவ்வொரு முறையும் வித்தியாசமான முறையில் விருதை அறிவிக்கும் பீல்டிங் பயிற்சியாளர், இந்த முறையும் புதுவிதமாக விருதை அறிவித்தார். இந்த முறை நடமாடும் கேமரா மூலம் விருது வழங்கப்பட்டது. ஷ்ரேயாஸ் ஐய்யர், சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ரோகித் சர்மா ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

    அந்த கேமரா இந்திய வீரர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து இறுதியில் ரோகித் சர்மாவை தேர்வு செய்து அவருக்கு கொடுத்தது. உடனே கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரோகித்தை கட்டியணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் ரோகித் இதுபோன்று அதிரடியில் இறங்குகிறார்
    • ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிரடி விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யருக்கு உதவியாக இருக்கிறது

    உலகக் கோப்பையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 83 ரன்னில் சுருண்டது.

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 24 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்தியா முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்கள் குவித்தது. அதன்பின் இந்தியா 40 ஓவரில் 232 ரன்கள் சேர்த்தது. பந்து பழசு ஆகஆக ரன்கள் குவிக்க சிரமமாக இருந்தது. இதனால் இந்தியா 326 ரன்கள் அடிக்க ரோகித் சர்மாவின் அதிரடிதான் முக்கிய காரணம்.

    ரோகித் சர்மாவின் அதிரடி ஆட்டம் அணுகுமுறை (attacking batting approach) அணிக்கு சிறந்த வகையில் உதவியாக இருக்கிறது என பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

    ரோகித் சர்மா குறித்து விக்ரம் ரத்தோர் கூறுகையில் "இது முற்றிலும் ரோகித் சர்மாவின் யோசனைதான். அவர் இந்த முன்முயற்சியை எடுத்துள்ளார். ஆடுகளம் பேட்டிங்கிற்கு சற்று சிரமமாக இருக்கும்போது, இதுபோன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பார்க்கிறார். இது அணிக்கு சிறந்த முறையில் பலன் அளித்து வருகிறது. அவர் மட்டும்தான் இதில் முன்னிலை வகிக்கிறார்.

    முடிந்தவரை அதிக ரன்கள் குவிக்க பார்க்கிறோம். ரோகித் சர்மா, சுப்மன் கில் அதிக ரன்கள் குவித்தால் மிடில் ஆர்டர் வரிசையில் விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர் களத்தில் நங்கூரமாக நிற்பதற்கான நேரத்தை எடுத்துக் கொள்ள அது வழிவகுக்கும்.

    • விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம்.
    • ஷ்ரேயாஸ் ஐயரின் மீது நாங்கள் வைக்கும் நம்பிக்கைக்கு அவர் சரியாக செயல்பட்டு வருகிறார்.

    கொல்கத்தா:

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 243 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

    நாங்கள் கடந்த மூன்று போட்டிகளாகவே மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறோம். இங்கிலாந்து அணிக்கு எதிராக நாங்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தோம். துவக்கத்திலேயே விக்கெட்டை இழந்திருந்தாலும் டீசன்ட்டான ரன் குவிப்பை வழங்கினோம். அதன் பின்னர் பவுலர்கள் தங்களது வேலையை சிறப்பாக செய்து வெற்றியை தேடி தந்தனர்.

    விராட் கோலி போன்ற ஒரு வீரர் சூழலை கணக்கில் கொண்டு விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைப்போம். அந்த வகையில் இந்த போட்டியில் அவர் அற்புதமாக விளையாடி இருந்தார். ஷ்ரேயாஸ் ஐயரின் மீது நாங்கள் வைக்கும் நம்பிக்கைக்கு அவர் சரியாக செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு போட்டிகளாகவே அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவர் மீது நாங்கள் இன்னும் நம்பிக்கை வைப்போம்.

    முகமது ஷமி அணிக்குள் வந்ததிலிருந்தே அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். சுப்மன் கில்லும் நானும் மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு விளையாடுகிறோம். நாங்கள் இந்த ஆண்டு நிறைய போட்டிகளில் ஒன்றாக விளையாடி உள்ளதால் எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அதேபோன்று ஜடேஜா எங்கள் அணிக்கு ஒரு முக்கியமான வீரர். ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியின் மூன்று விதமான வடிவத்திலும் அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.



     


    • ஸ்ரேயாஸ் அய்யர் மன ரீதியாக வலிமையானவர்.
    • முகமது சிராஜ் ஒரு தரமான பந்துவீச்சாளர்.

    மும்பை:

    13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது.சுப்மன்கில் 92 ரன்னும், விராட்கோலி 88 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 82 ரன்னும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் அபார பந்துவீச்சில் 55 ரன்னில் சுருண்டது. இந்திய தரப்பில் முகமது சமி 5 விக்கெட்டும், முகமது சிராஜ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்தியா இதுவரை தான் மோதிய 7 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று முதல் அணியாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. வெற்றி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    நாங்கள் அதிகாரப்பூர்வமாக அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடரில் ஒரு அணியாக நாங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சென்னை மைதானத்தில் நாங்கள் முதல் வெற்றியை பெற்றபோது எங்களது இலக்கு முதல் அணியாக அரைஇறுதிக்கு தகுதி பெறுவதுதான் என்பதை கருத்தில் கொண்டு விளையாடினோம்.

    7 போட்டியிலும் வெற்றி பெற்று அந்த இலக்கை அடைந்துவிட்டோம். தற்போது அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதுதான் இலக்கு. ஒவ்வொரு வீரர்களும் திறமைகளை வெளிப்படுத்தினர். எந்த ஒரு மைதானத்திலும் 350 ரன்கள் அடித்தால் அது வெற்றிக்கான ரன்னாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ஸ்ரேயாஸ் அய்யர் மன ரீதியாக வலிமையானவர். இப்போட்டியில் அவருக்கு தெரிந்ததை செய்தார். இதைத்தான் அவரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

    முகமது சிராஜ் ஒரு தரமான பந்துவீச்சாளர். அவரிடம் புது பந்தை தந்து இதேபோன்று சிறப்பாக வீசினால் எங்களது அணி வேறு விதமாக தெரியும். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். அவர் புதிய பந்தில் நிறைய திறன்களை பெற்றுள்ளார். பந்துவீச்சாளர்களின் செயல்பாட்டை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அதை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் என்று நம்புகிறேன். அடுத்த ஆட்டத்தில் (5-ந் தேதி, கொல்கத்தா) தென்ஆப்பிரிக்காவுடன் மோத உள்ளோம்.

    அவர்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்கள். நாங்களும் அப்படி தான் இருக்கிறோம். இதனால் இப்போட்டி சிறந்ததாக இருக்கும். அந்த விளையாட்டை கொல்கத்தா மக்கள் ரசிக்க போகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×