search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சாரம்"

    மின்சாரம் சீராக வினியோகிக்க கோரி நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் அனுமார் கோவில் தெருவில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களாக அந்த பகுதிக்கு மின்சாரம் சரிவர வினியோகிக்கப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் 2 முறை புகார் மனு கொடுத்தும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மின்சாரம் சீராக வினியோகிக்க கோரி நேற்று தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகீர் உசேன், ஊராட்சி செயலாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.  
    முகப்பேரில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    பழைய வண்ணாரப்பேட்டை நாராயண மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் (55) பெயிண்டர். இவர் இன்று காலை கிழக்கு முகப்பேர் இளங்கோ தெருவில் புதிதாக கட்டிவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

    முதல் தளத்தில் உள்ள பால்கனியில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் சென்ற மின் கம்பியின் மீது கை உரசியதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து ஜே.ஜே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து வீட்டின் உரிமையாளரை விசாரித்தார்.

    காட்பாடி அருகே மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வேலூர்:

    திருவலம் அடுத்த சேர்க்காடு கூட்ரோட்டில் மின்பகிர்மான அலுவலகம் உள்ளது. இந்த மின்பகிர்மான அலுவலகத்தில் இருந்து மின்மாற்றிகள் மூலம் சேர்க்காடு, விண்ணம்பள்ளி, மகிமண்டலம், மிட்டூர் உட்பட 14 கிராமங்களில் மின்விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக மின்சாரம் சரிவர வழங்கவில்லை. இதனால் விவசாய நிலங்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன.

    மேலும் பள்ளிகளில் தேர்வு நடந்துவரும் வேளையில் மின்சாரம் இல்லாமல் இரவில் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் இரவில் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் புழுக்கம் காரணமாக கடும் அவதியடைந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சேர்க்காடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 10 மணியளவில் மின்வாரிய அலுவலகத்திற்கு எதிரே உள்ள சென்னை - சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த காட்பாடி இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது போலீசார் பொதுமக்களிடம் சம்பந்தப்பட்ட அலவலகத்திற்கு சென்று முறையிடுங்கள் என தெரிவித்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மற்றும் இன்ஸ்பெக்டரும் சென்று மின்வாரிய அலுவலக இளநிலை பொறியாளர் கவிதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

    இதனால் இப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews

    மின்மாற்றியை சீரமைக்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்டது மழவராயநல்லூர் கிராமம். இக்கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி மழவராயநல்லூர் மேற்குதெருவில் உள்ள மின்மாற்றி பழுதடைந்துள்ளது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடந்த சில நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறியும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தசாமி, மணவாளன் மற்றும் போலீசார், ஊராட்சி செயலாளர் முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட மின்சாரவாரிய அதிகாரிகளிடம் கூறி மின்மாற்றியை உடனே சீரமைத்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கடம்பூர்- விக்கிரமங்கலம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    பெரம்பலூர் அருகே இலவச மின்சாரம் வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு பெரம்பலூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் கருப்பையா தலைமை தாங்கி மின் நுகர்வோர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில், விவசாயிகளின் சார்பில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் ஒரு மனு கொடுத்தார். அதில், மின்நுகர்வோர்கள் குறைதீர் கூட்டத்தில் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாய மின் இணைப்பு கேட்டு கடந்த 2000-ம் ஆண்டு மனு செய்து 18 ஆண்டுகளாக காத்திருக்கும் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க மின்சாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுவரை பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதற்காக மின் இணைப்பு கிடைக்கவில்லை என்ற காரணங்களை அதிகாரிகள் தெரிவித்து, அவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது. இதேபோல் விவசாயிகள், மின்நுகர்வோர்கள் பலர் மேற்பார்வை பொறியாளரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #SterlitePlant #NGT #SC
    புதுடெல்லி:

    தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இதையடுத்து ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது.

    இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் தங்கள் தரப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



    இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. #SterlitePlant #NGT #SC
    ஆர்.எஸ்.மங்கலம் அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர்-வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியை சேர்ந்தவர் சம்பத்குமார் (வயது45), லாரி டிரைவரான இவர் நேற்று தனது லாரியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்துக்கு புறப்பட்டார்.

    அவருடன் காரைக்குடி அருகே உள்ள பெரும்பச் சேரியைச் சேர்ந்த வெங்கடேஷ் (20), லட்சுமி (45) ஆகியோரும் சென்றனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ராதானூர் கிராமத்தில் லாரியை நிறுத்திய சம்பத்குமார் ஆடுகளை இறக்க முற்பட்டார்.

    அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்வயர் எதிர்பாராதவிதமாக லாரி மீது உரவியது. இதனால் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. அதில் இருந்த சம்பத்குமார், வெங்கடேஷ், லட்சுமி ஆகியோரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட சம்பத் குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வெங்கடேஷ், லட்சுமியை சாதுர்யமாக மீட்டனர்.

    பின்னர் அவர்கள் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். லட்சுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தண்டராம்பட்டு அருகே மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    தண்டராம்பட்டு:

    தண்டராம்பட்டு அருகே உள்ள பாவப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 60) விவசாயி. இவரது மனைவி விருதாம்பாள் (55). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது.

    நிலத்தில் பயிரிடபட்டுள்ள கரும்பிற்கு நீர் பாசனம் செய்வதற்காக தம்பதியினர் நேற்றிரவு நிலத்திற்கு சென்றனர்.

    அப்போது நிலத்தில் தாழ்வான பகுதியில் சென்ற உயர் அழத்த மின்சார கம்பி விருதாம்பாள் தலை மீது உரசியது இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து துடித்தார்.

    அதிர்ச்சியடைந்த சின்னதுரை அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தம்பதியினர் 2 பேரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

    இது குறித்து தகவலறிந்த தச்சம்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கூத்தாநல்லூர் பகுதிகளில் மின்சாரம் வழங்காததை கண்டித்து செல்போன் டவரில் ஏறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaCyclone
    கூத்தாநல்லூர்:

    திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே செருவாமணி ஊராட்சியில் தாமரைபள்ளம் கிராமம் உள்ளது, இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்,

    இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி வீசிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீர்குலைந்தது. ஏராளமான மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல கிராமங்களில் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாயினர்.

    இதேபோல் தாமரைக்குளம் கிராமமும் புயலால் பாதிக்கப்பட்டது. புயல் தாக்கி 35 நாட்களாகியும், தாமரைக்குளம் கிராமத்துக்கு இன்னும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை. இதனால் மின்சாரம், குடிநீர் கேட்டு ஆங்காங்கே அந்த கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் விரைவில் மின்சாரம் வழங்ககோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அங்குள்ள 200 அடி உயர செல்போன் டவர் மீது ஏறி நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்,

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் வடபாதிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், புயல் சேதமதிப்பீடு கணக்கெடுக்க கூட எந்த அதிகாரிகளும் இங்கு வரவில்லை. எனவே வருவாய்த்துறை அதிகாரிகளும் மின்வாரிய அதிகாரிகளும் உடனடியாக வந்து மின் இணைப்பை வழங்கவும், நிவாரண உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து திருவாரூர், சப்-கலெக்டர் பால்துரை, கூத்தாநல்லூர் தாசில்தார் அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 5 நாட்களில் கிராமத்துக்கு மின்சாரம், வழங்கப்படும் என்றும் மாவட்ட கலெக்டரின் கவனத்துக்கு உங்கள் கோரிக்கை கொண்டு சென்று அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து பொது மக்கள் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தனர்.

    இதற்கிடையே செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியதாக தாமரைபள்ளம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி உள்பட 8 பேர் மீது வடபாதிமங்கலம் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றார். #GajaCyclone
    கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்சார சட்ட திருத்த மசோதா 2018ஐ எதிர்த்து மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று மாலை மின்சார சட்ட திருத்த மசோதா 2018ஐ எதிர்த்து மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சம்மேளன தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். பொறியாளர் சங்க சரவணன், தொ.மு.ச. பசரவராஜ், சி.ஐ.டி.யூ. சதீஷ்குமார், அம்பேத்கர் யூனியன் சிவப்பிரகேஸ்வரன், ஐக்கிய சங்கம் திருமலைவாசன் மற்றும் பொறியாளர்கள், தொழிலாளர்கள், பணியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில் சி.ஐ.டி.யூ. கருணாநிதி நன்றி கூறினார். 

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, லாபம் ஈட்டக்கூடிய பகுதிகள் தனியாருக்கு தாரை வார்த்ததால், நஷ்டத்தை ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் மின்வாரியங்களின் தலையில் சுமத்தப்படும். விவசாயத்திற்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். மின்கட்டணம் 10 மடங்கு வரை உயரும் அபாயம் ஏற்படும். தொழிலாளர் நல சட்டங்கள் காற்றில் பறக்கவிடப்படும். ஓய்வூதியம் என்பது மறுக்கப்படும். தொழிற்சங்கம் வைத்து போராடும் உரிமை என்பது மறுக்கப்படும். தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். 

    தொழிலாளர் நல சட்டங்கள் காற்றில் பறக்க விடப்படும். இதுபோன்ற அவல நிலையை போக்கிட தனியாருக்கு தாரை வார்ப்பதை தடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.
    புயல் தாக்கி 13 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர் வழங்காததால் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Gajastorm

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம், மருங்குளம் அருகே உள்ள கோபால் நகரில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 16-ந் தேதி கஜா புயல் தாக்கியதில் மருங்குளம் பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அனைத்தும் முற்றிலும் சாய்ந்தது.

    இதனால் புயல் தாக்கி 13 நாட்கள் மேல் ஆகியும் இந்த பகுதியில் இன்னும் மின்சாரம் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் குடிப்பதற்கு குடிதண்ணீர் இல்லை. நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட வில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை 6 மணிக்கு மருங்குளம் அருகே உள்ள கறம்பக்குடி சாலையில் 200-க்கும் மேற்பட்டோர் மாட்டு வண்டிகள் மற்றும் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வல்லம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்தும் சீர்செய்யபடும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இதுகுறித்து கோபால் நகரை சேர்ந்த சேகர் என்பவர் கூறியதாவது:-

    கஜா புயல் தாக்கி 13 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதுவரைக்கும் எந்தவொரு அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் எங்களை பார்த்தது கிடையாது.

    மேலும் சாலைகளில் விழுந்த மரங்கள் அனைத்தும் அகற்றாமல் அப்படியே உள்ளது. மின்சாரம் இன்னும் வழங்கப்பட வில்லை. அன்றாடம் தேவைக்கு தண்ணீர் இல்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் அவதிப்பட்டு வருகிறோம்.

    எனவே அரசு உரிய நிவாரண பொருட்கள் மற்றும் குடிதண்ணீர், மின்சாரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajastorm

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterThangamani
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மணிவாசன், மாவட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 199 நிவாரண முகாம்களில் 3 வேளை உணவு, உடை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மின்சாரத்தை பொறுத்த வரை திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மின்சார கட்டமைப்பு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்களும், 201 துணை மின்நிலையங்களும், 841 மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளது.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 3,787 மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணியில் 1,518 எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது.

    மின் வினியோகத்தை பொறுத்தவரை திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
    ×