என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாக்குப்பதிவு"
- பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
- ஆறாவது கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஆறாம் கட்டமாக நாளை மறுதினமும், 7வது கட்டமாக ஜூன் 1-ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
ஆறாம் கட்ட வாக்குப் பதிவின்போது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜோரி தொகுதியில் 3ம் கட்ட வாக்குப் பதிவின்போது நடைபெற இருந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு 6-ம் கட்டத்தில் அந்த தொகுதிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அதில் போட்டியிடும் 20 வேட்பாளர்களும் இதில் அடங்குவர்.
உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், அரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
ஆறாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் ஆறாவது கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தலைநகர் டெல்லி, உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தனர்.
- 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
- இதில் ஆண்கள் 61.48 சதவீதமும் பெண்கள் 63 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதிகளில் 5-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், 5ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் மொத்தமாக 62.20% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் ஆண்கள் 61.48 சதவீதமும் பெண்கள் 63 சதவீதமும் வாக்களித்துள்ளனர்.
மாநில வாரியாக விவரங்கள்:
பீகார்- 56.76 சதவீதம்
மகாராஷ்டிரா- 56.89 சதவீதம்
மேற்கு வங்காளம்- 78.45 சதவீதம்
ஒடிசா - 73.50 சதவீதம்
ஜார்கண்ட்- 63.21 சதவீதம்
ஜம்மு காஷ்மீர்- 59.10 சதவீதம்
லடாக்- 71.82 சதவீதம்
உத்தரபிரதேசம்- 58.02 சதவீதம்
- ஒரு பூத்தில் 375 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
- மற்றொரு பூத்தில் 441 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆறு மாநிலங்களில் 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 63.57 சதவீத வாக்குகள் பதிவானது.
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மக்களவை தொகுதியில் உள்ள லலித்பூர் மாவட்டத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளில் 100 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மெராயுனி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சவுல்டாவில் உள்ள 277-வது பூத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த பூத்திற்கு உட்பட்ட வாக்காளர் பட்டியலில் 375 வாக்காளர்கள் பெயர் இடம் பிடித்திருந்தது. இதில் 198 ஆண் வாக்காளர்கள் ஆவார்கள். 177 பெண் வாக்காளர்கள் ஆவார்கள். இவர்களை அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
அதேபோல் நகால் கிராமம் பாம்ஹோராவில் உள்ள 355-வது பூத்தில் 100 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. இங்கு மொத்தம் ஆண் வாக்காளர்கள் 235 பேர், பெண் வாக்காளர்கள் 206 பேர் என 441 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
அதேபோல் புத்னி நராஹட் கிராமத்தில் உள்ள ஒரு பூத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிகிறது. ஆனால் தொழில்நுட்பம் காரணமாக இருக்கலாம் என குழப்பம் நீடித்து வருகிறது.
100 சதவீதம் வாக்குகள் பதிவாக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு கிராமத்தச் சேர்ந்த பல இளைஞர்கள் வெளியூரில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர் திரும்பி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
- இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
- இந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேற்று (மே 20) மகாராஷ்டிரா, பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முக்கிய தொகுதிகளுக்கு நடந்து முடிந்தது. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்திலும் நேற்று வாக்குப்பதிவு நடந்த நிலையில் அங்குள்ள பாஜக மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆதரவாளர்கள் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மோதலில் ஈடுபட்டு வருகின்றார்.
இன்று (மே 21)காலை பிகாரி தாக்கூர் சவுக்கிற்கு அருகிலுள்ள படா டெல்மா பகுதியில் நடந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர். இறந்தவர் சந்தன் யாதவ் (25) என அடையாளம் காணப்பட்டார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர், அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் மோதல் வலுவடைவதைத் தடுக்க சரண் மாவட்டத்தில் 48 மணி நேரத்துக்கு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள பீகார் முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ், தோல்வி பயத்தில் சிலர் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
- பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
- பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.,மான ஜெயா பச்சன் ஆகியோர் வாக்களித்தனர்.
பாலிவுட் நடிகர்களான சாரா அலிகான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
இதேபோல், பிரபல நடிகர் சையிப் அலிகான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.
இந்நிலையில் இந்திய குடியுரிமை இல்லாததால் பல பாலிவுட் பிரபலங்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவில்லை.
பிரிட்டிஷ் குடியுரிமை காரணமாக நடிகைகள் ஆலியா பட், கத்ரீனா கைஃப் மற்றும் அமெரிக்கா குடியுரிமை காரணமாக நடிகர் இம்ரான் கான், சன்னி லியோன் மற்றும் இலங்கை குடியுரிமை காரணமாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் போர்த்துகீசிய குடியுரிமை காரணமாக இலியானா ஆகியோர் வாக்களிக்க வில்லை.
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.
- இன்று மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.
5-ம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.
இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. பல்வேறு தொகுதிகளிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வந்தனர்.
இன்றைய தேர்தலில், அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
இன்று மாலை 5 மணி நிலவரப்படி 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், 49 தொகுதிகளிலும் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
- 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.
இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 56.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பீகார்- 52.35 சதவீதம்
மகாராஷ்டிரா- 48.66 சதவீதம்
மேற்கு வங்காளம்- 73 சதவீதம்
ஒடிசா - 60.55 சதவீதம்
ஜார்கண்ட்- 61.90 சதவீதம்
ஜம்மு காஷ்மீர்- 54.21 சதவீதம்
லடாக்- 61.26 சதவீதம்
உத்தரபிரதேசம்- 55.80 சதவீதம்
- அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர்.
- பிரபல நடிகர் சையிப் அலி கான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தல் இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வாக்களிப்பு மையத்தில் நடிகர் அமிதாப் பச்சான் மற்றும் அவரது மனைவியும் எம்.பி.,மான ஜெயா பச்சன் ஆகியோர் வாக்களித்தனர்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி ஆகியோர் தனது மகனுடன் வந்து வாக்களித்தனர்.
பாலிவுட் நடிகர்களான சாரா அலி கான் மற்றும் அம்ரிதா சிங் ஆகியோர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
பிரபல பாவுட் நடிகர் ஷாருக்கான் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.
இதேபோல், பிரபல நடிகர் சையிப் அலி கான் மற்றும் நடிகை கரீனா கபூர் ஆகியோர் வாக்களித்தனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளின் பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் தனது குடும்பத்துடன் வாக்களித்துள்ளனர்.
நடிகை சோனாக்ஷி சன்ஹா அவரது தாய் பூனம் சின்ஹாவுடன் வந்து மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
நடிகை அனன்யா பாண்டே, சுங்கி பாண்டே மற்றும் பாவனா பாண்டே ஆகியோர் மும்பை வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
ஆதித்யா பிர்லா குழுவின் தலைவர் குமார் மங்களம் பிர்லாவும், அவரது மகள் அனன்யா பிர்லாவும் வாக்களித்தனர்.
நடிகர் அமீர் கான், ரன்பீர் கபூர் ஆகியோர் தனது வாக்கினை செலுத்தினார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கருடன் வந்து வாக்களித்தார்.
நடிகை தமன்னா மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பிறகு அவர் கூறுகையில், " அனைவரும் வாக்களிப்பதில் ஆர்வகமாக உள்ளனர். வாக்குச்சாவடிகளில் அதிகளவில் மக்களவை பார்க்க முடிகிறது. வாக்களிப்பது நமது கடமை" என்றார்.
- 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது.
5-ம் கட்டமாக இன்று நடைபெற்று வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன.
இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
அதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 47.53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பீகார் - 45.33 சதவீதம்
மகாராஷ்டிரா- 38.77 சதவீதம்
மேற்கு வங்காளம்- 62.72 சதவீதம்
ஒடிசா - 48.95 சதவீதம்
ஜார்கண்ட்- 53.90 சதவீதம்
ஜம்மு காஷ்மீர்- 53.90 சதவீதம்
லடாக்- 61.26 சதவீதம்
உத்தரபிரதேசம்- 47.55 சதவீதம்
- 49 தொகுதிகளிலும் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
- பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.
5-ம் கட்டமாக இன்று நடந்து வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 5-ம் கட்ட தேர்தலில் 23.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பீகார் - 21.11 சதவீதம்
உத்தரபிரதேசம்- 27.76 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் - 26.18 சதவீதம்
ஜார்க்கண்ட் - 26.18 சதவீதம்
லடாக்- 27.87 சதவீதம்
மகாராஷ்டிரா - 15.93 சதவீதம்
ஒடிசா- 21.07 சதவீதம்
மேற்கு வங்காளம்- 32.70 சதவீதம்
#LokSabhaElections2024 | 23.66% voter turnout recorded till 11 am, in the fifth phase of elections.
— ANI (@ANI) May 20, 2024
Bihar 21.11%
Jammu & Kashmir 21.37%
Jharkhand 26.18%
Ladakh 27.87%
Maharashtra 15.93%
Odisha 21.07%
Uttar Pradesh 27.76%
West Bengal 32.70% pic.twitter.com/wr9kbCIwYN
- பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது.
- அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) தொடங்கியுள்ளது. 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 6 மணி முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா் - ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா 1 தொகுதி இதில் அடக்கம். அரசியல் தலைவர்களும், குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாலிவுட் சினிமா பிரபலங்களும் தொழிலதிபர்கள் பலரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், சுனில் செட்டி, பார்ஹான் அக்தர், பரேஷ் ராவல், தர்மேந்திரா நடிகை ஜான்வி கபூர், ஹேம மாலினி உள்ளிட்டோர் காலையிலேயே வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
மேலும் மும்பை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக காலம் காணும்மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங், உத்தரபிரதேசத்தில் அமேதி தொகுதியில் களம் காணும் ஸ்மிரிதி இரானி, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி ஆகியோர் அவரவர் தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர்.
- வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் தோ்தல் நடைபெறுகிறது.
நாட்டில் புதிய அரசுடன் 18-வது பாராளுமன்றத்தை தோ்வு செய்ய 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் (ஏப்ரல்) 19, 26, இந்த மாதம் (மே) 7, 13-ந்தேதிகளில் முதல் 4 கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 4 கட்டத் தோ்தல்களில் சராசரியாக 66.95 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 379 இடங்களுக்கு தோ்தல் நிறைவடைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) 5-ம் கட்ட தேர்தல் 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவையொட்டி வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அமேதி, ரேபரேலி, பைசாபாத் உள்ளிட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தொகுதிகளில் இத்தோ்தல் நடைபெறுகிறது. இதில் பைசாபாத் பாராளுமன்றத் தொகுதி, அயோத்தி நகரை உள்ளடக்கியதாகும்.
5-ம் கட்டமாக இன்று நடந்து வரும் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்காளத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
49 தொகுதிகளிலும் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவை காண முடிந்தது. உத்தரபிரதேசத்தில் முந்தைய 4 கட்ட தேர்தல்களை விட இன்று அதிகளவு வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இதை அடுத்து, காலை 9 மணி நிலவரப்படி 5-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 10.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
பீகார் - 8.86 சதவீதம்
உத்தரபிரதேசம்- 10.88 சதவீதம்
ஜம்மு & காஷ்மீர் - 7.63 சதவீதம்
ஜார்க்கண்ட் - 11.68 சதவீதம்
லடாக்- 10.51 சதவீதம்
மகாராஷ்டிரா - 6.33 சதவீதம்
ஒடிசா- 6.87 சதவீதம்
மேற்கு வங்காளம்- 15.35 சதவீதம்
#LokSabhaElections2024 | 10.28% voter turnout recorded till 9 am, in the fifth phase of elections.
— ANI (@ANI) May 20, 2024
Bihar 8.86%
Jammu & Kashmir 7.63%
Jharkhand 11.68%
Ladakh 10.51%
Maharashtra 6.33%
Odisha 6.87%
West Bengal 15.35% pic.twitter.com/bNP5RqOg7d
#WATCH | J&K: Long queues of voters at a polling booth in Ichgam, Budgam as they await their turn to cast their vote.
— ANI (@ANI) May 20, 2024
Voting is being held for Baramulla Parliamentary constituency today. The constituency sees a contest among NC's Omar Abdullah, PDP's Mir Mohammad Fayaz and… pic.twitter.com/uUltMfPTok
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்