search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 110640"

    • பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங் நிரம்பி பஸ் நிலையம் முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • நோய் பரவும் அபாயம் ஏற்படுவதால் பயணிகள் கடும் அவதி அடைகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை வெளிப்பாளை யத்தில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது.

    மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்கலான வேளாங்கண்ணி, நாகூர், கோடியக்கரை, மற்றும் ஆன்மீக தளங்களுக்கு வரக்கூடிய பஸ்கள் அனைத்தும் இப்பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றன.

    அதே போன்று சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்ககளாக பஸ் நிலையம் அருகே ஓடக்கூடிய பாதாள சாக்கடை மற்றும் செப்டிக் டேங் நிரம்பி பஸ் நிலையம் முழுவதும் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    சில இடங்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது.

    இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு பயணிகள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.

    எனவே சுகாதாரத்தை பேணி காக்கும் வகையில் உடனடியாக கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.

    உடனடியாக போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பஸ்சில் பயணித்த 9 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
    • ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பஸ் மீட்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி நேற்றிரவு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது.

    அப்பேருந்தானது நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை சீராவட்டம் பாலம் அருகே சென்றபோது எதிர்திசையில் வந்த லாரி மீது மோதாமல் இருக்க, முயற்சித்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது.தொடர்ந்து பேருந்து முகப்பு மற்றும் சன்னல் கண்ணாடிகள் உடைந்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

    தொடர்ந்து பேருந்தில் பயணித்த 9 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர் அன்பரசன் உட்பட பயணியான தெற்குப்பொய்கை நல்லூரைச் சேர்ந்த வசந்தி ஆகியோர் கால் மற்றும் தலையில் லேசான காயங்களுடன் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்துகிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு பேருந்து மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பேருந்து மீட்கப்பட்டது. இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    ஓடுபாதையில் சென்றபோது சென்னை விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டு பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. #chennaiairport #chennaiflight

    ஆலந்தூர்:

    சென்னையில் இருந்து அகமதாபாத்துக்கு இன்று காலை 6.50 மணிக்கு விமானம் புறப்பட தயாராக இருந்தது. 179 பயணிகள் அதில் இருந்தனர்.

    ஓடுபாதையில் விமானம் சென்று கொண்டு இருந்தபோது எந்திரத்தில் கோளாறு இருப்பதை விமானி கண்டு பிடித்தார். உடனடியாக விமானத்தை மேலும் இயக்காமல் ஓடுபாதையிலேயே நிறுத்தி விட்டு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

    விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மாற்று விமானத்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று விமான நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனால் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.

    விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கடைசி நேரத்தில் கண்டு பிடித்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. #chennaiairport #chennaiflight

    அரக்கோணத்தில் ரெயில் தாமதமாக வந்ததால் பயணிகள் ரெயில்நிலைய அலுவலகத்தை முற்றுகை போராட்டம் செய்தனர்.

    அரக்கோணம்:

    திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னைக்கு தினமும் காலை 7 மணிக்கு மின்சார ரெயில் சென்றுவருகிறது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில்நிலையத்திற்கு 7 மணிக்கு வந்து 7.10 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

    இன்று 7 மணிக்கு வழக்கமாக வரவேண்டிய பாசஞ்சர் ரெயில் 7,15 மணிக்கு வந்தது. 15 நிமிடம் காலதாமதமாக வந்துள்ளது. மேலும் அந்த நேரத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் சென்றதால் பாசஞ்சர் ரெயிலை மேலும் 30 நிமிடங்கள் இயக்கபடாமல் நிறுத்தி வைக்கபட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயில்நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். நிலைய அதிகாரி மற்றும் ரெயில்வே போலீசார் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பயணிகள் நாங்கள் தினமும் சென்னைக்கு வேலைக்கு செல்லும்போது அடிக்கடி ரெயில்தாமதமாக செல்கிறது. இதனால் சரியான நேரத்தில் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே ரெயில் காலதாமதத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அதற்கு அதிகாரிகள் ரெயில்காலதாமதத்தை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறோம். இனி இது போல் காலதாமதம் நடக்காது என்று உறிதியளித்தனர். இதையடுத்து பயணிகள் கலைந்து சென்றனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    பேராவூரணியில் பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பேராவூரணி:

    பேராவூரணி அரசு மருத்துவமனை, அரசு வங்கி, தனியார் வங்கி அருகில் உள்ள பயணியர் நிழற்குடை மூலம் கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு, துர்க்கையம்மன் கோயில், புனல்வாசல், துறவிக்காடு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் 1000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வந்தனர். மேலும் அரசு மருத்துவமனை,அரசு வங்கி,தனியார் வங்கி மற்றும் கடை வீதிக்கு சென்று தங்கள் ஊருக்கு திரும்ப மழை மற்றும் வெயில் காலங்களில் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிழற்குடை கடந்த 2011-12-ஆம் ஆண்டு முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது ஆகும். இதனை முறையாக பராமரிக்காததால் தரையில் ஒட்டப்பட்ட டைல்ஸ் பெயர்ந்தும், பயணிகள் அமரும் இருக்கைகளை சேதமடைந்த நிலையில் உள்ளது. சில இருக்கைகள் காணவில்லை. இரவு நேரங்களில் மின்வசதி துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் சமூக விரோதிகள் மது அருந்துவது,எச்சில் துப்புவது,புகை பிடித்துக் கொண்டிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    எனவே தூய்மை இந்தியா திட்டத்தில் பயணியர் நிழற்குடையை சீரமைத்து மின்வசதி செய்துதர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ் சரியாக இயங்காத காரணத்தால் பயணிகள் திடீரென மறியலில் ஈடுபட்டனர். #koyambedubusstand
    போரூர்:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் செங்கல்பட்டு விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் நேற்று இரவு 10மணி முதல் சரியாக இயங்காததால் பயணிகள் பல மணிநேரம் காத்திருந்தனர்.

    இதுகுறித்து டெப்போவில் இருந்த போக்குவரத்து ஊழியர்களிடம் கேட்டனர். ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் சொல்லவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் நள்ளிரவு 12மணி அளவில் திடீரென்று பிளாட்பாரம் 1-ல் பஸ்களை மறித்து மறியலில் ஈடுபட்டனர்.

    மறியல் காரணமாக அந்த வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் வெளியே செல்ல வழியில்லாமல் வரிசையாக காத்துநின்றன.

    தகவலறிந்து வந்த கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அவர் வெளியூர் பேருந்துகளை ஏற்படுத்திக் கொடுத்தனர். இதையடுத்து பயணிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். #koyambedubusstand
    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் செல்போன் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அரக்கோணம்:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பச்சையம்மாள், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், திண்டுக்கல்லை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 21), திருநெல்வேலியை சேர்ந்த மதன் (23), ராமநாதபுரத்தை சேர்ந்த அரிகரசுதன் (23) என்பதும், ஓடும் ரெயிலில் பயணிகளிடம் செல்போன்கள் திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.

    தாராபுரத்தில் ஓடும் பஸ்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அரசு பஸ்சை ஆம்புலன்சாக பயன்படுத்திய டிரைவரையும், கண்டக்டரையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    தாராபுரம்:

    பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஆலம். இவரது மனைவி ரூபினா (வயது 22). ஆலம் குடும்பத்துடன் திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி பூலாம்பட்டியில் உள்ள மரிச்செலம்பு என்ற கிராமத்தில் கோழிப் பண்ணையில் தங்கி வேலை செய்து வருகிறார்.

    ரூபினா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மருத்துவ பரிசோதனைக்காக அடிக்கடி தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்வார். இன்று காலை ரூபினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

    இன்று காலை தொப்பம்பட்டி பஸ் நிறுத்தத்தில் அரசு பஸ் ஏறினார். பஸ் ஏறிய சிறிது நேரத்திலேயே ரூபினாவுக்கு பிரசவ வலி அதிகமானது. வலி தாங்க முடியாமல் அவர் சத்தம்போட்டு துடித்தார்.

    இதனை அறிந்த சக பயணிகள் இது குறித்து கண்டக்டர் மற்றும் டிரைவருக்கு தெரியப்படுத்தினர். உஷாரான அவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்க முயன்றனர். ஆனால் போதிய அவகாசம் இல்லை. இதனால் பஸ்சை மற்ற நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்லும் வழியில் உள்ள தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வேகமாக ஓட்டிச்சென்றனர். இது குறித்து தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே கர்ப்பிணிக்கு மேலும் வலி அதிகமானது. சக பெண் பயணிகள் ரூபினாவை சூழ்ந்து கொண்டனர். ஆண் பயணிகள் ஒதுங்கி வழிவிட்டனர். குழந்தையின் தலை வெளியே தெரிய ஆரம்பித்தது.

    மின்னல் வேகத்தில் பஸ் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றது. அங்கு தயாராக இருந்த டாக்டர் குழுவினர் கர்ப்பிணியை மீட்டனர். மீட்கப்பட்ட சிறிது நேரத்திலேயே ரூபினாவுக்கு சுக பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

    அரசு பஸ்சை ஆம்புலன்சாக பயன்படுத்திய டிரைவரையும், கண்டக்டரையும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஒரே இடத்தில் 1 மணி நேரம் நிறுத்தப்படுவதால் பயணிகளை பாடாய்படுத்துகிறது. #ChendurExpresstrain

    மதுரை, நவ.10-

    ஆன்மீக தலமான திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு தினமும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. தினமும் இரவு 7 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து புறப்படுகிறது.

    இந்த ரெயிலில் ஒருமுறை பயணம் செய்பவர்கள் மறு முறை பயணத்தை தொடர் வார்களா? என்றால் சந்தேகம் தான். அந்த அளவுக்கு பயணிகளின் பொறுமையை சோதித்து விடுகிறது செந்தூர் எக்ஸ்பிரஸ்.

    திருச்செந்தூரில் இருந்து மதுரைக்கு டிக்கெட் எடுப்ப வர்களின் நிலைமை தான் படுமோசமாகி விடுகிறது. 7 மணிக்கு திருச்செந்தூரில் புறப்படும் இந்த ரெயில் அட்டவணை நேரப்படி 11.40 மணிக்கு மதுரையை வந்தடைய வேண்டும்.

    ஆனால் ஏதாவது ஒரு ஸ்டேசனில் 1 மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தி வைத்து விடுகின் றனர். இதனால் 12.40 மணிக்குத்தான் ரெயில் மதுரை வந்து சேருகிறது.

    திருப்பரங்குன்றத்துக்கு இரவு 11.40 மணிக்கு வந்த ரெயில் அங்கு நிறுத்தப் பட்டது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் ரெயிலை எடுத்து விடுவார்கள். 12 மணிக்குள் மதுரைக்கு சென்று விடலாம் என நினைத்த பயணிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

    1 மணி நேரமாக ரெயில் அங்கேயே நின்று கொண் டிருந்தது. 4 ரெயில்கள் அந்த வழியாக கடந்து சென்ற பின்னர் தான் செந்தூர் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. அதன் பின்னர் 12.55 மணிக்குத்தான் மதுரை வந்து சேர்ந்தது.

    ஒரு நாள் மட்டும் இந்த நிலை இல்லை. தினமும் இதே நிலை தான் நீடிக்கிறது. ரெயில்வே நிர்வாகமும் இந்த பிரச்சினையை கண்டு கொண்டதாக தெரிய வில்லை.

    செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மட்டுமல்ல பல எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் இதே நிலை தான் நீடிக்கிறது. திருச்செந்தூர்-மதுரை இடையேயான தூரத்தை கடக்க செந்தூர் எக்ஸ்பிரஸ் 6 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.

    நடுக்காட்டில் ரெயில் நிறுத்தப்படுவதால் பயணிகளின் உடமைகள் பறிபோக வாய்ப்புள்ளது. ரெயில்வே நிர்வாகம் பயணிகளின் நலன் கருதி உரிய நடவடிக்கையை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். #ChendurExpresstrain 

    கோத்தகிரி தேயிலை தோட்டத்தில் பட்டபகலில் கரடி உலா வருவதால் சுற்றுலா பயணிகள், வாகன ஒட்டுநர்கள் கரடியை பார்த்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கரடியை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம், கோத்தகிரி சாலையின் இடையே குஞ்சப்பண்னை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது.

    இக்கிராமம் அடர்ந்த தேயிலை தோட்டம், காபி தோட்டம், வனப்பகுதியை ஒட்டிஅமைந்துள்ளன. இந்நிலையில் உணவு, குடிநீர் தேடி கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, சிறுத்தை, கடமான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் குடியிருப்புகளுக்குள் நுழைந்து பொதுமக்கள் விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன.

    இந்நிலையில் நேற்று குஞ்சப்பண்னை அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் பட்ட பகலில் கரடி ஒன்று உலா வந்தது. அப்போது கோத்தகிரி மேட்டுப்பாளையம் வழியாக வந்த சுற்றுலா பயணிகள், வாகன ஒட்டுநர்கள் கரடியை பார்த்து ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி கரடியை புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

    பின்னர் சுமார் 1 மணி நேரத்திற்கு பின்னர் கரடி அங்கிருந்து அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    செங்கோட்டை அருகே ஆட்டோவில் ஏற வந்த பயணிகள் பஸ்சில் ஏறிய தகராறில் பஸ் டிரைவரை தாக்கிய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.

    நெல்லை:

    செங்கோட்டையில் இருந்து கடையநல்லூருக்கு நேற்று ஒரு அரசு டவுன் பஸ் சென்றது. பஸ்சை சங்கரன் கோவில் அருகே உள்ள நெடுங்குளத்தை சேர்ந்த டிரைவர் சாமிநாதன் (வயது 46) ஓட்டினார். அந்த பஸ் அச்சன்புதூர் அருகே உள்ள பொய்கை ஊரணி அருகே வந்த போது, ஆட்டோவில் ஏற முயன்ற பயணிகள் பஸ்சில் ஏறிவிட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த வடகரையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதர் (30), அரசு பஸ் டிரைவரை அவதூறாக பேசி சரமாரி அடித்து உதைத்தார்.

    இதுகுறித்து பஸ் டிரைவர் சாமிநாதன், அச்சன்புதூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மைதீன் அப்துல் காதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ‘ரெட் ஐ’ என்னும் பின்னிரவுநேர விமானச் சேவையை நவம்பர் 30 முதல் உள்நாட்டில் தொடங்கவுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. #AirIndia #RedEyedomesticflights
    பெங்களூரு:

    இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் நாட்டில் உள்ள அத்தனை வழித்தடங்களிலும் உள்நாட்டு விமானச் சேவைகளை இயக்கி வருகிறது.

    இந்த வழித்தடங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் கூடுதலாக பின்னிரவு சேவைகளை தொடர தீர்மானிக்கப்பட்டது. இந்த சேவைக்கு ‘ரெட் ஐ’ என பெயரிடப்பட்டுள்ளது.

    முதல்கட்டமாக டெல்லி-கோவா-டெல்லி, டெல்லி-கோயமுத்தூர்-டெல்லி, பெங்களூரு-அகமதாபாத்-பெங்களூரு ஆகிய வழித்தடங்களில் நவம்பர் 30-ம் தேதி முதல் இந்த பின்னிரவு விமானச் சேவைகள் தொடங்குகின்றன.

    டெல்லியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்படும் விமானம் பின்னிரவு 12.35 மணியளவில் கோவா சென்றடையும். அங்கிருந்து 1.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3.40 மணியளவில் டெல்லி வந்து சேரும்.

    டெல்லியில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்படும் விமானம் பின்னிரவு 12.30  மணியளவில் கோயமுத்தூர் சென்றடையும். அங்கிருந்து 1.00 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4.00 மணியளவில் டெல்லி வந்து சேரும்.

    இதேபோல், பெங்களூருவில் இருந்து பின்னிரவு 12.30 மணிக்கு புறப்படும் விமானம் 2.35  மணியளவில் அகமதாபாத் சென்றடையும். அங்கிருந்து அதிகாலை 3.05 மணிக்கு புறப்பட்டு 5.25 மணியளவில் பெங்களூரு வந்து சேரும்.

    இந்த விமானச் சேவைகளின் மூலம் சராசரி கட்டணங்களைவிட குறைந்த செலவில் செல்லலாம். பெருநகர சாலைகளில் பரபரப்பான நேரங்களின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலையும், ஓட்டல்களில் தங்கும் செலவினங்களையும் தவிர்க்கலாம் என ஏர் இந்தியா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #AirIndia #RedEyedomesticflights
    ×