search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 134992"

    திருவள்ளுவர் தினத்தில் 20 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் தனது கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.
    தஞ்சை :

    தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் தங்கவேலனார்(வயது 70). இவர் பேராவூரணி பஸ் நிலையம் அருகே டீக்கடை நடத்தி வருகிறார். திருக்குறள் மீது ஆர்வம் கொண்ட இவர், ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தில் தனது கடையில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வருகிறார்.

    நாள்தோறும் இவருடைய கடையின் முன்பு உள்ள கரும்பலகையில் ஒரு திருக்குறளும், அதன் பொருளும் எழுதப்பட்டிருக்கும். இதை படிப்பதற்காகவே பலர் இவருடைய கடைக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள்.

    நேற்று திருவள்ளுவர் தினம் என்பதால் தங்கவேலனாரின் கடையில் ஒரு ரூபாய்க்கு டீ விற்பனை நடந்தது. உலக பொது மறையாக திகழும் திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளாக திருவள்ளுவர் தினத்தன்று ஒரு ரூபாய் விலையில் டீ வழங்கி வருகிறேன். இன்று (நேற்று) மட்டும் நூற்றுக்கணக்கானவர்களுக்கு டீ விற்பனை செய்தேன். தமிழக அரசு இந்த ஆண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து இருப்பதால், சில்வர் குவளையில் டீ வழங்கினேன். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    காட்பாடி 7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி அருகேயுள்ள குழந்தைகள் இல்லத்தில் சமூக பணியாளராக பணிபுரிந்து வரும் ரஞ்சிதா, விருதம்பட்டு போலீசில் புகார் மனு அளித்தார்.

    அதில், ‘‘எங்களது குழந்தைகள் இல்லத்தில் வாலாஜா தாலுகா ஒழுகூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமி தங்கி காட்பாடியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டார். வழக்கத்தைவிட அதிகமாக கோபம் கொண்டார்.

    இதையடுத்து மாணவியை அருகேயுள்ள மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சையின்போது, மாணவி கடந்த ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறை நாளில் காங்கேயநல்லூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    அங்கு வைத்து அருகேயுள்ள வீட்டிற்கு வந்த வேலூர் கஸ்பாவை சேர்ந்த சேகர் (62) என்பவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

    அதன்காரணமாக மாணவி மன அழுத்தத்துடன் காணப்பட்டுள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சேகர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் சேகர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னையில் முதியவரை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டிவி நடிகை மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதியவர் புகார் அளித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூர் திலகவதி நகரில் வசித்து வருபவர் முத்தையா (72). கட்டுமான தொழில் செய்து வரும் இவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

    அந்த மனுவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் டி.வி. நடிகை ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.

    கடந்த 29-ந்தேதி இரவு 11 மணியளவில் என் மகனுக்கு தெரிந்தவர்கள் என்று கூறிக் கொண்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், அவரது மனைவி டி.வி. நடிகை சஜினி மற்றும் ரவுடிகள் சிலர் வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்தனர்.

    என்னையும் என் மகன் கிறிஸ்டோபரையும் காசிமேடு, அண்ணாநகர், ரவுடிகள் மூலம் கடத்தி சென்று கொலை செய்து விடுவதாக கூறி ரூ.10 லட்சம் உடனடியாக தரவேண்டும் என்று மிரட்டினர்.

    எதற்காக இந்த பணம் தர வேண்டும் என்று கேட்டதற்கு உன் மகன் உயிரோடு வேண்டும் என்றால் கேட்ட பணத்தை கொடு, இல்லையெனில் ரவுடிகளை வைத்து உன் குடும்பத்தை தீர்த்து கட்டிவிடுவேன் என்று மிரட்டினர்.

    பணத்தை இப்போது தரவில்லை என்றால் என்னையும் என் மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதையடுத்து உயிருக்கு பயந்து ரூ.10 லட்சத்துக்கு ‘செக்’ எழுதி கொடுத்தேன். அதிகாலை 2 மணி வரை என்னை கத்தி முனையில் மிரட்டியதால் நான் வேறுவழி தெரியாமல் பயந்து செக்கினை கொடுத்து விட்டேன்.

    என்மகன் வீட்டிற்கு வந்த பிறகு நடந்த சம்பவத்தை கூறினேன். போலீஸ் துறையில் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எந்த நோக்கத்திற்காக அவர்கள் எங்களிடம் இப்படி நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

    அவர்களிடம் இருந்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு மட்டுமின்றி கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் தாம்சன் பாண்டியன், டி.வி. நடிகை சஜினி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    பரமக்குடியில் முதியவரை தாக்கி பணம் பறித்த வாலிபர் சி.சி.டி.வி. காமிரா பதிவு மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டார்.
    பரமக்குடி:

    பரமக்குடி மேலசத்திரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஏகாம்பரம் என்ற முதியவர் சுற்றித்திரிந்தார். இரவில் அங்குள்ள ஒரு வீட்டின் முன்பு படுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    நள்ளிரவில் அங்கு வரும் யாரோ சிலர் அவரை தாக்கி பணத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து ஏகாம்பரம் அந்தப்பகுதி மக்களிடம் கூறினார்.

    இதைத்தொடர்ந்து ஏகாம்பரம் வழக்கமாக படுக்கும் வீட்டின் முன்பு சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டது.

    வழக்கம் போல் ஏகாம்பரத்திடம் பணம் பறிக்கும் வாலிபர் நேற்று இரவு அங்கு வந்தார். மதில் ஏறி குதித்த அவர் ஏகாம்பரத்தின் சட்டைப்பையில் இருந்த பணத்தை பறிக்க முயன்றார்.

    அப்போது அவர் சத்தம் போடவே ஆத்திரமடைந்த அந்த வாலிபர் அங்கு கிடந்த கல்லை எடுத்து முதியவரை தாக்கினார்.

    பின்னர் அவரது சட்டைப் பையில் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.

    இது குறித்து பரமக்குடி நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் பரமக்குடியைச் சேர்ந்த கணேச பாண்டியன் (வயது 17) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. #tamilnews
    பளுகல் அருகே சிறுமியை தோட்டத்திற்கு அழைத்துச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்து முதியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    நாகர்கோவில்:

    பளுகலை அடுத்த ஆலம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன்(வயது77). தொழிலாளி. இவர் கடந்த 28-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை அருகே உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்று செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்ல கூடாது என ஜாண்சன் சிறுமியை மிரட்டில் உள்ளார். சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் முதியவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    மேலும் சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறும்போது, தான் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது முதியவர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வருமாறு கூறினார். அங்கு தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், இதனை வெளியில் சொல்ல கூடாது என மிரட்டினார். இவ்வாறு இந்த சிறுமி கூறி அழுதார். இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா ஆகியோர் முதியவர் ஜாண்சன் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். போலீசார் வழக்குபதிவு செய்ததையடுத்து முதியவர் ஜாண்சன் தலைமறைவாகி விட்டார். தலைமறைவாகி உள்ள ஜாண்சனை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை தனியார் மருத்துவமனையில் 103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துமுடித்து மருத்துவர்கள் சாதனை புரிந்தனர். #Chennai
    சென்னை:

    ஆங்கில மருத்துவத்தில் முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது அரிதான ஒன்றாகும். அதிலும் அதிக வயதுடைய முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது மிக மிக சவாலுக்குரிய ஒன்றாகும். சென்னை மருத்துவர்கள் இந்த சவாலை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

    சென்னையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில், 103 வயதான முன்னாள் அரசு ஊழியர் ஸ்ரீனிவாசன், இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் முழுமூச்சாக செயல்பட்டனர்.

    103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை எனும் அசாத்திய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். இதுதொடர்பாக எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் லக்சுமி  நாதன் கூறுகையில், சுமார் 90 நிமிடங்கள் இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும், பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்த அறுவை சிகிச்சையை சிறப்பாக மருத்துவர்கள் குழு செய்து முடித்ததாகவும் தெரிவித்தார்.

    மேலும், மிக விரைவில் ஸ்ரீனிவாசன் தனது வீட்டிற்கு திரும்பலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    103 வயது முதியவருக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. #Chennai
    வளசரவாக்கம் பகுதியில் வேட்டி, சட்டை அணிந்து மொபட்டில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபடும் முதியவரை, கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
    பூந்தமல்லி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்பவர்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்களில் சிறுவர்கள், வாலிபர்கள், கல்லூரி மாணவர்கள்தான் ஆடம்பர செலவுக்கு ஆசைப்பட்டு ஈடுபட்டு வந்தனர்.

    இவர்கள் தங்களை போலீசார் அடையாளம் காணாமல் இருக்க ஹெல்மெட் அணிந்தும், முகத்தில் துணியை கட்டிக்கொண்டும் கைவரிசை காட்டி வருகின்றனர்.

    ஆனால் தற்போது முதியவர் ஒருவர், வளசரவாக்கம் பகுதியில் நூதன முறையில் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

    வேட்டி, சட்டை அணிந்தும், நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டும் நீல நிற மொபட்டில் சாலையில் வலம் வரும் அவருக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். அந்த நபர், சாலையில் தனியாக நடந்து செல்லும் வயதான பெண்களை குறி வைத்து தனது சங்கிலி பறிப்பு சம்பவத்தை அரங்கேற்றி வருகிறார்.

    அவரது வயதை வைத்து யாரும் அவரை சங்கிலி பறிப்பு திருடன் என சந்தேகம் அடையமாட்டார்கள் என்பதால் அவர், ஹெல்மெட் அணியாமலும், முகத்தில் துணி கட்டாமலும் துணிச்சலுடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    வளசரவாக்கத்தில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகையை பறித்த அவர், உடனடியாக நகையை வாயில் லாவகமாக கவ்விக்கொண்டு மொபட்டில் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்று விட்டார். அதன்பிறகுதான் அந்த மூதாட்டிக்கு நகை பறிபோனது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது, அதில் அவர் நீல நிற மொபட்டில் வந்து சங்கிலி பறிப்பில் ஈடுபடும் காட்சி தெளியாக பதிவாகி உள்ளது தெரிந்தது.

    அதில் பதிவான அவரது உருவம் மற்றும் மொபட் பதிவெண் ஆகியவற்றை வைத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞர்களுக்கு சவால் விடும் வகையில் முதியவரும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வருவதால் பெண்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனவும் தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தும் கடந்த 70 நாட்களாக முதியவர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மங்கலம் சாலை கருவம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முத்துசாமி (80) இவர் கடந்த மார்ச் மாதம் 23 -ந் தேதி தனது பிறந்த நாள் முதல் யாரிடமும் பேசாமல் அவினாசி சாலை திருமுருகநாத சாமி கோவிலில் உள்ள பனைமரத்தடியில் நின்று உறுதிமொழி எடுத்துக்கொண்டார்,

    பின்னர் அவர் எதுவும் பேசாமல் மவுன போராட்டத்தில் ஈடுபட்டார்.தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழை பயிற்று மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த 70 நாட்களாக மவுன போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.முத்துசாமி மவுன போராட்டம் குறித்து அவரது மனைவி சுப்புலட்சுமியிடம் கேட்ட போது கூறியதாவது-

    எனது கணவர் மவுனப் போராட்டம் நடத்துவது தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகத்தான். இன்றைய தலைமுறையினரிடம் தமிழில் பேசவும் எழுதவும் தடுமாற்றம் உள்ளது. பள்ளிகளில் முறையான தமிழ் கல்வி இல்லாமையே இதற்கு காரணம்.வீடுகளில் தமிழில் பேசுவதில் தொடங்கி எழுதுவது வரை தமிழ் எளிமையாக வர வேண்டும் .

    அந்த அளவிற்கு தமிழை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    சுப்புலட்சுமி சொல்லிய கருத்தை ஆமோதிக்கும் வகையில் முத்துசாமி தலையசைத்தார்.

    7-ம் வகுப்பு வரை படித்த முத்துசாமி, பின்னலாடை தொழிலில் இயற்கை முறையில் சாயமிடும் தொழிலில் வெற்றி கண்டுள்ளார்.

    அதுமட்டுமல்லாமல் தமிழை செம்மொழியாக அறிவிக்க கோரி தமிழ் அறிஞர்கள் டெல்லியில் நடத்திய சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். தமிழக ம் தலை நிமிர தமிழ் மொழி கல்வியே வழி வகுக்கும் என மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்துள்ளார். #tamilnews
    மத்திய பிரதேச மாநிலத்தில் ஊர் மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்க தனி ஒருவனாக நின்று 76 அடி ஆழ கிணறு வெட்டிய முதியவரின் 3 ஆண்டு முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
    போபால்:

    மத்தியபிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ளது ஹதுவா கிராமம். இந்த கிராமம் மத்திய பிரதேசத்தின் வறண்ட பகுதியான பண்டல்கன்ட் பிராந்தியத்தில் அமைந்துள்ளது.

    இதனால் இந்த கிராமத்தில் போதிய குடிநீர் கிடைப்பதில்லை. மக்கள் குடிநீருக்காக அலைவது வாடிக்கையாக இருந்து வந்தது. ஊரில் பொதுக் கிணறும் இல்லை.

    2015-ம் ஆண்டு மே மாதம் இங்கு கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது அந்த ஊரை சேர்ந்த சீத்தாராம் லோடி ஊரில் கிணறு வெட்டுவது என்று முடிவு செய்தார்.

    தனி ஒரு ஆளாக நின்று கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்டார். ஆரம்பத்தில் அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவினார்கள்.

    பின்னர் இது வீண் வேலை என்று கூறி அவர்களும் ஒதுங்கிக்கொண்டனர். ஆனாலும், மனம் தளராத சீத்தாராம் லோடி தனியாக கிணறு தோண்டினார். தினமும் காலையில் கிணறு தோண்டும் பணியை தொடங்கி மாலை வரை அதை செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.

    மழை காலத்தில் அந்த கிணறு இடிந்து விழுவதும் வாடிக்கையாக இருந்தது. இவ்வாறு 3 தடவை கிணறு இடிந்து விழுந்தது. ஆனாலும், மனம் தளராத அவர் தொடர்ந்து தோண்டும் பணியில் ஈடுபட்டார்.

    இப்போது 3 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் 76 அடிக்கு கிணற்றை தோண்டி உள்ளார். அதில் தண்ணீர் கிடைக்கிறது. சீத்தாராம் லோடிக்கு தற்போது 71 வயது ஆகிறது.

    இந்த வயதில் அவர் கிணறு தோண்டி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

    இதுபற்றி சீத்தாராம் லோடி கூறும்போது, எனது பணியை பலரும் பைத்தியக்காரத்தனம் என்று விமர்சித்தார்கள். என் குடும்பத்தினர் கூட எனக்கு உதவவில்லை. ஆனாலும், கிணறை தோண்டியே தீருவது என்பதில் உறுதியாக இருந்து பணியை முடித்துள்ளேன் என்று கூறினார்.

    தனக்கு எதிராக குறி சொன்னதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது இடத்தில் வைத்து முதியவரை செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரமக்குடி:

    காவல்துறை பொது மக்களின் நண்பன் என்ற வாசகங்கள் போலீஸ் நிலையங்களிலும், பொது இடங்களிலும் எழுதப்பட்டிருப்பதை அடிக்கடி நாம் பார்த்திருக்கலாம்.

    ஆனால் தற்போது ஒரு சில போலீசார் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால் மேற்கண்ட வாசகம் சரிதானா? என்று எண்ணத்தோன்றுகிறது.

    குறிப்பாக வாகன ஓட்டிகளிடமும், அப்பாவி மக்களிடமும் போலீசார் காட்டும் கெடுபிடிகள் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கின்றன. இதை தட்டிக் கேட்டால் பொய் வழக்கு போட்டு அவர்களை கைது செய்துவதும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

    இதே போல் ஏராளமான சட்ட மீறல்களிலும் ஒரு சில போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சில போலீசாரின் இதுபோன்ற செயல்களால் ஓட்டுமொத்த காவல்துறைக்கு களங்கம் ஏற்படுகிறது.

    இதனிடையே தனக்கு எதிராக குறி சொன்னதால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொது இடத்தில் முதியவரை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதன் விபரம் வருமாறு:-

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே உள்ள எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக இருப்பவர் முனியசாமி. ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருவது வழக்கம்.

    மேலும் ஜோசியத்திலும் இவருக்கு அதீத நம்பிக்கை உண்டு. பரமக்குடியில் கடை வாசலில் அமர்ந்து 50 வயது மதிக்கத்தக்க முதியவர் குறி சொல்லிக் கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு சென்ற சப்- இன்ஸ்பெக்டர் முனியசாமி தான் விரைவில் ஓய்வு பெற உள்ளதாகவும், எனவே எதிர்காலம் எப்படி இருக்கும் என்று குறி கேட்டுள்ளார்.

    அவரது கையை பார்த்து குறி சொன்ன அந்த முதியவர், உங்களுக்கு அரசின் பணப்பலன்கள் கிடைக்க கொஞ்சம் சிக்கலாகத்தான் இருக்கும் என்றும் மேலும் சில எதிர்மறையான கருத்துக்களையும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி பொது இடத்திலேயே குறி சொன்ன அந்த முதியவரை மனிதாபிமான மின்றி செருப்பால் சரமாரியாக தாக்கினார்.

    இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி மட்டும் தான் அடைந்தனர். சப்- இன்ஸ்பெக்டர் என்பதால் அவரை தடுக்க வில்லை.

    ஆத்திரம் தீர முதியவரை தாக்கிய பின் முனியசாமி அங்கிருந்து கிளம்பினார்.

    இந்த சம்பவத்தை அங்கிருந்த பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் பதிவேற்றினர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் முதியவரை அற்ப காரணத்துக்காக செருப்பால் தாக்கிய சம்பவம் பொதுமக்களிடமும், சமூக ஆர்வலர்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உரியவர்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.  #tamilnews

    கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் இறந்ததாக சான்றிதல் வழங்கப்பட்ட முதியவர் ஓய்வுதியம் கேட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள பன்னீருத்து கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி(வயது85). முன்னாள் பஞ்சாயத்து தலைவரான இவர் வர்மக்கலை படித்தவர். வயதான காலத்தில் இவருக்கு அரசு சார்பாக முதியோர் பென்சன் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குருசாமிக்கு வரவேண்டிய முதியோர் பென்சன் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குருசாமி கயத்தாறு தாலுகா அலுவலகத்துக்கு சென்று கேட்டார். அதற்கு தாலுகா அலுவலக அதிகாரிகள் சரியான பதில் கூறவில்லை.

    இதையடுத்து அவர் தூத்துக்குடி கலெக்டர் வெங்கடேசிடம் மனு கொடுத்தார். பின்பு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் அவர் மனு அனுப்பினார். இதுபற்றி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கோவில்பட்டி ஆர்.டி.ஓ அனிதா இதுபற்றி விசாரணை நடத்தினார். அப்போது கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் உள்ள பதிவேட்டில் குருசாமி இறந்துவிட்டார் என அங்குள்ள கிராம நிர்வாக அதிகாரி அறிக்கை கொடுத்து பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குருசாமி மீண்டும் தாலுகா அலுவலகம் சென்று தனக்கு முதியோர் பென்சன் நிறுத்தப்பட்டது ஏன் என கேட்டார். அதற்கு அதிகாரிகள் நீங்கள் இறந்து விட்டீர்கள். அதனால் உங்களுக்கு பென்சன் கிடையாது என்றார்களாம். இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குருசாமி மீண்டும் மனு கொடுத்தார். அதற்கு கலெக்டர் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்கப்பட்டது. அதன்பிறகே அதிகாரிகள் தங்கள் தவறு செய்ததாக கலெக்டர் அலுவலகத்துக்கு பதில் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்ட குருசாமிக்கும் தகவல் அனுப்பியுள்ளனர்.#tamilnews
    ×