என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சபாநாயகர்"
- பொதுவாக துணை சபாநாயகர் பதவி எதிர்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கு வழங்கப்படுவது வழக்கம்.
- கடந்த முறை மோடி அரசு தனி மெஜாரிட்டி பெற்றபோதிலும் துணை சபாநாயகர் பதவியை வழங்க மறுத்துவிட்டது.
மக்களவை தேர்தலில் பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளுக்கு வழங்க பாஜக விரும்பவில்லை. துணை சபாநாயகர் பதவியையும் வைத்துக் கொள்ள விரும்புவதாக தெரிகிறது.
பாராளுமன்ற வழக்கப்படி ஆளுங்கட்சி அல்லது கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார். துணை சபாநாயகர் எதிர்க்கட்சியை சேர்ந்த நபருக்கு வழங்கப்படும்.
ஆனால் பாஜக கடந்த முறை 2-வதாக ஆட்சி அமைக்கும்போது துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை.
இந்த முறை கூட்டணி ஆட்சி அமைந்துள்ளதாலும், எதிர்க்கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாலும் துணை சபாநாயகர் பதவியை கேட்டு வலியுறுத்துவோம் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சரத் பவாரிடம் துணை சபாநாயகர் பதவி கேட்டு வலியுறுத்துவீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு "இந்த விதிமுறை கடந்த மோடி அரசால் கடைபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும். ஆனால், நல்ல பதில் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை" என்றார்.
மேலும், எதிர்கட்சி தலைவர் பதவி குறித்த கேள்விக்கு "முன்னதாகவே அதிக இடங்களை பிடிக்கும் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறுவது தொடர்பாக ஒப்புக்கொண்டோம். அதனால் காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சி முடிவு செய்யும்" என்றார்.
மக்களவை தேர்தலில் பாஜக 240 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தனியாக 99 இடங்களில் வெற்றி பெற்றது. மகாராஷ்டிராவில் வாய்ப்பு வழங்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கை 100 ஆக உள்ளது.
- பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
- தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடி தலைமை யில் பாஜ.க. கூட்டணி அரசு ஆட்சி அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றம் வருகிற 24-ந்தேதி கூடுகிறது.
இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
24 மற்றும் 25-ந்தேதிகளில் 2 நாட்கள் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பார்கள். பாராளுமன்ற மரபுபடி சபையின் மூத்த உறுப்பினரை தற்காலிக தலைவராக தேர்வு செய்வார்கள். அந்த வகையில் தற்போது கேரள மாநில மேவலிக்கரா தொகுதியில் இருந்து தேர்வாகி இருக்கும் காங்கிரஸ் எம்.பி. சுரேஷ் தற்காலிக தலைவராக (சபாநாயகர்) தேர்வு செய்யப்பட உள்ளார்.
அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைப்பார். அதன் பிறகு சுரேஷ் எம்.பி. தற்காலிக சபாநாயகராக இருந்து புதிய எம்.பி.க்கள் அனைவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
எம்.பி.க்கள் அனைவரும் பதவி ஏற்று முடித்ததும் பாராளுமன்றத்துக்கு புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார். சபாநாயகர் பதவியை தெலுங்கு தேசம் கட்சி கேட்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் சபாநாயகர் பதவி முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அதை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர்கள் விரும்பவில்லை.
எனவே சபாநாயகர் பதவியை பாரதீய ஜனதா தக்கவைத்துக்கொள்ளும் என்று உறுதியாகி இருக்கிறது. ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான புரந்தேஸ்வரி 6 தடவை எம்.பி.யான ராதா மோகன்சிங், முன்னாள் சபாநாயகர் ஓம்பிர்லா ஆகிய 3 பேரில் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.
ஓம்பிர்லா மீண்டும் சபாநாயகராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன. தெலுங்கு தேசம் வலியுறுத்தும் பட்சத்தில் ஆந்திராவை சேர்ந்த புரந்தேஸ்வரிக்கு வாய்ப்பு கிடைக்கலாம். யாருக்கு சபாநாயகர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும் என்பது 25-ந்தேதி தெரிந்து விடும்.
அன்று பிரதமர் மோடி சபாநாயகர் பெயரை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 26-ந்தேதி சபாநாயகர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதற்கிடையே துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சி கூட்டணியான இந்தியா கூட்டணிக்கு தர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை பா.ஜ.க. ஏற்க மறுத்துள்ளது.
துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம் அல்லது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்க பாரதீய ஜனதா முடிவு செய்துள்ளது. இதில் ஒருமித்த கருத்தை உருவாக்க மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை பா.ஜ.க. மேலிடம் நியமனம் செய்துள்ளது.
ராஜ்நாத்சிங் கூட்டணி கட்சிகளுடன் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். ஓரிரு நாட்களில் இதில் ஒருமித்த கருத்து ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
- மக்களவையில் ஆளும் கூட்டணிக்கு இணையாக எதிர்கட்சிகள் உள்ளன.
- 234 எம்.பி.க்கள் இருப்பதால் துணை சபாநாயகர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று இந்தியா கூட்டணி விரும்புகிறது.
புதுடெல்லி:
18-வது பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்டம் வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கூடுகிறது. ஜூலை 3-ந் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
9 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் முதல் நாளில் தற்காலிக சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.
எம்.பி.க்கள் பதவியேற்புக்கு பிறகு 26-ந் தேதி சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.
இந்த மக்களவையில் ஆளும் கூட்டணிக்கு இணையாக எதிர்கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜகவுக்கு 240 இடங்கள் கிடைத்தது. தனிப்பெரும்பான்மை பெறாததால் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு 234 உறுப்பினர்கள் உள்ளனர்.
இந்த நிலையில் தங்களுக்கு துணை சபாநாயகர் பதவியை விட்டு கொடுக்க வேண்டும், அந்த பதவியை தரமறுத்தால் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவது என்று இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
234 எம்.பி.க்கள் இருப்பதால் துணை சபாநாயகர் பதவியை பெற்றுவிட வேண்டும் என்று இந்தியா கூட்டணி விரும்புகிறது.
ஆனால் பா.ஜனதா சபாநாயகர் பதவியை தாங்களும், துணை சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிக்குக்கும் வழங்க முடிவு செய்துள்ளது. கூட்டணி கட்சிகளான தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளத்தை திருப்திபடுத்த துணை சபாநாயகர் பதவியை வழங்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
ஆனால் எதிர்கட்சியான இந்தியா கூட்டணி துணை சபாநாயகர் பதவிக்கு குறிவைத்துள்ளது.
அந்த பதவியை கொடுக்காவிட்டால் எதிர்க்கட்சிகள் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட இருக்கிறது. ஒருமனதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பா.ஜனதாவின் முயற்சிக்கு இந்தியா கூட்டணி தடையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 17-ந் தேதி மக்களவையில் பாஜகவின் ஓம் பிர்லா சபாநாயகராக பணியாற்றினார். துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.
சபாநாயகர் அவையில் இல்லாத நேரத்தில் துணை சபாநாயகர் அவையை நடத்துவார். இதனால் அந்த பதவியை பெறுவதில் இந்தியா கூட்டணி தீவிரமாக இருக்கிறது.
- பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
- மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.
பாட்னா:
பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய
கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு ஐக்கிய ஜனதா தளம் தனது ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கே.சி.தியாகி கூறுகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. எனவே, சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கும் என தெரிவித்தார்.
- மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறுகிறது.
- சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறி வைத்துள்ளன.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையின் முதல் கூட்ட தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மக்களவை சபாநாயகர் தேர்தல் ஜூன் 26-ம் தேதி நடைபெறும் என மக்களவை செயலகம் இன்று அறிவிப்பு வெளியிட்டது. மிக முக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவிக்கு ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் குறிவைத்துள்ளன.
ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய
கூட்டணி கட்சிகள் சபாநாயகர் பதவியை எதிர்பார்க்கின்றன.
சபாநாயகர் பதவிக்கான போட்டியில் வேட்பாளரை நிறுத்த பா.ஜ.க.வும் முடிவு செய்துள்ளது.
பிரதான எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி பொது வேட்பாளரை நிறுத்த தீவிரம் காட்டி வருகிறது.
- சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார்.
- புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
திருப்பதி:
தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமராக நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் நேற்று பதவி ஏற்றனர்.
சந்திரபாபு நாயுடு தனது கட்சிக்கு 5 மந்திரி பதவியும், 1 சபாநாயகர் பதவியும் வழங்க வேண்டும் என பா.ஜ.க.விடம் வலியுறுத்தி வந்தார்.
ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு 2 மந்திரி பதவிகளை பா.ஜ.க. வழங்கியது. சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியதின்படி. அவரது மனைவியின் சகோதரியும் பா.ஜ.க. மாநில தலைவரான புரந்தேஸ்வரிக்கு சபாநாயகர் பதவி வழங்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்துள்ளது.
சந்திரபாபு நாயுடு நாளை மறுநாள் முதல் மந்திரியாக பதவி ஏற்று கொள்கிறார். அவரது பதவி ஏற்பு விழாவிற்கு பிறகு புரந்தேஸ்வரி இன்னும் சில நாட்களில் சபாநாயகராக பதவியேற்பார் என கூறப்படுகிறது.
புரந்தேஸ்வரியை சபாநாயகராக தேர்ந்தெடுத்தால் ஆந்திரா மாநிலம் மேலும் வளர்ச்சி பெறும் என கூறப்படுகிறது.
ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான நடிகர் என்.டி.ராமராவின் மகள். என்டி ராமராவ் மகளும், புரந்தேஸ்வரியின் சகோதரிமான புவனேஸ்வரியை சந்திரபாபு திருமணம் செய்து கொண்டார்.
என.டி.ராமராவின் மறைவுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு தெலுங்கு தேசம் கட்சி தலைவரானார். ஆந்திர அரசியலில் கால் பதிக்க நினைத்த புரந்தேஸ்வரி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து மந்திரி, எம்.பி பதவிகளை வகித்தார். 2004-ம் ஆண்டு பாபட்லா எம்.பி.யாகவும், 2009-ம் ஆண்டு விசாகப்பட்டினம் எம்.பி.யாகவும் பணியாற்றினார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகி எந்த கட்சியிலும் சேராமல் இருந்தார்.
இந்த நிலையில் ஆந்திராவில் பா.ஜ.க. கால் பதிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தபோது கட்சி மேலிடம் புரந்தேஸ்வரியை மாநில தலைவராக அறிவித்தது.
புரந்தேஸ்வரி மாநில தலைவராக பதவி ஏற்ற பிறகு கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இவரது நடவடிக்கையால் ஆந்திராவில் பா.ஜ.க. அபார வளர்ச்சி அடைந்தது.
நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. புரந்தேஸ்வரி ராஜமுந்திரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பா.ஜ.க. 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு 8 சட்டமன்ற தொகுதிகளையும், 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது.
- காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
- விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும்.
நெல்லை:
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த நிலையில் நேற்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் அப்பாவுக்கு அவர் அனுப்பி வைத்ததுடன், இ-மெயில் மூலமும் கடிதத்தை அனுப்பி வைத்தார். அதுமட்டுமின்றி தனது எக்ஸ் வலைதள பக்கத்திலும், பேஸ்புக் பக்கத்திலும் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு உள்ளார்.
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சபாநாயகர் அப்பாவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான விஜயதாரணி எங்கள் கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து உள்ளதால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவரது எம்.எல்.ஏ. பதவியை உடனடியாக பறித்து தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:
காங்கிரசில் இருந்து விலகிய விஜயதாரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ராஜினாமா கடிதம் முறைப்படி இருந்ததால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இணைய வழியில் கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் விஜயதாரணி என்னிடம் பேசினார்.
விளவங்கோடு சட்டசபை தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று கூறினார்.
- ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
- இந்த தரச்சான்றை பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சென்னை:
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான எனது எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுபோன்ற ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை புரிந்துள்ள முதல் எம்.எல்.ஏ. நான்தான். ஒரு எம்.எல்.ஏ. என்ற முறையிலும், பா.ஜனதா தேசிய மகளிர் பிரிவு தலைவி என்ற முறையிலும் இதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
2011-ம் ஆண்டு குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது பிரதமர் மோடியின் அலுவலகத்திற்கும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைத்தது.
இந்த தரச்சான்றை பெற்றதன் மூலம், எங்களது பணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த எம்.எல்.ஏ. அலுவலகம், மக்களுக்கு அளித்து வரும் சேவை மற்றும் அதன் செயல்பாட்டில் உள்ள சர்வதேச தரத்தை, இந்த சான்றளிப்பு அடிக்கோடிட்டு காட்டுகிறது. இந்த சாதனையை சபாநாயகர் அப்பாவுவிடம் காட்டி மகிழ்ச்சி அடைந்தேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின் வரிசையில் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தள்ளப்பட்டார்.
- ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. 4-வது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையும் இருந்தது.
இருவரும் அ.தி.மு.க.வில் ஒன்றாக இருந்த வரை இருக்கை பிரச்சனை எழவில்லை. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதும் புதிய எதிர்கட்சி துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்றி விட்டு அந்த இடத்தில் ஆர்.பி. உதயகுமாரை அமர வைக்க கோரி எடப்பாடி பழனிச்சாமி சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் கொடுத்தார். இது தொடர்பாக பலமுறை வலியுறுத்தவும் செய்தார். ஆனாலும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் நிலுவையில் வைத்திருந்தார்.
இதற்கிடையில் பா.ஜனதாவை எதிர்த்து தி.மு.க. கடுமையான அரசியல் செய்து வரும் நிலையில் பா.ஜனதாவுக்கு ஆதரவாகவும், அந்த கூட்டணியில் இருப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையை சாதுர்யமாக கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி சட்டசபை விவாதத்தின்போது சபாநாயகர் முறையாக முடிவெடுப்பதில்லை. நான் 4 முறை எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக கடிதம் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
மு.க.ஸ்டாலினும் உடனே குறுக்கிட்டு எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை சபாநாயகர் பரிசீலிக்க வேண்டும் என்றார்.
அவர் சொன்ன மறுநாளே இருக்கை மாற்றம் அதிரடியாக நடந்தது. அதாவது எடப்பாடி பழனிசாமி அருகில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பின் வரிசையில் எடப்பாடி பழனிசாமியின் பின்னால் தள்ளப்பட்டார்.
அந்த வரிசையில் இருந்த ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. 4-வது வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த வரிசையில் இருந்த மற்றவர்கள் ஒவ்வொரு இருக்கை நகர்ந்து அமர்ந்தனர். கடைசியில் முன்னாள் சபாநாயகர் தனபால் இருந்த 207-வது இருக்கை ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் இதுவரை அமர்ந்திருந்த இடத்தில் ஆர்.பி.உதயகுமார் அமர வைக்கப்பட்டார்.
- கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
- சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.
ராயபுரம்:
தண்டையார்பேட்டை, பழைய வைத்தியநாதன் சாலையில் பா.ஜனதா கட்சியின் வடசென்னை பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தை மாநில தலைவர் அண்ணாமலை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையை பொறுத்தவரை பாதயாத்திரையை வேறுவிதமாக நடத்த இருக் கிறோம். செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை வைத்து அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. சட்டசபையில் தமிழ்தாய் வாழ்த்தை முழுமையாக வாசிக்க வேண்டும்.
கருணாநிதியால் வெட்டப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை இசைக்கக் கூடாது. ஜி.எஸ்.டி.கொண்டு வரப்பட்டதற்கு பின்பு தான் தமிழகத்தின் வரி வளர்ச்சி அதிகரிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் அப்பாவு தி.மு.க. உறுப்பினர் போல் நடந்து கொண்டார். நாதி ராம் கோட்சேவுக்கும் அப்பாவுக்கும் தொடர்பு இருக்கலாம். கவர்னருக்கும் கோட்சேவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை.
ஆளுநருக்காக எழுதி கொடுத்த உரையில் 10 பொய்களை சுட்டிக்காட்டி உள்ளோம். சபாநாயகர் அப்பாவு தி.மு.க.வை விட மோசமாக உள்ளார்.
சென்னை வெள்ளத்தில் மக்கள் தத்தளிக்கவில்லை என்று கூறி தி.மு.க.வை கவர்னர் பாராட்ட வேண்டும் என்றால் எப்படி பாராட்டுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத் தலைவரும் வடசென்னை பொறுப்பாளருமான பால்கனகராஜ், பாராளுமன்ற இணை அமைப்பாளர் பிரசாத், பாராளுமன்ற பொறுப்பாளர் பெப்சி சிவா, மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார், கபிலன், ஊடகப்பிரிவு மாநில செயலாளர் மற்றும் பாராளுமன்ற பிரிவு பொறுப்பாளர் சி.பி.நவீன், ஆர்.கே.நகர் சட்டமன்ற அமைப்பாளர் எஸ்.ஆர்.செந்தில், பாஸ்கோ மாணிக்கம், சிவகுமார், திருவொற்றியூர் சட்டமன்ற அமைப்பாளர் ஜெய் கணேஷ், திருமுருகன், ராயபுரம் சட்டமன்ற அமைப்பாளர் வன்னிய ராஜன், இணை அமைப்பாளர் விஜயகுமார், பொருளாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.
- பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சென்னை:
சிறுவாணி அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் பிரச்சினை இருப்பதாகவும் சிறுவாணி அணையில் இருந்து 73 எம்.எல்.டி. தண்ணீர் வரவேண்டும் ஆனால் 38 எம்.எல்.டி. தண்ணீர் மட்டுமே வருவதாகவும் கூறினார்.
இதன் காரணமாக 25 நாட்களுக்கு ஒரு முறை தான் கோவை மாநகர மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதாக தெரிவித்த அவர், கேரள அரசுடன் கலந்தாலோசித்து தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேபோல், கோவையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கக்கூடிய வகையில் வெள்ளலூரில் 62.61 ஏக்க நிலப்பரப்பில் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 50 சதவீதம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த பணிகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுவாணி அணையில் இருந்து குறைவாகவே கேரளா அரசு தண்ணீர் தருவதாகவும், இது குறித்து பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்துள்ளதாகவும், சிறுவாணி அணையில் இருந்து உரிய நீரை பெற அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதோடு, கோவை மாநகர மக்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வெள்ளலூர் பேருந்து நிலைய கட்டுமான பணிக்காக இணைப்பு சாலைகளை அகலப்படுத்த வேண்டிய தேவை உள்ளதால், அந்தப் பணிகளை முடித்த பிறகு இந்த ஆண்டிலேயே பேருந்து நிலைய கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
- சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும்.
- எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.
சென்னை:
சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அவர் பேசியதாவது:-
எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் 4 முறை உங்களிடம் (சபாநாயகர்) சந்தித்து கடிதம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பலமுறை நேரிலும் வலியுறுத்தியுள்ளோம்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இருக்கைக்கு அருகில் துணை தலைவருக்கு இருக்கை ஒதுக்குவது மரபாகும். எனவே எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு எனது அருகே முன் வரிசையில் இருக்கை ஒதுக்கி தர வேண்டும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறும்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உங்களிடம் (சபாநாயகர்) தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார். அதற்கு நீங்களும் பதில் சொல்லி வருகிறீர்கள்.
முன்னாள் சபாநாயகர் தனபாலு தீர்ப்பை சுட்டிக்காட்டி நீங்களும் பதில் கூறி உள்ளீர்கள். எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து ஆவண செய்ய வேண்டும் என்று சபாநாயகரிடம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கை மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்