search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாய்"

    • நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.
    • தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட புதுக்கோட்டை பஞ்சாயத்து பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 4 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிள்ளையார்கோவில் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் கட்டப்பட்டது.

    சுமார் 60 அடி உயரம் கொண்ட இந்த நீர்தேக்க தொட்டியில் 60 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேமித்து வைக்கலாம். இந்த தொட்டியில் இருந்து அந்த பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    பஞ்சாயத்து நிர்வாகத்தின் உத்தரவுப்படி இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்ய அதன் ஆபரேட்டர் கடந்த சனிக்கிழமை தண்ணீர் ஏற்றாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் நேற்று காலை தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்ய வந்தபோது துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அச்சம் அடைந்த டேங்க் ஆபரேட்டர் இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. போலீசார் விரைந்து வந்து தொட்டியின் மீது ஏறி பார்த்தபோது அதற்குள் நாய் இறந்து கிடந்துள்ளது. நாய் அழுகிய நிலையில் காணப்பட்டதால் அது இறந்து பல நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது.

    இதுகுறித்து போலீசார், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஆய்வு செய்தனர்.

    தொட்டிக்குள் கிடந்த நாயை அகற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவம் குறித்து பஞ்சாயத்து தலைவர் காளீஸ்வரி எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    நாயை கொன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்குள் யாரேனும் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஸ்நூசி நாய் மிகவும் புத்திசாலித்தனமானது. அனைவரிடமும் பாசமாக பழகும்.
    • பிறந்த மற்ற குட்டிகள் இறந்தபோதும் மரணத்தை வென்று உள்ளது.

    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் தெருநாய் ஒன்று சுற்றி வந்தது.

    கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 4 குட்டிகளை ஈன்ற அந்த நாய் இறந்துபோனது. இதனால் பரிதாபப் பட்ட அப்பகுதி மக்கள் பிறந்து சில நாட்களே ஆன 4 நாய்க்குட்டிகளுக்கும் உணவு கொடுத்து பராமரித்தனர். ஆனால் சில நாட்களிலேயே அதில் மேலும் 3 நாய்குட்டிகள் இறந்து போனது.

    இதைத்தொடர்ந்து மீதம் இருந்த ஒரு நாய்க்கு அப்பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஸ்நூசி என்று செல்லமாக பெயர் வைத்து வளர்த்தனர். அந்த நாயும் அக்கம்பக்கத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடம் பாசமாக பழகியது. இதனால் அப்பகுதியில் ஸ்நூசி நாய் பிரபலமாக வலம் வந்தது.

    இதற்கிடையே அந்த நாயை வளர்த்து வந்த குடும்பத்தினர் வீடு மாற்றலாகி வேறு இடத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்கள் செல்லும் புதிய வீட்டில் விலங்குகளை வளர்க்க அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் அந்த குடும்பத்தினர் கனத்த இதயத்துடன் ஸ்நூசியை அப்பகுதியில் வசிக்கும் ஷமீம் என்பவரிடம் ஒப்படைத்தனர். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் அவர் வெளியில் செல்லும் போது நாயை வீட்டின் 2-வது மாடியில் விட்டு செல்வது வழக்கம்.

    அதே போல் வழக்கம் போல் ஷமீம் வேலைக்கு சென்று திரும்பி வந்தபோது வீட்டின் இரும்பு கேட்டில் உள்ள கம்பியில் குத்திய நிலையில் நாய் உயிருக்கு போராடியபடி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நாயை மீட்க முயன்றபோது முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து அருகில் கட்டிட பணியில் இருந்த தொழிலாளர்களை வரவழைத்து இரும்பு கம்பியை துண்டாக அறுத்து நாயை மீட்டனர். பின்னர் அதனை அடையாறில் உள்ள தனியார் கால்நடை மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு டாக்டர் ஜோசிகா நாவுக்கரசு மற்றும் ஊழியர்கள் காயம் அடைந்த நாய்க்கு அறுவை சிகிச்சை செய்தனர். தற்போது நாய் நலமாக உள்ளது. வீட்டின் 2-வது மாடியில் இருந்து நாய் கீழே விழுந்து இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து ஷமீம் கூறும்போது, 'ஸ்நூசி நாய் மிகவும் புத்திசாலித்தனமானது. அனைவரிடமும் பாசமாக பழகும். அதன் தாயார் இறந்த போதும், அதனுடன் பிறந்த மற்ற குட்டிகள் இறந்தபோதும் மரணத்தை வென்று உள்ளது.

    தற்போது இரும்பி கம்பியில் விழுந்தும் உயிர் பிழைத்து இருக்கிறது. வெளியில் செல்லும் நேரத்தில் நாயை பராமரிப்பது கடினமாக உள்ளது. இதனை விருப்பப்பட்ட வர்கள் வாங்கி பராமரிக்கலாம்' என்றார்.

    இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர் ஜோசிகா நாவுக்கரசு கூறும்போது, 'காயம் அடைந்த நாய்க்கு அறுவை சிகிச்சை மூலம் குத்தி இருந்த இரும்பு கம்பி அகற்றப்பட்டது. தற்போது சிகிச்சை முடிந்து நாய் நலமாக உள்ளது.

    எக்ஸ்ரே எடுக்கப்பட்டதில் கம்பி குத்தியதில் அதன் உள்உறுப்புகள் ஏதுவும் பாதிக்கப்பட வில்லை என்பது உறுதியானது' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாய்களை விரட்ட அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கினர்.
    • நாய் துரத்தும்போது கருவியின் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து எழும் ஒலி, நாயை விரட்டிவிடும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தெரு நாய்களின் தொல்லை அதிகம். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பலரும் தெருநாய்களால் கடிக்கப்பட்டு காயம் அடைந்துள்ளனர்.

    இதுபோல அலுவலகங்களுக்கு செல்வோர் மற்றும் தொழிலாளிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடப்பட்டன.

    இந்த நிலையில் கோழிக்கோட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் படித்து வரும் மாணவன் ஆண்டோ ஜாய் மாணவி பிரார்த்தனா கோஷ் ஆகியோர் தெருநாய்களை துரத்த என்ன செய்யலாம் என ஆராய்ச்சி மேற்கொண்டனர்.

    இதன் பலனாக நாயை துரத்தும் கருவி ஒன்றை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டனர்.

    இதற்காக தங்கள் பள்ளியின் ஆசிரியை ஒருவர் துணையுடன் அவர்கள் 45 நாட்களாக ஆய்வு செய்தனர். இதில் அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் கருவி ஒன்றை உருவாக்கினர். இந்த கருவியில் இருந்து எழும் அல்ட்ரா சவுண்ட்டை கேட்டால் நாய்கள் தெறித்து ஓடுவதை கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து நாய்களை விரட்ட அல்ட்ரா சவுண்ட் எழுப்பும் சிறிய பெட்டி ஒன்றை உருவாக்கினர். இதனை பல இடங்களில் அவர்கள் பயன்படுத்தி பார்த்தனர். அதில் நல்ல பலன் கிடைத்தது.

    இந்த கருவியை பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் புத்தக பையில் இணைத்து கொள்ளலாம். நாய் துரத்தும்போது கருவியின் பட்டனை அழுத்தினால் அதில் இருந்து எழும் ஒலி, நாயை விரட்டிவிடும்.

    இந்த கருவியை தேசிய குழந்தைகள் அறிவியல் கண்டுபிடிப்புக்கான கருத்தரங்கில் வெளியிட மாணவர்கள் ஆண்டோ மற்றும் பிரார்த்தனா முடிவு செய்தனர். இதன்மூலம் கருவிக்கான காப்புரிமையை பெறவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

    • இரவில் ஆடு, கோழிகள் மர்ம நபர்களால் திருடு போகிறது என மக்கள் கூறுகின்றனர்.
    • திருடும் முயற்சிக்கு நாய்கள், இடையூறாக இருப்பதால் தான் அவற்றை விஷம் வைத்து கொல்ல மர்ம நபர்கள் முற்பட்டுள்ளனர் .

    அவிநாசி :

    அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சேவூர் அருகேயுள்ள போத்தம்பாளையம் பகுதியில் ஆடு கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களாக இரவில் ஆடு, கோழிகள் மர்ம நபர்களால் திருடு போகிறது என மக்கள் கூறுகின்றனர்.

    சம்பவத்தன்று அங்கு நாய்க்கு கோழிக்கழிவில் சிலர் விஷம் வைத்து விட்டு சென்றதாகவும், அதை உண்ட 3 நாய்களில் 2 நாய்கள் இறந்துவிட்டது எனவும் அப்பகுதி மக்கள் கூறினர். ஆடு, கோழிகளை திருடுவதற்கு வரும் நபர்களை வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் துரத்துவதாலும், தங்களின் திருடும் முயற்சிக்கு நாய்கள், இடையூறாக இருப்பதால் தான் அவற்றை விஷம் வைத்து கொல்ல மர்ம நபர்கள் முற்பட்டுள்ளனர் எனவும் மக்கள் கூறினர். இதுதொடர்பாக கர்ணன், ராஜசேகர், ராஜேஷ்குமார் ஆகியோர் சேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு வழங்கினர். 

    • நாய் 'பேட்டன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ்' எனப்படும் பிறவி இருதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
    • இருதய பெருநாடி மற்றும் நுரையீரல் தமனியின் 2 முக்கிய நாளங்களுக்கு இடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    மும்பை:

    மராட்டியம் மாநிலம் மும்பை ஜூஹூ பகுதியை சேர்ந்த ராணி ராஜ் வான்காவாலா என்பவர் நாய் ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வந்தார்.

    4 வயதான அந்த செல்லப்பிராணி சமீப காலமாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தது. சரியாக நடக்க முடியாமல் சோர்வுடன் காணப்பட்டது. அந்த செல்லப் பிராணியை கால்நடை மருத்துவர்களிடம் அழைத்து சென்று காட்டினர்.

    அப்போது அந்த நாய்க்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அந்த நாய் 'பேட்டன்ட் டக்டஸ் ஆர்டெரியோசஸ்' எனப்படும் பிறவி இருதய குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

    இதனால் அந்த நாய்க்கு இருதய பெருநாடி மற்றும் நுரையீரல் தமனியின் 2 முக்கிய நாளங்களுக்கு இடையில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. எனவே அந்த நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கால்நடை டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

    செல்லப்பிராணிகளுக்கு இதுபோன்ற அறுவை சிகிச்சைகள் கடினமானது எனவும், நாய்க்கு மயக்க மருந்து வழங்குவது சவாலானது எனவும் டாக்டர்கள் கருதினர்.

    இந்தியாவில் இதுபோன்று செல்லப்பிராணிகளுக்கு திறந்த இருதய சிகிச்சை என்பது அரிதானது என கூறிய கால்நடை டாக்டர்கள் வெளிநாடுகளில் இதுபோன்ற சிகிச்சைகள் வழக்கமாக நடைபெறும் என்பதையும், ராணிராஜ் குடும்பத்தினரிடம் கூறினர்.

    இதைத்தொடர்ந்து நாயை அறுவை சிகிச்சைக்காக இங்கிலாந்திற்கு அழைத்து செல்வதுதான் ஒரே வழி என்றும், அங்கு நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் ராணிராஜ் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக நாயை வெளிநாடு அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் நாயை எப்படியாவது குணப்படுத்த வேண்டும் என ராணிராஜ் குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து வெளிநாடுகளில் இதுபோன்று நாய்களுக்கு அறுவை சிகிச்சை செய்த இருதய அறுவை சிகிச்சை நிபுணரான ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் மத்தியாஸ்பிரன்ங்குடன் மும்பை டாக்டர் தேஷ்பாண்டே தொடர்பு கொண்டு பேசினார்.

    அப்போது அவர் இந்தியா வந்து நாய்க்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சை செய்ய சம்மதித்தார். அதன்படி அவர் விமானத்தில் மும்பை வந்து அந்தேரியில் உள்ள டாக்டர் மகரந்த் சவுசல்கரின் கிளினிக்கில் நாய்க்கு திறந்த இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலில் அல்ட்ரா சவுண்ட் எந்திரத்தில் 2டி எக்கோ சோதனை நடந்தது.

    தொடர்ந்து நாய்க்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. 4 வராங்களுக்கு பிறகு அந்த நாய் தற்போது ஆரோக்கியமாக தனது வீட்டிற்கு திரும்பி உள்ளது.

    • 100 நாட்டு இன நாய்களை வளர்ப்பதற்காக சதீசுக்கு இந்த ஆண்டுக்கான இனப்பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
    • 45 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட ராஜபாளையம் நாய்க்குட்டி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள புதூர் மலையின் அடி வாரத்தில் கே.பொத்தாம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர் ஏ.சதீஷ். இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிகிறார். அதே நேரத்தில் தனது சொந்த கிராமத்தில் நாய் பண்ணையில் 100 நாட்டு நாய்களை வைத்து வளர்த்து வருகிறார். இவரிடம் ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, மண்டை உள்ளிட்ட இனங்களில் நாட்டு நாய்கள் உள்ளன. இதில் கன்னி, சிப்பிப் பாறை ஆகிய வகை நாய்கள் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவை. கோம்பை இன நாய் தேனி மாவட்டத்தை சேர்ந்தது. மண்டை வகை நாய்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவை.

    100 நாட்டு இன நாய்களை வளர்ப்பதற்காக சதீசுக்கு இந்த ஆண்டுக்கான இனப்பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவரிடம் உள்ள 45 நாட்களுக்கு குறைவான வயது கொண்ட ராஜபாளையம் நாய்க்குட்டி ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. கோம்பை, மண்டை நாய் குட்டிகள் 6 ஆயிரத்துக்கும், கன்னி, சிப்பிப் பாறை நாய்க்குட்டிகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்கப்படுகிறது.

    இந்த அனைத்து நாய்களுக்கும் யுனைடெட் கென்னட் கிளப் ஆப் இந்தியா மற்றும் கென்னட் கிளப் ஆப் இந்தியா ஆகியவற்றால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழில் நாய்களின் பெற்றோரின் வம்சாவளி மற்றும் பிறந்த தேதி போன்ற விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

    இங்கு வளர்க்கப்பட்ட 2 சிப்பிப் பாறை நாய்க்குட்டிகள் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழ்நாடு வனத்துறையில் சேர்க்கப்பட்டுள்ளன. தஞ்சாவூரில் உள்ள விமான தளத்தில் ஓடு பாதைகளை பறவைகள் இல்லாமல் வைத்திருக்க ராஜபாளையம் நாய் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் இங்கிருந்து ஏற்கனவே 1000-க்கும் மேற்பட்ட நாய்க்குட்டிகளை பலர் வாங்கி சென்றுள்ளனர்.

    • தினமும் 100 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட உள்ளது
    • இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த

    திருச்சி

    திருச்சி மாநகரில் தெரு நாய்களின் இனப்பெருக்கம் மற்றும் தொல்லை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் அம்பேத்கர் நகர், அரியமங்கலம் மற்றும் கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் தலா ரூ.51 லட்சம் செலவில் கருத்தடை மையங்களை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது இந்த புதிய கருத்தடை மையங்களின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொரு மையமும் 2000 முதல் 3000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் ஆபரேஷன் தியேட்டர் தனிமைப்படுத்தும் அறை, சிகிச்சை அறை, ஆப்ரேஷனுக்கு முன்பும் பின்பும் தங்க வைக்கும் அறைகள் என தனித்தனியாக கட்டப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலையில் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் 15 நாய்களுக்கு மட்டுமே கருத்தடைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த புதிய மையங்கள் செயல்படும் பட்சத்தில் தினமும் 75 முதல் 100 தெரு நாய்களுக்கு கருத்தடைகள் செய்ய முடியும்.

    கடந்த 2017-ல் இருந்து 2021 வரை 4,883 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது. நடப்பாண்டில் இதுவரை 602 நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒரு நாய்க்கு கருத்தடை செய்ய மாநகராட்சி சார்பில் ரூ.700 செலவு செய்யப்படுகிறது. இந்த தெரு நாய்களை பிடிப்பதற்கு இரண்டு சிறப்பு 

    • ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது.
    • பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

    பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளி அருகே உள்ள திம்மநாயக்கன்பாளையம் சிவசக்தி நகரில் ஒரு வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளான பூனையும், நாயும் ஒற்றுமையாக திகழ்வதை பார்க்கும் போது அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது .

    இந்த பூனையும் நாயும் ஒரே தட்டில் தான் உணவு அருந்துகிறது. வேறு ஒரு நாய் தட்டில் சாப்பிட வரும்போது இந்த நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் ஒரே தட்டில் சாப்பிடும் போது பூனைக்கு நாய் விட்டுக் கொடுக்கிறது. பொதுவாக பூனையை கண்டால் நாய்க்கு பிடிப்பதில்லை. ஆனால் இந்த வீட்டில் இந்த அதிசயம் நிகழ்வதை பார்க்கும்போது மெய்சிலிர்க்க வைக்கிறது.

    இது குறித்து அந்த வீட்டின் உரிமையாளர் கோனியா கூறும் போது, நாங்கள் சிறு வயது முதல் நாயையும் பூனையையும் ஒன்றாக தான் வளர்த்து வருகிறோம். நாய்க்குட்டியாக இருக்கும் போது பூனை அதன் மேல் படுத்து தூங்கும் .  அப்போதே அவர்கள் ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுப்பதில்லை. அது இன்றுவரை தொடர்கிறது. பொதுவாக எந்த நாயும் தான் உணவருந்தும் போது வேறொரு நாயோ மற்ற விலங்கோ நெருங்கும்போது அதை சும்மா விடுவதில்லை, துரத்தும். ஆனால் இந்த நாயின் குணம் பிரமிக்க வைக்கிறது.

    • நாய் போல் குரைத்த நபருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • அறிகுறி ஏற்பட்ட பின்பு நோயாளிக்கு லாரிங்கோஸ்பாம் ஏற்படும்.

    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தை அடுத்த கட்டாக், உடய்பூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்பியூரா. தொழிலாளி. இவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாய் கடித்தது.

    நாய் கடிக்காக ராஜேஷ்பியூரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறவில்லை. இந்த நிலையில் அவர் வீட்டில் இருந்த போது திடீரென நாய் போல் குரைக்க தொடங்கினார்.

    இதை கேட்டதும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை பெற்ற பின்பு அவர் மேல் சிகிச்சைக்காக கட்டாக்கில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், நாய் கடித்ததும் உடனடியாக அவர் சிகிச்சை பெறாததே இதற்கு காரணம் என்றனர்.

    மேலும் நாய் போல் குரைத்த நபருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஹைட்ரோபோபியா என்போம். இந்த அறிகுறி ஏற்பட்ட பின்பு நோயாளிக்கு லாரிங்கோஸ்பாம் ஏற்படும். இதன்காரணமாக தொண்டை வறண்டுவிடும். அப்போது அவரது குரல் நாய் குரைப்பது போல மாறும் என்றனர்.

    • நாயின் தலை சுவருக்கு வெளியே வந்தபடியும், கழுத்து பகுதி துளையிலும் சிக்கி கொண்டது.
    • பிரதாப் கண்விழித்து வெளியே வந்தபோது வீட்டு சுவரில் நாய் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் லெட்சுமிபுரத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றி திரிந்த ஒரு தெருநாய் அங்குள்ள பிரதாப் என்பவரின் வீட்டுக்குள் நுழைந்துள்ளது. பின்னர் வெளியே செல்ல வழியை தேடியபோது வீட்டின் சுற்றுச்சுவரில் துளை இருப்பதை கண்டது. உடனே அந்த துளை வழியாக வெளியே சென்று விடலாம் என நினைத்து தலையை நுழைத்துள்ளது. ஆனால் நாயின் தலை சிக்கிக்கொண்டது. அதாவது நாயின் தலை சுவருக்கு வெளியே வந்தபடியும், கழுத்து பகுதி துளையிலும் சிக்கி கொண்டது.

    இதனால் முன்னோக்கி செல்ல முடியாமலும், தலையை பின்னோக்கி இழுக்க முடியாமலும் நாய் பரிதவித்தது. ஒரு கட்டத்தில் தலையை வெளியே எடுக்க பலமாக முயற்சி செய்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டு ரத்தமும் வடிந்தது. இதனால் தப்பிக்க முடியாமல் இரவு முழுவதும் சுற்றுச்சுவர் துளையிலேயே பரிதவித்தது.

    நேற்று காலையில் பிரதாப் கண்விழித்து வெளியே வந்தபோது வீட்டு சுவரில் நாய் சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் நாயை மீட்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை. உடனே இதுகுறித்து அவர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு படையினர் வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி சுவரின் துளையை சற்று பெரிதாக உடைத்து நாயை மீட்டனர்.

    சுவரில் இருந்து விடுதலையான மகிழ்ச்சியில் நாய் துள்ளி குதித்து சந்தோசத்துடன் ஓடியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காரை நிறுத்திய மக்கள், நாயை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • கார் மூலம் நாயை இழுத்துச் சென்ற மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு.

    ஜோத்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நேற்று காரில் நாய் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டிருந்த நிலையில் அதை ஓட்டிச் சென்ற நபர் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்தவர் இந்த வீடியோவை படம் பிடித்துள்ளார். போக்குவரத்து பரபரப்பு நிறைந்த சாலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    அந்த நாய் காருக்கு பின்னால் ஓட முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்ததை கண்ட விலங்கு நல ஆர்வலர்கள் கோபத்தின் உச்சத்திற்கு சென்றனர். இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் காரின் முன் தனது வாகனத்தை நிறுத்தி அந்த ஓட்டுநரை கட்டாயப்படுத்தி காரை நிறுத்தச் செய்கிறார். உடனடியாக அங்கு கூடிய மக்கள் அந்த நாயின் சங்கிலியை அவிழ்த்து விட்டு அதை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் அந்த டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர் ஒரு மருத்துவர் என்பது தெரிய வந்துள்ளது. அவரது வீட்டின் அருகே இருந்த தெரு நாயை அகற்றும் நடவடிக்கையாக அதை காரில் கட்டி இழுத்து சென்றதாக அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

    விலங்கு வதை சட்டத்தின் கீழ் அந்த மருத்துவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சிலர் இதயமற்ற அந்த மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜஸ்தான் அரசை வலியுறுத்தி உள்ளனர்.

    • வீட்டிற்குள் சென்ற பாம்பை தடுக்க முயன்ற நாய் பலியானது.
    • நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகே கீழப்பூங்குடி கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் சரவணன். இவர் செவலை நாய் உள்பட 4 நாய்களை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை வீட்டின் முன்பு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

    அப்போது நல்லபாம்பு ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனை கண்ட செவலை நாய் முதலில் குரைத்து பாம்பை விரட்ட முயன்றுள்ளது. ஆனால் பாம்பு வெளியே செல்லாததால் அதன் மீது பாய்ந்து கடித்துள்ளது. இதில் பாம்பு கடித்ததில் நாய் மயங்கி விழுந்தது. இதனை கண்ட குழந்தைகள் கூச்சலிடவே பெரியவர்கள் வந்து நாய் செவலையை அருகில் இருந்த கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செய்தனர்.அப்போது நாய் இறந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்.

    வீட்டில்புகுந்த பாம்பை தடுக்க முயன்று உயிர் தியாகம் செய்த செவலை நாயை கண்டு சரவணன் குடும்பத்தினர் அழுதனர். பின்னர் அவர்கள், நாய் செவலைக்கு இறுதி மரியாதை செலுத்தி வீட்டின் பின்புறமே புதைத்தனர்.

    ×