search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயிரிழப்பு"

    • அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.
    • வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

    காலநிலை நிலை மாற்றத்தால் மக்கள் மறைமுகமாக பாதிக்கப்பட்ட காலம் மாறி துரதிஷ்டவசமாக நேரடியாகவே பாதிக்கட்டும் காலம் வந்துவிட்டது. உலகம் முழுவதும் மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம், பசி , பட்டினி, போர் ஆகியவற்றால் கொத்துக்கொத்தாக மக்கள் செத்துக்கொண்டிருக்கும் வேலையில் இயற்கையால் ஏற்படுத்தத்ப்பட்ட புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களாலும் சமீப காலங்களில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனோடு அதிக வெப்பம் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் உயிரிழப்புகள் இந்தியாவில் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன.

    முக்கியமாக வட மாநிலங்களில் நிலவிவரும் வரலாறு காணாத வெளியில் காரணமாக மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு மாநிலமான ஒடிசாவில் கடந்த மே 30ஆம் தேதி ஒரே நாளில் ஹீட் காரணமாக 42 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த 72 மணி நேரத்தில் மற்றும் 99 பேர்ஹீட் ஸ்டார்க் காரணமாக உயிரிழந்துள்ளனர் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.

    வெயில் காலம் தொடங்கியதிலிருந்து ஒடிசாவில் மட்டும் இதுவரை 141 ஹீட் ஸ்ட்ரோக் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடம் இந்தியாவில் ஹீட் ஸ்ட்ரோக்கால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 250 ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது.
    • இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.

    இலங்கையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. 4 மாவட்டங்களுக்கு நிலச்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கனமழையால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவரை தலைநகர் கொழும்பு உட்பட 7 மாவட்டங்களில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சுமார் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு 300 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைபதிவாகி உள்ளது. மொத்தம் உள்ள 25 நிர்வாக மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

    4000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மீட்புப் பணிகளுக்காக படகுகளுடன் கூடிய 7 குழுக்களை இலங்கை ராணுவம் அனுப்பி உள்ளது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி அவசர நடவடிக்கைக்காக விமானப்படை 3 ஹெலிகாப்டர்களை தயார் நிலையில் வைத்துள்ளது. மழை நீடிக்கும் என்பதால், இலங்கை முழுவதும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • சிறுவன் 2 பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.
    • சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.

    புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

    சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் சிறுவனுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

    இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிறுவனை மீண்டும் காவல்துறையினர் கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.

    சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டது.

    இந்நிலையில், மகனின் ரத்தத்திற்கு பதிலாக தனது ரத்தத்தை மாற்றி, மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாக அவரது தாயார் ஷிவானி அகர்வால் சான்று பெற்றுள்ளார்.

    இவ்விவகாரத்தில் சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை போலீசார் தேடி வருகின்றனர்

    இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. 

    • 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதி.
    • விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு- பூஞ்ச் நெடுஞ்சாலையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்டுள்ள விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

    உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா மோர் என்ற பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.

    இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரடுமுரடான மலைகள் அதிகளவு கொண்ட இந்த பகுதி போக்குவரத்துக்கு தகுதியற்றதாக விளங்கி வருகிறது.
    • சாலை தடுப்பில் அந்த பஸ் நேருக்கு நேர் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமாக பலூசிஸ்தான் விளங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய மாகாணமாக விளங்கும் பலூசிஸ்தான் பொதுவாக வறண்ட மாகாணமாக கருதப்படுகிறது. கரடுமுரடான மலைகள் அதிகளவு கொண்ட இந்த பகுதி போக்குவரத்துக்கு தகுதியற்றதாக விளங்கி வருகிறது. இருந்தாலும் உள்ளூர் பொதுமக்கள் பெரிய நகரங்களுக்கு சென்று வருவதற்காக மலைகளை குடைந்து சாலைகளை ஏற்படுத்தி உள்ளனர். இருப்பினும் சரியான அளவில் இந்த சாலைகளை அமைக்கப்படாததால் விபத்து அபாயம் அதிகம் கொண்ட பகுதிகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

    இந்தநிலையில் பலூசிஸ்தானின் ஒதுக்குபுறமான சிற்றூரான டர்பட்டிலிருந்து இருந்து தலைநகரான குவெட்டாவுக்கு பஸ் ஒன்று இயக்கப்படுகிறது. தினசரி சேவைக்காக ஒருதடவை மட்டுமே இயக்கப்படும் இந்த பஸ்சில் எப்போதும் கூட்டம் அலைமோதும். இதனையடுத்து நேற்று இயக்கப்பட்ட அந்த பஸ்சில் சுமார் 54 பயணிகள் பயணித்தனர். கூட்ட நெரிசலுடன் மலைபாங்கான சாலையில் அந்த பஸ் சென்று கொண்டிருந்தது. வாசுக் அருகே சென்றபோது திடீரென அதன் முன்பக்க டயர் வெடித்து பஞ்சரானது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை அந்த பஸ் இழந்தது.

    இதனையடுத்து சாலை தடுப்பில் அந்த பஸ் நேருக்கு நேர் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் அந்த பாய்ந்தது. தரையில் மோதிய வேகத்தில் அந்த பஸ் அப்பளம்போல் நொறுங்கி தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணித்து கொண்டிருந்த சிறுவர்கள், பெண்கள் உள்பட 28 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த 22 பேரை உள்ளூர் பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

    • பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர்.
    • உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    பாலஸ்தீனத்தில் அதிக மக்கள் வாழும் ரஃபா நகரில் உள்ள முகாம் மீது கடந்த மே 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் எச்சரித்திருந்தும் இஸ்ரேல் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த தாக்குதல் துரதிஸ்டவசமான தவறு என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

     

    இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு கண்டணங்கள் வலுத்து வரும் நிலையில் உலக அளவில் "எல்லா கண்களும் ரஃபா மீதுதான் உள்ளன" " Al eyes on Rafa" என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் ரஃபா மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.

    மனிதாபிமான உதவிகள் உள்ளே வரமுடியாத வகையில் ரஃபா எல்லை துண்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எரிந்து கருகிய நிலையில் கிடக்கும் தங்களது குழந்தைகளின் உடல்களை கையில் சுமந்தபடி தாய்மார்கள் நிலைகுலைந்து நிற்கின்றனர். திருப்பிய திசையெல்லாம் குழந்தைகளின் மரண ஓலமே கேட்கிறது. 

     

     

    பல்ஸாதீனம் மீது இஸ்ரேல் நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 36 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். சர்வதேச சமூகம் இன்னும் எத்தனை காலத்துக்கு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கப்போகிறது என்பதே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. 

     

    • கிருஷ்ணசாமி வளர்த்து வந்த 3 கோழிகளையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது தெரிய வந்தது.
    • டந்த 2 வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்று வந்தது.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த தாண்டாம் பாளையம், 3 ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (55). விவசாயி. இவர் மாடு, ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வளர்த்து வருகிறார்.

    மாடுகளை வீட்டின் பின்பகுதியில் உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் அவரது மாடு ஒன்று கிடாரி கன்றுக்குட்டி ஒன்றை ஈன்று இருந்தது.

    இந்நிலையில் இன்று காலை எழுந்த கிருஷ்ணசாமி கால்நடைகளை தீவனம் வைக்க வந்தார். அப்போது தொழுவத்தில் இருந்த பிறந்த 20 நாட்களே ஆன கிடாரி கன்றுக்குட்டியை மர்ம விலங்கு கடித்துக்கொன்றது தெரிய வந்தது.

    இதுபோல் அருகே கிருஷ்ணசாமி வளர்த்து வந்த 3 கோழிகளையும் மர்ம விலங்கு கடித்து கொன்றது தெரிய வந்தது. கன்றுக்குட்டியின் பாதி உடலையும், கோழிகளின் பாதி உடலையும் அந்த மர்ம விலங்கு கடித்து தின்று உள்ளது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு ஏதும் மர்ம விலங்கு கால் தடங்கல் பதிவாகியுள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல் பரவியதால் கிருஷ்ணசாமி வீட்டுக்கு ஏராளமானோர் திரண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியில் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பும் இதே பகுதியில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை மர்ம விலங்கு கடித்துக் கொன்று வந்தது.

    பின்னர் வனத்துறையினரின் தீவிர விசாரணையில் அந்த மர்ம விலங்கு நாய்கள் என தெரிய வந்தது. தற்போதும் மர்ம விலங்கு கடித்து கன்றுக்குட்டி, கோழிகள் இறந்துள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • 53 வயது நபர் ஒருவர் 57 வயது பெண்ணுடன் லிவ் இன் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
    • பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை 3 நாட்களாக வீட்டிலேயே அந்த நபர் வைத்துள்ளார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், இறந்த தனது லிவ் இன் டுகதர் பாட்னர் உடலை புதைக்க இடம் கிடைக்காததால் சாலையில் விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் 53 வயது நபர் ஒருவர் 57 வயது பெண்ணுடன் லிவ் இன் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் (திருமணம் சசெய்துகொள்ளாமல் சேர்நது வாழும் முறை) கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.

     

     

    இதற்கிடையில் பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை 3 நாட்களாக வீட்டிலேயே அந்த நபர் வைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வீட்டில் ஏதோ மோசமான வாடை வருவதாக அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் உடலை சாக்கில் கட்டி சாந்தன் நகரில் உள்ள சாலையில் விட்டுச்சென்றுள்ளார்.

     

    தகவலறிந்து வந்து உடலைக் கைப்பற்றிய போலீஸார் அந்த நபரைத் தேடி வந்தனர். ராஜ்மோஹல்லா பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அலைந்துகொண்டிருந்த அவரிடம் விசாரித்ததில் இறுதிச் சடங்கு இல்லாததால் உடலை சாலையில் வீட்டுச் சென்றதாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.

    அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவறாக பூங்காவாக அலைந்து கொண்டிருந்ததாக போலீஸார் தெறிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வு செய்து பார்த்தபோது அவர் கல்லீரல் தொடர்பான நோயினால் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணின் உடலுக்கு உரிய முறையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது. 

    • மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை.
    • மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை.

    சென்னையில் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்போது, புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், அறுவை சிகிச்சை மேற்கொண்ட தாம்பரத்தில் உள்ள பம்மல் டிபி ஜெயின் தனியார் மருத்துவமனையின் உரிமத்தை சுகாதாரத்துறை தற்காலிகமாக ரத்து செய்தது

    மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கான போதிய பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லை என்றும் மருத்துவமனையில் டெக்னீசியன்கள், உயிர்காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் போதுமான அளவு இல்லை என்பது கண்டறியப்பட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து கையெழுத்து பெறவில்லை எனவும் அவசரகால மருத்துவர்கள், கருவிகள் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ததை எதிர்த்து மருத்துவமனை நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், "எடை குறைப்பு அறுவை சிகிச்சையில் இளைஞர் ஹேமசந்திரன் உயிரிழந்த மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்தது செல்லாது' என்று தீர்ப்பளித்தார்.

    மேலும், "மருத்துவமனையிடம் உரிய விளக்கம் கேட்காமல் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் கார்பரேட்டுகளாக மாறிய நிலையில் குறைந்த அளவிலான கட்டணத்தை வசூலிக்கும் மருத்துவமனைகளை அங்கீகரிக்க வேண்டும்" என்றும் நீதிபதி தெரிவித்தார்.

    • குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி பங்களாவில் அடைத்துவைத்துள்ளார்.
    • ர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

    புனேவில் 17 வயது சிறுவன் மதுபோதையில் போர்ச்சே கார் ஒட்டி ஏற்படுத்திய விபத்தில் ஒரு பெண் உட்பட பைக்கில் வந்த 2 ஐடி ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த வழக்கில் இருந்து சிறுவனை தப்பிக்க வைக்க அவனது குடும்பம் தங்களது பணபலம் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

     

    இதைத்தொடர்ந்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட நிலையில், தங்களது குடும்ப கார் ஓட்டுநரைப் பழியை ஏற்கும்படி சிறுவனின் தாத்தா கட்டாயப்படுத்தி  பங்களாவில் அடைத்துவைத்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்தினர் அளித்த புகாரை அடுத்து சிறுவனின் தாத்தாவும் கைது செய்யப்பட்டார்.

    சிறுவன் அன்றைய இரவு இரண்டு பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்த சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த வழக்கில் அடுத்தடுத்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகி வரும் நிலையில், சிறுவனின் ரத்தத்தில் மது கலந்துள்ளதாக என்று கண்டறிய எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை திரிக்க முயன்றதாக சசூன் மருத்துவமனையின் டாக்டர்கள் அஜய் தாவ்ரே மற்றும் ஸ்ரீ ஹரி ஹர்னர் ஆகியோரை புனே குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதன்மூலம் சிறுவனைக் காப்பாற்ற அவனது குடும்பம் தங்களது பணபலத்தைப் பயன்படுத்தியுள்ளது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடந்த 15 மணி நேரத்திற்குள் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு சாலை விபத்துகள் குறித்து 300 வார்த்தைகள் கொண்ட கட்டுரையை எழுதும்படியும், 15 நாட்கள் போக்குவரத்து காவலர்களுடன் பணிபுரியுமாறும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

     

    • நெட்டிசன்கள் கபோசுவின் இந்த புகைப்படங்களை மீம்களாக உருவாக்கியதன் மூலம் பிரபலமானது.
    • கபோசுவின் மறைவு சமூக வளைத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சமூக ஊடகங்கள் மூலம் மீம் கிரியேட்டர்களால் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது கபோசு என்ற நாய்.

    இந்த நாய் கொடுக்கும் முக பாவனைகளைக் கொண்டு ஏராளமான மீம்கள் வெளிவந்தன. பிரபலமான கதாபாத்திரங்களை மீம்களில் குறிப்பிடுவது போன்று, கபோசுவை வைத்தும் மீம்கள் பிரபலமானது.

    ஜப்பானை சேர்ந்த ஒருவர் கடந்த 2008ம் ஆண்டு கபோசுவை தத்தெடுத்து வளர்த்து வந்தார். 2010ம் ஆண்டு அதன் உரிமையாளர் கபோசுவைக் கொண்டு ஒரு போட்டோஷூட் நடத்தினார்.

    அப்போது, கபோசு கொடுத்த அழகான போஸ்களும், ரியாக்ஷன்களும் இணையத்தில் பகிரப்பட்டன.

    இதையடுத்து, நெட்டிசன்கள் கபோசுவின் இந்த புகைப்படங்களை மீம்களாக உருவாக்கியதன் மூலம் பிரபலமானது.

    இதைதொடர்ந்து, 2013ம் ஆண்டில் கபோசுவின் படத்தை பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoinஐ லோகோ உருவாக்க தூண்டியது.

    17 வயதான கபோசு கடந்த 2022ம் ஆண்டு முதல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு வந்தது. கபோசு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை தூக்கத்தில் அமைதியாக உயிரிழந்துள்ளது.

    இதுகுறித்து Dogecoin தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், கபோசுவின் மறைவு சமூக வளைத்தளத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கோடை மழை காரணமாக 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்படியாக நாமக்கல் மாவட்டத்தில் அதிக மழை பதிவாகி உளளது.

    புதுச்சத்திரத்தில் 15.74 செ.மீ., கல்லணையில் 14.22 செ.மீ., கரூரில் 13.26 செ.மீ., திருச்சி விமான நிலையம் 12.94 செ.மீ., சமயபுரத்தில் 12 செ.மீ. பெய்துள்ளது.

    கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆடு-மாடுகள் இறந்துள்ளன. 24 குடிசை வீடுகள் சேதம் அடைந்துள்ளது.

    தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 16-ந்தேதி முதல் 20-ந்தேதி முடிய மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    24-ந்தேதி வரை (வெள்ளி) தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, நீலகிரி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, தஞ்சை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

    குமரி கடல் மற்றும் மன்னார்வளைகுடா பகுதிகளில் 40 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடலோர பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 437 முன் எச்சரிக்கை அமைப்புகள் மூலம் பொதுமக்களுக்கும் பலத்த காற்று, கடல் அலை சீற்றம் குறித்து எச்சரிக்கை தகவல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்பதாலும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாலும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு நெல்லை, தென்காசி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, விருதுநகர், தேனி மாவட்டங்களில் உள்ள 4.05 கோடி செல்போன்களில் எச்சரிக்கை தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    ×