search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆசிரியர்"

    • நாய்கள் உடல் முழுவதும் பலமுறை கடித்து குதறியது.
    • அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு.

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ் துலாரி சின்கா (வயது 76). இவர், ஓய்வு பெற்ற ஆசிரியை ஆவார்.

    இவரது மகள், அமித்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு கணவருடன் பெங்களூரு ஜாலஹள்ளி விமானப்படை கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட 7-வது குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    அமித்குமார் இந்திய விமானப்படை வீரராக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக விமானப்படைக்கு சொந்தமான குடியிருப்பில் அவருக்கு வீடு வழங்கப்பட்டு இருந்தது.

    சமீபத்தில் ராஜ் துலாரி சின்கா தனது மகள்-மருமகனை பார்ப்பதற்காக பீகாரில் இருந்து பெங்களூருக்கு சமீபத்தில் வந்திருந்தார்.

    இந்த நிலையில் தனது மருமகன் குடியிருப்புக்கு அருகே காலை 6.30 மணி அளவில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது சுமார் 10 முதல் 12 தெருநாய்கள் திடீரென கூட்டமாக சேர்ந்து ராஜ் துலாரி சின்கா மீது பாய்ந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நாய்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.

    நாய்கள், அவரது உடல் முழுவதும் பலமுறை கடித்து குதறியது. இதை கவனித்த ஒருவர் விரைந்து சென்று நாய்களை விரட்டி விட்டு படுகாயங்களுடன் இருந்த ராஜ் துலாரி சின்காவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து உதவி செய்தார். ஆனாலும் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கங்கமனகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சோக சம்பவம் குறித்து பெங்களூரு மாநராட்சி கமிஷனர் துஷார் கிரி நாத் நிருபர்களிடம் கூறுகையில், மாநகராட்சி சார்பில் தெருநாய்களை கட்டுப்படுத்த கருத்தடை, தடுப்பூசி உள்ளிட்ட ஊசிகள் பயன்படுத்தி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

    மனித உயிர்கள் முக்கியம். மேலும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றார்.

    • 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில் ஆசிரியை அறைந்துள்ளார்
    • சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது.

    வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததில் 2 ஆம் வகுப்பு சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் கரீம்நகரில் உள்ள அரசுப் பள்ளியொன்றில் 2 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி அன்றைய தினத்திற்கான வீட்டுப்பாடத்தை முடிக்காத ஆத்திரத்தில்  சிறுமியின் கன்னத்தில் குமார் என்ற ஆசிரியர் பலமாக அறைந்துள்ளார்.

    இதனால் சிறுமியின் காதில் இருந்து ரத்தம் கொட்டி சிறுமியின் ஐடி கார்டு மற்றும் யூனிபார்ம் மீதும் நோட்டுப் புத்தக காகிதங்களின் மீதும் படிந்துள்ளது. பள்ளியில் வேலை செய்துவந்த மற்றொரு ஆசிரியை காயமுற்ற சிறுமி கூறுவதை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில் சிறுமியைத் தாக்கிய ஆசிரியருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

     சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அரசுப் பள்ளி ஆசிரியர் குமார் மீது எந் புகாரும் அளிக்கப்படவில்லை. ஆனால் சக ஆசிரியை பகிர்ந்த இந்த  வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
    • சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார்.

    நாடு முழுவதும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பதற்கு நீதி கேட்டு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேலையிலும் பாலியல் பலாத்கார கொடூரங்கள் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் பள்ளியில் பி.டி. ஆசிரியரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 14 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கடந்த 20 நாட்களாக மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வந்த சிறுமி இன்று உயிரிழந்தார்.

    கடந்த வருடம் டிசம்பர் மாதம், சிறுமியை ஸ்போர்ட்ஸ் ஈவென்ட் ஒன்றுக்கு வரும்படி அழைத்த அந்த பி.டி. ஆசிரியர் தனது வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து மாணவியின் உடல்நிலை பாதிக்கபட்டதைத் தொடர்ந்து சிறுமியை அத்தை ஊருக்கு அனுப்பி பெற்றோர்கள் மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். தனக்கு நடந்ததைச் சிறுமி அத்தையிடம் கூறவே, பெற்றோர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. ஆனால் ஊரார் முன் அவமானப்படக் கூடுமோ என்று பயந்து அவர்கள் போலீசில் புகார் அளிக்கத் தயங்கியுள்ளனர்.

    இதற்கிடையில் சிறுமியின் பெற்றோரைச் சந்தித்து ரூ.30,000 ஆயிரத்தை கொடுத்து போலீசுக்கு போக வேண்டாம் என்று அந்த பி.டி. ஆசிரியர் எச்சரித்துள்ளார். கடந்த மாதங்களில் சிறுமியின் மிகவும் மோசமாகிக்கொண்டே வந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இதையறிந்த அந்த பி.டி. ஆசிரியர் தப்பியோடிய நிலையில் அவரை இன்னும் போலீசார் தேடி வருகிறனர். இந்த நிலையில்தான் சிறுமியின் உடல்நிலை கடந்த 20 நாட்களாக மிகவும் மோசமாகி சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். 

    • இதில் கூடைப்பந்து போட்டியில் மாணவர்கள் தோற்றதாக தெரிகிறது.
    • அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

    சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கொளத்தூரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் கூடைப்பந்து போட்டியில் அந்த பள்ளியின் மாணவர்கள் தோற்றதாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த உடற்கல்வி ஆசிரியர் அண்ணாமலை, மாணவர்களை தரையில் அமர வைத்து தகாத வார்த்தைகளால் திட்டி ஷூ காலால் ஆவேசமாக எட்டி உதைத்து, கன்னத்தில் அறைந்துள்ளார். இதுதொடர்பான அதிர்ச்சிகர வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

    இதனை செல்போனில் பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி அந்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


    • அன்றைய தினம் சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த டியூசன் மாஸ்டர் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதார்.
    • உஷாரான டியூசன் மாஸ்டர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    உத்தரப்பிரதேசத்தில் டியூஷனுக்கு வந்த 5 வயது சிறுமியை மாஸ்டர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மவு [Mau] மாவட்டத்தில் கடந்த செய்வாய்க்கிழமை அன்று 5 வயது சிறுமி வழக்கம்போல் டியூசன் படிக்க மாஸ்டர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

    ஆனால் அன்றைய தினம் சிறுமி தனது வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த அந்த டியூசன் மாஸ்டர் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதார். இந்த சம்பவத்துக்கு பிறகு சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து தனக்கு நடந்ததை சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். உண்மையை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உஷாரான டியூசன் மாஸ்டர் தற்போது தலைமறைவாகியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

    • மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியே ஓடினர்.
    • தகவல் அறிந்த போலீசார் ஆசிரியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

    அசாம் மாநிலம், சிவசேகர் நகர் அரசு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தார்.

    அப்போது வகுப்பறையில் இருந்த மாணவர் ஒருவர் படத்தை கவனிக்காமல் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு இருந்தார். இதனை கவனித்த ஆசிரியர் மாணவனை திட்டி வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பினார்.

    வெளியே சென்ற மாணவன் அங்குள்ள ஒரு கடைக்குச் சென்று கத்தியை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் வகுப்பறைக்கு வந்தான். வகுப்பறைக்கு வந்த மாணவனை ஆசிரியர் மீண்டும் திட்டினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மாணவன் தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை சக மாணவர்கள் முன்னிலையில் சரமாரியாக குத்தினான்.

    இதில் ஆசிரியர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். இதனைக் கண்ட சக மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு வகுப்பறையில் இருந்து வெளியே ஓடினர்.

    ஆசிரியரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஆசிரியர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மாணவனை கைது செய்தனர்.

    • ஆசிரியர் சீனிவாஸ் தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார்.
    • கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.

    ஆசிரியப்பணி அறப்பணி... அவ்வாறு பணியாற்றும் ஆசிரியர்கள், நாளைய இந்தியாவை உருவாக்கும் சிற்பிகள்.

    ஒரு மாணவனோ, மாணவியோ தங்களது பெற்றோர்களைவிட அதிக நேரம் ஆசிரியரின் கண்காணிப்பிலேயே அதிகம் உள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆசிரியரும் பெற்றோர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.

    பல ஆசிரியர்கள் தங்கள் பணியை மாணவர்களுக்காக அர்ப்பணித்து, மாணவர்களிடம் மட்டுமல்ல அந்த பகுதி மக்களிடமும் நன்மதிப்பை பெற்று விடுகிறார்கள்.

    குறிப்பாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் சில ஆசிரியர்கள், வகுப்பறையில் பாடம் கற்றுக்கொடுப்பதையும் தாண்டி, ஒவ்வொரு மாணவர்களின் உயர்வுக்கும் தனிப்பட்ட முறையில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள்.

    இதனால் அவர்கள் அந்த பள்ளியில் இருந்து மாறுதலாகி செல்லும்போதோ, பணி ஓய்வு பெற்று செல்லும்போதோ மாணவர்கள் அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் கதறி அழும் நெகிழ்ச்சி சம்பவங்கள் பல முறை நடந்து உள்ளது.

    அதுபோன்ற நெகிழ்ச்சி சம்பவம் தெலுங்கானா மாநிலத்திலும் நடந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் மாவட்டம் பொனகல் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் ஜே.சீனிவாஸ் (வயது53).

    இவர் அந்த பள்ளியில் 12 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். அந்த பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் நலனில் அதிக கவனம் எடுத்து பணியாற்றினார். அவர் பணியில் சேர்ந்தபோது அந்த பள்ளியில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே மாணவர்கள் இருந்தனர்.

    தனது முயற்சியால் அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் சென்று கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அந்த பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரித்தார்.

    தனது அன்பால் ஒவ்வொரு மாணவரையும் ஆசிரியர் சீனிவாஸ் கட்டிப்போட்டார். மாணவர்களும் அவரை தங்களின் பாசத்துக்குரியவராகவே பார்த்தனர். ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட அக்கறை எடுத்தார். கண்டிப்பும், கனிவும் அவரது தனிச்சிறப்பாக இருந்தது.

    இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆசிரியர் சீனிவாஸ் அக்கபெல்லிகுடாவில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

    இதனால் பொனகல் அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த அந்த பிஞ்சு மாணவர்கள் மிகவும் தவித்துபோய்விட்டனர்.

    அவரை பிரிய மனமில்லாமல் அழுதனர். மாணவர்களின் பெற்றோரும் ஆசிரியரின் பணியிட மாறுதலை திரும்ப பெற அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    அதற்கெல்லாம் வழியில்லை. இடமாறுதல் உத்தரவை திரும்ப பெற வாய்ப்பு இல்லை என்று கல்வித்துறை அதிகாரிகளும் தெரிவித்தனர்.

    ஆசிரியர் சீனிவாசின் பிரிவால் ஏங்கிய மாணவர்களை தேற்ற முடியாமல் இருந்த பெற்றோர்கள் ஒரு முடிவு செய்தனர்.

    ஆம்... அந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படித்து வந்த 250 மாணவர்களில் 133 பேர், அந்த பள்ளியில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்றுக்கொண்டு, 3 கி.மீ. தொலைவில் அக்கபெல்லிகுடாவில் உள்ள பள்ளியில் சேர்ந்துவிட்டனர்.

    இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட தெலுங்கானா மாநில மக்களில் பலர், இப்படியும் ஒரு ஆசிரியரா... நமக்கு கிடைக்கவில்லையே என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

    • வகுப்பறையில் வைத்து அவர் பீர் குடித்ததாக கூறப்படுகிறது.
    • பள்ளி குழந்தைகள் வீட்டுக்கு ஓடி சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கொத்த குடேம் மாவட்டம் திம்மாபேட்டை பஞ்சாயத்து ராஜிவ் நகரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது.

    இதில் பதி பதி வீரய்யா என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று குடிபோதையில் பள்ளிக்கு வந்தார்.

    மேலும் வகுப்பறையில் வைத்து அவர் பீர் குடித்ததாக கூறப்படுகிறது. போதை தலைக்கேறியதும் வகுப்பறையில் தரையில் படுத்து புரள ஆரம்பித்தார். இதனை கண்ட பள்ளி குழந்தைகள் வீட்டுக்கு ஓடி சென்று பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர்.

    ஆசிரியருக்கு ஏதோ உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதோ என எண்ணிய பெற்றோர் பள்ளிக்கு ஓடோடி வந்தனர். அங்கு வந்தபோது தான் ஆசிரியர் மது குடித்துவிட்டு போதையில் உருண்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள் ஆசிரியரை குண்டு கட்டாக தூக்கி அருகே இருந்த மாட்டு கொட்டகையில் தூக்கிப் போட்டனர்.

    மாட்டு கொட்டகையிலும் போதையில் உருண்ட ஆசிரியர் சில மணி நேரத்திற்கு பிறகு எழுந்து சென்றார்.

    வகுப்பறையில் ஆசிரியர் பீர் குடிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தாமதமாக வருவது குறித்து தலைமை ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார்.
    • ஆசிரியைகள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளனர்.

    பள்ளி என்பது குழந்தைகளின் கல்வித்திறனை வளர்க்கும் இடமாகவும், அவர்களின் கனவுகளை நினைவாக்கும் இடமாகவும் பார்க்கப்படுகிறது. இதில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு குருவாக பார்க்கப்படுகிறார்கள். அத்தகைய பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் சண்டையிட்டு சமூக வலைதளத்தில் பிரபலமாகி உள்ளனர்.

    சமீபத்தில் சமூக வலைதளங்களில் இரண்டு பெண்கள் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்துள்ள ஆரம்பப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை தாமதமாக வருவது குறித்து தலைமை ஆசிரியை கேள்வி எழுப்பியுள்ளார்.

    அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது கடைசியில் கைகலப்பில் முடிந்துள்ளது. இரண்டு ஆசிரியைகளுக்கும் இடையே வாய் சண்டை முற்றி ஒருவரையொருவர் தலைமுடியை போட்டு இழுத்து, அடித்து சண்டையிடுகின்றனர்.

    இதனை அந்த பள்ளியின் வேலை பார்க்கும் ஊழியர் பார்த்து இருவரையும் பிரித்து சண்டையை நிறுத்தினார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார்
    • குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்

    சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார். குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது சந்தேகம் கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி தீர்த்துள்ளார்.

    இந்நிலையில் அண்மையில் அந்த ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் கோபமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர். அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.

    இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

    • தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார்.
    • தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்-மீனாட்சிபுரம் சி எஸ்.ஐ.சர்ச் தெருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல்(வயது 80). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் தென்னை, மா உள்ளிட்ட மரங்களை அதிகளவில் வளர்த்து வருகிறார். தனது தோட்டத்தில் பதியம் வைத்து புதிதாக வளர்க்கப்படும் மரக்கன்று களை தனது காலி விளை நிலங்களில் ஊன்றி வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பதியம் வைத்து தென்னங்கன்றுகள் வளர்த்தபோது அதில் ஒரு தேங்காயில் இருந்து இரு தென்னங்கன்றுகள் முளைவிட்டு வந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். ஏனெனில் ஒரு தேங்காயில் இருந்து ஒரு தென்னை கன்று தான் எப்பொழுதும் முளைக்கும். ஆனால் இதில் 2 தென்னங்கன்றுகள் முளைத் துள்ளது. தற்பொழுது ஓய்வு பெற்ற ஆசிரியர் தானியேல் வளர்ந்த அந்த தென்னங் கன்றை ஒரு கூடையில் எடுத்து திப்பணம்பட்டியில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களிடையே நேரில் சென்று காண்பித்து வருகிறார்.

    மேலும் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வரும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அதிசயமாக வளர்ந்துள்ள தென்னங்கன்றுகளை தொடர்ந்து காண்பிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

    தானியேல் தான் செல்லும் இடங்களுக்கு கையிலேயே அந்த தென்னங்கன்றை எடுத்துச் செல்வதால் பொதுமக்களும் அதனை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

    • பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.
    • ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    நாம் வசிக்கும் பூமியில் மனித இனம் போல் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் மற்ற உயிரினங்களை விட பல மடங்கு உயரம் குறைவாக, உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்களும் உள்ளன. மினியேச்சர் எனப்படும் பிக்மி என்ற உருவத்தில் மிகச் சிறிய உயிரினங்கள் பல்வேறு நாடுகளில் கண்டறியபட்டு அதனை பராமரித்து வளர்த்து வருகின்றனர். இவைகள் தங்களது இனத்தை விட உருவில் மிகச் சிறிய அளவில் தோற்றம் அளிக்கிறது. ஆனால் அதே குணாதிசயம் கொண்டவையாக உள்ளது.

    குட்டை மாடு, ஆடு, சேவல் மற்றும் அங்குலம் அளவில் உள்ள அணில், கிளி, லவ் பேர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்கள், பிராணிகள் ஆகியவற்றை விலங்கு நல ஆர்வலர்கள் பராமரித்து வளர்த்து வருகின்றனர். உருவத்தில் மிகச் சிறிய இந்த உயிரினங்களை வளர்க்க மிகக் குறைந்த இடவசதி போதும் என்பதால் அதிக ஆர்வம் காட்டி வளர்த்து வருகின்றனர்.

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே பண்ணைப்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் லியோ. இவர் அரசு பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். பிக்மி வகை உயிரினங்களை வளர்ப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர். 15 வருடங்களுக்கு மேலாக இந்த வகை உயிரினங்களை சேகரித்து பராமரித்து வளர்த்து வருகிறார்.

    இவர் 2½ அடி உயரம் கொண்ட 3 வயது குட்டை மாடு, ஒரு ஜான் அளவு கொண்ட 2 வயது மதிக்கத்தக்க ஜாபனிஸ் செரமா கோழி, 1½ அங்குலம் கொண்ட மைக்ரோ அணில், 3 அங்குலம் உயரம் கொண்ட கிளி, ஆடு, முள் எலி, புறா, நாய் என பல்வேறு மிகச் சிறிய உருவம் கொண்ட உயிரினங்களை வளர்த்து வருகிறார்.


    இது குறித்து லியோ கூறுகையில், 15 வருடமாக பிக்மி உயிரினங்களை பல்வேறு பகுதிகளில் இருந்து வாங்கி வளர்த்து வருகிறேன். மற்ற உயிரினங்கள் போல் தான் இதுவும். உருவத்தில் மட்டுமே மிகச் சிறியதாக காணப்படும். குணாதிசயங்களில் மாற்றம் இருக்காது. இவற்றை வளர்க்க மிக குறைந்த இட வசதியே போதுமானது. அதேபோல் எளிமையான பராமரிப்பு மட்டுமே தேவைப்படும். இதனை வளர்ப்பதால் மன அமைதி ஏற்படுகிறது. தேவையற்ற மன அழுத்தத்தை குறைப்பதுடன் புத்துணர்ச்சியை தருகிறது.

    இந்த உயிரினங்களை வளர்க்க பர்வேஷ் பதிவு அவசியம். இந்த சான்றிதழ் பெற்று வளர்த்து வருகிறேன். 1½ வயதுடைய 5 அங்குலம் உயரமுடைய முள் எலி, குட்டை மாடு, காளை கிடா, புறா உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறேன். இவைகளிடம் பழகும் போது மகிழ்ச்சியை உணர்வதாக தெரிவித்தார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிலர் ஆர்வத்துடன் இது போன்ற பிராணிகளை வளர்த்து வருகின்றனர். குட்டை மனிதர்கள் பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். அதே போல் விலங்கு, பறவையினங்களில் இது போன்ற குட்டை இனம் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை விலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நேரில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

    ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் உயிருள்ள பல ஜீவராசிகள் அதிசயமாக தென்படுவது மக்களை பரவசப்படுத்தி வருகிறது.

    ×