search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொல்கத்தா"

    • உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது
    • பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

    கொல்கத்தா பயங்கரம் 

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு மிகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தினந்தோறும் வெளியாகும் தகவல்கள் இந்த சம்பவத்தில் உண்மையில் என்னதான் நடந்தது என்ற கேள்வியைப் பலமாக எழுப்புகிறது.

    கேள்விக்குறி? 

    இந்த குற்றத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர் சந்தீப் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனால் இந்த சம்பவத்தின் முதற்கட்ட போலீஸ் விசாரணைகளில் ஏகப்பட்ட குளறுபடிகள் அரங்கேறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

     

     விடை கிடைக்காத மர்மங்கள் 

    இதோடு, இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் பலர் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற அம்மாநிலத்தில் ஆளும் அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உயிரிழந்த பெண்ணின் பெற்றோரும், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பினார். பயிற்சி பெண் மருத்துவர், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெண் மருத்துவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டது.

    அதிர்ச்சியூட்டும் பின்புலம்  

    இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. இந்த சம்பவத்துக்கு பிறகு பணிநீக்கம் செய்யப்பட்ட அக்கல்லூரி முதல்வர் சந்தீப் கோஸ் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உரிமை கோரப்படாத உடல்களை உறுப்புகளுக்காக விற்று கமிஷன் பெற்றது, மருத்துவ கழிவுகளையும் சட்டவிரோதமான முறையில் விற்றது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் மீது சக ஊழியர் ஒருவர் முன்வைத்துள்ளார். இதற்கிடையில் சந்தீப் கோஸ் சிபிஐ விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.

     

    விசரணையும் போராட்டங்களும் 

    இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை சிபிஐ விசாரணை செய்ய கொல்கத்தா உயர்நதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் குழு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கண்டித்தும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாடு முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடும் நடவடிக்கையை உறுதிப்படுத்த உடனடியாக மத்திய அரசு சட்டம் கொண்டுவர வலியுறுத்தியும் நாடு முழுக்க மருத்துவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையத்துக்கு நிகரான பாதுகாப்பை மருத்துவமனைகளுக்கு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்வைத்தது.

     

    உச்சநீதிமன்றத்தின் தலையீடு 

    போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் ஆங்காங்கே இன்னும் காலவரையின்றி நடந்து வரும் நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தது. இந்த  வழக்கின்  மீது நேற்று நடந்த விசாரணையில் மேற்கு வங்காள மாநில அரசு மற்றும் போலீசின் மெத்தனப் போக்கை நீதிபதிகள் கடுமையாக கண்டித்தனர்.

     

    வழக்கில் நடந்த குளறுபடிகள் குறித்து சரமாரியான கேள்விகளை முன்வைத்தனர். மேலும் நாடு இன்னொரு வன்கொடுமை நடக்கும் வரை காத்திருக்காது என்று கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

    இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பயிற்சி மருத்துவர்களின் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.

     

    அடுத்தது என்ன?

    மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு உள்ளாகி வருவதால் அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும் நீதிபதிகள் கோரிக்கை வைத்தனர். ஒட்டுமொத்தமாகப் பதில் கிடைக்காத கேள்விகளும், மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும்  இந்த வழக்கின் போக்கை அடுத்து எந்த திசையில் கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு நாட்டு மக்களிடையே எழுந்துள்ளது திண்ணம்.

    • அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.
    • இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுெமாத்த டாக்டர்கள் பிரச்சினையாகும்.

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள R.G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

    உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்த்து வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் டவழக்கு தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் மீது மேற்கு வங்காள அரசு தனது பலத்தைக் காட்ட வேண்டாம் என்று உச்சநீதிமன்றம் கண்டித்தது.

    டாக்டர்களின் பாதுகாப்பைக் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். இந்தியா முழுவதிலும் மருத்துவரின் பாதுகாப்பு குறித்து முறையான பிரச்சினை எழுப்புவதால் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பெண்கள் வேலைக்கு செல்ல முடியாவிட்டால், வேலை நிலைமைகளில் பாதுகாப்பு இல்லை என்றால் அவர்களுக்கு சமத்துவத்தை மறுக்கிறோம் என்று அர்த்தமாகிவிடும்.

    பணிபுரியும் இடங்களில் டாக்டர்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு உரியதாகவே இருக்கிறது. இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டுமல்ல. ஒட்டுெமாத்த டாக்டர்கள் பிரச்சினையாகும். பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும்.

    பெரும்பாலான இளம் டாக்டர்கள் 36 மணி நேரம் வேலை செய்கிறார்கள். பாதுகாப்பான வேலை நிலைமைகளை உறுதிப் படுத்த தேசிய நெறி முறையை உருவாக்க வேண்டும்.

    இதற்காக 10 பேர் கொண்ட தேசிய பணிக்குழுவை நாங்கள் அமைக்கிறோம். இக்குழுவினர் நாடு முழுவதும் டாக்டர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் பின்பற்றப் பட வேண்டிய வழிமுறைகள் குறித்து பரிந்துரைப்பார்கள். இந்த குழு 3 வாரத்துக்குள் தனது இடைக்கால அறிக் கையை சமர்பிக்க வேண்டும். இறுதி அறிக்கையை 2 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

    தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வரும் டாக்டர்கள் பணியை தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டி இருக்கிறது. 

    டாக்டர்களை பாதுகாக்க மாநிலத்தில் சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை முறையாக பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை. டாக்டர்களுக்கு கழிவறை வசதி இல்லை. டாக்டர்கள் நீண்ட நேரம் பணி முடித்து வீடு திரும்புவதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆஸ்பத்திரிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் முறையாக இல்லை.

    ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கண்டறியும் ஸ்கிரீனிங் எந்திரமும் இல்லை. பெண் டாக்டர் கொலை வழக்கு தொடர்பாக மேற்கு வங்காளத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் போய்விட்டது. இதற்காக பொறுப்பேற்று அந்த மாநில போலீஸ் டி.ஜி.பி.யை பதவி நீக்கம் செய்ய வேண்டும். போராட்டம் நடத்து மருத்துவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறை நிகழ்ந்தபோது விமானம் நிலையம், மருத்துவமனைகள நொறுக்கப்பட்டுள்ளன. இனியும் இப்படி நடக்கக் கூடாது.

    இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த நிலையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தெரிவித்து வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டு 23-ந் தேதிக்கு ஒத்திவைத்தது. 

    • இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்தது.
    • இந்த சம்பவத்தைத் தற்கொலையாக மாற்ற கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார்.

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள R.G கர் மருத்துவக்கால்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நேற்று முன் தினம் வழக்குப் பதிவு செய்தது.

    இந்த வழக்கானது இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நீதிபதிகள் காவல்துறை மீது அரசு மீதும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

    'பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுப் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட 3 மணி நேரம் கழித்தே போலீசாரால் எப்.ஐஆர் பதியப்பட்டுள்ளது. இந்த தாமதத்துக்கு காரணம் என்ன?

    இந்த சம்பவத்தைத் தற்கொலையாக மாற்ற கல்லூரி முதல்வர் முயன்றுள்ளார். தற்கொலை நாடகமாட ஏற்பாடு செய்து ஜோடித்துள்ளனர். இது கண்டனத்துக்குரியது. டாக்டரின் உடலை பார்க்க அவரது பெற்றோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன்?

    கல்லூரி முதல்வர் என்ன செய்து கொண்டு இருந்தார். முதல் தகவல் அறிக்கையில் கல்லூரி முதல்வர் பெயர் இடம் பெறாதது ஏன்?

    ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரிக்குள் ஆயிரக்கணக்கான கும்பல் எப்படி நுழைந்தது? போலீஸ் என்ன செய்து கொண்டு இருந்தது. போலீசாருக்கு தெரியாமல் 7 ஆயிரம் பேர் கொண்ட கும்பல் மருத்துவமனைக்குள் எப்படி நுழைய முடியும்?

    டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க மேற்கு வங்காள அரசு தவறிவிட்டது. பெண் டாக்டரின் பெயர் ஊடகங்கள் முழுவதும் வெளியிடப்படுவது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களை வெளியிடுவதை சட்டம் தடை செய்கிறது. உயிரை இழந்த மருத்துவருக்கு இப்படித்தான் கவுரவம் வழங்குகிறோமா?

    பெண்ணின் அடையாளம் வெளியே தெரிந்தது எப்படி? பெண் டாக்டர் வழக்கில் குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு இன்னொரு கற்பழிப்பு சம்பவத்துக்காகக் காத்திருக்க முடியாது.

    இந்த வழக்கில் விசாரணை நிலையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். வருகிற 22-ந் தேதிக்குள் (வியாழக் கிழமை) சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல மேற்கு வங்காள அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும் பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 பேர் கொண்ட குழுவை உருவாக்கி உத்தரவிட்டனர்.

    • தங்களின் உடல் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை
    • இது வன்கொடுமை ஆகாது என்றும் இதனால் இளைஞனை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பெண்கள் பாலியல் இச்சைகளை அடக்கிக் கொள்ள வேண்டும் என்ற கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த ஆண்டு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மைனர் பெண் ஒருவரை இளைஞர் ஏமாற்றி பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது, மைனர் பெண்ணுக்கும், அந்த இளைஞனுக்கும் காதல் உறவு இருதுவந்ததால் இது வன்கொடுமை ஆகாது என்றும் இதனால் இளைஞனை வழக்கில் இருந்து விடுவித்தும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    மேலும், 'தங்களின் உடல் கண்ணியத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெண்ணின் கடமை. சுய கண்ணியத்திற்கு ஊறு விளைவித்து வளர்ச்சியைத் தடுக்கும், பாலியல் இச்சைகளையும் கட்டுப்படுத்த வேண்டும். 2 நிமிட பாலியல் திருப்திக்காக தன்னிலை இழக்கும் பெண்கள் சமுதாயத்தின் பார்வையில் தோல்வியடைந்தவர்களாகவே தெரிவார்கள்' என்றும் நீதிபதி அறிவுரை வழங்கியிருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கிலிருந்து குற்றவாளி விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ஓஹா, உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து அந்த இளைஞனைக் குற்றவாளி என்று அறிவித்து உத்தரவிட்டார். மேலும் இதுபோன்ற சிக்கலான வழக்குகளை எப்படி கையாள வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்துக்கு அறிவுரை வழங்கினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார்.
    • உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாக தெரிவித்தார்

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.

    உயிரிழந்த பெண் அந்த மருத்துவமனையில் சட்டவிரோத போதைப் பொருள் புழக்கத்தை எதிர்த்ததாகவும் அதன்பொருட்டே திட்டமிட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாவும் சக மாணவர் ஒருவர் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளும் மர்மங்களும் பெண் மருத்துவர் கொலை வழக்கில் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன. உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், இதில் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டு இருக்கக் கூடும் என்றும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

    மேலும் அவர்கள் தங்கள் மகளின் கொலை தொடர்பாக பல்வேறு சந்தேகங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர். படுகொலையான பெண் டாக்டரின் தந்தை செய்தியாளர்களிடம் இன்று அளித்த பேட்டியின்போது, வழக்கை போலீசார் கையாண்ட முறையைப் பார்த்ததும், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மீதிருந்த நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். தற்போது சி.பி.ஐ. முயற்சி எடுத்து வழக்கை விசாரிக்கிறது. சி.பி.ஐ.யிடம் நான், மகளின் டைரியிலுள்ள பக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறேன் என்றார். [ஆனால், அதில் இடம் பெற்றுள்ள விவரங்களை பற்றி கூற மறுத்து விட்டார்]

    தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கைகளைக் குறித்து விமர்சித்த அவர், தொடக்கத்தில் மம்தா மீது முழு நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது இல்லை. அவர்கள், எங்களுக்கு நீதி வேண்டும் என கூறுகிறார்கள். ஆனால், இதே விசயங்களைக் கூறும் பொதுமக்களை அவர்கள் கட்டிப்போட முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.

    படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாய் பேசுகையில், நாட்டில் உள்ள மக்களுக்கு நாங்கள் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். எங்களது மகளுக்கு நீதி வேண்டிப் போராடி வரும் அனைவருக்கும் நாங்கள் நன்றியுடன் இருக்கிறோம். குற்றவாளிகள் முழுமையாகப் பிடிபட்டு நீதி கிடைக்கும் வரை எங்களுடன் நீங்கள் நிற்க வேண்டும். இனி இப்படி ஒரு நிலைமை வேறு எந்த தாய்க்கும் வர கூடாது என்பதே எங்களின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். 

    • AIIMS RDA மருத்துவர்கள் மத்திய சுகாதார அமைச்சகம் அமைந்துள்ள நிர்மான் பவன் வளாகத்துக்கு வெளியே இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறனர்.
    • பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். இதனைதொடர்ந்து வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்டது.

    இந்த விவாகரத்தின் விரைவான நீதி வழங்க வேண்டியும் வருங்காலங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் மருத்துவர்கள் நடத்தி வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. அந்த வகையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த ரெசிடெண்ட் டாக்டர்ஸ் அசோசியேசன் [AIIMS RDA] மருத்துவர்கள் மத்திய சுகாதார அமைச்சகம்  அமைந்துள்ள நிர்மான் பவன் வளாகத்துக்கு வெளியே இன்று போராட்டத்தில் ஈடுபடுகிறனர். நிர்மான் பவனுக்கு வெளியே வீதியில் வெளி நோயாளிகளுக்கு [OPD] இலவச சிகிச்சை வழங்கி நூதன முறையில் மருத்துவர்கள் போரட்டம் நடந்த உள்ளனர்.

     

    ரெசிடெண்ட் டாக்டர்ஸ் அசோசியேசன்[RDA] மருத்துவர்கள் கடந்த ஆகஸ்ட் 12 முதலே காலவரையின்றி போராட்டம் நடத்தி வரும் நிலையில் மருத்துவ சேவைகள் பாதிப்புக்களாகியிருந்தது. எனவே தற்போது தங்களின் போராட்ட முறையை மருத்துவர்கள் மாற்றியுள்ளனர். மேலும் AIIMS RDA சங்கம் சார்பில், பிரதமர் மோடிக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

    • மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.
    • பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்

    கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. மருத்துவ ஊழியர் சஞ்சய் சிங் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டு மேற்கு வங்காள போலீசால் கைது செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

    இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி நாடு முழுக்க மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினமும் நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் காலவரையற்ற வேலை நிறுத்தமும் போராட்டமும் நடந்து வருகிறது. உயிரிழந்த மருத்துவர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும், குற்றவாளியை விரைந்து தண்டிக்க வேண்டியும், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில் பத்ம விருதுகள் பெற்ற 71 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், 'கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவம் நாட்டில் பெண்கள் மற்றும் மருத்துவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்பதையே காட்டுகிறது.

    நமது நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில், தனிப்பட்ட முறையில் இந்த விவகாரத்தில் தலையிட்டு துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகளால் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். 

    • இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கு 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது.
    • 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களே அதிக அளவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர்.

    கொல்கத்தாவில் 31 வயது பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

     தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) புள்ளிவிவரங்களின்படி, 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, இந்தியாவில் 1.89 லட்சம் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 1.91 லட்சம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.79 லட்சம் வழக்குகளில், பாலியல் வன்கொடுமை செய்தவர் தெரிந்த நபராக உள்ளார்.

    இந்தியாவில் சராசரியாக தினமும் 86 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இதில் 82 வழக்குகளில் பாலியல் வன்கொடுமை செய்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரிந்த நபராக உள்ளார். சொல்லப்போனால் இந்தியாவில் ஒவ்வொரு மணிநேரத்திற்கு 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது.

    மேலும், இந்தியாவில் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களே அதிக அளவில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். 1.89 லட்சம் வழக்குகளில், 1.13 லட்சம் பெண்கள் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட வயதை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



    • இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை மேற்கு வங்காள அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
    • இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது, உள்ளிட்ட அம்சங்கள் அதில் உள்ளன

    மேற்குவங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் வேலைக்கு பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது

    மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தின்மூலம் அரசுக்கு தங்களது எதிர்ப்பை அவர்கள் பதிவு செய்தனர்.மருத்துவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க சிறப்பு குழு அமைக்கப்படும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது.

    இதற்கிடையில் தற்போது மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்காள அரசு, நைட் சஷிப்ட் வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இரவில் துணைவருபவர்கள் என்று பொருள்படும் 'ராத்திரேர் ஷாதி' [Rattirer Sathi] என்ற புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின்படி,

    நகர்களில் முழு சிசிடிவி கண்காணிப்புகளுடன் கூடிய பாதுகாப்பு மண்டலங்களை [safe zones] உருவாக்குவது, இரவில் பெண் தன்னார்வலர்களை ரோந்து பணியில் ஈடுபடுத்துவது,

    ஆபத்து சமயங்களில் போலீசை உடனே தொடர்பு கொள்ள ஏற்ற வகையில் உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் கண்ரோல் ரூம்களுடன் இணைக்கப்பட்ட அலாரம் சிஸ்டம் கொண்ட பிரத்தியேக செல்போன் செயலியை உருவாக்கி வேலைக்கு செல்லும் பெண்கள் அதை பதிவிறக்கம் செய்வதைக் கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகள், பெண்கள் விடுதிகள், கல்லூரிகளில் நுழையும் நபர்கள் மது அருந்தியதை கண்டறியும் ப்ரீத் அனலைசர் சோதனையை கட்டாயமாக்குவது,

    மருத்துவமனைகளில் உள்ள ஒவ்வொரு தளத்திலும் பெண்களுக்கான கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது,

    பெண்கள் விடுதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் போலீஸ் ரோந்தை அதிகரிப்பது,

    தெளிவாக தெரியும் வகையில் அடையாள அட்டைகளை மருத்துவமனை மற்றும் கல்லூரியை சேர்நதவர்கள் அணிவதை கட்டாயமாக்குவது,

    இங்குள்ள செக்யூரிட்டிகளை போலீஸ் மேற்பார்வையில் கொண்டுவருவது,

    பெண்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யாமல் இருப்பதை உறுதிப் படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. மேலும் பெண்கள் முடிந்த அளவு நைட் ஷிப்டை தவிர்க்க வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.  

    • டெல்லியில் இருந்து கேரளா வரை உள்ள மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் போராட்டம் நடந்து வருகிறது
    • ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    பெண் டாக்டர் கொலை வழக்கில் இந்திய மருத்துவ சங்கம் 5 நிபந்தனைகள்

    மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குற்றத்தில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்கு சிபிஐ வசம் சென்றுள்ளது. உயிரிழந்த சக மருத்துவருக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.

    இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை இந்திய மருத்தவ சங்கம் [IMA]அறிவித்துள்ளது. இதன்படி எமெர்ஜென்சி சேவைகள் தவிர்த்து வெளி நோயாளுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படாது. டெல்லியில் இருந்து கேரளா வரை உள்ள மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் இந்த போராட்டமானது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் நோக்கம் குறித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை வருங்காலங்களில் உறுதி செய்யவும் ஐந்து நிபந்தனைகளை இந்திய மருத்துவ சங்கம் முன்மொழிந்துள்ளது

    இந்திய மருத்துவ சங்கத்தின் 5 நிபந்தனைகள் 

    ◆தற்போது நடந்துபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, 'மத்திய சுகாதாரத்துறை பாதுகாப்பு சட்டத்தில்' விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்

    ◆இந்த வழக்கை குறுகிய காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 14 அன்று அத்துமீறி நுழைந்து ஆர்.ஜி மருத்துவமனை வளாகத்தை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    ◆மருத்துவமனை வளாகங்களைப் பாதுகாக்கப்பட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் விமான நிலையங்களில் இருக்கும் அளவுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்குக் குறைவான பாதுகாப்பை ஏற்க முடியாது. சிசிடிவி கண்கணிப்பை அதிகரித்து, பாதுகாப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

    ◆உயிரிழந்த பெண் மருத்துவர் வேலை செய்து வந்த 36 மணி நேர பணி ஷிப்ட் உட்பட, ரெசிடெண்ட் மருத்துவர்களின் பணி மற்றும் பாதுகாப்பு சூழலை மேம்படுத்தும் வகையில் முழுமையான மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் 

    ◆பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழக்கப்பட்ட கொடுமைக்குக்கு அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 5 நிபந்தனைகளை முன்மொழிந்துள்ளது.

    • நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ந்தேதி இரவு பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

    பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆஸ்பத்திரியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் சஞ்சய் ராய் போலீசாரிடம் சிக்கினார்.

    இந்த கொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி முதல்வர் சந்தீப்கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றி கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

    இதற்கிடையே பயிற்சி பெண் டாக்டர் கொலையை கண்டித்து நேற்று நள்ளிரவில் போராட்டம் நீடித்தது. அப்போது திடீரென இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஆஸ்பத்திரியில் உள்ள அவசர சிகிச்சை வார்டுக்குள் புகுந்த சிலர் அங்கிருந்த பொருட்கள் உட்பட வார்டு முழுவதையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

    ஆஸ்பத்திரியின் வளாகத்திற்குள்ளும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையை கட்டுப்படுத்த தடியடி நடத்தினர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

    அப்போது கும்பல் கற்களை வீசி தாக்கியதில் சில போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளுக்கு கும்பல் தீ வைத்து எரித்தது. 2 போலீஸ் வாகனங்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.

    இதனால் ஆஸ்பத்திரி பகுதியில் பதட்டம் நிலவியது. சம்பவ இடத்திற்கு கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், அடையாளம் தெரியாத கும்பல் திடீரென மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்றோம். ஆனால் முடியாமல் போனதால் கும்பல் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து சூறையாடியது என்றனர்.

    இதுகுறித்து பா.ஜ.க. மாநில தலைவர் சுவேந்து அதிகாரி கூறுகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் மருத்துவமனைக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு காவல் துறையினர் பாதுகாப்பான பாதை வழங்கி உள்ளனர் என குற்றம் சாட்டினர்.

    இந்நிலையில் இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானர்ஜி கூறுகையில், வன்முறைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு போலீஸ் கமிஷனரை வலியுறுத்தி உள்ளோம் என்றார். 

    • கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது.

    மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்தக் குற்றத்தில் தொடர்புடைய சஞ்சய்ராய் என்பவரை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், இவர் போலீஸ் என்று சொல்லி மிரட்டி பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

    கைதான சஞ்சய்ராயுடன் அந்த மருத்துவமனையில் உள்ள மேலும் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே, உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி கொல்கத்தா டாக்டர்கள் 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்நிலையில், பெண் டாக்டர் கொலை தொடர்பான வழக்கு கொல்கத்தா ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவிட்டது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    கொல்கத்தா பெண் டாக்டர் கொலையை தொடர்ந்து, பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவிகள் யாரும் வெளியில் தனியாக செல்ல வேண்டாம் என்றும் தெரியாத மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களுடன் பழக வேண்டாம் என்று அசாமில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    இந்த அறிக்கை சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதனை மருத்துவ கல்லூரி நிர்வாகம் திரும்பப்பெற்றுள்ளது.

    பெண்களுக்கு அறிவுரை வழங்குவதை விட பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கல்லூரி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த சுற்றறிக்கை தொடர்பாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.

    ×