search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 209843"

    • மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.
    • இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் வெள்ளி விழா பூங்கா அருகே காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி தொழிற்சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக தேசிய அளவிலும், துறை சார்ந்த வகையிலும் போராட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். ஜூலை மாதம் பரப்புரை இயக்கம் நிறைவடைந்த பின்பு வெள்ளையனே வெளியேறு நாளான ஆகஸ்ட் 9-ந் தேதி மாநில அளவிலான திரள் அமர்வு சென்னையில் நடத்தப்பட உள்ளது.

    துறை சார்ந்த கோரிக்கைகளுக்கான போராட்டங்களை தொடங்கி வேலை நிறுத்தம் வரை கொண்டு செல்ல வேண்டும். அதற்கு அந்தத்துறைக்கு வெளியில் உள்ள மற்ற தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து ஆதரவு வேண்டும்.மாநில அளவிலான பெருந்திரள் அமர்வு போராட்டத்திற்குப் பிறகு, அதன் அனுபவங்களை ஆய்வு செய்து, இந்த ஆண்டின் இறுதியில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 

    • கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.
    • பல்லடம்,உடுமலை,தாராபுரம்,மடத்துக்குளம்,அவிநாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முதலாம் மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்பு குழு கூட்டம் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் தமிழ்செல்வி, திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பல்லடம்,உடுமலை,தாராபுரம்,மடத்துக்குளம்,அவிநாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்துகிறதோ, அப்போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ச்சியாக கடந்த நான்கு தவணைகளாக அகவிலைப்படி காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அரசு ஊழியர்களின் ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன் என்பது வழங்கப்படாமல் உள்ளது.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாமல் மௌனம் சாதித்து வருகிறது. முன்பு நிதி அமைச்சராக இருந்த பி .டி. ஆர். பழனிவேல் தியாகராஜன் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என அறிவித்தார். தற்போது புதிதாக பதவியேற்றுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது குறித்து தற்போது அறிவிப்பு வெளியிட முடியாது என தெரிவித்து வருகிறார்.

    அதே போல தொகுப்பூதி யத்தில் பணியாற்றி வரும் வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள் ஆகியோரை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போது அவர்களை பகுதி நேர ஊழியர்கள் என அரசு தெரிவித்து வந்தது. இதற்கிடையேஅரசு புதிதாக காலை உணவு திட்டம் என அறிவித்துவிட்டு அதை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றாமல் தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிடுகிறது. சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வழங்கப்பட்டு வரும் தொகையை விட அதிகமாக காலை உணவு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தொடர்ச்சியான எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண தொடர் போராட்டமே தீர்வு தரும் என நாங்கள் நம்புகிறோம். ஏற்கனவே 2 தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளோம். வரும் ஆகஸ்ட் 12,13-ந் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து மாநில பேரவை கூட்டத்தை நடத்தி அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து விவாதித்து அறிவிக்க உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
    • கலெக்டர் பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கண க்கான பக்தர்களும வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்த கைய சிறப்புவாய்ந்த சனீ ஸ்வரர் கோவிலில், வருகிற டிசம்பர் 20-ந் தேதி, 2 1/3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. இதற்காக, மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் உரிய ஏற்பாடு களை செய்து வருகிறது. மேலும், கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிர மோற்சவ விழாவும் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நிகழ்ச்சியும், ஜூன் 1-ந் தேதி தெப்போற்சவ நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற உள்ளது.

    இந்நிலையில், காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் நேற்று பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவி லுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது, பக்த ர்கள் செல்லும் வரிசை வளாகம், அவர்களுக்கான, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தர்களுக்கு எளிதான தரிசனம் கிடைக்க கோவில் நிர்வாகத்திடம் ஆலோசனை வழங்கினார். மேலும், பக்தர்களுக்கான பிரசாதம் தயாரிக்கும் இடத்தை, தூய்மையாக பராமரிக்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் குலோ த்துங்கன் அறிவுறு த்தினார். இந்த ஆய்வின் போது, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமி கள், கோவில் மேஜேனர் ஸ்ரீநிவாசன் மற்றும் ஊழி யர்கள் உடன் இரு ந்தனர்.

    • ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்தது.
    • அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

    கீழக்கரை

    ஏர்வாடி தர்ஹா சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வருகிற மே 21-ந் தேதி மாலை மவுலீதுடன் தொடங்குகிறது. மே 31-ந் தேதி மாலை கொடியேற்றப்படுகிறது. இதைதொடர்ந்து, ஜூன் 12-ந் தேதி மாலை துவங்கும் சந்தனக்கூடு திருவிழா, ஜூன் 13 அதிகாலை மக்பராவில் சந்தனம் பூசப்படுகிறது.

    இந்த நிலையில், சந்தனக்கூடு திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. கோபு தலைமையில் நடந்தது. கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், கீழக்கரை டி.எஸ்.பி. சுதிர்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு மே 31 முதல் ஜூன் 13 வரை முக்கிய இடங்களில் ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ஏர்வாடி நகர் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரம் பேண வேண்டும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறின்றி வாகனங்கள் வந்து செல்ல வேண்டும், கொரோனா வழிகாட்டல் நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

    சந்தனக்கூடு ஊர்வலத்தில் சமுதாயம் சார்ந்த கொடிகள் எடுத்து வரக்கூடாது, மாவட்ட நிர்வாகத்தின் விதிமுறைகளுக்கு தர்ஹா கமிட்டி உள்பட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

    ஹக்தார் நிர்வாக சபை தலைவர் முகமது பாக்கீர் சுல்தான், செயலாளர் செய்யது சிராஜுதீன், உதவி தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள், ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ், கடலாடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகவேல், ஜோதி மாணிக்கம், சுகாதார ஆய்வாளர் செல்லத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.

    • மண்டபம் மேற்கு ஒன்றிய‌ அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் நடந்தது
    • நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சிக்குட்பட்ட பாரதிநகரில் உள்ள தனியார் மஹாலில் அ.தி.மு.க. மண்டம் மேற்கு ஒன்றியம் சார்பில் உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல், பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் மகளிர் அணி இளைஞர், இளம் பெண்கள் பாசறை உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

    மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமை தாங்கினார். மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர் வக்கீல் சங்கரபாண்டியன் முன்னிலை வகித்தார்.மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.மருது பாண்டியன் வரவேற்றார்.மாற்று கட்சியில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

    புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு கட்சி வேட்டிகளை மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அனைத்து ஒன்றியங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி ஆய்வு,புதிய உறுப்பி னர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகிறது.பெண்களை அதிகளவில் உறுப்பினராக சேர்க்க வேண்டும். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் பெண்கள் அனைவரும் சுயஉதவிக்குழு உறுப்பினர்களாக சேர்க்கப் டுவார்கள்.

    தி.மு.க. பொய் வாக்கு றுதியை கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டது. 2 ஆண்டுகளில் மக்களை பற்றி கவலை இல்லாமல் ஆட்சி நடை பெறுகிறது. இப்போது தி.மு.க. ஆட்சியில் கள்ளச் சாராயம், போதை பொருள் விற்பனை அதிகரித்து வருவதால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த ஆட்சி நீடித்தால் வருங்கால சந்ததியினர் போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்படும்.

    தி.மு.க. ஆட்சி கலைக்கப் பட்டால் அ.தி.மு.க. 190 சட்டமன்ற தொகுதிகளையும், 40 எம்.பி. தொகுதிகளையும் கைப்பற்றும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளர் சேது பாலசிங்கம், முருகேசன், கார்மேகம், முகேஷ், மருது பாண்டியர் நகர் கிளைச் செயலாளர் ராஜேந்திரன், சக்தி நாகஜோதி, கோபி, ஆசிக் உள்பட மண்டபம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கோடை உழவு செய்தால், களைச் செடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகிறது.
    • உழவு செய்யும் போது பறவைகள் அதிகமாக வந்து, உழவின் போது வெளியே வரும் புழு மற்றும் முட்டைகளை உணவாக உட்கொள்ளுகின்றன.

    கிருஷ்ணகிரி,

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் முகமதுஅஸ்லம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் தங்கள் நிலங்களில் மழை நீரை சிறிதும் வீணாகாமல் கோடை உழவினை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் மானாவரி நிலங்களில், மண் மிகவும் கடினமாக இருக்கும். கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணின் இறுக்கம் குறைகிறது. மண்ணை புழுதிபட உழுவதால் மண்ணின் தன்மை மாறுபடுகிறது. மண்ணை துகள்களாக மாற்றுவதால், மண்ணில் காற்றோடம் அதிகரிக்கிறது. மண்ணில் காற்றோட்டம் அதிகரிப்பதால், மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் நன்கு வளர்ச்சி அடைகிறது. இதனால் நிலத்தில் உள்ள செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாக மாற்றப்படுகிறது. மேலும், களைக்கொல்லி மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் வெகுவாக குறைந்து, மண்ணின் விசத்தன்மை குறைகிறது. கோடை உழவினால் மண் நன்றாக நயமாகிறது. இதனால் நீர் ஊடுருவிச் செல்லும் தன்மை அதிகரிக்கிறது. நீர் வேர் மண்டலம் வரை சென்று பயிருக்கு நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கிறது.

    நிலத்தின் சரிவுக்கு குறுக்காக வயலை நன்கு பல முறை புழுதிபட உழ வேண்டும். இப்படி உழுவதால் மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 செ.மீ முதல் 15 செ.மீ ஆழத்திற்கு உட்செல்லும். இதனால் நீர் ஆவியாவதை தடுப்பதோடு வறட்சி காலங்களில் பயிருக்கு தேவையான அளவு நீர் கிடைக்க ஏதுவாகிறது. ஆழச்சால் அகலப்பாத்தி 4 அடி அகல பாத்திகளாகவும், ஒரு அடி அகலம் உள்ள 15 செ.மீ ஆழம் உள்ள சால்களாகவும் அமைப்பது மிகவும் நல்லது. இதனால் நீர் பிடிப்புத் தன்மை அதிகரிப்பதோடு, நீர் ஓட்டத்தை தடுத்து, சத்துள்ள மண் வீணாவதையம் தடுக்கலாம். மழை நீர் சால்களில் தேங்கி நின்று மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றடைகிறது.

    பயிர் அறுவடை செய்த பின்னர், பயிரின் தாள்கள் நிலத்தில் தேங்கி விடுகிறது. இது பெரும்பாலான பூச்சிகளுக்கு உணவாகவும், நல்ல தங்குமிடமாகவும் முட்டைகள் இட்டு பாதுகாக்கும் இடமாகவும் இருக்கிறது. அதனால் கோடை உழவு செய்தால், களைச் செடிகள் மற்றும் அறுவடை செய்யப்பட்ட தாள்கள் அழிக்கப்பட்டு மக்கி பயிருக்கு உரமாகிறது. களைகளின் விதைகள், கோடை உழவின் போது மண்ணுக்கு மேலே வந்து சூரிய வெப்பத்தால் அழிந்துவிடுகிறது. இதனால் களை விதைகள் உற்பத்தி தடுக்கப்பட்டு களைகளின் தொந்தரவு குறைக்கப்படுகிறது. பூச்சிகளின் முட்டைகளும், கூண்டுப்புழுக்களும் அழிக்கப்படுகின்றன. உழவு செய்யும் போது பறவைகள் அதிகமாக வந்து, உழவின் போது வெளியே வரும் புழு மற்றும் முட்டைகளை உணவாக உட்கொள்ளுகின்றன. இதனால் பூச்சிகளின் தாக்கம் குறைகிறது. தாவர கழிவுகளின் மட்கும் தன்மை அதிகரித்து மண் வளம் பெருகுகிறது. மழை நீர் சிறிதும் வீணாகாமல் பயிருக்கு கிடைக்க ஏதுவாகிறது. இதனால் மழைநீர் சேகரிப்புத் திறன் அதிகரிக்கிறது.

    மேலும், ஏக்கருக்கு 100 முதல் 150 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு, உழவு பணி மேற்கொள்ளலாம். முக்கிய வேளாண் தொழில்நுட்பமான கோடை உழவினை அனைத்து விவசாயிகளும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் வேளாண்மை இணை இயக்குநர் முகமது அஸ்லம் தெரிவித்துள்ளார்.

    • நீரிழிவு நோய் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
    • ஆரோக்கியமான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள் பற்றி ஆலோசனை வழங்கினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் பயனாளிகள் குறித்து மயிலாடுதுறை கலெக்டர் மகாபாரதி மருத்துவம் குறித்து கேட்டறிந்து நலம் விசாரித்தார் அப்போது நிம்மேலி கிராமத்தில் வசிக்கும் கலியமூர்த்தி (வயது 85) சசிகலா 50 ஆகியோரது வீட்டிற்கு நேரடியாக சென்று மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் பணி புரியும் செவிலியர்கள் நேரடியாக வீட்டிற்கு வந்து ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் குறித்து கண்டறிந்து மருந்து மாத்திரைகள் வழங்குகிறார்களா என கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அப்பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குழந்தைகளிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

    அப்போது கலெக்டர் கூறுகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் 73508

    பயனாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

    மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களின் வீட்டிற்கே சென்று உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் 18 வயது மேற்பட்டவர்களுக்கு பெண் சுகாதார தன்னார்வலர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.

    தொற்றா நோய்கள் அம்மைகளை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லத்திற்கு நேரில் சென்று சில அத்தியாவசியமான சுகாதார சேவைகள் வழங்கப்படுகிறது.

    மேலும், தொடர் கண்காணிப்பு செய்வதன் மூலம் இரண்டு மாதங்களுக்கு நோயாளிகள் பயன்பெறும் விதமாக வீட்டிற்கே சென்று மருந்துகள் வழங்கப்படுகின்றது.

    இரண்டு மாதத்திற்கு ஒருமுறை பெண் சுகாதார தன்னார்வலர்கள் (WHV) நோயாளிகளை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர் பரிசோதனை செய்ய பரிந்துரை செய்கின்றனர்.

    இது தவிர, அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள்பற்றி எடுத்துரைத்து ஆலோச னைகள் வழங்குகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட துணை (சுகாதாரம்) இயக்குனர் அஜித்பிரபு குமார், தாசில்தார் செந்தில்குமார்

    வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் சரவணன் டாக்டர் பத்மபிரியவர்தினி சுகாதார மேற்பார் வையாளர் ராமோகன் சுகாதார ஆய்வாளர் ரவிக்குமார் ஊராட்சி தலைவர் வசந்தி செவிலியர்கள் உடன் இருந்தனர்.

    • விவசாயிகள் பல பயிர் சாகுபடி செய்ய ஆலோசனை வழங்கப்பட்டது.
    • மண்வளம் பெருக்க

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட விவசாயிகள் மண் வளம் காக்க பல பயிர் சாகுபடி செய்யலாம் என வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை கூறியுள்ளது.

    இது குறித்து பெரம்பலூர் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் தெய்வீகன் தெரிவித்துள்ளதாவது,

    பல பயிர் சாகுபடி என்பது ஒரே வயலில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயிர்களை ஒன்றாக விதைத்து அவை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் வளத்தை பெருக்குவதாகும். பொதுவாக தானியங்களில் 2 வகை, எண்ணெய் வகை வித்துக்களில் 2 வகை, பயறு வகைகளில் 2 வகை, பசுந்தாள் ஒரு வகை என ஒவ்வொன்றும் ஒரு கிலோ வீதம் 7 கிலோ ஒரு ஏக்கருக்கு போதுமானது.

    கோடையின் இறுதியில் பருவப்பயிருக்கு முந்தைய காலத்தில் கிடைக்க பெறும் இடைக்காலத்தில் பசுந்தழை பயிர்களோ பல பயிர்களோ பயிரிட்டு அவற்றை மடக்கி உழுது அடுத்த பயிருக்கு உரமாக்குவது அங்கக வேளாண்மையின் சிறந்த ஒரு தொழில்நுட்பம் ஆகும். பல ஆண்டுகளாக செயற்கை உரம் மற்றும் பூச்சிகொல்லி பயன்பாட்டில் வளம் இழந்துள்ள மண்ணின் வளத்தை மீட்டெடுக்கவும் இயற்கை விவசாயத்தை துவக்குவதற்கும் விவசாயிகள் முதலில் மேற்கொள்ள வேண்டிய பல பயிர் விதைப்பு நடவடிக்கையாகும்.

    இம்முறையில் தானிய வகை பயிர்களான சோளம் ஒரு கிலோ, கம்பு அரை கிலோ, தினை, சாமை தலா 250 கிராம், உளுந்து, பாசிசப்பயறு, தட்டைப்பயறு, கொண்டைக்கடலை ஆகியவை தலா ஒரு கிலோ எண்ணெய் வித்து பயிர;களான நிலக்கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு தலா 2 கிலோ, எள் 500 கிராம், பசுந்தாள் பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பை தலா 2 கிலோ ஆகியவற்றை ஒரே நிலத்தில் விதைக்க வேண்டும். இந்த விதைகளை குறிப்பிட்ட அளவு பயன்படுத்த வேண்டும் என்று கட்டாயமில்லை. நிலத்தின் பரப்பு கிடைக்கும் விதைகளை பொறுத்து விதைக்கலாம்.

    விதைகள் வளர்ந்து 45-50 நாட்களாகி பூத்த பின்பு செடிகளை மடக்கி உழவு செய்ய வேண்டும். இதன் மூலம் மண்ணில் நுண்ணுயிரினங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டசத்து இயற்கையாகவே கிடைத்திட இது வழி செய்கிறது. பல ஆண்டுகளாக பயன்படுத்திய செயற்கை உரம், பூச்சிகொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறைவதோடு மண்ணின் கரிமச்சத்து அளவு அதிகரிக்கிறது. பல தானிய பயிர்களை மடக்கி உழுத பிறகு இயற்கை உரங்களான சாணம், கோமியம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றை பயன்படுத்தி இயற்கை விவசாயம் துவங்க ஏதுவாகும் என தெரிவித்துள்ளார்.

    • கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெறவேண்டும்.
    • கோடை உழவால் கோரை, அருகம்புல் போன்ற கலைகள் வெளியே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகிறது.

    கடத்தூர்,

    பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் அனைவரும் நடப்பு பருவத்தில் தற்பொழுது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெறவேண்டும். கோடை உழவு செய்வதன் மூலம் பல நன்மைகள் உண்டாகிறது. கோடை உழவு செய்வதால் மழை நீர் மண்ணில் சேமிக்கப்படுகிறது. மேல்மண் தூய்மையாக மாறி நிலத்தில் நீர் இறங்கும் தன்மையை அதிகரிக்கிறது. மண்ணில் நல்ல காற்றோட்டம் உண்டாகி நுண்ணுயிர்கள் பெருக்கம் அடைகிறது. கோடை உழவால் கோரை, அருகம்புல் போன்ற கலைகள் வெளியே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுகிறது. மேலும் பயிர்களை தாக்கும் பூச்சிகள்,அவைகளின் முட்டைகள் புழு ,மற்றும் கூட்டுப் புழுக்களை வெளிக்கொண்டுவந்து பறவைகளினால் உட்கொள்ளப்படுகிறது. மேலும் மலைப்பாங்கான பகுதியில் சரிவுக்கு குறுக்கே உழவு செய்வதால் மண் அறிக்கப்படுவது தடுக்கப்பட்டு மண்ணில் உள்ள சத்துக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அடித்துச் செல்லப்படுவது தடுக்கப்படுகிறது. ஆகவே பாப்பிரெட்டிப்பட்டி வட்டார விவசாயிகள் அனைவரும் நடப்பு பருவத்தில் பெய்யும் கோடை மழையை பயன்படுத்தி கோடை உழவு செய்து பயன்பெற வேண்டு என வேளாண்மை உதவி இயக்குனர் முனி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.

    இப்பயிற்சியில் 10, 12-ம் வகுப்பு தேர்வு எழுதிய, தேர்வு எழுதாத, இடைநின்ற மாணவர்கள் தமது கல்வியை தொடர வாய்ப்பு அளிக்கும் பொருட்டு வருகிற 6-ந்தேதி முதல் ஒவ்வொரு அரசு மேல்நிலை பள்ளிகளிலும் உயர்கல்வி வழிகாட்டு குழு செயல்பட உள்ளது.

    இக்குழுவின் உறுப்பினர்க ளாகிய மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், உயர் கல்வி வழிகாட்டுதல் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர், முன்னாள் மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் (கல்வியாளர்), கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அனைவருக்குமான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி வருகிற 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் 3-ம் நாளான நேற்று முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் முத்துப்பேட்டை, தில்லைவிளாகம், நாச்சிகுளம், இடும்பாவனம், இடையூர், புத்தகரம் ஆகிய பள்ளிகளுக்கான ஆலோசனை வழங்குதல் குழு கருத்தாளர்களுக்கான பயிற்சி வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா தலைமையில் நடைபெற்றது.

    இப்பயி ற்சியை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதரன் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபாகரன் மற்றும் மன்னார்குடி வட்டார வள மைய மேற்பா ர்வையாளர் தனபாலன் ஆகியோர் முதன்மை கருத்தாளர்களாக கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சியில் 125 கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    பயிற்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் சுரேஷ், அன்புராணி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • வரும் கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக கருத்துக்கள் கேட்கப்பட்டது.
    • காலை உணவுத்திட்டத்தை 8 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    மங்கலம் :

    தமிழக முதல்வரின் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தினை செயல்படுத்துவது சம்பந்தமாக திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அலுவலகத்தில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாப ழனிச்சாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டி வரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தகுமார், பல்லடம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த கூட்டத்தில் சாமளாபுரம் பேரூராட்சி மன்ற அனைத்து வார்டு கவுன்சிலர்கள், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர், சாமளாபுரம் பகுதி மகளிர் கூட்டமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வரும் கல்வியாண்டு முதல் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது சம்பந்தமாக அனைவரிடமும் கலந்தாலோ சித்து அவர்களுடைய கருத்துக்கள் கேட்கப்பட்டது.கூட்டத்தில் கலந்து கொண்ட வர்களின் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டு இந்தத் திட்டத்தை சாமளாபுரம் பேரூராட்சியில் முதலமைச்ச ரின் காலை உணவுத்திட்டத்தை 8 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளிலும் சிறந்த முறையில் நடைமுறைப்படு த்துவது என முடிவு செய்யப்பட்டது.

    • விழுப்புரம் தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது
    • உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பேசி–னார்.

    விழுப்புரம்:

    விழுப்புரத்திற்கு நாளை (புதன்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடகூறியுள்ளார்.

    தி.மு.க. ஆலோசனை கூட்டம்

    விழுப்புரம்  தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., மாவட்ட அவை தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர்சிவா, மாநில ஆதிதிராவிர் நலக்குழு இணை செயலாளர் புஷ்ப–ராஜ், மாவட்ட துணை செயலாளர் முருகன், தயாளந்திரையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கலந்து கொண்டு பேசினார்.

    சிறப்பான வரவேற்பு

    அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளையும் (புதன்–கி–ழமை), நாளை மறுநாளும் (வியாழக்கிழமை) விழுப்புரம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மாவட்ட தி.மு.க. சார்பில் நகர எல்லை யான அய்யூர்அகரத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கவேண்டும்.

    நகர தி.மு.க.வினர் விழுப்புரம் நான்கு முனை சாலை சிக்னல் பகுதியில் திரண்டு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். பெண்கள் இதில் திரளாக பங்கேற்கவேண்டும். அரசு நிகழ்ச்சி என்பதால் கூட்டத்தில் யாரும் பங்ேகற்க அனுமதி கிடையாது. காவல்துறை ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களுக்கும் அனுமதி கிடையாது. எனவே வரவேற்போடு உங்–கள் பணி முடிந்து விட்டது.

    மேலும் உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிப்பதோடு, கட்சி பணிகளை சிறப்–க மேற்–கொள்ளவேண்–டும் என்றார். இதில் விழுப்புரம் நகர செயலாளர் சக்கரை, ஒன்றிய செயலாளர்கள் கல்பட்டு ராஜா, மும்மர்த்தி, தெய்வசிகாமணி, ரவிச்சந்திரன், விஸ்வநாதன், வேம்பிவி, நகர மன்றதலைவர் சக்கரைதமிழ்செல்வி பிரபு, கோலியனூர் ஒன்–றி–யக்குழு தலைவர் சச்சிதானந்தம், வளவனூர் நகர செய–லாளர் ஜீவா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினக–ரன், மாணவரணி அமைப்பாளர் ஸ்ரீவினோத், மாவட்ட வர்த்–தக அணி அமைப்–பா–ளர் கோல்டு வெங்–க–டே–சன், நக–ர–மன்ற துணைத்தலைவர் சித்திக்அலி, நகர இளைஞ–ணி அமைப்பாளர் மணிகண்டன் விழுப்புரம் நகர துணை செயலாளர் புருஷோத்தமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    ×