search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223931"

    • வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
    • இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைபாண்டி. இவரது மகன் நாகபாண்டி (வயது 21). இவர் நகரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நாகபாண்டி அடிக்கடி செல்போன் பயன்படுத்தியதை குடும்பத்தினர் கண்டித்தனர். இதில்விரக்தி அடைந்த நாகபாண்டி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காடுப்பட்டி சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குபேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.
    • திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம சர்க்கரை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி பவித்ரா (24). இவர்களுக்கு திருமண மாகி 5 வருடங்கள் ஆகிய நிலையில் 2½ வயதில் நவின் என்ற மகன் உள்ளார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் பவித்ரா வீட்டில் அவரது கணவர் உள்ளிட்ட உறவினர்களிடம் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

    சிறிது நேரம் கழித்து உறவினர்கள் சென்று விட்டனர். வேலை முடிந்து மணிகண்டன் வீட்டிற்கு வந்து பவித்ராவை கூப்பி ட்டு உள்ளார். எந்த பதிலும் வராததால் வீட்டின் கதவை தட்டி பார்த்துள்ளார்.

    இதனையடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது பவித்ரா வீட்டின் மேல் உள்ள இரும்பு கம்பியில் சேலையில் தூக்குமாட்டி தொங்கியுள்ளார்.

    உடனே உறவினர்கள் உதவியுடன் பவித்ராவை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே பவித்ரா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தற்கொலை செய்து கொண்ட பவித்ராவிற்கு திருமணமாகி 5 வருடங்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

    • நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் திருபன் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்.
    • இதனால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம். சேவகனுர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன். சரண்யா தம்பதியரின் மகன் திருபன் (15) என்பவர் கே ஆர் தோப்பூர் அரசு மேல்நிலைபள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

    நேற்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவன் திருபன் சமூக அறிவியல் பாடத்தில் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தனது பெற்றோர் வெளி யில் சென்று விட்டதால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தனது தாயின் சேலையால் தூக்கிட்டுள்ளார்.

    சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த தாய் உள்ளே சென்ற போது மாணவன் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்ச லிட்டுள்ளார் .இதனால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மணிமேகலை (வயது 28). கரகாட்டம் ஆடும் கலைஞரான இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது.
    • இதனால் கரகாட்டத்திற்கு சென்று ஆட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் சுண்ணாம்பு சூலை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மணிமேகலை (வயது 28). கரகாட்டம் ஆடும் கலைஞரான இவர் கடந்த 9 மாதத்துக்கு முன்பு ஒரு விபத்தில் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கரகாட்டத்திற்கு சென்று ஆட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.

    மேலும் இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த மணிமேகலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கிச்சிபாளையம் போலீஸ் சார் மணிமேகலையின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது.
    • காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அடுத்த பி. மேட்டுப்பாளையம் வெங்கம்மேடு, நேரு தெருவை சேர்ந்தவர் அருள்குமார். கடந்த நாலு வருடங்களுக்கு முன்பு காமாட்சி (21) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக காமாட்சிக்கு இடுப்பு வலி இருந்து வந்ததாக குறிப்பிடுகிறது. இதற்கு சிகிச்சைக்காக அருள்குமார் தான் வேலை பார்க்கும் கடையில் பணம் வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார்.

    வீட்டில் இருந்த காமாட்சி வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலின் பெயரில் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காமாட்சி உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்
    • ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஜவகர்லால் நேரு நகர் எஸ்.கே.ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது (40).

    நகை கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று நேற்று காலை தனது கழுத்தை தனக்கு தானே அறுத்து கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெற்றோர்கள் திருமண ஏற்பாடு குறித்து பேசி உள்ளனர்.
    • மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் கலியபெருமாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன் .இவரது மகள் கிருத்திகா (23) பி.எஸ்.சி. படித்து முடித்தநிலையில் இவரது வீட்டில் பெற்றோர்கள் திருமண ஏற்பாடு குறித்து பேசி உள்ளனர். அதற்கு கிருத்திகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று கிருத்திகா தனது வீட்டில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
    • அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (52). கூலித் தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    ராமுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. ராமுவின் அண்ணன் மகன் குணசேகரன் (37)என்பவர் அந்தியூர் அருகே அரசு பணிமனை அருகே குடியிருந்து வருகின்றார்.

    குணசேகரனுக்கு ராமு போன் செய்து நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகி றேன். நான் இறந்த பிறகு எனக்கு நீ, தான் காரியம் செய்ய வேண்டும் என்று பேசி விட்டு போனை வைத்து விட்டார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் ராமுவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அப்போது கதவு உள் பக்க மாக மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். ெபாதுமக்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட ராமு இதே போன்று பலமுறை விளை யாட்டாக போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    அதே போல் விளை யாட்டாக அவர் பேசி வரு கிறார் என அவரது குடும்பத்தினர் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தற்போது விளையாட்டு வினையாக முடிந்து விட்டது.

    இது குறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • குடும்ப பிரச்சினையால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    தூசி:

    வெம்பாக்கம் தாலுகா சுருட்டல் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சிதா. இவருக்கும் செய்யாறு தாலுகா தூசி அருகே கூழ மந்தல் கிராமம் சிவப்பிரகாசம் நகர் தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி பாலமுருகன் என்பவருக் கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

    இந்த நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக பாலமுருகன் 2 நாட்க ளாக வீட்டில் பேசாமல் இருந்துள் ளார். நேற்று முன்தினம் ரஞ்சிதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்தநிலை யில் தூக்கில் தொங்கியபடி பாலமுரு கன் ரஞ்சிதாவுக்கு செல்போனில் படம் அனுப்பி உள்ளார். இதை கண்ட ரஞ்சிதா அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் உறவி னர்களுக்கு போன் செய்து உடனே வீட்டிற்கு சென்று பார்க் கும்படி கூறினார். அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியபடி இருந்த பாலமுருகனை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ரஞ்சிதா தூசி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உமா சங்கரி மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
    • மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசிசேர்ந்தவர் மகாதேவன். இவரது மனைவி உமா சங்கரி (வயது 40). மகாதேவனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதன் காரணமாக உமா சங்கரி கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனது தந்தை சந்திரசேகர் வீட்டில் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்தார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த உமாசங்கரி திடீரென்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுரேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்
    • பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்

     ஈரோடு,

    ஈரோடு மூலப்பாளையம் பாரதிபாளையம் முதல் வீதியை சேர்ந்தவர் சுரேந்திரன் (வயது 58). ஈரோடு சம்பத்நகர் உழவர் சந்தையில் வேளாண்மை உதவி அதிகாரியாக பணியாற்றி வந்த அவர் கடந்த செப்டம்பர் மாதம் விருப்ப ஓய்வு பெற்றார்.

    இந்த நிலையில் சுரேந்திரன் உடல் நலக்குறை–வால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே மனஉளைச்சலுடன் காணப்பட்டார்.

    கடந்த 9-ந் தேதி இரவில் சுரேந்தின் வீட்டின் படுக்கை அறைக்குள் சென்று தூங்க சென்றார். மற்றொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த இருந்த குமுதா நேற்று முன்தினம் காலையில் எழுந்து பார்த்தார்.

    அப்போது சுரேந்திரன் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுரேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சூர்யா வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 25). கூலி தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இதனால் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தனது தாய் தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சூர்யா குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்துள்ளார்.

    பின்னர் வீட்டில் அமைதியாக போய் தூங்கு என்று பெற்றோர்கள் கூறினர். இதனையடுத்து வீட்டில் உள்ளே சென்ற சூர்யா சிறிது நேரத்தில் வீட்டிற்குள் இருந்த மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

    இதனைப்பார்த்த உறவினர்கள் சூர்யாவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சூர்யா இறந்தார்.

    சம்பவம் குறித்து சூர்யாவின் தந்தை சாமிக்கண்ணு மொடக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×