search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறைச்சி"

    • பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.
    • காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது.

    குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைவாக கிடைக்கும் உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால் தான். மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மையான உணவாகும்.

    குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டவது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமானது. தாயிடமிருந்து கிடைக்கும் இந்த இயற்கையான உணவு ஆரோக்கியம், குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எளிதில் சுரப்பை அதிகரிக்க சில உணவு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.

    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பட்டாணி மற்றும் பச்சை பயிறு, தட்டை பயிறு, இதுபோன்ற உணவுகளை ஊறவைத்து தாளித்து இதை சாப்பிட்டு வரலாம். இதில் ப்ரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் பால் சுரப்பி அதிகமாக ஆகும்.

    அதுமட்டும் அல்லாமல் நாட்டு கருது, வேகவைத்த வேர்க்கடலை இதெல்லாம் மாலை நேரத்தில் பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் ப்ரோட்டீன் சத்து அதிகமாய் கிடைக்கும்.

    கீரையை சுத்தம் செய்து கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அதனுடன் வேக வைத்து கூட்டாக சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் சுரக்கும்.


    தாய்ப்பால் அதிகமாக சுரக்க தாய்மார்கள் அனைவரும் மட்டன், சிக்கன், கருவாடு, மீன் போன்றவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் அனைவரும் முட்டை, சிக்கன், குழம்பு மீன் முக்கியமாக சாப்பிட வேண்டும்.

    காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது. அதோடு சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் பால் சுரக்கும் தன்மை இருக்காது. பகலில் கண்டிப்பாக தூங்கவேண்டும்.

    வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

    வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்வது நல்லது.

    முருங்கைக்கீரையை கூட்டாகவோ, பொரியலாகவோ, சூப்பாகவோ ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடலாம். இதை சரியான முறையில் சமைக்காவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

    பால் சுறா என்னும் கருவாடு (அ) மீன் மிகச்சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுப்பவர்கள் சமைத்த உடனே சாப்பிட வேண்டும் பதப்படுத்தி வைத்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

    பால் சுரக்க என்ன உணவுகளை சாப்பிடவேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் 500 மில்லி பாலினை உணவில் அவசியம் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

    கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பாலை சுரக்க செய்வதுடன், இவற்றின் சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது.


    எனவே பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.

    கிழங்கு வகைகள் நல்லது தான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மந்தம் வரும்.

    தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். இச்சத்தில் குறைபாடு இருந்தால் தாய்ப்பாலை வறட்சியடையச் செய்து விடும்.

    மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மனதை ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம்.

    அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயணக் கலவை சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக குளிர் பானங்களைத் தவிர்க்கவும். சீதாப்பழத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.

    குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் போடும் முதல் அடித்தளம் இந்த தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் வீட்டில் உள்ள நம்முடைய ஆரோக்கியமான சமையல் மூலமாகவே தாய்ப்பாலை அதிகரிக்க செய்யலாம்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
    • நாளை அதிகாலை ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    பார்படாஸ்:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரின்போது பார்படாஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுன் ஓட்டலில் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஹலால் மாட்டிறைச்சி கிடைக்கவில்லை. இதனால் மாட்டிறைச்சியை ஓட்டலுக்கு தருவித்து அவர்கள் சமைத்து சாப்பிட்டனர்.

    ஆப்கானிஸ்தான் அணி உணவுப் பட்டியலில் ஹலால் இறைச்சியும் இடம்பிடித்திருந்தது. எனவே ஹலால் மாட்டிறைச்சி ஒரு பிரச்சனையாக மாறியது.

    இதுதொடர்பாக ஆப்கானிஸ்தான் வீரர் கூறுகையில், நாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் ஹலால் இறைச்சி கிடைக்கவில்லை. சில சமயம் நாங்களே சமைப்போம். அல்லது சில சமயங்களில் வெளியே செல்வோம். இந்தியாவில் கடந்த உலகக் கோப்பையில் எல்லாம் சரியாக இருந்தது. ஹலால் மாட்டிறைச்சி இங்கு ஒரு பிரச்சனையாக மாறியது. ஒரு நண்பர் ஹலால் மாட்டிறைச்சியை எங்களுக்கு ஏற்பாடு செய்தார். நாங்கள் சொந்தமாக சமைத்து சாப்பிட்டோம் என தெரிவித்தார்.

    • தோசை கல்லை தேய்க்கும் காட்சிகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும்.
    • 4.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள வீடியோ சுகாதார உணவு தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    உணவு பிரியர்களுக்காக சமூக வலைதளங்களில் வெளியாகும் புதுப்புது உணவு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் அதிக அளவில் வெளியாகி வருகிறது. அவற்றில் பல வீடியோக்கள் கடும் விமர்சனங்களை சந்திக்கின்றன.

    அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வரும் ஒரு வீடியோவில், இறைச்சி சமையலின் போது பெண் ஒருவர் சாஸ் தேய்ப்பதற்காக துடைப்பத்தை (மாப்) நனைத்து பயன்படுத்திய காட்சிகள் உள்ளது. வழக்கமாக ஓட்டல்களில் தோசை உள்ளிட்ட சில உணவு வகைகள் தயாரிக்கும் போது துடைப்பத்தால் தோசை கல்லை தேய்க்கும் காட்சிகள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோவும் சமூக விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    அதே நேரத்தில் 4.8 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ சுகாதார உணவு தொடர்பான விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.
    • புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-விழுப்புரம் சாலை உழவர்கரையில் உள்ள இறைச்சி கடையில் ஒரு கன்று குட்டியை இறைச்சிக்காக வெட்டி கொல்வதற்கு கொண்டு வந்தனர்.

    இதை பார்த்த தனியார் அமைப்பின இறைச்சிக்காக கன்று குட்டிகள், கருவுற்ற கால்நடைகள், நோய்வாய்ப்பட்ட கால்நடைகள், அடிபட்ட மாடுகளை வெட்டக்கூடாது என்பது சட்டம் உள்ளது என எடுத்து கூறினர்.

    ஆனால் இறைச்சி கடை உரிமையாளர் ஏற்கவில்லை. இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீஸ் மற்றும் உழவர்கரை நகராட்சி அலுவகலத்திலும் புகார் அளித்தனர்.

    இது தொடர்பான புரிந்துணர்வு இல்லாததால், கன்று குட்டி மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, மாவட்ட கலெக்டரை அந்த அமைப்பினர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கலெக்டரின் நடவடிக்கையை தொடர்ந்து கன்று குட்டியை ரெட்டியார் பாளையம் போலீசார் மீட்டு போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்பு, உழவர்கரை நகராட்சி நிர்வாகம் இறைச்சிக்காக கொல்லப்பட இருந்த கன்று குட்டியை மீட்டு சென்றது.

    • எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
    • உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்து தான் விற்பனைக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது.

    மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள் அங்கு வெட்டப்படுகின்றன. கிலோ ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது.

    புளியந்தோப்பு இறைச்சி கூடத்தின் முன் பகுதியில் சிலர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு கிலோ ரூ.600-க்கு ஆட்டு இறைச்சி கிடைக்கிறது.

    மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது அங்கு எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    ராஜஸ்தான், சூரத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனைக்கு சனிக்கிழமை ஆடுகள் கொண்டு வரப்படும். ஒரு லாரிக்கு 350 ஆடுகள் வீதம் கொண்டு வரும்போது நெரிசலில் சிக்கி அவற்றில் 4 அல்லது 5 ஆடுகள் செத்து விடுவது வழக்கம். ஒரு லாரியில் 5 ஆடுகள் என்றால் 10, 15 லாரிகளில் வரும் போது 50 ஆடுகளுக்கு மேல் வழியில் இறந்து விடுகிறது.

    இறந்துபோன ஆடுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து பாதுகாக்கின்றனர்.

    மறுநாள் காலையில் அதனை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இறந்த ஆடுகளை பதப்படுத்தி உண்பது சுகாதார மற்றதாகும். உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    ஆனால் இறைச்சி கூடத்தின் முன்பு சிலர் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். செத்து போன ஆட்டு இறைச்சிக்கும் உயிரோடு வெட்டிய ஆட்டு இறைச்சிக்கும் பார்க்கும் போது வேறுபாடு தெரியாது.

    இறைச்சி கடைகளை விட கிலோவிற்கு ரூ.300 குறைவாக கிடைப்பதால் அதனை மக்கள் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் இதுபோன்ற சாகின்ற ஆடுகளை இறைச்சி கூடத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். கூடத்தில் உள்ள வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் வெளியே சிலர் கடை வைத்து சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இறைச்சி கூடம் முழுவதும் உள்ளது. அப்படி இருக்கும் போது மலிவான விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    • உணவு விரைவாக செரிமானமாக வேண்டும்.
    • உணவின் வகையை பொறுத்து செரிமான முறை அமையும்.
    உண்ணும் உணவு விரைவாக செரிமானமாக வேண்டும். அப்போதுதான் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். வயது, பாலினம், வளர்சிதை மாற்றம், உணவின் வகை உள்ளிட்டவற்றை பொறுத்து செரிமான செயல்முறை அமையும். இருப்பினும் சாப்பிடும் உணவை பொறுத்து செரிமான செயல்முறை 24 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை நடைபெறலாம் என்பது உணவியலாளர்களின் கருத்தாக

    இருக்கிறது. எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரத்தில் செரிமானமாகும் என்பது பற்றி பார்ப்போம்.

     தண்ணீர்

    தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் ஐந்து நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும். ஆனால் அதிக அளவு உணவு சாப்பிட்டு விட்டு அதன் பிறகு தண்ணீர் பருகினால் அது உறிஞ்சப்படுவதற்கு சில மணி நேரமாகிவிடும்.

     ஜூஸ்

    பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். அதன் மூலம் ஆரோக்கியம் வலுப்படும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும். எந்த உணவுகளை உட்கொண்டாலும் அதனுடன் இது போன்ற நார்ச்சத்துமிக்க உணவுகளையும் அடிக்கடி சாப்பிட வேண்டும். அவைதான் செரிமான மண்டலத்திற்கு சிறந்தவை.

     பழங்கள்

    முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது. அதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் 20 நிமிடங்களுக்குள்ளாகவே செரிமான செயல்முறை ஒட்டுமொத்தமாக நடைபெற்று முடிந்துவிடும். குடல் இயக்கம் சுமூகமாக நடைபெறுவதற்கும் உதவி புரியும். அதேவேளையில் செரிமான பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு உணவுகளுடன் பழங்களை சேர்த்து உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

     காய்கறிகள்

    பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம். முட்டைக்கோஸ், காலிபிளவர், புரோக்கோலி உள்ளிட்ட காய்கறிகள் 40 நிமிடங்களில் செரிக்கப்படும். கேரட், பீட்ரூட் உள்ளிட்ட வேர் காய்கறிகள் செரிமானமாக சுமார் 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். உருளைக்கிழங்கு, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, சோளம் போன்றவை செரிமானமாக சுமார் ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

     தானியங்கள்

    பழுப்பு அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.

     இறைச்சி

    எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். அதே நேரத்தில் சால்மன், மத்தி போன்ற கொழுப்பு நிறைந்த மீன்கள் செரிமானம் அடைவதற்கு 50 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும். சில சமயங்களில் முழுமையாக செரிமானம் ஆவதற்கு 24 மணி நேரத்திற்கும் மேலாகும்.

     பால் பொருட்கள்

    கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக5 மணி நேரம் கூட ஆகலாம். முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.

     நட்ஸ்கள்-விதைகள்

    எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள், அக்ரூட் பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

    • அயோத்தி செல்லும் யாத்ரீகர்கள் வசதிக்காக இந்த முடிவு.
    • போலீஸ், நகர்ப்புற அமைப்புகள், உணவுத்துறை மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள முடிவு.

    மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் நேற்று பதவி ஏற்ற நிலையில், அம்மாநிலத்தில் உணவு பாதுகாப்பு விதிமுறையின் கீழ் திறந்த வெளியில் இறைச்சி, முட்டை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான் விழிப்புணர்வு பிரசாரம் உணவுத்துறை, போலீஸ், உள்ளூர் நகர்ப்புற அமைப்புகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. டிசம்பர் 15-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந்தேதி வரை இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும்.

    போபாலில் உள்ள நேரு மைதானத்தில் மோகன் யாதவ் நேற்று முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார. ஜெக்திஷ் தேவ்தா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் ஆகியோர் கலந்த கொண்டனர்.

    ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்ட மோகன் யாதவ், தனது முதல் கேபினட் கூட்டத்திலேயே இந்த முடிவை எடுத்துள்ளார்.

    அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. மத்திய பிரதேசம் வழியாக அயோத்தி செல்லும் ராமர் பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறு விறுப்பாக நடைபெறும்.
    • ஆயுதப் பூஜையையொட்டி வீடு மற்றும் கடைகள் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தனர்.

    சேலம்:

    சேலம் 4 ரோடு, குகை, தாதகாப்பட்டி, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் இறைச்சி கடைகள், மீன் கடைகளில் வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரமும் விறு விறுப்பாக நடைபெறும். இந்த நிலையில் ஆயுதப் பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்படும். ஆயுதப் பூஜையையொட்டி வீடு மற்றும் கடைகள் சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்தனர்.

    சேலம் சூரமங்கலம் மீன் மார்க்கெட்டில் ஏராளமான மீன் கடைகள் உள்ளன. இன்று காலை முதலே இங்கு மக்கள் கூட்டம் இன்றி மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு சிலர் மட்டுமே மீன்களை வாங்கி சென்றனர். இதேபோல் கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்கள், இறைச்சிகள் விலை கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரம் குறைந்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரையில் 2 மாதங்களில் 320 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

    மதுரை

    நாகரீக உலகத்தின் வளர்ச்சிக்கேற்ப துரித உண வுகளின் ஆதிக்கமும் அதிக–ரித்துள்ளது. உணவகங்க ளில் சாப்பிட்ட பின்பு உட லில் நச்சுத்தன்மை பரவி உடல் நிலை பாதிக்கப்படுவ தும், அதனால் உயிரிழப்புகள் வரை ஏற்படும் சம்பவங்க ளால் தமிழகம் அதிர்ந்து போய் உள்ளது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுத்து சுகாதாரத்தை பாதுகாக்க தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்பு துறையினர் தொடர் கண்காணிப்பு மற் றும் சோதனைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

    சமீபத்தில் நாமக்கல்லில் உள்ள ஒரு உணவகத்தில் வாங்கி வந்த சவர்மாவை சாப்பிட்ட சிறுமி உயிரிழந் ததை அடுத்து அதிரடி சோத னைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். குறிப்பாக சவர்மா விற் பனை செய்யும் உணவ கங் கள், அசைவ, சைவ உணவ கங்கள் என அனைத்து உண வகங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம பாண்டி யன் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:-

    கடந்த ஆகஸ்டு மாதம் 19-ந்தேதிக்குப் பின்னர் மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கள் அதிக அளவில் அதிரடி சோதனைகளை நடத்தி வரு கிறோம். கடந்த 2 மாதங்க ளில் 1,497 உணவ கங்களில் அதிரடி சோதனைகள் மேற் கொள்ளப்பட்டது. இதில் இறைச்சியை குளிர்விப்பா னில் வைத்து பல வாரங்க ளுக்கு உணவு சமைப்பதற் காக பயன்படுத்தி வருவது தெரியவந்தது.

    மேலும் பொறித்த, வறுத்த மற்றும் தந்தூரி சிக்கன் போன்ற உணவுக ளில் தடை செய்யப்பட்ட வண்ண பொடிகள் பயன்ப டுத்தப்படுவதையும் கண்ட றிந்துள்ளோம். மொத்தம் 101 கடைகளில் இருந்த 320.025 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அந்த உண வகங்களுக்கு ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது.

    மேலும் விதிகளை மீறி சுகாதாரம் இல்லாமல் உண வுப் பொருள்களை விறங பனை செய்த 123 உணவ கங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. டவுன்ஹால் ரோட் டில் செயல்பட்ட 2 கடைக ளுக்கு சீல் வைக்கப்பட்டுள் ளது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 964 கடைகளில் ஆய்வு செய்யப் பட்டது. இதில் 15 கடைகளில் பதுக்கி வைத்திருந்த 13.93 கிலோ குட்கா, பான்மசாலா போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 10 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் அந்தக் கடைகளுக்கு ரூ.75 அபராதம் விதிக்கப்பட்டுள் ளது.

    பாலீத்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டபோ தும் வணிக வசதிக்காகவும், வாடிக்கையாளர்கள் கட்டாயப்படுத்துவதாலும் பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பாலீத்தீன் பைகளை பயன்படுத்திய 70 கடைகளிடம் இருந்து அபரா தமாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள் ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகளில் அதிரடி சோதனைகளை மேலும் அதிகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளோம். விதி மீறலில் ஈடுபடும் மற்றும் வாடிக்கையாளர்களின் உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் கெட் டுப்போன, சுகாதாரம் இல் லாத உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள், கடைகள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • கெட்டுப்போன 40 கிலோ இறைச்சி பறிமுதல்
    • 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம்

    நாகர்கோவில்:

    நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கர நாராயணன் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 40 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    மேலும் காலாவதியான மீன் குழம்பு 1½ கிலோ, சூடு படுத்தி பயன்படுத்தி எண்ணெய் 2 லிட்டரும், மாட்டு இறைச்சி 3 கிலோ, கெட்டுப்போன பால் 11 லிட்டர், புரோட்டா 4 கிலோ, வேகவைத்த மீன் குழம்பு ½ கிலோ, வத்த குழம்பு 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி 2 கிலோ பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி உணவு தயார் செய்த 7 உணவுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சவர்மா, மீன், கோழி, ஆடு, மாட்டு இறைச்சி தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் படி உணவு பாதுகாப்பு உரிமை அல்லது பதிவு சான்றிதழ் பெற்று பொது மக்களின் பார்வைக்கு தெரியும்படி தொங்கவிட வேண்டும். அசைவ உணவு பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் அசைவ உணவுகளை அன்றே தேவைக்கு வாங்கி விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் விற்பனை செய்தது போக மீதம் உள்ள உணவு மற்றும் இறைச்சி வகைகள் மீண்டும் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. சமைய லறை உணவு பொருட்கள் சேமித்து வைக்கும் இடம் சமைத்த உணவை பரா மரிக்கும் இடம் ஆகிவை சுத்தமாக சுகாதாரமாக இருக்க வேண்டும். உணவுகையாளுபவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

    பாதுகாப்பான சுத்தமான கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் சூடுபடுத்தி உபயோகப்படுத்த கூடாது. சவர்மா தயாரிக்கும் இடம் மற்றும் புரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மேஜை மற்றும் அடுப்பு ஆகியவை கடைக்கு வெளியே இருந்தால் தூசிகள் படாத வண்ணம் தடுப்புகள் அமைத்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். அல்லது கடைக்கு உட்புறம் வைக்க வேண்டும். பொது மக்கள் உணவு தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • நாளை (17-ந் தேதி) புரட்டாசி மாதம் பிறப்பதால் பொதுமக்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.
    • இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) புரட்டாசி மாதம் பிறப்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று வழக்கத்தை விட ெபாதுமக்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர்.

    சேலம்:

    நாளை (17-ந் தேதி) புரட்டாசி மாதம் பிறப்பதால் பொதுமக்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். இதனால் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் களைகட்டும். மேலும் பலர் விரதம் மேற்கொள்ள தொடங்குவார்கள்.

    இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) புரட்டாசி மாதம் பிறப்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று வழக்கத்தை விட ெபாதுமக்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர்.

    குறிப்பாக சேலம் மாநகரில் சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, வ.உ.சி.மார்க்கெட் பின்புறம் ஆகிய இடங்களில் மீன் மார்க்ெகட் இயங்கி வருகிறது. இதுதவிர மாநகரின் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் குகை, சூரமங்கலம், 4 ரோடு, பள்ளப்பட்டி ரோடு, அம்மாப்பேட்டை, தாத காப்பட்டி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் இறைச்சிக் கடைகள் அதிகமாக செயல்படுகின்றன.

    இந்த இடங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி விற்பனை சூடுபிடிக்கும்.

    நாளை புரட்டாசி மாதம் பிறப்பதால் இன்று வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் இறைச்சி, மீன்களை வாங்க குவிந்தனர். அவர்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்கள், இறைச்சி ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.

    குறிப்பாக சேலத்துக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னையில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் கடல் மீன்களும், மேட்டூர் அணை மீன்களும், குளம், குட்டை, ஏரிகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இன்று மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று வழக்கத்தை விட பொதுமக்கள் அதிகமாக குவிந்ததால் மீன்கள் விலை சற்று அதிகமாக காணப்பட்டது.

    அதேபோல் மேச்சேரி, ஓமலூர், போச்சம்பள்ளி, எடப்பாடி, வாழப்பாடி, மேட்டூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் பகுதிகளில் இருந்து ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவற்றின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன், இறைச்சி உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர். இதனால் இன்று வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது.
    • இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி விற்பனை கடைகளில் தினசரி உற்பத்தியாகும் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி முறையாக முடிவு செய்யாமல் ஒரு சில இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்களால் பொது இடங்கள் சாக்கடைகள் பைபாஸ் சாலைகள் ஆகியவற்றில் கொட்டி பொது சுகாதார கேடு ஏற்படுத்தியதால் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்கள்.

    ஏற்பாடுகள்

    இதன் தொடர்ச்சியாக இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் தங்களு டைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி ஆணை யாளர் அவர்களின் முயர்ட்சியின் படி தற்போது நாமக்கல் நகர இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்கள் சங்கம் இறைச்சி கழிவுகளை தினசரி கடைகளில் சென்று சேகரித்து ஜே .கே. ஆர் மெரைன் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கரூரில் உள்ள வாகனத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு நேற்று யயயயயய அனைத்து கடைகளிலும் இறைச்சிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கரூர் சென்று அங்குள்ள வாகனத்தில் ஒப்படைக் கப்பட்டது.

    தினசரி நாமக்கல் நகராட்சி பகுதி களில் உள்ள இறைச்சி கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை சேகரித்து கரூரில் ஒப்படைக்க முடிவு செய்யப்ப ட்டுள்ளது. எனவே இறைச்சி விற்பனை கடை உரிமை யாளர்கள் தங்களுடைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை இறைச்சி விற்பனை கடை உரிமையாளர் சங்கம் மூலம் இயக்கப்படும் வாகனத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படு கிறது இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    எச்சரிக்கை

    எனவே இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி பொது இடங்களிலும் சாக்கடை களிலும் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருக்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.

    ×