என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறைச்சி"

    • ஏப்ரல் 6 ஆம் தேதி உ.பி. முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை
    • அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அரசு எச்சரிக்கை

    உத்தரபிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 31) முதல் ஏப்ரல் 6 வரை மத வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதையும், இறைச்சி விற்பனை செய்வதையும் உத்தரப் பிரதேச அரசு தடை செய்துள்ளது.

    மேலும், ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று பாஜக அரசு தெரிவித்துள்ளது.

    அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது உ.பி. மாநகராட்சி சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அரசு எச்சரித்துள்ளது.

    • காந்தி மியூசியத்தில் சமூக விரோதிகள் மது-,இறைச்சி சாப்பிடுவதாக பா.ஜ.க.வினர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர்.
    • கல்வெட்டுகளின் எழுத்தும் அழிந்து பொலி விழந்து காணப்படுகிறது.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் மகா. சுசீந்திரன், நிர்வாகிகள் சீமான்சரவணன், முத்துக்குமார் ஆகியோர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    மதுரை காந்தி மியூசியத்திற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

    இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்த காந்தியடிகள், 'மது அருந்தக்கூடாது, மாமிசம் சாப்பிடக்கூடாது" என்று போதித்தார். ஆனால் காந்தி மியூசிய வளாகத்திற்குள் சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்து மது அருந்தி, மாமிசம் சாப்பிட்டு வருகின்றனர்.

    இதைப்பார்த்து இங்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுளித்து செல்கின்றனர். இதனால் வெளி நாட்டவர் மத்தியில் காந்தியின் பெயர், புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை உலக தமிழ் சங்கம் 1986-ந் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 2016-ந் ஆண்டு திறக்கப்பட்டது. அதில் மாணவ- மாணவிகள் படித்து தெளிவுறும் வகையில் 1,330 திருக்குறள்களும், அதன் விளக்கவுரைகளும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று அவை கருவேல மரங்களால் சூழ்ந்து மறைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளின் எழுத்தும் அழிந்து பொலி விழந்து காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புகார் மனுவை படித்த கலெக்டர் அனீஷ்சேகர் உடனடியாக மனுவை மேல் நடவடிக்கைக்காக மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், மற்றும் தமிழ் வளர்ச்சி துறைக்கு அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.

    • ஞாயிற்றுக்கிழமை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இறைச்சி எடுப்பதற்காக அதிகாலை முதலே அதிகளவில் அசைவ பிரியர்கள் கடை களில் குவிந்தனர்.
    • குறிப்பாக மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 500- க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய அளவில் மீன் கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளன. இதேபோல் மீன் மார்க்கெட், இறைச்சி மார்க்கெட்டுகளும் உள்ளன.

    இந்த கடை மற்றும் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை சீசன் நாட்களில் மீன், ஆடு, கோழி இறைச்சி விற்பனை அதிகளவில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை மற்றும்

    கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி இறைச்சி எடுப்பதற்காக அதிகாலை முதலே அதிகளவில் அசைவ பிரியர்கள் கடை

    களில் குவிந்தனர். குறிப்பாக மீன் மற்றும் இறைச்சி மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஆடு, கோழி இறைச்சி , மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இன்று 1 கிலோ ஆட்டுக்கறி - ரூ.600- ரூ.700, பிராய்லர் கோழிக்கறி - ரூ.200, நாட்டுக்கோழி கறி - ரூ.560- ரூ.600, மீன் வகைகள் ( ரகத்தை பொறுத்து)- ரூ.125- ரூ.700, என்கிற விலையில் விற்கப்பட்டது.

    • தேவகோட்டையில் நாட்கணக்கில் வைத்து விற்கப்படும் இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது.

    தேவகோட்டை,

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1 லட்சத்திற்கும் மேலான மக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள இறைச்சி கடைகளில் விற்கப்படும் ஆட்டுக்கறி சுகாதாரமற்ற முறையிலும், நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்டு விற்கப்படுவதாகவும் புகார்கள் வந்தன.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி வேல்முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் உதவியாளர் மாணிக் கம் ஆகியோர் தலைமையில் தேவகோட்டை பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர்.

    அப்போது நகைக்கடை பஜாரில் இறைச்சி கடை நடத்தி வரும் ஷாகுல் அமீது என்பவர் 10 நாட்களுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை விற்பது தெரியவந்தது. அவருக்கு சொந்தமாக அண்ணாநகர், ஆறாவயல், வெள்ளையன் ஊரணி ஆகிய பகுதி களிலும் இறைச்சி கடை கள் உள்ளன. இங்கும் கெட்டுப்போன இறைச்சி விற்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து மேற்கண்ட 4 கடைகளில் இருந்தும் 1000 கிலோ ஆட்டுக்கறி பறிமுதல் செய்யப்பட்டு சாகுல் அமீதுக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தேவகோட்டையில் இறைச்சி களுக்காக ஆடுகள் அறுக்கும் போது பரிசோதனை செய்து ரசீது வழங்கி கடைகளுக்கு இறைச்சிகளில் சீல் வைத்து அனுப்பப்படுவது வழக்கம்.

    ஆனால் இந்த நடைமுறை கடந்த சிலமாதங்களாக பின்பற்றப்படுவது இல்லை. இதனால் சுகாதாரமற்ற நாட்கணக்கில் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் விற்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி உட்கொள்ளும் பொது மக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    எனவே இனியாவது நகராட்சி நிர்வாகம் கடுமையாக கண்காணித்து ஆட்டு இறைச்சி விற்ப னைக்கு விதிகளை பின் பற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

    • பொங்கல் பண்டிகையொட்டி பெரும்பாலான வீடுகளில் முதல் நாள் மற்றும் 2-வது நாளான நேற்றும் சைவ உணவுகளை சமைத்து அதனை சாமிக்கு படையலிட்டு கும்பிடுவது வழக்கம். 3-வது நாளான காணும் பொங்கல் அன்று அசைவ பிரியர்கள் இறைச்சி வாங்கி உண்பார்கள்.
    • காணும் பொங்கல் பண்டிகையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகளில் அலைமோதிய கூட்டம் அலைமோதியது.

    சேலம்:

    பொங்கல் பண்டிகை ஓட்டி நேற்று முன்தினம் சேலம் மாநகரில் பெரும்பாலான இறைச்சி மற்றும் மீன்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    தொடர்ந்து நேற்று திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மீன் கடைகள் இறைச்சி கடைகளை அடைக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டு இருந்தது.

    இதையொட்டி இறைச்சி, மீன் கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் கறி சாப்பிட முடியாமல் அவதி அடைந்தனர்.

    இந்த நிலையில், இன்று காலை சேலம் மாநகரில் உள்ள இறைச்சி கடைகள், மீன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை முதலே இறைச்சி மற்றும் மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

    இதைத்தொடர்ந்து1 மணி நேரம் வரை காத்து நின்று கடைகளில் இறைச்சியை பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதேபோல மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

    1 கிலோ ஆடு இறைச்சி ரூ.800-க்கு விற்பனையானது. அதேபோல சூரமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி மீன் சந்தை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் சந்தைகளிலும் மீன்கள் விற்பனை அதிக அளவில் நடந்தது.

    • (ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது.
    • எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை(ஞாயிற்றுக்கிழமை) வள்ளலார் தினத்தையொட்டி இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படாது. எனவே இறைச்சி கடை உரிமையாளர்கள் தாங்கள் நடத்தும் இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகளை முழுமையான அளவில் மூடப்பட வேண்டும்.

    அனைத்து இறைச்சி கடைகள் மற்றும் இறைச்சி கூடங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதா என்பதை சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிக்கவும், மாநகராட்சியின் அறிவிப்பை செயல்படுத்தாத இறைச்சி கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை.
    • டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது

    நெல்லை:

    மகாவீர் ஜெயந்தியை யொட்டி நெல்லை மாநகர பகுதியில் குடியிருப்புகளுக்கு அருகில் அமைந்திருக்கும் இறைச்சி கடைகளை இன்று ஒரு நாள் மட்டும் மூடும்படி மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார்.

    இறைச்சி விற்பனை

    இதையடுத்து மாநகர பகுதியில் பெரும்பாலான இறைச்சி கடைகள் இன்று திறக்கப்படவில்லை. ஆனாலும் ஒரு சில கடைகளில் முன்பக்க வாசலை மூடிவிட்டு சட்ட விரோதமாக பின்பக்க வாசல் வழியாக இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக கமிஷன ருக்கு புகார் சென்றது.

    அவரது உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் டவுன் மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் பணியாளர்கள் டவுன் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    பினாயில் ஊற்றி அழிப்பு

    அப்போது டவுன்- குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு இறைச்சி கடையில் கோழி இறைச்சி சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை சுகாதார அலுவலர் இளங்கோ பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தார்.

    • கெட்டுப்போன இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்திய ஓட்டல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் சில உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சிகளை சமையல் செய்து விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

    இதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பாக ராஜா முத்து திருத்தங்கள் பகுதியில் உள்ள உணவுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சில ஓட்டல்களில் கெட்டுப்போன இறைச்சி களை சமையலுக்கு பயன்படுத்த வைத்திருப்பது தெரிய வந்தது. இந்த சோதனையின் போது 46 கிலோ கெட்டுப் போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் சில ஓட்டல்களில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள் பயன்படுத்துவதும் கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 7 ஓட்டல்க ளுக்கு தலா ரூ.2000 அபரா தமும்,5 ஓட்டல்களுக்கு ரூ.5000 ஆயிரம் என மொத்தம் ரூ.39 அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டது.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜாமுத்து கூறும் போது, ஓட்டல்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். கெட்டுப்போன இறைச்சிகளை சமையலுக்கு பயன்படுத்தினால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தமிழகம் முழுவதும் காய்கறிகளின் திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • ஏராளமான பொதுமக்கள் மீன் மார்க்கெட்டில் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கோவை,

    தமிழகம் முழுவதும் காய்கறிகளின் திடீர் விலை உயர்வு பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு இல்லத்தரசிகள் சென்று விட்டனர்.

    இதனால் பொதுமக்கள் மீன் மற்றும் இறைச்சிக்கடைகளை நோக்கி சென்று விட்டனர். கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டிற்கு தூத்துக்குடி, கேரளா, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வருகின்றன.

    இன்று காலை வழக்கம் போல உக்கடம் மீன் சந்தை கூடியது. தற்போது கேரளாவில் மீன்பிடி தடை காலம் என்பதால் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமேஸ்வரத்தில் இருந்து அதிகளவில் மீன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

    இந்த மீன்களை வாங்குவதற்காக அதிகாலை முதலே மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    அந்த பகுதியே எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காணப்பட்டன. பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர். விலா, நெத்திலி, சங்கரா, பாறை என பல்வேறு வகையான மீன்களை ஆர்வத்துடன் வாங்கி செல்வதை காண முடிந்தது.

    ஏராளமான பொதுமக்கள் மீன் மார்க்கெட்டில் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் விற்பனையான மீன்களின் விலை கிலோவில் வருமாறு:-

    விளமீன்-ரூ.400, நெத்திலி-ரூ.150, சங்கரா-ரூ.270, வாவல்-ரூ.130, நெய்மீன்-ரூ.90, கொல்லி-ரூ.130, அயிரை-ரூ.200, முரள்-ரூ.200, பாறை-ரூ.400, வஞ்சிரம்-ரூ.700, மத்தி-ரூ.150க்கு விற்பனையாகி வருகிறது.இதேபோல் கோவையில் உள்ள இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து, ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி சென்றனர். புறநகர் பகுதி களான மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் கூட்டம் காணப்பட்டது.

    • இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது.
    • இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் இறைச்சி விற்பனை கடைகளில் தினசரி உற்பத்தியாகும் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி முறையாக முடிவு செய்யாமல் ஒரு சில இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்களால் பொது இடங்கள் சாக்கடைகள் பைபாஸ் சாலைகள் ஆகியவற்றில் கொட்டி பொது சுகாதார கேடு ஏற்படுத்தியதால் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தார்கள்.

    ஏற்பாடுகள்

    இதன் தொடர்ச்சியாக இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் தங்களு டைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை முறையாக முடிவு செய்ய ஏற்பாடுகள் செய்யவும் ,அதன் விபரத்தை நாமக்கல் நகராட்சி ஆணையருக்கு தெரிவிக்கவும் அறிவிப்பு வழங்கப்பட்டது. நாமக்கல் நகராட்சி ஆணை யாளர் அவர்களின் முயர்ட்சியின் படி தற்போது நாமக்கல் நகர இறைச்சி விற்பனை கடை உரிமையாளர்கள் சங்கம் இறைச்சி கழிவுகளை தினசரி கடைகளில் சென்று சேகரித்து ஜே .கே. ஆர் மெரைன் ப்ராடக்ட்ஸ் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கரூரில் உள்ள வாகனத்தில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு நேற்று யயயயயய அனைத்து கடைகளிலும் இறைச்சிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு கரூர் சென்று அங்குள்ள வாகனத்தில் ஒப்படைக் கப்பட்டது.

    தினசரி நாமக்கல் நகராட்சி பகுதி களில் உள்ள இறைச்சி கடைகளில் உற்பத்தியாகும் கழிவுகளை சேகரித்து கரூரில் ஒப்படைக்க முடிவு செய்யப்ப ட்டுள்ளது. எனவே இறைச்சி விற்பனை கடை உரிமை யாளர்கள் தங்களுடைய கடைகளில் உற்பத்தி யாகும் இறைச்சி கழிவுகளை இறைச்சி விற்பனை கடை உரிமையாளர் சங்கம் மூலம் இயக்கப்படும் வாகனத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படு கிறது இறைச்சி கழிவு களை வாகனத்தில் ஒப்படைக் காமல் பொது இடங்கள் மற்றும் சாலையோரம் மற்றும் சாக்கடைகளில் கொட்டுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

    எச்சரிக்கை

    எனவே இறைச்சி விற்பனை கடைக்காரர்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி பொது இடங்களிலும் சாக்கடை களிலும் இறைச்சி கழிவுகளை கொட்டாமல் இருக்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.

    • நாளை (17-ந் தேதி) புரட்டாசி மாதம் பிறப்பதால் பொதுமக்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள்.
    • இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) புரட்டாசி மாதம் பிறப்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று வழக்கத்தை விட ெபாதுமக்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர்.

    சேலம்:

    நாளை (17-ந் தேதி) புரட்டாசி மாதம் பிறப்பதால் பொதுமக்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். இதனால் கோவில்களில் பொதுமக்கள் கூட்டம் களைகட்டும். மேலும் பலர் விரதம் மேற்கொள்ள தொடங்குவார்கள்.

    இந்த நிலையில் நாளை (திங்கட்கிழமை) புரட்டாசி மாதம் பிறப்பதால் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று வழக்கத்தை விட ெபாதுமக்கள் அதிக எண்ணிக்கையில் குவிந்தனர்.

    குறிப்பாக சேலம் மாநகரில் சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, வ.உ.சி.மார்க்கெட் பின்புறம் ஆகிய இடங்களில் மீன் மார்க்ெகட் இயங்கி வருகிறது. இதுதவிர மாநகரின் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே மீன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேபோல் குகை, சூரமங்கலம், 4 ரோடு, பள்ளப்பட்டி ரோடு, அம்மாப்பேட்டை, தாத காப்பட்டி, திருமணிமுத்தாறு உள்ளிட்ட இடங்களில் இறைச்சிக் கடைகள் அதிகமாக செயல்படுகின்றன.

    இந்த இடங்களில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன், இறைச்சி விற்பனை சூடுபிடிக்கும்.

    நாளை புரட்டாசி மாதம் பிறப்பதால் இன்று வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் இறைச்சி, மீன்களை வாங்க குவிந்தனர். அவர்கள் தங்கள் தேவைக்கேற்ப மீன்கள், இறைச்சி ஆகியவற்றை வாங்கிச் சென்றனர்.

    குறிப்பாக சேலத்துக்கு ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னையில் இருந்தும் கேரளா மாநிலத்தில் இருந்தும் கடல் மீன்களும், மேட்டூர் அணை மீன்களும், குளம், குட்டை, ஏரிகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இன்று மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று வழக்கத்தை விட பொதுமக்கள் அதிகமாக குவிந்ததால் மீன்கள் விலை சற்று அதிகமாக காணப்பட்டது.

    அதேபோல் மேச்சேரி, ஓமலூர், போச்சம்பள்ளி, எடப்பாடி, வாழப்பாடி, மேட்டூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் பகுதிகளில் இருந்து ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இவற்றின் விலையும் சற்று அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன், இறைச்சி உள்ளிட்டவைகளை வாங்கிச் சென்றனர். இதனால் இன்று வியாபாரம் களை கட்டியது. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கெட்டுப்போன 40 கிலோ இறைச்சி பறிமுதல்
    • 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம்

    நாகர்கோவில்:

    நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலியானதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஓட்டல்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குமார பாண்டியன், சங்கர நாராயணன் ஆகியோர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். நாகர்கோவில் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 40 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

    மேலும் காலாவதியான மீன் குழம்பு 1½ கிலோ, சூடு படுத்தி பயன்படுத்தி எண்ணெய் 2 லிட்டரும், மாட்டு இறைச்சி 3 கிலோ, கெட்டுப்போன பால் 11 லிட்டர், புரோட்டா 4 கிலோ, வேகவைத்த மீன் குழம்பு ½ கிலோ, வத்த குழம்பு 4 கிலோ, கெட்டுப்போன முந்திரி 2 கிலோ பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி உணவு தயார் செய்த 7 உணவுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சவர்மா, மீன், கோழி, ஆடு, மாட்டு இறைச்சி தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு தர சட்டத்தின் படி உணவு பாதுகாப்பு உரிமை அல்லது பதிவு சான்றிதழ் பெற்று பொது மக்களின் பார்வைக்கு தெரியும்படி தொங்கவிட வேண்டும். அசைவ உணவு பொருட்களை சமைத்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் அசைவ உணவுகளை அன்றே தேவைக்கு வாங்கி விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு நாளும் விற்பனை செய்தது போக மீதம் உள்ள உணவு மற்றும் இறைச்சி வகைகள் மீண்டும் குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. சமைய லறை உணவு பொருட்கள் சேமித்து வைக்கும் இடம் சமைத்த உணவை பரா மரிக்கும் இடம் ஆகிவை சுத்தமாக சுகாதாரமாக இருக்க வேண்டும். உணவுகையாளுபவர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும்.

    பாதுகாப்பான சுத்தமான கொதிக்க வைக்கப்பட்ட குடிநீரை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் சூடுபடுத்தி உபயோகப்படுத்த கூடாது. சவர்மா தயாரிக்கும் இடம் மற்றும் புரோட்டா தயாரிக்க பயன்படுத்தும் மேஜை மற்றும் அடுப்பு ஆகியவை கடைக்கு வெளியே இருந்தால் தூசிகள் படாத வண்ணம் தடுப்புகள் அமைத்து சுத்தமாக பராமரிக்க வேண்டும். அல்லது கடைக்கு உட்புறம் வைக்க வேண்டும். பொது மக்கள் உணவு தொடர்பாக ஏதேனும் புகார்கள் இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்துள்ளார்.

    ×