search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229090"

    • வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார்.
    • 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் ஒரே நாளில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழா, பணியிட மாறுதலில் விடைபெற்று செல்லும் மாவட்ட கலெக்டரை வாழ்த்தி வழியனுப்பும் விழா நடைபெற்றது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணத்தி ற்கு செயல்வடிவம் கொடுக்க அனுபவம், ஆற்றல் வாய்ந்தவர் கலெக்டராக இருக்க வேண்டும். அப்படிப்ப ட்டவர் தான் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.

    இந்த ஆட்சி சிறப்பாக நடைபெறுவதற்கு இந்த நிகழ்ச்சியே சாட்சி. இந்த முழு பொறுப்புக்குக் காரணமானவர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.அவர் மாவட்ட கலெக்டராக இருந்தாலும், அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் காது கொடுத்து கேட்டு நிறைவேற்றியவர்.

    விளம்பு நிலை மக்களுக்கு செந்தமிழ் நகர் என்ற பெயரில் குடியிருப்புகளை உருவாக்கி கொடுத்தார். இதேபோல, வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் மூலம் 8 மாதங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டார். இதேபோல, பல்வேறு திட்டங்களை கலெக்டர் செயல்படுத்தினார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசும்போது, பொது மக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, தகுதியின் அடிப்படையில் 1,280 பேருக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. இவை அனைத்தும் கிராம கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    விழாவில் கல்யாண சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தாசில்தார் சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, வருவாய் கோட்டா ட்சியர்கள் பிரபாகர், பூர்ணிமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் கலெக்டரை பாராட்டி பேசியதுடன் அவருக்கு பொன்னாடை அணிவித்து புத்தகங்களை நினைவு பரிசாக ஏராளமானோர் வழங்கினார்.

    • மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.
    • ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் அண்ணலகராஹரம் ஊராட்சி முகுந்தநல்லூரில் விளிம்புநிலை மக்களுக்கு விலையில்லா வீட்டு மனை பட்டாவினை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் கல்யாணசுந்தரம் எம்.பி, அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்ற விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வா கத்தால் அறிமுகப்ப டுத்தப்பட்டு செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இதுவரையில் மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இத்திட்டம் இரண்டு கட்டங்களை உள்ளடங்கியது. முதல் கட்டம் அந்த பட்டா கொடுப்பதற்கான தகுதியான இடங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் தனியாரிடமிருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்ல சாலை, கழிவுநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.

    இரண்டாவதாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டிக் கொடுப்பது திட்டத்தின் நோக்கம் ஆகும். அந்த வகையில் கும்பகோணம் ஒன்றியம் அண்ணலகராஹரம் ஊராட்சி முகுந்தநல்லூர் விளிம்புநிலை மக்களுக்கு 38 விலையில்லா வீட்டு மனை பட்டா மற்றும் மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் ஒன்றிய குழு தலைவர் காயத்ரி அசோக்குமார், தாசில்தார் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரிய நாராயணன், உதவி பொறியாளர்கள் சிவப்பிரகாசம், ஐயப்பன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.
    • ஒவ்வொரு வீடும் 320 சதுரடியில் மழை நேரங்களில் தண்ணீர் புகாதபடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்னும் விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படு த்தப்பட்டு வருகிறது.

    இதுவரையில் மாவட்டம் முழுவதும் 10 செந்தமிழ் நகர் உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டம் 2 கட்டங்களை உள்ளடக்கியது.

    பட்டா கொடுப்பதற்காக தகுதியான இடத்தை நேரடி பேச்சுவார்த்தை அந்த மூலம் தனியாரிடம் இருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக குடிநீர், நல்ல சாலை, கழிவு நீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்ட மாகும்.

    2-வது கட்டமாக ஒவ்வொரு பயனாளிக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டி கொடுப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

    இதில் முதல் கட்டமாக 10 செந்தமிழ் நகர் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    2-வது கட்டமாக 4 செந்தமிழ் நகரில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பூதலூர் ஒன்றியம் புதுக்குடி ஊராட்சியில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்க ளுக்கு 13 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.

    இந்த வீடுகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., ஒன்றியக்குழு தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

    முன்னதாக கலெக்டர் உள்ளிட்டோரை நரிக்குறவர் சமுதாய மக்கள் வாத்தியங்கள் முழங்க வரவேற்பு அளித்தனர்.

    இந்த வீடுகள் மாவட்ட கலெக்டரின் தன் விருப்பநிதி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கடனுதவி திட்டத்தின் மூலமாகவும் நிறைவேற்றப்ப ட்டுள்ளது. வீடுகளை திறந்து வைத்த பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களிடம் கூறி யதாவது:-

    விளிம்பு நிலை மக்களின் நலனில், மிகுந்த அக்கறை கொண்டு, கடந்த ஆண்டு, அவர்களின் குடியிருப்புக்கு நேராக சென்று, அவர்களோடு உணவு சாப்பிட்டு குறைகளை கேட்டு, நிவர்த்தி செய்வதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார்.

    மேலும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் விளிம்புநிலை மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

    குறிப்பாக, சாதி சான்றிதழ் போன்ற, அடிப்படை தேவைகளை, நிவர்த்தி செய்ய வேண்டும்.

    அடுத்த கட்டமாக வீடு, மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார்.

    அதன் அடிப்படையில் தற்போது தஞ்சை மாவட்டம் புதுக்குடி கிராமத்தில் 40 சென்ட் நிலத்தை தனியார் ஜனகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் விலையின்றி இந்த இடத்தை விளிம்பு நிலை மக்களுக்கு அளித்தனர்.

    இதையடுத்து இங்கு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    நல்ல தரமான வீடுகளாக கட்டப்பட்டுள்ளன.

    ஒவ்வொரு வீடும் 320 சதுர அடியில் மழை நேரங்களிலே, தண்ணீர் புகாதபடி உயர்த்தி கட்டப்பட்டுள்ளது.

    இந்த 13 வீடுகளும் திறந்து வைக்கப்ப ட்டுள்ளது.

    இதனால், இந்த விளிம்புநிலை மக்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்து ள்ளனர். முதல்-அமைச்சரின் இந்த சிறப்பு திட்டத்தில் இந்த வீடுகளை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, பூதலூர் ஒன்றியக் குழுத் தலைவர் அரங்கநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • துாய்மை பணியாளர்களுக்கு இவச வீட்டுமனை பட்டா வழங்க திட்டம்
    • நடவடிக்கை மேற்கொண்டு வருதாக கரூர் கலெக்டர் தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பாக செயல்படுத்தப்படும் தூய்மை பாரத இயக்கம் ஊரகப்பகுதி திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபு சங்கர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-அனைத்து கிராமங்களிலும் குப்பைகளை முழுமையாக அகற்றி மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற கிராமங்களை உருவாக்க அனைத்து கிராமங்களிலும், அனைத்து பள்ளியிலும், அங்கன்வாடிகளிலும் கழிவறைகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். குப்பைகள் இல்லாத கிராமங்களை உருவாக்குவது நம்முடைய முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும்.

    தூய்மை காவலர்கள் மூலம் நாள்தோறும் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு தெருவிற்கும் குடிநீர் செல்கிறதா?, சாலைகள் இருக்கிறதா?, நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.தூய்மை காவலர்கள் தெருக்களை சுத்தம் செய்ய குறுகிய காலத்தில் வரவில்லை என்றால் புகார் தெரிவிப்பதற்கான ஒரு அமைப்பையும் உருவாக்க வேண்டும். சேகரிக்கப்படும் குப்பைகளை முறையான இடத்தில் மொத்தமாக சேகரித்து மக்கும் குப்பைகளை 48 நாட்களுக்கு மண்ணில் புதைத்து உரமாக மாற்ற வேண்டும்அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் அனைவரையும் உறுப்பினர்களாக சேர வைக்க வேண்டும். அதன் மூலம் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் அவர்களுக்கு கிடைத்திட நாம் உதவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வாணி ஈஸ்வரி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் அன்புமணி, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து ஊராட்சிகளின் பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தினர் தங்களது இடங்களை வழங்கினர்.
    • கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கடந்த 32 வருடங்களுக்கு முன்னர் வட சென்னை அனல்மின் நிலைய விரிவாக்க பணிக்காக அருகில் உள்ள கிராமங்களில் வசித்த 531 குடும்பத்தி னர் தங்களது இடங்களை வழங்கினர். அவர்களுக்கு அருகில் மாற்று இடம் வழங்கப்பட்டது. ஆனால் நிலம் உரிமையாக்க பட்டா வழங்கப்படவில்லை.

    இதையடுத்து தங்களது நிலத்துக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் பல கட்ட போராட் டங்கள் நடத்தினர். ஊராட்சி மன்றம், வட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தனர். எனினும் அவர்களுக்கு நிலப்பட்டா வழங்கப்படவில்லை. இதனால் கிராமமக்களின் போராட்டம் கடந்த 32 ஆண்டுகளாக நீடித்து வந்தது.

    இதற்கிடையே சமீபத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டர் ஆல் பி ஜான் வர்க்கீசிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யாவிடம் கலெக்டர் உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட இடத்திற்கு சார் ஆட்சியர் ஐஸ்வர்யா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    இதைத்தொடர்ந்து வடசென்னை அனல் மின்நிலைய விரிவாக்க பணிக்காக நிலம் வழங்கி மாற்று இடத்தில் வசிக்கும் 531 குடும்பத்தினருக்கு பட்டா வழங்க கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார். இதற்காக வருவாய்துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர் சுகந்தி வடிவில், துணைத் தலைவர்கதிர்வேல் முன்னிலையில் தற்போது வீடுகளை அளவிடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, இப்பகுதியில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் பட்டா வழங்க அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது. இது இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்படும். விரைவில் வடசென்னை அனல் மின் நிலைய விரிவாக்கபணிக்கு இடம் வழங்கிய கிராம மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்றார்.

    • ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம்.
    • 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தாலுகாவில் பசலி 1432-க்கான வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) கணக்குகள் தணிக்கை யானது இன்று தஞ்சை தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது.

    இதற்கு கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா தலைமை தாங்கினார். தாசில்தார் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

    தொடக்கநாளான இன்று தஞ்சை தாலுகா பெரம்பூர் சரகத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களை கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் வழங்கினர்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்கள் வரப்பெற்றன. பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மனு அளிக்கப்பட்டதில் இருந்து அதனை பரிசீலித்து அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் தீர்வு காணப்பட்டு வருகிறது.

    ஒரு மாதம் என்பது இலக்கு தான். 15 நாட்களுக்குள் தீர்வு காண்கிறோம். தமிழ்நாடு அரசின் புதிய அரசாணைப்படி பட்டா மாற்றத்திற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின் பேரில் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு 13650 மனுக்கள் நிலுவையில் இருந்தது.

    ஆனால் தற்போது பெரும்பாலான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு 2900 மனுக்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது. அந்த மனுக்களும் விரைவில் தீர்வு காணப்படும். இவைகள் அனைத்தும் அரசு புதிய அரசாணை மற்றும் மாவட்ட கலெக்டரின் நடவடிக்கைகளை காரணமாகும்.

    இது தவிர பட்டா மாற்றம் தொடர்பான மனுக்களுக்கு உடனடி தீர்வு காண தற்போது வி.ஏ.ஓ.க்களுக்கும் சர்வேயர் மூலம் தகுந்த பயிற்சி அளிக்கபட்டு வருகிறது. இதன் மூலமும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படுகிறது.

    இன்று தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சி அடுத்ததாக வருகிற 16-ஆம் தேதி வல்லம் சரக்கத்திற்கும், 17-ந் தேதி தஞ்சை சரக்கத்திற்கும், 18-ந் தேதி ராமாபுரம், 19-ந் தேதி நாஞ்சிகோட்டை சரகத்திற்கும் நடைபெற உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு) சீமான், மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் ஐயம்பெருமாள் ,தனி வட்டாட்சியர் பாலசுப்ரமணியம், ஆதிதிராவிடர் நலன் ரகுராமன், ஏ.டி.எஸ்.ஓ. ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • சமத்துவபுரத்தில் வசிக்கும் குடும்பதாரர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்கப்படவில்லை.
    • இணைய வழி சேவை மூலமாக பட்டா உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டம் குறித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    சமத்துவபுர திட்டமானது அனைத்துத்தரப்பட்ட மக்களும் எந்தவொரு வேற்றுமையும் இன்றி சமமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உரு வாக்கப்பட்ட திட்டமாகும். திருவட்டார் வட்டம், பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பள்ளிமுக்கு பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் வசிக்கும் குடும்பதாரர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா வழங்கப்படவில்லை.

    பொதுமக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் மாவட்ட நிர்வாகத்திடமும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தார்கள்.

    அவர்களது கோரிக்கை யினை நிறைவேற்றும் வகையில் வருவாய் துறை யின் சார்பில் சமத்துவபுரம் பகுதியில் வசிக்கும் தகுதியான பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கப்பட் டுள்ளது. மேலும், இணைய வழி சேவை மூலமாக பட்டா உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    பட்டா ஒரு அடிப்படை ஆவணமாகும். பட்டா இருந்தால்தான் தமிழ்நாடு அரசால் பல்வேறு துறைகளின் சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளை பெற முடியும்.

    தமிழ்நாடு அரசு மூலமாக விழிம்பு நிலை மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மலை பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. பட்டா வழங்கு வது, பொதுமக்கள் வசிப்பதற்கு வீடு கட்டி தருவது, இடவசதி தருவது, பல்வேறு விதமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது போன்ற சேவைகள் வழங்கபட்டு வருகிறது.

    மாவட்டத்தில் பட்டா தொடர்பான கோரிக்கை மனுக்கள் அதிக அளவில் வருவதைதொடர்ந்து அம்மனுக்களின் கோரிக்கை களுக்கு விரைவில் தீர்வு காண துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கும் அறிவு ரை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டு காலத்தில் மொத்தம் 16,409 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேஷமூலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும்.
    • இலவச பட்டா வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

    அதில் நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் கலந்து கொண்டார்.

    அப்போது, சேஷமூலை ஊ.ஒ.தொடக்கப் பள்ளிக்கு வகுப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும். இலவச பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்கள் முன்வைத்தனர்.

    அவற்றை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமென எம்.எல்.ஏ கூறினார்.

    இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், சரக வருவாய் ஆய்வாளர், உதவி பொறியாளர் மற்றும் தென்பிடாகை, சேஷமூலை கிராம நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • புதுக்கோட்டையில் 8662 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது
    • விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகள் பயனடைந்துள்ளன

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியிருப்பு மனைக்கு வீட்டுமனைப் பட்டா பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆலங்குடி வட்டத்தில் 1,282 பயனாளிகளுக்கும், திருமயம் வட்டத்தில் 993 பயனாளிகளுக்கும், கந்தர்வக்கோட்டை வட்டத்தில் 768 பயனாளி களுக்கும், கறம்பக்குடி வட்டத்தில் 387 பயனாளிகளுக்கும், புதுக்கோட்டை வட்டத்தில் 426 பயனா ளிகளுக்கும், இலுப்பூர் வட்டத்தில் 539 பயனாளி களுக்கும், குளத்தூர் வட்டத்தில் 864 பயனாளிகளுக்கும், பொன்னமராவதியில் 840 பயனாளிகளுக்கும், விராலிமலை வட்டத்தில் 680 பயனாளிகளுக்கும், அறந்தாங்கி வட்டத்தில் 874 பயனாளிகளுக்கும், ஆவுடை யார்கோயில் வட்டத்தில் 354 பயனாளிகளுக்கும், மணமேல்குடி வட்டத்தில் 655 பயனாளிகளுக்கும் என ஆக மொத்தம் விலையில்லா வீட்டுமனைப் பட்டா நத்தம் பிரிவில் 8,662 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.





    • பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது
    • மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிற னாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 47 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 26 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 19 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 32 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 22 மனுக்களும், இதர மனுக்கள் 147 ஆக மொத்தம் 293 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதார ருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கடலூர் வட்டத்தை சேர்ந்த 4 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா விற்கான ஆணையை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.
    • குடிமனை பட்டாக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்.

    பேராவூரணி:

    கோவில் மனை நிலங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து முந்தைய பகுதி அல்லது குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும், மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெற சமீபத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், கருணாநிதி அளித்த குடிமனை பட்டாக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் பேராவூரணியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை, சி.பி.ஐ. மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடக்கி வைத்தார்.

    இதில் ஜெயராஜ், சி.பி.ஐ. நகர செயலாளர் மூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கருணாமூர்த்தி, நகர விவசாய சங்க பொறுப்பாளர் சித்திரவேலு மற்றும் கோவில் மனை குடியிருப்போர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முடிவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ரவி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

    • அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும்.
    • மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி:

    பேராவூரணி அருகே அம்மையாண்டி ஊராட்சி பஞ்சநதிபுரம் கிராமத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் பகுதிநேர அங்காடியை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது :-

    தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்.

    அங்காடியில் தரமான பொருட்கள் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவி ட்டுள்ளார்.

    பட்டா இல்லாதவர்களுக்கு பேராவூரணி அருகே கொளக்குடி மாந்தோப்பு பகுதியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    பேராவூரணி பகுதி தென்னைக்கு புவிசார் குறியீடு பெறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் காக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையடுத்து பகுதிநேர அங்காடியில் முதல் விற்பனையை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தாசில்தார் சுகுமார், ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர்கள் துரைமாணிக்கம், அருள்நம்பி, தி.மு.க பேராவூரணி தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், பொது விநியோக திட்ட ஆய்வாளர் பாலச்சந்தர், வட்ட வழங்கல் முதுநிலை ஆய்வாளர் தில்லைராஜன், கூட்டுறவு சங்க தலைவர் சேகர், கூட்டுறவு சங்க இயக்குநர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×