search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229481"

    • திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
    • வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

    இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    • 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது
    • வியர்வையில் குளித்தவர்கள் மழையில் நனைந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த இரண்டு வாரங்களாக சுட்டெரித்து வருகிறது. தாங்க முடியாத வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இன்னும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் இதே போல் தான் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3. 45 மணிக்கு திடீரென்று இடி, மின்னலு டன் மழை கொட்டத் தொடங்கியது. காலை 6.45 மணி வரை 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் நகரில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சவேரியார் கோவில் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ஈத்தாமொழி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் போக முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நாகர்கோவிலில் பெய்த இந்த திடீர் மழை பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் கோடை வெயிலிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழை கொட்டிய நிலையில் இன்றைய வெப்ப நிலையும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரிக்கு கீழ்தான் இருக்கும் என்றும் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வந்தடைந்தது. இந்த  ரெயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் மழை கொட்டியதை பார்த்து உற்சாகத்துடன் மழையில் நனைந்தபடியே சென்றனர். இது பற்றி அவர்கள் கூறும் போது சென்னையில் ரெயில் ஏறியதும் ரெயிலுக்குள்ளே இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அனலாக தாக்கியது. நாகர்கோவில் வந்து இறங்கியதும் மழையைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது என்ற படியே மழை தண்ணீரில் உற்சாக குளியல் போட்டபடி ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

    நாகர்கோவிலில் இன்று அதிகபட்சமாக 34.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கொட்டாரம், மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.87 அடியாக இருந்தது. அணைக்கு 146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.35 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் போது மான அளவு தண்ணீர் உள்ள காரணத்தினாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயி களுக்கு தேவையான விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை பாசனத்திற்காக வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    • கடந்த சில நாட்களாகவே திடீரென அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
    • பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    தருமபுரி,

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே திடீரென அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.

    இந்நிலையில் நேற்று காலை முதலிலேயே வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் தருமபுரி நகர் பகுதி, அன்னசாகரம், நெசவாளர் காலனி மற்றும் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை, பென்னாகரம், செட்டிகரை, சோளைக்கொட்டாய், ஒடசல்பட்டி, கடத்தூர், மொரப்பூர், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    இதனால் பேருந்துகளுக்கு செல்லும் மக்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். மேலும் கடந்த ஒரு மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் மழை இல்லாமல் கடும் வெப்பம் வீசி வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    நேற்று தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி 1.70 சென்டிமீட்டர் மழையும், பாலக்கோடு 8.62 சென்டிமீட்டர் மழையும், மாரண்டஅள்ளி 4.60 சென்டிமீட்டர் மழையும், பென்னாகரம் 0.70 சென்டிமீட்டர் மழையும், அரூர் 5.20 சென்டிமீட்டர் மழையும், பாப்பிரெட்டிபட்டி 4.90 சென்டிமீட்டர்மழையும், மாவட்டத்தில் மொத்தம் 26.72 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த தொடர் மழையால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊத்தங்கரை, மத்தூர், ஓசூர், சூளகிரி உள்பட பல இடங்களில் கனமழை கொட்டியது.

    • திருச்சி மாவட்டத்தில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது
    • உப்பிலியபுரம் அருகே மழைக்கு புளிய மரத்தடியில் ஒதுங்கிய பட்டதாரி வாலிபர் நாகராஜ் (வயது 23) மின்னல் தாக்கி சுருண்டு விழுந்து இறந்தார்

    திருச்சி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. திருச்சி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பொழிகிறது. நேற்றைய தினம் இரவு மாவட்டம் முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

    திருச்சி மாநகரில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    திருச்சி அரசு ஆஸ்பத்திரி பகுதியில் முழங்கால் அளவுக்கு சாலையில் தண்ணீர் ஓடியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    நேற்றைய மழையில் அதிகபட்சமாக தென்பரநாடு பகுதியில் 59 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் மாவட்டத்தின் இதர பெய்த பகுதிகளில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    லால்குடி-17.20, புள்ளம்பாடி 1, தேவிமங்கலம்-6.40, சமயபுரம்-7.20, வாத்தலை அணைக்கட்டு-19.20, மணப்பாறை-2.6, பொன்னணியாறு-6.6, கோவில்பட்டி-25.20, மருங்காபுரி 5.20, முசிறி-6, புலிவலம்-5,

    தாத்தையங்கையர் பேட்டை-5, நவலூர் கொட்டப்பட்டு-33.60, கொப்பம்பட்டி-50, துறையூர்-7, பொன்மலை-24.9, திருச்சி ஏர்போர்ட் பகுதி-4.40, திருச்சி ஜங்ஷன்-34.40, திருச்சி டவுன்-44 என மாவட்டம் முழுவதும் 363.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே மழைக்கு புளிய மரத்தடியில் ஒதுங்கிய பட்டதாரி வாலிபர் நாகராஜ் (வயது 23) மின்னல் தாக்கி சுருண்டு விழுந்து இறந்தார். மேலும் அவருடன் சென்ற பிரதீப் (10), நிதீஷ் (12) ராகேஷ் (14) சரண் (11) சின்னதுரை (25) அருண்குமார் (22) ஆகிய சிறுவர்கள் உட்பட 6 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இன்றும் காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. இருந்தபோதிலும் விடுமுறை தினமான இன்று தீபாவளி பொருட்கள் வாங்க கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்த வண்ணம உள்ளனர்.

    • இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 4 நாட்கள் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் நிலவும் வழி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 18-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அதன் தொடர்ச்சியாக சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று (15-ந் தேதி) முதல் வருகிற 18-ந் தேதி வரை மேலும் 4 நாட்கள் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இதனால்பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.
    • மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மின் வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    மின் கசிவு தடுப்பான் மூலம் மின் விபத்தை தடுக்கலாம். ஸ்டே கம்பிகளை மின் கம்பங்களில் கட்டக்கூடாது. குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் எர்த் பைப் அமைக்க வேண்டும்.

    மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது. குளியல் அறை, கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் சுவிட்ஜ் அமைக்கக்கூடாது.

    மின் கம்பங்களில் அருகே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. அறுந்து போகும் மின் கம்பிகள் தெரிந்தால் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவியுங்கள்.

    மின் கம்பங்கள் மீது வளர்ந்திருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மின்வாரிய அலுவலர்கள் மூலமும் அகற்றலாம். இடி,மின்னலின் போது வெட்டவெளியில் நிற்க கூடாது.

    மின்சாரம் தொடர்பாக மின்னகம் எண்: 9498794987, வாட்ஸ் ஆப் எண்: 94458 51912 என்ற எண்ணுக்கு புகாராகவும், புகைப்படமாகவும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது.
    • ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    பவானி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிக ரித்து வந்தது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல் காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    இந்நிலையில் மாலை லேசான மழை பெய்யத் தொடங்கியது. பின்னர் மின்னலுடன் சாரல் மழை பெய்தது. இந்த திடீர் மாலையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    பவானியில் மாலை ஒரு மணி நேரம் இடிடன் கூடிய கனமழை பெய்தது. பவானி-மேட்டூர் மெயின் ரோட்டில் நகராட்சி அலுவலகம் செல்லும் எதிரே உள்ள மரத்தின் கிளை முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் பவானி நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் மோகன் ராஜ், விஜய் ஆனந்த் மற்றும் பணியாளர்கள் உடனே சம்பவத்திற்கு வந்து மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தினர்.

    இதன் பிறகு போக்குவரத்து சீரானது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக இங்கு 67 மில்லி மீட்டர் மழை பதிவாகியது.

    இதைபோல் கவுந்தப்பாடி, அம்மா பேட்டை, வரட்டுப்பள்ளம், சென்னிமலை பகுதியில் சாரல் மழை பெய்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    பவானி-67, கவுந்த–ப்பாடி-18.40, அம்மா–பேட்டை-11.60, வரட்டு–பள்ளம்-7, குண்டேரி–பள்ளம்-6.20, சென்னி–மலை-3.

    • ஈரோடு மாவட்டத்தில் இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
    • அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நடந்த சில நாட்களாக பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது. ஆனால் மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது.

    இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் காலை முழுவதும் வெயில் வாட்டு வகித்தது. இரவு 7 மணி முதல் திடீரென இடியுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்ல செல்ல கனமழை பெய்யத் தொடங்கியது.

    மாநகர் பகுதியில் இரவு 7 மணி முதல் இடி மின்னலுடன் மழை பெய்தது. தொடர்ந்து சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொடுமுடி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, பவானி, கோபி, பெருந்துறை, கொடிவேரி, தாளவாடி, சென்னிமலை போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அம்மாபேட்டையில் 90 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. திடீர் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:

    அம்மாபேட்டை-90, கொடுமுடி-57, கவுந்த ப்பாடி-22, மொடக்குறிச்சி, வரட்டுபள்ளம்-21, ஈரோடு, பவானி-15, கோபி-9.4, குண்டேரிபள்ளம்-7.6, பெருந்துறை-7, கொடி வேரி-6.2, தாளவாடி-6, சென்னிமலை-4, பவானிசாகர்-3.2, சத்தியமங்கலம்-3.

    • கடலூர் மாவட்டத்தில் இடியுடன் பலத்த மழை பெய்தது.
    • நேற்று 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து காண்கின்றனர்.

    கடலூர்:

    தமிழக பகுதிகளில் மேற்கு திசை காற்று மாறுபடுவதால் பலத்த இடியுடன் கூடிய மழை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம் லால்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் நெல்லிக்குப்பம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை காரணமாக இரவு மின்தடை ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அதிகாலை 4 மணி அளவில் நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டன. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர் மேலும் மின்சாரத்தில் ஊழியர்கள் விடிய விடிய மின் இணைப்பு தருவதற்கு பணிகளை துரிதமாக மேற்கொண்டனர்.

    மேலும் கடந்த சில தினங்களாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பலத்த இடியுடன் கூடிய மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். கடலூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள நிலையில் தொடர் மழை காரணமாக ஆங்காங்கே பணிகள் பாதிப்பதோடு நெற்பயிர்கள் அழுகி வீணாகும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் கடும் கவலையில் ஆழ்ந்து உள்ளனர். மேலும் சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் இருந்து வந்த நிலையில் நேற்று 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்த நிலையில் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மகிழ்ச்சி அடைந்து காண்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு-கடலூர் - 45.9, ஆட்சியர் அலுவலகம் - 45.8,புவனகிரி - 42.0,காட்டுமன்னா ர்கோயில்- 38.2, லால்பேட்டை - 37.0, காட்டுமயிலூர் - 27.0, ஸ்ரீமுஷ்ணம் - 19.2, வேப்பூர் - 16.0, சிதம்பரம் - 13.2, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 12.5,அண்ணாமலைநகர் - 9.6, சேத்தியாத்தோப்பு - 5.8, விருத்தாசலம் - 5.0, பரங்கிப்பேட்டை - 4.2, 15. குறிஞ்சிப்பாடி - 4.0 கொத்தவாச்சேரி - 4.0 வானமாதேவி - 3.0 பண்ருட்டி - 1.2 மொத்தம் - 333.60 மழையளவு பதிவாகி உள்ளது

    சேலம், ஏற்காட்டில் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு பரவலாக மழை பெய்தது.

    குறிப்பாக சேலத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் பெய்த மழை தொடர்ந்து இரவிலும் மழை தூறிய படியே இருந்தது. இதனால் சேலத்தில் இரவு முழுவதும் குளிர்ந்த சீேதாஷ்ண நிலை நிலவியது. இன்று காலையும் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    சேலம் மாநகரில் அதிக பட்சமாக 15.4 மி.மீ. மழை பெய்துள்ளது . ஏற்காடு 4, ஆத்தூர் 3, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 23.4 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிட தக்கது. 

    பரமத்தி அருகே இடி தாக்கி தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே பிள்ளை களத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45), விவசாயி.

    இவரது தோட்டத்தில் தென்னை மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திடீரென இடி தென்னை மரத்தில் விழுந்ததால் தென்னை மரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

    இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தென்னை மரங்களில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

    ×