search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 239168"

    • இளம் வயது கருவுருதல் பற்றி வட்டார அளவில் ஆய்வு செய்ய வேண்டும்.
    • எடை குறைவாக பிறந்த குழந்தைகளை தனிகவனம் கொண்டு ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிப்பை கண்காணிக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சுகாதாரத்துறை, தொழுநோய் தடுப்பு, காசநோய் தடுப்பு சார்பாக, அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து வட்டார மருத்துவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் கே.எம்.சரயு தலைமையில் நடந்தது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ஏழை, எளிய மக்கள், மலை கிராம மக்கள் அரசு மருத்துவமனை மற்றும் துணை சுகாதார நிலையங்களில் சிறப்பான சிகிச்சை மேற்கொள்ளும் வகையில், பல்வேறு மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்களின் இருப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் மகப்பேறு மரணங்களை அறவே தவிர்த்திட வேண்டும். பிறக்கிற அனைத்து குழந்தைகளுக்கும் தவறாமல் தடுப்பூசிகள் போட வேண்டும். பள்ளிச் சிறுவர்களுக்கு வழங்கப்படுகிற தடுப்பூசிகள் தவறாமல் வழங்க அனைத்து வட்டார மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்த 100 சதவீதம் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்.

    மேலும், இளம் வயது திருமணங்கள் முற்றிலும் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இளம் வயது கருவுருதல் பற்றி வட்டார அளவில் ஆய்வு செய்ய வேண்டும். எடை குறைவாக பிறந்த குழந்தைகளை தனிகவனம் கொண்டு ஒவ்வொரு மாதமும் எடை அதிகரிப்பை கண்காணிக்க வேண்டும். கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள் மற்றும் துணை சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த கூட்டத்தில், நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், வட்டார மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
    • ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ள காரணத்தினால், மழை மற்றும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், சாலைகளில் விழும் மரங்கள் மற்றும் மண் சரிவை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

    இதற்காக மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் போதுமான பொக்லைன் எந்திரம், பவர்ஷா ஆகியவற்றையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக்குழுவினர், மருந்து இருப்பு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    மின்வாரியம் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்ற மின் சாதனங்கள் ஏதேனும் பேரிடர் ஏற்படும் நேரத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க போதுமான பணியாளர்களுடன் தயாராக இருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    மாவட்ட வழங்கல் துறை மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான உணவு பொருட்களை கூடுதலாக இருப்பு வைக்க வேண்டும், பேரிடர் மேலாண் ைமத்துறை சார்பில் முதல் நிலை மீட்பாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் முன்கூட்டியே மிக அபாயகரமான பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

    மழையினால் பயிர்களுக்கு சேதம் ஏதேனும் ஏற்படின், அதனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக கணக்கெடுக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் நல்லநிலையில் உள்ளனவா எனவும், பள்ளியின் மேற்கூரையில் உள்ள குப்பைகள் மற்றும் செடிகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டும். மண் சரிவு ஏற்படும் பகுதிகளின் அருகில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள் வைத்திருக்க வேண்டும். அபாயகரமான பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாதவாறு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூட்டத்தில் பேசினார்.

    கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி, தோட்டக்க லைத்துறை இணை இயக்குநர் கருப்பசாமி, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, முகம்மது குதுரதுல்லா, பூஷணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    • பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சபைகளை பயன்படுத்த வேண்டும்.
    • பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், பாலிநாயனப்பள்ளி ஊராட்சி செட்டிப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி, ஊராட்சிகள் துறை சார்பில் கிராம சபை கூட்டம் நேற்று நடந்தது.

    இதற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    மே தினத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

    அதே போல கிராம வளர்ச்சி திட்டம் 2023-24 தயாரித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்க திட்ட செயல்பாடுகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நான்முதல்வன் திட்டம், குழந்தை திருமண தடுப்பு உறுதிமொழி குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24 நிதியாண்டில் செயல்படுத்தபட வேண்டிய திட்ட பணிகள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    தற்போது மே மாதம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் மாலை 2 மணி முதல் 4 மணி வரை நேரடியாக வெயில் படும் இடங்களை தவிர்க்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். வெயில் தாக்கம் அதிகமானால் உயர் ரத்த அழுத்தம், மயக்கம் போன்ற உடலில் பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அதேப்போல கால்நடைகளையும் நிழலில் பராமரிக்க வேண்டும். மேலும் வரும் 15-ந் தேதி வரை நமது கிராமங்களை நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் மாலை 6 மணிக்கு தூய்மைப்படுத்திட வேண்டும்.

    பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து மஞ்சபைகளை பயன்படுத்த வேண்டும். பாலிநாயனப்பள்ளி ஊராட்சி பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத ஊராட்சியாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கலெக்டர் தலைமையில் எங்கள் கிராமம் எழில் மிகு கிராமம் என்ற உறுதி மொழியை பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணி, பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • கட்டிட உரிமங்கள் உரிய காலத்திற்குள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.
    • திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அரசிதழ் பதிவுப்பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நேற்று நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி நகராட்சி, மாவட்ட கருவூலம், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, முன்னாள் படைவீரர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வருவாய்த்துறை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட துறைகளில் நிலுவையில் உள்ள பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ராயக்கோட்டையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் உடையாண்டஅள்ளி கிராமத்தில் அமைப்பதற்கு நில மாறுதல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    வேளாண்மை பொறியியல் துறை சார்பில் சூளகிரி தாலுகாவில் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள வேளாண் விரிவாக்க மைய அலுவலக வளாக பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி உள்ளது.

    அவற்றை அகற்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிக்கு கருத்துரு தயார் செய்யப்பட்டு வருகிறது. வருவாய் துறை சார்பில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் பொது கட்டிட உரிமங்கள் உரிய காலத்திற்குள் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து புதுப்பித்து கொள்ள வேண்டும்.

    திட்டப்பணிகள் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனா கார்க், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாபு மற்றும் அனைத்து துறை மாவட்ட முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவேண்டும் என கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
    • சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலை, தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் வருகிற 10 மற்றும் 24-ந் தேதிகளில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை அந்தந்த பள்ளிகளில் சிறப்பு மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

    கூட்டத்தில் அனைத்து மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பள்ளியின் வளர்ச்சி குறித்த திட்டங்களை மேற்கொள்ளவும் மற்றும் பள்ளிகளில் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிக்கு வரவழைத்து படிப்பை தொடர்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைவரும் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

    இந்த கூட்டத்தின் நோக்கம், பள்ளிகளில் படிப்பை தொடராத மாணவர்களை கண்டறிந்து அவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவருக்கு தேவையான படிப்பை தொடரும் வகையில் துணை தேர்வு எழுதுவதற்கான ஆலோசனை வழங்குதல் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த ஆலோசனை வழங்குவதே ஆகும்.

    எனவே மேற்கண்ட தேதிகளில் நடைபெறும் சிறப்பு பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில் அனைவரும் பங்கேற்று வரும் காலத்தில் இடைநிற்றல் என்ற சொல்லே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நோயாளிகளிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைப் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
    • சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    பாப்பிரெட்டிபட்டி,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

    பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனையில் உள்ள உள்நோயாளிகள் வெளிநோயாளிகள் பிரிவு, கண் அறுவை அரங்கம், பிரசவ வார்டு, NCD பிரிவு ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பெண் உள்நோயாளிகள் பிரிவில் ஆய்வு செய்து, நோயாளிகளிடம் மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் சிகிச்சைப் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்டறிந்தார்.

    பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனையில் டயாலிஸிஸ் பிரிவு விரைவில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தார். மேலும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் சேவை மனப்பான்மையோடு சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய சிகிச்சைகளை உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

    அவசர சிகிச்சைகளை மேற்கொள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவினை மேம்படுத்த அரசுக்கு பரிந்துரை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோழிமேக்கனூர் குழந்தைகள் மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறையின் சார்பில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி குழந்தை மையத்தில் பயன்பெறும் 5 குழந்தைகளுக்கு சப்பி சாப்பிடும் வகையில் RUTF Sachet மற்றும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி, தொடங்கிவைத்தார்.

    இந்நிகழ்வுகளின்போது மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் சாந்தி, பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

    • மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் அதிகளவில் காய்கறி-சிறு தானியங்கள் பயிரிட வேண்டும்.
    • கலெக்டர் அனீஷ்சேகர் அறிவுரை வழங்கினார்.

    மதுரை

    மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கீழையூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கலந்துகொண்டு பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 744 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 80 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் விவசாயிகள் மூலம் நெற்பயிர் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறி களுக்கும் முக்கியத்துவம் வழங்கி பயிரிட வேண்டும். ஊரக பகுதிகளில் உள்ள மக்களின் பொருளாதார மேம்பாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் முக்கியப் பங்குவகிக்கின்றன.

    பெண்களும், இளை ஞர்களும் வேலை வேண்டி விண்ணப்பித்து வருகின்ற னர். இளைஞர்கள் சுயதொழில் தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திகழ வேண்டும். இதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒரு தொழில் புரிவதற்கு முதலாவதாக மனநிலை தேவை, இரண்டாவது தொழில்சார்ந்த தெளிவான சிந்தனை வேண்டும்.

    மேலும் அத்தொழில் புரிவதற்கு உண்டான திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு தொழில் புரிவதற்கு உண்டான மனநிலை மட்டும் இருந்தால் போதும். திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கு தமிழக அரசின் மூலம் பல்வேறு திறன்வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக உதவித்தொகையுடன் வழங்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுகி பிரமிளா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் குருமூர்த்தி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் சவுந்தர்யா, கீழையூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஷீலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதைத் தடை செய்யும் சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கேட்கக் கூடாது.
    • எளிய முறையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி உறுதிமொழியை படிக்க அனைத்து அரசு துறை அலுவலர்களும் திரும்ப படித்து எடுத்துக் கொண்டனர்.

    தொடர்ந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் பெண் குழந்தைகளின் விகிதம் மற்றும் பிறப்பு விகித எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு அறிமுகப் படுத்தப்ப ட்டுள்ளது.

    இந்த திட்டம் நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்த மாதம் முதல் செயல்பட உள்ளது. பெண் மீதான மற்றும் பெண் குழந்தை மீதான வெறுப்பை நீக்கிக் கொள்ள வேண்டும். ஆண்,பெண் பாலின சமத்துவத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து சொல்வதைத் தடை செய்யும் சட்டத்தின் படி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கேட்கக் கூடாது. வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ கூடாது. எளிய முறையிலான திருமணங்களை ஊக்குவிக்க வேண்டும். பெண் கல்விக்கு முன்னுரிமை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) குமரேசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு திட்ட அலுவலர் சிவகாந்தி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு மஞ்ச ப்பைகளை வழங்கினார்.
    • மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள பூங்காவில் மாவட்ட கலெக்டர் சாந்தி மரக்கன்றுகளை நட்டு வைத்து, அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு மஞ்ச ப்பைகளை வழங்கினார்.

    தருமபுரி மாவட்டம் தமிழ்நாடு மாசுக்க ட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து துறை மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வீதமாக மஞ்சப்பைகள் வழங்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஒரு சிறப்பு நிகழ்வாகவே எடுத்துக்கொண்டு வீட்டுக்கு ஒரு மரக்கன்று வைத்து வளர்க்க வேண்டும்.

    பொதுமக்கள் தங்கள் குடும்பங்களில் உள்ளவர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கிய நாட்களை நினைவுகூறும் வகையில் கட்டாயம் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

    மரக்கன்றுகளை நடுவதோடு மட்டுமல்லாமல் நட்ட மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து பாதுகாத்து பராமரிக்க வேண்டும். மக்களின் மனதில் இது ஆழமாக பதிய வேண்டும்.

    பல்வேறு வகையான மரங்கள் வளர்க்க வேண்டும். மக்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள காலி இடங்களில் மரக்கன்றுகளை வைத்து வளர்க்க வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் அதிகமாக பசுமை பரப்பு இருக்கின்றது காரணம் வனத்துறை அலுவ லர்கள், உள்ளாட்சி துறைகள், சுற்றுச்சூழல் துறை, உள்ளாட்சி அமைப்பு களினுடைய பிரதிநிதிகள், தன்னா ர்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருடைய ஒத்து ழைப்போடு இந்த பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் கீதாராணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.
    • பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

    நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையி ல்லாத பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்க ப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்ற வற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படு வதோடு விபத்து களுக்கும் காரணமாக உள்ளது. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்படு வதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, போகிப்ப ண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
    • தடுப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வதால் வெறிநோயை 100 சதவிகிதம் ஒழித்து விடலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி கீழ்புதூர் வட்டார வள மைய கல்வி விளையாட்டு வளாகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

    இதை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து, கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

    கால்நடை வளர்ப்போர், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மற்றும் பொதுமக்களுக்கு வெறி நோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் மற்றும் ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா சார்பாக இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    வெறிநோய்த் தடுப்பு நாய் வளர்ப்போரின் பொறுப்புணர்வில் தான் ஆரம்பிக்கிறது. அனைத்து நாய்களுக்கும் வருடந்தோறும் வெறிநோய் தடுப்பூசி போட வேண்டும். கால்நடை மருத்துவர் அறிவுரையில் இதை ஒரு சமுதாயக் கடமையாகச் செய்ய வெண்டும். தடுப்பு முறைகளையும், சிகிச்சைகளையும் மேற்கொள்வதால் வெறிநோயை 100 சதவிகிதம் ஒழித்து விடலாம்.

    எனவே பொதுமக்கள், தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி போட்டுக்கொண்டு வெறிநோய் தடுப்பது பற்றிய விழிப்புணர்வு ஆலோசனைகள் பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கலெக்டர் அறிவுரை
    • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு கூட்டம் டி. கே.எம். மகளிர் கல்லூரியில் இன்று நடந்தது.

    விழிப்புணர்வு கூட்டம்

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    இந்த கூட்டத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் எப்படி எல்லாம் நடைபெறுகிறது என்பது குறித்து தெரிவித்துள்ளனர்.இந்த கருத்துக்களை உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

    குழந்தைகள் பெண்களுக்கு எதிராக யார் மூலம் குற்றங்கள் நடக்கிறது என்பது தெரியும்.அப்படி நடந்து கொள்பவர்களை முன்கூட்டியே அறிந்து அவர்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும். மாணவிகள் தங்களது குறிக்கோள் ஒன்றே கடமையாகக் கொண்டு அதனை நோக்கி நடை போட வேண்டும்.

    தற்போது கல்வி, வருங்காலத்தில் என்ன வேலை பார்க்கப் போகிறோம் என்ற நோக்கத்தில் செயல்பட வேண்டும்.

    இந்தக் கட்டத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டாலும் கவனத்தை சிதறவிடாமல் செயல்பட வேண்டும்.

    சின்ன சின்ன ஆசைகள் மூலம் உங்களுடைய குறிக்கோள்களை இழந்து விடக்கூடாது.தற்காலிகமாக வரக்கூடிய ஆசைகளை கடந்து செல்பவர்கள் தான் சமூகத்தில் முக்கியமானவர்களாகவும் சமூக கட்டமைப்பை உருவாக்குபவர்களாகவும் வருவார்கள்.

    எதிர்த்து போராட வேண்டும்

    உங்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால் அதைக் கொண்டு பயந்து விடக்கூடாது.தைரியமாக எதிர்த்து போராட வேண்டும்.

    கல்லூரி காலங்களை கடந்து தான் நாங்களும் வந்திருக்கிறோம்.கல்லூரி படிக்கும் காலத்தில் திருமணம் செய்து கொண்ட சிலர் ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். அது போன்ற நிலை உங்களுக்கு வந்து விடக்கூடாது.

    கவனத்தை சிதறவிடாமல் லட்சியத்தை நோக்கி பயணம் செய்யுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தாசில்தார் செந்தில், கல்லூரி தாளாளர் மணி நாதன் மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி, குடும்ப நல பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பத்மாவதி, டி கே எம் கல்லூரி முதல்வர் பானுமதி, வக்கீல் சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×