search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 246186"

    • செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
    • போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சி தலைவர் உஸ்மான் சோன்கோ வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவரது கட்சியினர் போராட்டம் நடத்தினர். தலைநகர் டக்கார் மற்றும் தெற்கில் உள்ள ஜிகுயின்ச்சோர் நகரில் பெரும் வன்முறை மூண்டது. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையை ஒடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதில் போலீசாருக்கும், எதிர்க்கட்சி தலைவரின் ஆதரவாளர்களுக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன. இந்த மோதலில் 9 பேர் பலியானார்கள். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதையடுத்து சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக உள்துறை மந்திரி அன்டோயின் பெலிக்ஸ் அப்துலே டியோம் கூறும்போது, "வன்முறையை தூண்டுவதற்காக போராட்டக்காரர்கள் பயன்படுத்திய சில சமூக ஊடக தளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர் போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி பயங்கர மோதல்-கலவரம் ஏற்பட்டது.
    • அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே.

    இம்பால்:

    பா.ஜ.க. ஆட்சி நடை பெற்று வரும் மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். அவர்களது கோரிக்கைக்கு, குகி, நாகா பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    மைதேயி சமூகத்தினருக்கும் பழங்குடியினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி பயங்கர மோதல்-கலவரம் ஏற்பட்டது. இதில் 74 பேர் உயிரிழந்தனர் 200 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நூற்றுக்கணக்கான வீடுகளும், வழிபாட்டுத் தலங்களும் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து, ராணுவம் வரவழைக்கப்பட்டது. ராணுவத்தினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    என்றாலும் அடிக்கடி வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. பழங்குடியினருக்கு ஆதரவாக, அந்த சமூகம் சார்ந்த தீவிரவாதக் குழுக்கள் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், முதல்-மந்திரி பிரேன் சிங் மாநில தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

    அப்போது, 'மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கையை பாதுகாப்புப் படையினர் தொடங்கியதில் இருந்து இதுவரை 40 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இவர்கள், பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு, வீடுகளுக்கு தீவைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்.

    அண்மைக்கால வன்முறைகள், இரு சமூகங்களுக்கு இடையிலான மோதல் அல்ல. பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானதே. மாநிலத்தில் அமைதியை நிலை நாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

    கக்சிங், கிழக்கு இம்பால், மேற்கு இம்பால், விஷ்ணுபூர் ஆகிய மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினர் வசிக்கும் கிராமங்கள் மீது ஆயுதம் தாங்கிய குகி பழங்குடியின தீவிரவாதிகள் சனிக்கிழமை இரவுமுதல் தாக்குதல் நடத்தினர். மேற்கு இம்பாலின் பயெங் கிராமத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

    கக்சிங் மாவட்டம், சுக்னு கிராமத்தில் 80 வீடுகளுக்கு தீவிரவாதிகள் தீவைத்ததால், நள்ளிரவில் வீடுகளை விட்டு, மக்கள் தப்பியோடும் நிலை ஏற்பட்டது. அங்கு, தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நிகழ்ந்தது.

    இதில், போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். பொதுமக்கள் தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    கிழக்கு இம்பாலில் இரு வீடுகளுக்கு தீவைத்ததுடன், கிராமமக்கள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். கிராமத்தினரும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு சூழலை ஆய்வு செய்வதற்காக, ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மேலும் 2 பேர் கொல்லப்பட்டதால் மணிப்பூரில் பதட்டம் அதிகரித்துள்ளது.

    மணிப்பூரில் 7 ஆயுத கிட்டங்கிகள் உள்ளன. போலீசாருக்கான துப்பாக்கிகள் மற்றும் கருவிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. போராட்டக்காரர்கள் 3 கிட்டங்கிகளில் புகுந்து ஆயுதங்களை சூறையாடினார்கள்.

    ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்களை அள்ளி சென்றனர். இதனால் மணிப்பூரில் பதட்டமான சூழ்நிலை அதிகரித்துள்ளது. குகி இன போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் துணையுடன் தாக்குதல்களை அதிகரித்துள்ளனர்.

    பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு அவர்கள் தாக்குதல் நடத்துவதாக தெரியவந்துள்ளது.

    கடந்த 2 தினங்களாக போராட்டம் மற்றும் தாக்குதலால் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 3 கிராம மக்கள் முற்றிலுமாக வீடுகளை இழந்துள்ளனர். குகி இன போராட்டக்காரர்கள் எம்.16 மற்றும் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

    நிலைமை கட்டுமீறி போவதால் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மணிப்பூர் விரைகிறார். அவர் பாதுகாப்பு படை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    போராட்டக்காரர்கள் ஆயுதங்களை கீழே போடும் வரை அவர்களை வேட்டையாட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.

    • இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர்.
    • கலவரம் விவகாரம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் அகோலாவில் உள்ள பழைய நகர காவல் நிலையப் பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு குழுக்களைச் சேர்ந்தவர்களும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசித் தாக்கினர். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்த கும்பல் சில வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அங்கு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர தங்கள் பலத்தை பயன்படுத்தி கும்பலை கலைத்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. இந்த, வன்முறையைத் தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கல்வீச்சில் சப்-கலெக்டரின் பின்பக்க கண்ணாடி மற்றும் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது.
    • போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நேற்று மாடு விடும் விழா நடந்தது. இதில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஆம்பூர் நாட்றம்பள்ளி மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து வந்த 180-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் காளை விடும் விழா நடத்தப்படும் என விழா குழுவினர் நோட்டீஸ் விநியோகம் செய்திருந்தனர். இதனால் ஏராளமான காளைகள் பங்கேற்றன.

    கால்நடை டாக்டர்கள் பரிசோதனைக்கு பிறகு காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கினர். இதனை தொடர்ந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறி பாய்ந்து ஓடின. இருபுறமும் நின்ற இளைஞர்கள் ஆரவாரம் செய்து காளைகளின் முதுகில் கைகளால் தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த மாடு விடும் விழாவை காண ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டிருந்தனர்.

    மதியம் 2.30 மணிக்கு மேல் மாடு விடும் விழா நடத்தக் கூடாது என விழா குழுவினரிடம் போலீசார் கூறினர். இதனால் மாடு விடுவது நிறுத்தப்பட்டது. அதிக காளைகள் பங்கேற்றதால் 2-வது சுற்று ஓடுவதற்கு காளைகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

    இதனால் பரிசுகள் வாங்க முடியாமல் காளைகளின் உரிமை யாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஆவேசம் அடைந்த ஒரு சில காளையின் உரிமையாளர்கள் தங்களுடைய காளைகளை மட்டும் போட்டியில் கலந்து கொண்டு வருவதற்கு அனுமதிக்குமாறு விழா குழுவினர் மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

    தாசில்தார் தலைமையில் அதே இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது திடீரென காளை ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. சற்றும் எதிர்பார்க்காத மக்கள் அங்குமிங்கும் வேகமாக சிதறி ஓடினர். கூட்டத்தில் ஓடிய பொதுமக்களை காளை முட்டி தூக்கி வீசியது. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    ஜோலார்பேட்டை பெரிய கம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபர் முஷாரப் (வயது 19) என்பவரை காளை முட்டியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த வாலிபரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போலீசாரை கண்டித்து கல்நார்சம்பட்டி கோவில் எதிரே மறியல் செய்தனர்.

    இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த சப்-கலெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிலர் தங்களிடம் இருந்த வீடியோ பதிவை காட்டி வாலிபர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் நடந்த கல்வீச்சில் சப் கலெக்டரின் பின்பக்க கண்ணாடி மற்றும் போலீஸ் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைந்தது.

    மேலும் போலீஸ்காரர் ஒருவரின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. மேலும் 10 பேர் லேசான காயம் அடைந்தனர்.

    இதனால் கல்நார்சம்பட்டி கிராமம் போர்க்களம் போல காட்சி அளித்தது. போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பலியான வாலிபர் உடல் பிரேத பரிசோதனைக்காக அடுக்கும்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு ஏராளமானோர் குவிந்தனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர்.

    அசம்பாவிதங்களை தடுக்க வாலிபரின் சொந்த ஊரான பெரிய கம்மியம்பட்டு கிராமத்தில் ஏ.டி.எஸ்.பி. புஷ்பராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து பொது சொத்துகளை சேதப்படுத்துதல், கொலை முயற்சி, அரசு அலுவலர்களை வேலை செய்யவிடாமல் தடுத்தல் உள்பட 8 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து 17 வயது சிறுவன் உள்பட 36 பேரை கைது செய்தனர். அவர்களை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 17 வயது சிறுவன் வேலூர் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
    • வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்-2 படித்துவந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். இதற்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் கலவரமாக வெடித்தது. பள்ளியில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு போலீஸ் ஜீப்களுக்கும், பள்ளி வகுப்பறைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால் பள்ளியில் பலகோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கனியாமூர் சக்திமேல்நிலை பள்ளியில் வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை. வேறு பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கனியாமூர் சக்திமெட்ரிக் மேல்நிலை பள்ளி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதிக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனியாமூர் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை நேரடி வகுப்புகள் நடத்தலாம் என அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

    • வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது.

    பிரஸல்ஸ்:

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப்-எப் பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி மொராக்கோ அணியிடம் 2-0 என தோல்வியடைந்தது.

    இந்த போட்டியைத் தொடர்ந்து பெல்ஜியத்தில் கலவரம் வெடித்தது. தலைநகரின் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் வன்முறை ஏற்பட்டது. கலவர தடுப்பு போலீசாருடன் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

    பின்னர் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு இரவு 7 மணியளவில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கலவரக்காரர்கள் பைரோடெக்னிக் பொருட்கள், எறிகணைகள், கம்புகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாகவும், நெடுஞ்சாலையில் தீ வைத்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விழுந்ததில் ஒரு பத்திரிகையாளரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தலையிட்டதால் தண்ணீரை பீய்ச்சியடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலவரக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். 

    • கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பள்ளி கலவர சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் நடந்த கலவரம் தொட ர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கண்கா ணிப்பு கேமராக்கள் மூலம் பதிவான காட்சி களைக் கொண்டு சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்தியதாக சின்ன சேலம் தாலுக்கா வடக்கனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரபு (வயது 37) அக்கராபாளையத்தைச் சேர்ந்த மாயவன் (29) மற்றும் போலீஸ் பஸ்சுக்கு தீ வைத்து எரித்த மூங்கி ல்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருஞானம் (42) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கனியாமூர் பள்ளி கலவரத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 17- ந்தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளியை இடித்து சேதப்படுத்தியதாக நாகலூர் கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 20), சதீஷ் பாபு (20) மற்றும் போலீசார் மீது கல்வீசி தாக்கிய சின்னசேலம் அருகே கனியாமூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் (45) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீ மதி உயிரிழப்பிற்க்கு நீதி கேட்டு போரட்டம் நடைபெற்றது.
    • காவல்துறை வாகனங்கள் உட்பட 55 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தபட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த 12 ம் வகுப்பு மாணவி ஸ்ரீ மதி உயிரிழப்பிற்க்கு நீதி கேட்டு கடந்த 17 -ந் தேதியன்று போரட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் பள்ளி சொத்துக்கள் மற்றும் பொது சொத்துக்களான காவல்துறை வாகனங்கள் உட்பட 55 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தபட்டது.

    தீயில் கருகி சேதமடைந்த இரு சக்கர வாகனங்கள், பஸ்கள், காவல் துறை வாகனங்கள் ஆகியவையின் பதிவு எண்களை கண்டுபிடித்து, வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் எந்தெந்த வாகனங்கள் உள்ளது என்பதை கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிபதி முகமது அலி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். உடன் கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் வாகன பதிவு எண்கள், வாகனத்தின் காப்பீடு ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.

    பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக சின்ன சேலம் வட்டம் உலகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் கைதனார்.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் அருகே கனியாமூர்சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி யில் நடந்த கலவரம் தொட ர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் வழக்கு பதிவு செய்து கலவரத்தில் தொடர்புடைய குற்றவா ளிகளை தேடி வருகிறார்கள்.

    அந்த வகையில் காவல்துறை வாகனத்தின் மீது கல் எறிந்தது தொடர்பாக கள்ளக்குறிச்சி வட்டம் உலகங்காத்தான் கிராமம் இந்திரா நகர் ராம்குமார் என்கின்ற ராம்கி என்பவர் வாட்ஸ் அப் குழுக்களில் இடம்பெற்று வன்மத்தை தூண்டும் கருத்துக்களை பதிவு செய்து உள்ளார்.

    கலவரத்திலும் பங்கு பெற்று பள்ளியில் இருந்த பொருட்களை சேதப்படுத்தியது தொடர்பாக சின்ன சேலம் வட்டம் உலகிய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அன்பு என்பவர் கைதனார்.

    இவர்கள் கலவரத்தில் ஈடுபட்டது குறித்த வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகளை வைத்து அடையாளம் கண்டு, கைது செய்து இவர்களை கள்ள க்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கை தொட ரும் எனவும் அறிவித்து ள்ளனர்.

    இதனால் கைது எண்ணி க்கை 357 ஆக அதிகரித்து உள்ளது.

    • முல்லைப்பெரியார் அணையை திறந்ததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசியபோது கூறியதாவது,

    தமிழக அரசு முல்லைப் பெரியார் அணையை திறந்ததால் இங்குள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி வருவதை கண்டிக்கிறோம். அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமனாலும் பேசிவருகின்றனர். இதை மையப்படுத்தி அ.தி.மு.க போராட்டம் நடத்தினால், அதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தென்மாவட்டங்களில் போட்டி போராட்டாம் நடத்தும். தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 2 மாநில மக்களையும் தூண்டிவிட்டு கலவர சூழ்நிலையை உருவாக்குவது அரசியல் பிழைப்பு. மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதுடன், ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

    • கனியாமூர் கலவரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • பஸ்சுக்கு தீ வைத்து எரித்ததாக மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி அன்று பிளஸ் -2 மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. இதனை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்தனர். பிறகு பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி அன்று இந்த அமைதியான போராட்டம் மிகப்பெரிய ஒரு கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் பள்ளியில் உள்ள பல்வேறு பொருட்கள் தீ வைத்து எரித்து நாசமாயின. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை பிடிப்பதற்கு சிறப்பு புலனாய்வு பிரிவு அமைத்து தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில் 306 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று பள்ளியில் இருந்த பஸ்சுக்கு தீ வைத்து எரித்ததாக மணிகண்டன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முகமது அலி முன்பு ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இதனால் கைது எண்ணிக்கை 307 ஆக உயர்ந்தது. இந்த கைது நடவடிக்கை மேலும் தொடரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×