search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷேக் ஹசீனா"

    • வங்கதேசம் நாடு முன்பு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது.
    • வங்கதேசத்தில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு காரணமாக ஏற்பட்ட வன்முறையால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா ஹெலிகாப்டர் மூலம் அந்த நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு வந்துள்ளார்.

    வங்கதேசம் நாடு முன்பு பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. 1971-ம் ஆண்டு அந்த நாடு ஷேக் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் சுதந்திர போராட்டம் நடத்தி தனி நாடாக மாறியது. இதனால் ஷேக் முஜிபுர் ரஹ்மானை வங்கதேசத்தின் தந்தை என்று போற்றுகிறார்கள்.

    அவரது மகள்தான் ஷேக் ஹசீனா. வங்கதேசத்தில் 5-வது முறையாக ஆட்சியில் அமர்ந்த சிறப்பு அவருக்கு உண்டு. ஆனால் வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு கல்வி மற்றும் அரசு பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது அவருக்கு எதிராக மாறியது.

    வங்கதேசத்தில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. லட்சக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த நிலையில் சுதந்திர போராட்ட வாரிசுகளுக்கு மட்டும் 30 சதவீதம் வாய்ப்பு கொடுக்கப்படுவதால் தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக மாணவர்கள், இளைஞர்கள் கருதினார்கள்.

    இதையடுத்து கடந்த ஜூன் மாதம் அவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த மாதம் அவர்களது போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது. 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.

    இந்த நிலையில் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து வங்கதேச சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இதனால் மாணவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால் ஏற்கனவே நடந்த போராட்டத்தில் கைதான சுமார் 11 ஆயிரம் மாணவர்கள், இளைஞர்களை அரசு விடுவிக்காததால் நேற்று முன்தினம் முதல் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.


    இந்த போராட்டத்தில் மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் ஷேக் ஹசீனா சமரச பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ஆனால் மாணவர்கள் ஏற்கவில்லை. நேற்று அவர்கள் வங்கதேசத்தில் தலைநகர் டாக்காவில் மிக பிரமாண்டமான ஊர்வலத்தை நடத்தினார்கள்.

    இதையடுத்து ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வங்கதேசத்தில் இருந்து வெளியேறினார். அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

    ஷேக் ஹசீனா தன்னுடன் தனது தங்கை ஷேக் ரெஹனாவுடன் ஹெலிகாப்டரில் டாக்காவில் இருந்து புறப்பட்டு வந்தார். அவரது ஹெலிகாப்டரை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து பாதுகாப்பு வழங்கியது. முதலில் அவரது ஹெலிகாப்டர் திரிபுரா செல்வதாக கூறப்பட்டது.

    ஆனால் ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் வந்து இறங்கியது. இந்த விமானப்படை தளம் டெல்லிக்கு மிக அருகில் இருக்கிறது. ஷேக் ஹசீனாவை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் வரவேற்று பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றார்.

    ஷேக் ஹசீனாவின் மகள் சய்மா டெல்லியில் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய மண்டல இயக்குனராக உள்ளார். அவர் வீட்டுக்கு ஷேக் ஹசீனா சென்றதாக தகவல்கள் வெளியானது. அங்கு தனது பேரக்குழந்தைகளை பார்த்து விட்டு ஷேக் ஹசீனா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    டெல்லியில் ஷேக் ஹசீனா ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு இந்திய அரசு சார்பில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது.

    டெல்லியில் ஷேக் ஹசீனா எந்த பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் டெல்லியில் தற்காலிகமாக தங்கியிருக்க மட்டுமே அனுமதி வழங்கி இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஷேக் ஹசீனா இதற்கு முன்பும் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு லண்டனில் தஞ்சம் அடைந்து இருந்தார். இந்த தடவையும் அவர் லண்டனில் தஞ்சம் அடைய விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தடவை நிரந்தரமாக லண்டனில் குடியேற அவர் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

    அதற்கு ஏற்ப அவர் இங்கிலாந்து அரசிடம் அனுமதி கேட்டுள்ளார். இங்கிலாந்து அரசு அனுமதி கொடுத்ததும் ஷேக் ஹசீனா லண்டன் புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை அவர் டெல்லியில் தங்கி இருப்பார்.

    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் அரசியல் எதிர்ப்பாளர்கள் நேற்றும் இன்றும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வங்கதேசத்தை விட்டு ஷேக் ஹசீனா வெளியேறியதை அவரது எதிரிகள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறார்கள்.

    இதற்கிடையே வங்கதேசத்தில் இன்று இடைக்கால அரசும் அமைக்கப்பட்டுஉள்ளது. எனவே அங்கு அமைதி திரும்ப தொடங்கிஉள்ளது.

    • ராணுவ இடைக்கால ஆட்சியில் பாகிஸ்தான் சார்புடைய ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதிக்கம்
    • ஹசீனா இந்தியாவைச் சார்ந்திருக்கும் வரைக்கும் இந்தியாவின் கைகளும் வங்காளதேச வெளியுறவு விவகாரங்களில் ஓங்கி இருந்தது

    வங்காளதேச வன்முறை 

    வங்காள தேசத்தில் ஆட்சியில் இருந்த ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியதை அடுத்து நேற்று அதன் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதனைத்தொடர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

    ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியைக் கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

     

    இந்தியாவுக்கு எதிரான மனநிலை 

    எனவே ஆட்சி மாற்றத்துடன் காட்சிகள் மாறுவதும் தவிர்க்க முடியாததாகி உள்ளது. அமையவுள்ள ராணுவ ஆட்சியால் இதுவரை இருந்துவந்த இந்தியா உடனான வங்காள தேசத்தின் வெளியுறவுக் கொள்கைகளிலும் பெரிய அளவிலான மாற்றங்கள் நடக்கலாம் என்று தெரிகிறது.

    இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார பந்தமும், பாதுகாப்பு தொடர்பான நல்லுறவும் ஷேக் ஹசீனா ஆட்சியில் வலுவடைந்தது. ஹசீனா இந்தியாவோடு அதிக நெருக்கம் காட்டுவதும், தற்போது நடந்துள்ள போராட்டத்திற்கான காரணங்களில் ஒன்று என்ற ஊகங்களையும் அரசியல் நோக்கர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தற்போது ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் அளித்துள்ளது வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான மனநிலையையே ஏற்படுத்தியுள்ளது.

    ராணுவத்தின் இடைக்கால அரசு

    ராணுவத் தளபதி வகார்-உஸ்-ஜமான் தலைமையில் அமைய உள்ள இடைக்கால அரசானது எத்தகு தன்மையோடு செயல்படும் என்பதைக் கணிக்க முடியாததாக உள்ளது. வங்காள தேசம் தனக்கான அரசியல் பாதையை வருங்காலங்களில் எவ்வாறாக அமைக்க உள்ளது என்பதைப் பொறுத்தே இந்தியாவுக்கு அதன்மூலமாக வரும் சாதக பாதகங்களைக் கணிக்க முடியும். ஆனால் தற்போதைய நிலைமையோ அதிக பாதகங்கள் இருக்கும் என்பதையே உணர்த்துவதாக அமைந்துள்ளது.  

     

    ஹசீனாவின் இந்திய சார்பு

    1997 முதல் 2001 வரை வங்காளதேச பிரதமராக இருந்த ஹசீனா அதன்பின் 8 ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு மீண்டும் பிரதமரானார். அன்றுதொட்டு தற்போது [2024 ஆகஸ்ட்]வரை பிரதமராக ஆட்சி  செய்துள்ளார் ஹசீனா. வங்காள தேசத்தில் அதிக காலம் ஆட்சியில் இருந்த பிரதமரும் இவரே ஆவார். அதற்கு முக்கிய காரணம் இந்தியாவுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவே ஆகும். எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகள் அதிகம் இல்லாமல் சமாளிக்கவும், ஸ்திரத்தன்மை கொண்ட ஆட்சியை நிலைநிறுத்தவும் இந்திய நல்லுறவு ஹசீனாவுக்கு கைகொடுத்தது. எனவே ஹசீனா இந்தியாவைச் சார்ந்திருக்கும் வரைக்கும் இந்தியாவின் கைகளும்  வங்காளதேச வெளியுறவு விவகாரங்களில் ஓங்கி இருந்தது. ஆனால் தற்போதைய நிலைமை தலைகீழாக மாறியுள்ளதையே பார்க்கமுடிகிறது.  

     

     பொருளாதார பாதிப்பு

    இந்தியாவின் வங்காளதேசத்தினுடனான வணிகத் தொடர்பும், வங்காளதேசத்தின் ஊடாக மேற்கொண்டுவந்த வணிகத் தொடர்புகளும் [ transit and shipment] தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இந்த வணிக ஒப்பந்தங்களானது 2010 முதல் பேச்சுவார்த்தை மூலம் மெல்ல மெல்ல முன்னேறி 2015 ஆம் ஆண்டில் இந்தியா- வங்காள தேசத்திற்கிடையே கையெழுத்தானதாகும். எனவே தற்போது இந்த பெருமுயற்சிகள் அனைத்தும் புதிதாக அமையவுள்ள இடைக்கால அரசின் அரசியல் முடிவுகளையே சார்ந்துள்ளது.

    ஜமாத் இ இஸ்லாமி

    வங்காளதேசத்தில் இயங்கி வரும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பானது தற்போதைய போராட்டங்களில் முக்கிய பங்காற்றியது. இந்த அமைப்பு பாகிஸ்தான் சார்புடையதாக பார்க்கப்படுகிறது. அமையவுள்ள புதிய இடைக்கால அரசிலும் ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் ஆதிக்கம் இருக்கவே செய்யும். எனவே அவர்களின் பாகிஸ்தான் சார்பு இந்தியாவுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அபாயமும் உள்ளது.

    சீன ஆதிக்கம்

    இந்திய எல்லையில் சீனா ஏற்கனவே பல்வேறு அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்திய எல்லை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறது. அமையவுள்ள இடைக்கால அரசின்  கொள்கைகள் கணிக்க முடியாத நிலையில், சீனா நிலைமையைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் சூழலும் எழுந்துள்ளது.

    நழுவும் இந்தியாவின் பிடி 

    எனவே பாகிஸ்தான், நிலைத்தன்மையற்ற வங்காள தேசம், சீன சார்பு அதிபரைக் கொண்டுள்ள மாலத்தீவு என இந்தியாவைச் சுற்றிய எல்லைகளில் இந்தியாவின் பிடி நழுவிக்கொண்டிருப்பதையே பார்க்கமுடிகிறது என்பதே புவிசார் அரசியல் உணர்த்துகிறது.

    • கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள பாரிய சிறையில் மோதல் ஏற்பட்டது.
    • தப்பியோடியவர்களில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

    வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் வங்காளதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை உடனடியாக விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முகமது ஷஹாபுதீன் உத்தரவிட்டு இருந்தார். எனினும், இதற்கான நடவடிக்கைகள் எப்போது துவங்கும் என்பது கேள்விக்குறியாக இருந்தது.

    இதனிடையே, கலவரம் காரணமாக ஷெர்பூர் சிறையில் உள்ள பாரிய சிறையில் மோதல் ஏற்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் 518 கைதிகள் தப்பியுள்ளனர். தப்பியோடிய கைதிகள் பயங்கர ஆயுதங்களை வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த சிறைச்சாலை இந்தியா-வங்காளதேச எல்லையில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்திய எல்லை பகுதியில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எல்லைப் பாதுகாப்புப் படையானது (பிஎஸ்எஃப்) எல்லையில் மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் அதன் பாதுகாப்புப் பணியை அதிகரித்துள்ளது. தப்பியோடியவர்களில் 20 பேர் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

    • ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
    • டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாக தெரிகிறது.

    வங்காளதேசத்தில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு கலவரமும், ஆட்சி மாற்றமும் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கலவரம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற இந்தியாவின் உதவியை நாடினார். எனவே அவருக்கு மத்திய அரசு உதவ முன்வந்தது.

    அதன்படி ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.

    பின்னர் அவர் டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாக தெரிகிறது. அவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குனராக உள்ளார்.

    இதனிடையே, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசினாவுக்க தற்காலிகமாக இங்கு தங்கும் அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

    ஷேக் ஹசீனா பிரிட்டனுக்கு இடம்பெயர்வதற்கான அனுமதி நிலுவையில் உள்ளதால், அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க வைக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • ஷேக் ஹசீனா, லண்டன் செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
    • குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

    வங்காள தேசத்தில்  ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிர நிலையை எட்டியதை அடுத்து நேற்று அதன் உச்சமாக ஹசீனாவின் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதனைத்தொடர்ந்து தனது சகோதரி ஷேக் ரெகானாவுடன் சேர்ந்து ராணுவ விமானம் மூலம் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார்.

     

     

    ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியதும், வங்காளதேச ராணுவம் ஆட்சியை கையில் எடுத்துக்கொண்டது. நாடு முழுவதும் போராட்டக்காரர்களை அமைதி காக்கும்படி ராணுவ தளபதி வகார்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார்.

     

    மேலும் வங்காளதேச தேசிய கட்சி செயலாளர் மிர்சா பக்ருல் இஸ்லாம் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், நாட்டின் சட்டம்-ஒழுங்குக்கான பொறுப்பை ராணுவம் ஏற்கும் என தெரிவித்தார்.

    இந்தசூழலில் ஷேக் ஹசீனாவுடன் டாக்காவில் இருந்து கிளம்பிய ராணுவ விமானம், டெல்லி அருகே காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பின்னர் அங்கு தனது மகளை சந்தித்த பின் ஷேக் ஹசீனா, லண்டன் செல்ல உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

     

     

    இந்நிலையில் பிரதமர் பதவியைத் துறந்து நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, அரசியலுக்கு இனி மீண்டும் திரும்பமாட்டார் என அவரது மகன் சஜீப் வாசேத் ஜாய் கூறியுள்ளார்.

    இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், 'வங்காள தேசத்தில் போராட்டம் வெடித்ததால் 4-ம் தேதியில் இருந்தே பதவி விலகுவது குறித்து ஷேக் ஹசீனா பரிசீலித்து வந்தார். இருப்பினும் நாட்டை விட்டு வெளியேற அவர் தயக்கம் காட்டினார். குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதால் தனது பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

     

    ஷேக் ஹசீனா ஆட்சிக்கு வந்தபோது வங்காளதேசம் ஒரு வீழ்ச்சியடைந்த நாடாக அனைவராலும் பார்க்கப்பட்டது. ஒரு ஏழை நாடாக இருந்தது. ஆனால் தற்போது ஆசியாவில் எழுச்சி பெறும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. இதற்காக கடினமாக உழைத்த தனக்கு எதிராக ஒரு சிறு குழுவினர் எழுந்ததால் அவர் ஏமாற்றத்தில் உள்ளார். இனிமேல் அவர் அரசியலுக்கு திரும்பமாட்டார்" என்று ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வாசேத் ஜாய் கூறினார்.

    • இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார்.
    • நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

    புதுடெல்லி:

    வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது.

    இதற்கிடையே, இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார். பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு மந்திரி ஜெய்சங்கருடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இந்தக் கூட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ஜெய்சங்கரை சந்தித்துப் பேசினார். அப்போது, வங்காளதேச நிலவரம், ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    • வங்காளதேசத்தில் மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா
    • ராணுவம் இடைக்கால அரசு அமைக்கும் என தளபதி அறிவிப்பு.

    மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்காளதேசம் நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்துள்ளார். இந்தியா வந்துள்ள அவரை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசியுள்ளார். இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வங்காளதேசத்தில் ராணுவம் இடைக்கால ஆட்சி அமைக்கும் அந்நாட்டு ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். மேலும் போராட்டக்காரர்கள் அமைதி நிலைக்கு திரும்ப வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்தியாவுக்கு வங்காளதேசத்தில் இருந்து ஊடுருவல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் எல்லை பாதுகாப்புப்படை உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லை பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகள் மேற்கு வங்காள மாநிலத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

    இந்த நிலையில் திரிபுரா எல்லை வழியாக ஊடுருவலை அனுமதிக்கமாட்டோம் என அமித் ஷா உறுதி அளித்துள்ளதாக திரிபுரா மாநில முதல்வர் மாணிக்யா தெப்பர்மா தெரிவித்துள்ளார்.

    அவர் பேஸ்புக் இணையதளத்தில் "உள்துறை மந்திரி அமித் ஷா உடன் பேசினேன். இந்தியா எல்லைகள் சிறந்த வகையில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஒருவரை கூட ஊடுருவ அனுமதிக்கமாட்டோம். சூழ்நிலையை அவர் கண்காணித்து வருவதாகவும், எல்லையில் படைகள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கவும் கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    வங்காளதேசத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும்போது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. வங்காளதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு வளர்ந்து வருகின்றன. இதன்காரணமாக வங்காளதேசத்துடன் எல்லையை பகிர்ந்துள்ள திரிபுரா, மேற்கு வங்காளம், மேகாலயா, அசாம் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. திரிபுரா 856 கிலோ மீட்டர் எல்லையை வங்காளதேச நாட்டு எல்லையுடன் பகிர்ந்துள்ளன.

    • ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு டாக்காவில் இருந்து வெளியேறினார்.
    • இந்தியா வந்துள்ள அவர் இங்கிலாந்திடம் அடைக்கலம் கேட்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தை அடக்க முடியவில்லை. அவர்கள் இன்று ஷேக் ஹசீனாவின் மாளிகைக்குள் புகுந்தனர். இதற்கு முன்னதாக ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறி இந்தியா வந்தடைந்தார்.

    ஷேக் ஹசீனா மாளிக்கைக்குள் சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்தனர். மாளிகையில் உள்ள சமையல் அறைக்கு சென்று சமைத்து வைத்த உணவுகளை ருசி பார்த்தனர். அங்கிருந்து படுக்கையில் படுத்து போட்டோ எடுத்துக் கொண்டனர். சிலர் ஷேக் ஹசீனா வரைந்து வைத்திருந்த போட்டோக்கள், அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்ளைடியத்தனர்.

    பெரும்பாலான போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் வளர்க்கப்பட்ட வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்துச் சென்றனர்.

    இதற்கிடையே வங்காளதேச சுதந்திரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த ஷேக் ஹசீனாவின் தந்தை முஜிபுர் ரஹ்மான் சிலையை போராட்டக்காரர்கள் உடைத்தனர்.

    • மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
    • பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ராணுவம் இடைக்கால அரசை அமைக்க உள்ளது.

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் வெடித்தது. இதனால் அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். வங்காளதேசத்தில் இடைக்கால ஆட்சி அமைக்கப்படும் என ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

    வங்காளதேசத்தில் வன்முறை வெடித்துள்ளதால் அங்குள்ளவர்கள் இந்தியாவுக்குகள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதனால் இந்தியா- வங்காளதேச மாநில எல்லையில் உயர் பாதுகாப்புக்கான உத்தரவை எல்லை பாதுகாப்புப்படை விடுத்துள்ளது. அத்துடன் எல்லை பாதுகாப்புப்படையின் பொது ஜெனரல் (பொறுப்பு) தல்ஜித் சிங் சவுத்ரி மற்றும் மற்ற சீனியர் கமாண்டர்கள் மேற்கு வங்காள மாநிலம் சென்றுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு சூழ்நிலை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    அனைத்து கமாண்டர்களுக்கும் எல்லையில் வீரர்களை குவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா- வங்காளதேச எல்லை 4096 கி.மீட்டர் நீளம் கொண்டது. மேற்கு வங்காள மாநிலத்துடன் 2217 கி.மீட்டரும், திரிபுராவுடன் 856 கி.மீட்டரும், மேகலயாவுடன் 443 கி.மீட்டரும், அசாம் உடன் 262 கி.மீட்டரும், மிசோரமுடன் 318 கி.மீட்டரும் வங்காளதேசம் இந்தியாவுடன் எல்லைகளை பகிர்ந்துள்ளது.

    ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியா-வங்காளதேச எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
    • பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தியது.

    புதுடெல்லி:

    வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கடந்த நில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது.

    இதற்கிடையே, இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்கா அரண்மனையில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    அவர் பயணம் செய்த ராணுவ விமானம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. அவரை ராணுவ அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    இந்தியா வந்தடைந்த ஷேக் ஹசீனா விரைவில் லண்டன் செல்ல உள்ளார் என தகவல்கள் வெளியாகின.

    வங்காளதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், டாக்காவுக்கான விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுத்தி உள்ளது.

    மேலும், இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம்.
    • இது இரு நாடுகளுக்கு இடையேயான விசயம். மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.

    வங்காளதேசம் நாட்டில் இடஒதுக்கீடு தொடர்பாக உண்டான மாணவர்கள் போராட்டம் மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், கடந்த நில தினங்களுக்கு முன் பிரதமர் ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என மீண்டும் வன்முறை ஏற்பட்டது.

    இந்த வன்முறை மிகப்பெரிய அளவில் வெடித்தது. இதனால் இன்று மதியம் பிரதமர் ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. லண்டன் புறப்பட்டு செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரை பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது.

    இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் வாழும் மக்கள் அமைதி காக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மம்தா பானர்ஜி "வங்காள மக்கள் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எந்தவிதமான வதந்திகளுக்கும் இடம் கொடுக்க வேண்டாம். இது இரு நாடுகளுக்கு இடையேயான விசயம். மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.

    இந்த பிரச்சனையை எப்படி அணுகுவது என்பது குறித்து இந்திய அரசு முடிவு செய்யும். மேலும் மேற்கு வங்காள மாநிலத்திலேயே அல்லது நாட்டிலோ அமைதியை சீர்குலைக்கும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். சில பாஜக தலைவர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளனர். அதை செய்யக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
    • இதையடுத்து வங்காளதேசத்தில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

    டாக்கா:

    வங்காளதேசத்தில் அரசுக்கு எதிரான வன்முறைப் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த வன்முறை மற்றும் மோதல்களில் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

    இதற்கிடையே, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன் நாட்டை விட்டு வெளியேறினார். அவர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் இந்தியாவுக்கு வந்துள்ளார். அங்கிருந்து லண்டன் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது. அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில், வங்காளதேசத்தில் போராட்டம் தொடர்ந்து நடந்து வருவதாலும், சமூக-அரசியல் பதற்றம் அதிகரித்திருப்பதாலும் டாக்காவில் செயல்பட்டு வந்த எல்.ஐ.சி. அலுவலகம் இன்று மூடப்பட்டது.

    ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால் வரும் 7-ம் தேதி வரை எல்.ஐ.சி. அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என எல்.ஐ.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டம் காரணமாக இந்தியா-வங்காளதேச எல்லை முழுவதும் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×