search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சவால்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மதுரோ ஒரு சர்வாதிகாரி என மஸ்க் கூறிய நிலையில் இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
    • குவாண்டானமோ விரிகுடாவில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய சிறையைக் குறிப்பதாகும்.

    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

    இதற்கிடையே வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். மதுரோ ஒரு சர்வாதிகாரி, அங்கு நடந்த தேர்தல் ஒரு கேலிக்கூத்து என மஸ்க் கூறிய நிலையில் இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

    மஸ்கின் குற்றச்சாட்டுக்கு அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியின் நடந்த விவாதத்தின்போது பதிலளித்த நிகோலஸ் மதுரோ, `வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க்.நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயார். நான் உங்களைக் கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார்.

    இதனால் ட்ரிகரான எலான் மஸ்க், சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன் என்றார். மேலும், 'நான் உங்களிடம் வருகிறேன் [I'm coming for you], உங்களை கிட்மோவுக்கு கழுதையில் அமர்த்தி அழைத்துச் சொல்லப்போகிறேன் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

    கிட்மோ [Gitmo] என்பது கரீபிய கடலில் கியூப பகுதியில் அமைந்துள்ள குவாண்டானமோ விரிகுடாவில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய சிறையைக் குறிப்பதாகும்.  முன்னதாக மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பார்கையும் மஸ்க் சண்டைக்கு அழைத்து குறிப்பிடத்தக்கது.

    • வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க்.
    • செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்.

    தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். அவர் கூறும்போது, சர்வாதிகாரி மதுரோ மீது அவமானம் என்ன ஒரு கேலிக்கூத்து என்றார்.

    இதையடுத்து நிகோலஸ் மதுரோ கூறும்போது, `வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க். நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயார். நான் உன்னை கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார். இதை எலான் மஸ்க் ஏற்றுக்கொண்டார்.

    இதுதொடர்பாக அவர் கூறும்போது, `சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன்' என்றார்.

    • நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.
    • ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.

    நடிகர்கள் மீது பாலியல் புகார் சொல்லி தெலுங்கு பட உலகை கலங்கடித்த நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர். ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாக ஒரு தகவல் பரவி வந்தது.

    தற்போது ஜெகன் மோகன் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், எப்போது ஆடை இல்லாமல் நடக்கப்போகிறீர்கள் என்று சமூக வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

    இதற்கு பதிலடி கொடுத்து ஸ்ரீரெட்டி கூறும்போது, "நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். நான் எனது சமூக வலைத்தளங்களளில் எந்த பதிவையும் நீக்க போவது இல்லை. உங்களுடைய கேலிக்கும், கிண்டலுக்கும் பயப்படுகிறவள் நான் இல்லை. உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன்'' என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்ஐ க்ளிக் செய்யவும்.


    • பா.ஜ.க, உடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?
    • எங்கள் கட்சியில் சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.

    அமேதி:

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் முக்கிய பிரச்சினைகளை பற்றி பேசுவதில்லை என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்த நிலையில் எந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க தயாரா? என்று ராகுல்காந்தி, பிரியங்காவுக்கு மத்திய மந்திரியும், அமேதி தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான ஸ்மிருதி இரானி சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நான் அவர்களுக்கு (ராகுல்காந்தி, பிரியங்கா) சவால் விடுகிறேன். பா.ஜனதாவுடன் எந்த பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க தயாரா?

    இதற்கான டி.வி. சேனல், தொகுப்பாளர், இடம், நேரம் ஆகியவற்றை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.

    ஒரு பக்கம் அண்ணன்-தங்கை ஜோடியும், இன்னொரு பக்கம் பா.ஜனதாவின் செய்தி தொடர்பாளர்களும் இருப்பார்கள். எல்லாம் தெளிவாகிவிடும். எங்கள் கட்சியில் இருந்து சுதான்சு திரிவேதி போதும். அவர்களுக்கான பதிலை கொடுப்பார்.

    இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறி உள்ளார்.

    கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல்காந்தியை தோற்கடித்தார். அதே நேரத்தில் வயநாட்டில் ராகல்காந்தி வெற்றி பெற்றார். ராகுல்காந்தி இந்த முறை வயநாடு, ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.
    • போதைப்பொருள்கள் குஜராத்தில் உள்ள 2 துறைமுகங்களில் இருந்து தான் வருகிறது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு ஆதரவாக கோவை கணபதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ ப்பெருந்தகை எம்.எல்.ஏ கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்தியா கூட்டணிக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் எழுச்சியோடு வாக்களிக்க மக்கள் தயாராகி ட்டனர். பிரதமர் மோடி தேர்தல் அறிக்கையில் சொன்ன எந்த வாக்குறுதியையுமே நிறைவேற்றவில்லை. ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 80 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.

    தற்போது நாட்டில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் நடமாட்டம் உள்ளது. அந்த போதைப்பொருள்கள் குஜராத்தில் உள்ள 2 துறைமுகங்களில் இருந்து தான் வருகிறது. அந்த துறை முகத்தை நடத்துவது யாரென பிரதமர் மோடிக்கு தெரியாதா? இந்த நாட்டை குட்டிச்சுவராக்க பா.ஜனதா துடித்துக்கொண்டு இருக்கிறது.

    இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை எது சொன்னாலும் பொய் தான். தற்போது பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசி வருகின்றனர். இந்திராகாந்தி தேசநலனுக்காகவும், நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் வாழ்ந்தவர். அவரை பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கிண்டல் செய்கின்றனர்.

    வெஜ் பேங் என்ற ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது என அண்ணாமலை படித்து தெரிந்து கொள்ளட்டும். 1976-ம்ஆண்டு மார்ச் 23-ந்தேதி கச்சத்தீவுக்கு ஒரு ஒப்பந்தம்.

    வெஜ் பேங்குக்கு ஒரு ஒப்பந்தம் என்று 2 ஒப்பந்தங்கள் போடப்பட்டு உள்ளது. அந்த ஒப்பந்தம் பற்றி தெரிந்து கொண்டு அண்ணாமலை பேச வேண்டும்.

    அதுதொடர்பாக என்னுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? இந்திராகாந்தி போட்ட அந்த ஒப்பந்தத்தின்படி தான் கன்னியாகுமரியில் இருந்து 50 நாட்டிக்கல் மைல் தூரத்திலும், கொழும்புவில் இருந்து 150 நாட்டிக்கல் மைல் தூரத்திலும் உள்ள இந்திய எல்லையில், உலகத்தில் இல்லாத அளவுக்கு கனிம வளங்கள், கடல் வளங்கள் கடலுக்கு அடியில் இருக்கிறது என்று கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். எனவே அண்ணாமலை கச்சத்தீவு-வெஜ்பேங் ஒப்பந்தம் குறித்து தெரியாமல் எதுவும் பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. செயல்படுத்திய வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டு காட்ட தயாரா? என ராஜேந்திரபாலாஜிக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. சவால் விடுத்துள்ளார்.
    • புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் தெற்கு மாவட்ட மாணவரணி சார்பில் ராஜபாளையத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் பொன்விழா மைதானத்தில் நடந்தது. மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டார்வேல்முருகன் தலைமை தாங்கினார். தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்பு பிரதிநிதி, மாநில விவசாய அணி செயலாளர் விஜயன் , தலைமை கழக பேச்சாளர் நன்னிலம் சந்திரசேகர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் தங்கபாண்டி யன் எம்.எல்.ஏ. பேசியதா வது:-

    கடந்த 5 ஆண்டுகளில் எதிர்கட்சி சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோது ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம், ரெயில்வே மேம்பாலம், அரசு மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேன் வசதி போன்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    தற்போது சட்ட மன்ற உறுப்பினரானபோது ராஜபாளையம் அரசு மருத்துவமனையை மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த அறிவிப்பு வெளியிட்டு ரூ. 40 கோடி மதிப்பீட்டில் அதற்கான பணியும் தொடங்கப்பட உள்ளது.

    ராஜபாளையம் வட்டம் சாத்தூர் கோட்டாட்சியர் அலுவ லகத்துடன் செயல்பட்டு வந்ததை பிரித்து மீண்டும் சிவகாசி கோட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோட்டிற்கு இணைப்பு சாலை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

    இனிவரும் ஆண்டுகளில் ராஜபாளையம் தொகுதியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு ராஜபாளையத்திற்கு அரசு பெண்கள் கல்லூரி, எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கில் இருந்து அமிழ் ஓட்டல்வரை இணைப்புசாலை அமைத்தல், ராஜபாளையம் தொகுதியில் வட்டார போக்குவரத்து கிளை அலுவலகம் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,

    ராஜபாளையம் வளர்ச்சிக்கான பணிகள் நடக்காதது போல, பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசி வருவது கண்டிக்கத்தக்கது. இதற்குமுன் இருந்த எந்தவொரு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வும் ஒரே ஒரு வளர்ச்சி திட்டமாவது கொண்டுவந்து செயல்படுத்தியதாக அவர் நிரூபிக்க தயாரா? இந்த கூட்டத்தின் வாயிலாக அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். ஆதாரங்களோடு நான் செயல்படுத்திக் கொண்டி ருக்கும் திட்டங்களை பட்டியலிட்டுக் காட்டத் தயார். அவரால் முடியுமா?

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராசா அருண்மொழி, நகராட்சி சேர்மன் பவித்ரா ஷியாம் , நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா , பேரூர் சேர்மன்கள் பாலசுப்பிரமணியன் , ஜெயமுருகன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதிராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பா ளர் நவமணி பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோ வன் சிங்கப்புலி அண்ணாவி, துணை சேர்மன்கள் கல்பனா குழந்தைவேலு, துரை கற்பகராஜ், விநாயகமூர்த்தி, காளீஸ்வரி மாரிச்செல்வம், மாணவரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கருவேல மரங்களை அகற்றுவது பெரும் சவாலாக உள்ளது என்று அமைச்சர் கூறினார்.
    • சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது

    மதுரை

    மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரியில் மாநில அளவிலான உழவர் திருவிழா நடந்து வருகிறது. இதற்காக அங்கு பிரத்தியேக ஸ்டால்கள் போடப்பட்டு உள்ளன. அங்கு வேளாண் விதைகள் மற்றும் கருவிகள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

    இதனை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    விவசாயிகளின் வளர்ச்சியை தடுக்கும் கருவேல மரங்களை அகற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இது விவசாய தொழிலை நாசமாக்கி வருகிறது. கருவேல மரங்களை எப்படி அகற்றினாலும் மீண்டும் வந்து விடுகிறது.

    தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் சிறுதானியங்களை ரேசன் கடைகளில் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது" என்று தெரிவித்து உள்ளார்.

    நிகழ்ச்சியில் தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் அனீஸ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரஞ்சித்சிங் காலோன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக துணை வேந்தர் கீதாலடசுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×