search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வைரல்"

    • வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார்.
    • ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.

    பீகாரில் வயல்வெளிக்குள் சம்பந்தமே இல்லாமல் கட்டப்பட்ட பாலம் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பீகாரின் கயா மாவட்டத்தில் ரகுநாத்பூர் கிராமத்தின் அருகே உள்ள வயல்வெளியில் ரெயில் இன்ஜின் பெட்டி கடந்த வெள்ளிக்கிழமை மாலை எந்த சம்பந்தமும் இல்லாமல் தனிமரமாகக் நின்று கொண்டிருத்தத்தை பார்த்து கிராமவாசிகள் திகைத்துள்ளனர்.

    வயல் வெளியில் நிற்கும் ரெயிலை சூழ்ந்து அதிசயமான நிகழ்வாக கிராமவாசிகள் வேடிக்கை பார்த்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் ரெயிலைக் கொண்டு வயலை உழுது பண்படுத்தும் அளவுக்கு நாம் வளர்ச்சி அடைந்துள்ளோம் என்று கிண்டலடித்து வருகிறனர்.

    வாசிர்கஞ் ரெயில் நிலையத்தில் இருந்து எந்த பெட்டிகளும் இல்லாமல் வந்த ரெயில் இன்ஜின் கயா நோக்கி செல்லும் வழியில் தடம் புரண்டு வயல்வெளிக்குள் சென்றுள்ளதாக பின்னர் தெரிவியவந்துள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் ரெயில் அதிகாரிகள் தரப்பில் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை.

    • பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார்.
    • டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார்.

    பிரிட்டனில் பிரேக் அப் ஆகியும் முன்னாள் காதலனை விடாமல் தொல்லை செய்துவந்த பெண்ணுக்கு சிறை தண்டனை-0 விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. நர்ஸ் வேலை பார்க்கும் சோபி கால்வில் [Sophie Colwill] என்ற 30 வயது பெண்ணை டேவிட் பாக்லீரோ [David Pagliero] என்ற 54 வயது பல் மருத்துவர் தனது மனைவி இறப்புக்கு பின்னர் காதலித்து வந்துள்ளார். ஆனால் சமீபத்தில் இருவருக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டதால் சோபி மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

     

    காதலனை இழக்க விரும்பாத சோபி, பிரேக் அப் ஆன அடுத்த நாளே டேவிட்டின் செல் போனுக்கு 1000 முறை போன் செய்துள்ளார். ஆனால் டேவிட் போனை எடுக்காமல் தவிர்த்துள்ளார். மேலும் டேவிட் எங்கெல்லாம் செல்கிறார் என்பதை கண்காணிக்க அவரது காரில் டிராக்கிங் டிவிஸ் பொறுத்தியுள்ளார் சோபி. இது பத்தாது என்று டேவிட்டின் வீட்டை உடைத்துக்கொண்டு உள்ளே அவர் வரும்வரை வம்படியாக பெட்ரூமில் வெயிட் செய்துள்ளார். டேவிட் வந்ததும் அவரின் போனை பிடுங்கும் முயற்சியில் அவருடன் சண்டை போட்டுவிட்டு ஜன்னல் வழியே குதித்து தப்பியுள்ளார்.

     

    சோபியின் இந்த அடாவடித்தனமான தொல்லைகளை தாங்க முடியாமல் மன உளைச்சலில் டேவிட் சோபி தன்னை தொடர்ந்து பின் தொடர்வதால் தான் பாதுகாப்பின்றி உணர்வதாகவும் தனக்கு அச்சுறுத்தலாக இருப்பதாவதும் டேவிட் அளித்த புகாரின் பேரில் போலீசார் சோபியை கைது செய்தனர். வீட்டை உடைத்து உள்ளே சென்றது உள்ளிட்ட குற்றங்கள் நிரூபணமானதால் சோபிக்கு 1 வருட சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அக மொத்தம் சிப்பு நடித்த வல்லவன் படத்தில் ரீமா சென் நடித்திருந்த கீதா கதாபாத்திரத்தை ரியல் லைபில் வாழ்ந்திருக்கிறார் சோபி.

    • சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு காசு கொடுக்க UPI QR code ஸ்கெனரை எடுத்து வரும்படி வெயிட்டரிடம் கூறியுள்ளனர்.
    • கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்துள்ளனர்

    மகாராஷ்டிராவில் சாப்பிட்ட உணவுக்குக் காசு கேட்ட வெயிட்டரை காரில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தரதரவென இழுத்து சென்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் பீட்[Beed] மாவட்டத்தில் மெஹ்கர் பந்த்ராபூர் பால்கி நெடுஞ்சாலையில் உள்ள உணவகத்தில் காரில் வந்த மூவர் உணவருந்தியுள்ளனர். சாப்பிட்டு முடித்துவிட்டு பில்லுக்கு காசு கொடுக்க UPI QR code ஸ்கெனரை எடுத்து வரும்படி வெயிட்டரிடம் கூறியுள்ளனர்.

    அவர் வருவதற்குள் நைசாக அங்கிருந்து நழுவிய மூவரும் தங்களின் காரில் ஏறி தப்ப முயன்றனர். அவர்கள் காரில் ஏறும் சமயத்தில் அவர்களை பில்லுக்கு காசு கேட்டு அந்த வெயிட்டர் தடுக்க முயன்றுள்ளார். காரின் பக்கவாட்டு கதவு வழியே வெயிட்டரின் கையை பிடித்தபடி சுமார் 1 கிலோமீட்டர் அவரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 1 கிலோமீட்டருக்கு வெயிட்டரை இழுத்துசென்ற அவர்கள் காரை நிறுத்திவிட்டு அவரை அடித்துத் துன்புறுத்தி அவரின் பாக்கெட்டில் இருந்த 11,500 ரூபாயை திருடிக்கொண்டு கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் காருக்குளேயே அடைத்து வைத்து அதன்பின் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் தப்பிச் சென்ற மூவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

    • கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படங்களில் டிராஸ் தி டெஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த படிஸ்டா, பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
    • கனடாவில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா (TIFF) தொடங்கி நடைபெற்று வருகிறது

    90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஷோவான WWE நிகழ்ச்சியில் வரும் மல்யுத்த வீரர் டேவ் படிஸ்டாவை யாராலும் மறக்க முடியாது. எவ்வளவு வலியையும் தாங்கிக் கொள்வதில் தேர்ந்தவராக படிஸ்டா [55 வயது] புகழ் பெற்று விளங்கினார். தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் படிஸ்டா நடிகராக கலக்கி வருகிறார்.

     

    மார்வெல் யுனிவெசில் கார்டியன்ஸ் ஆப் கேலக்சி படங்களில் டிராஸ் தி டெஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்த படிஸ்டா, பிளேட் ரன்னர் 2047, DUNE உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து பல்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் படிஸ்டாவின் டிரான்ஸ்பர்ண்மெசன் புகைப்படம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

     

    கனடாவில் கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா (TIFF) தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தான் நடித்திருந்த The Last Showgirl படத்தின் திரையிடலுக்காக வந்த படிஸ்டாவின் புது லுக் வைரலாகி வருகிறது.

     

    கடந்த 2022 ஆம் ஆண்டு பொதுவெளியில் தோன்றியபோது எடுக்கப்பட்ட படிஸ்டாவின் புகைப்படங்களையும் தற்போதய புகைப்படத்தையும் பதிவிட்டு படிஸ்டாவுக்கு என்னாச்சு என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகினர். தனது ஜிம் பாடி லுக்கில் இருந்து மாறுபட்டு மிகவும் ஒல்லியான தோற்றத்தில் பாடிஸ்டா உள்ளதே இந்த கேள்விக்கு காரணம். டொரோண்டோ [Toronto] சர்வதேச திரைப்பட விழா வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றினார்
    • அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

    மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கதுரை இணை அமைச்சர் சதீஸ் சந்திர தூபேவின் ஷூவை கழற்றி அவரின் கால் சட்டையை மற்றொருவர் சரி செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்துக்கு வருகை தந்துள்ள அமைச்சர் சதீஸ் சந்திர தூபே தன்பாத் நகரில் உள்ள சுரங்கம் ஒன்றை பார்வையிட சிறப்பு  உபகரணங்கள் அணிந்து தயாராகியுள்ளார்.

    பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (பிசிசிஎல்) என்ற அரசின் நிலக்கரி நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் (GM) பதவியில் உள்ள அரிந்தாம் முஸ்தாபி [Arindam Mustafi] அமைச்சரின் ஷூவை கழற்றி அவர் அணிந்திருந்த பைஜாமா கால் சட்டையின் கயிறை அட்ஜஸ்ட் செய்து பணிவிடை ஆற்றியுள்ளார்.

    அமைச்சர் ஷோபாவில் ரிலாஸ்க்காக அமர்ந்திருக்க முஸ்தாபி இந்த பணிவிடைகளை அவருக்கு செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டங்களை குவித்து வருகிறது. பிசிசிஎல் அதிகாரிகள் தங்களின் ஊழலை மறைப்பதற்காக இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடுவதாக தன்பாத் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    • விபத்து ஏற்படுத்திய அந்த பெண் நடாஷா டானிஷ் என்பதும் பாகிஸ்தானின் பணக்கார குடும்பம் ஒன்றை சேர்த்தவர் என்பதும் தெரியவந்தது.
    • கேமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.

    பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடத்த விபத்து ஒன்றில் தொழிலதிபரின் மனைவி ஓட்டி வந்த சொகுசு SUV கார் மோதி சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டுறதுந்த தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கடைகளுக்கு பேப்பர் விற்பனை செய்யும் இம்ரான் ஆரிப் மற்றும் அவரது மகள் ஆம்னா என்று பின்னர் தெரியவந்தது. இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

    விபத்து ஏற்படுத்தியதும் காரை பொதுமக்கள் சூழ்ந்த நிலையில் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது காரை விட்டு இறங்கிய அந்த பெண் இரண்டு பேரை கொன்றுவிட்டோமே என்ற குற்றவுணர்வு துளியும் இல்லாமல் போலீஸ் நம்மை கைது செய்துவிடும் என்றகேமராவை பார்த்து வில்லத்தனமாக சிரித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவியது.

    விபத்து ஏற்படுத்திய அந்த பெண் நடாஷா டானிஷ் என்பதும் பாகிஸ்தானின் பணக்கார குடும்பம் ஒன்றை சேர்த்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் நடாஷா பிரபல தொழித்ததுபரின் மனைவியும் ஆவர். விபத்து தொடர்பாக நடாஷாவிடம் விசாரணை நடந்து வந்த நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு நேற்று வந்தது. அப்போது, நடாஷாவுக்கு மன ரீதியான பிரச்சனை உள்ளதென்றும் கடந்த 2005 முதல் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்தார்.

    மேலும் நீதிபதி முன்னாள் உயிரிழந்த தந்தை மகளின் உறவினர்களும், நடாஷாவின் உறவினர்களும் தோன்றினர். அப்போது உயிரிழந்தவர்களின் உறவினர்கள் நடாஷாவுக்கு மன்னிப்பு வழங்கியதால் நீதிமன்றம் நடாஷாவுக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இதைத்தொடர்ந்து நடாஷா குடும்பத்திடம் இருந்து [ரத்தம் படிந்த] பணம் வாங்கிக்கொண்டு அவர்கள் மன்னிப்பு வழங்கியுள்ளனர் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

    பாகிஸ்தானில் ஷரியத் சட்டப்படி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அவர்களின் உயிரிழப்புக்கு காரணமானவர்களுக்கு மன்னிப்பு வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டப்பிரிவுக்கு க்விசாஸ் மற்றும் தியாத் என்று பெயர். 

    • எதிரே மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • துகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    டெல்லியில் எதிர் திசையில் மெட்ரோ ரெயில் வந்துகொண்டுருக்கும்போது அதை நோக்கி ரெயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர் ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த புதன்கிழமை மதியம் ராஜேந்திர நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகே நடந்த இந்த சம்பவத்தில் ரெயில் தடத்தின் அருகே ஓடிக்கொண்டிருத்த பெண்ணை பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு துண்டுகட்டாக தூக்கிக்கொண்டு பிளாட்பார்முக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

    அதன்பின் அந்த பெண் மெட்ரோ போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார். பெண்ணுக்கு கவுன்சிலிங் வழங்கிய மெட்ரோ போலீஸ் பெற்றோரிடம் அவரை ஒப்படைத்துள்ளது. தற்கொலை செய்து கொள்வதற்காக அந்த பெண் முயற்சி செய்தாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. 

    • பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல் விவாதமாகியுள்ளது
    • அவர் நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்கணிப்பார்

    பாகிஸ்தானில் தனது மகளின் தலையில் கேமராவை பொருத்தி 24 மணிநேரமும் கண்காணிக்கும் தந்தையின் செயல்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையின் செயல் குறித்து செய்தியாளருக்கு தலையில் கேமராவுடன் அந்த பெண் பேட்டி அளித்த வீடியோ இணையத்தில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அந்த வீடியோவில், தனது பாதுகாப்புக்காகத் தந்தை தனது தலையில் செக்யூரிட்டி கேமராவை பொறுதியுள்ளார் என்றும் இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டில் இருந்தபடியே அவர் தான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை கண்காணித்து வருகிறார் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

    இது உங்களுக்கு அசவுகரியமாக இல்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த அந்த இளம்பெண், எனது தந்தையின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.அவர் எது செய்தலும் எனது நல்லதற்கு தான் செய்வார் என்று தெரிவித்துள்ளார். 

    • புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே மோதல் ஏற்பட்டது
    • இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயிலை யார் ஓட்டுவது என்று லோகோ பைலட்டுகளிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறி சண்டையில் முடிந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூருக்கு செல்லும் புதிய வந்தே பாரத் ரெயில் இந்த வார ஆரம்பத்தில் செப்டம்பர் 2[திங்கள் கிழமை] தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த ரெயிலை மேற்கு மத்திய ரெயில்வே, வட மேற்கு ரெயில்வே மற்றும் வடக்கு ரயில்வே ஆகிய மூன்று டிவிஷன் லோகோ பைலட்களும் ரெயிலை இயக்க உத்தரவு வந்த நிலையில் தினமும் யார் ரெயிலை இயக்குவது என்பதில் இந்த மூன்று டிவிஷன் ரெயில் லோகோ பைலட்கள் இடையே தினமும் வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த வியாழன் அன்று ஆக்ரா மற்றும் கோட்டா ரெயில்வே டிவிஷன் லோகோ லோகோ பைலட்கள் மற்றும் ஊழியர்கள் இடையே கடுமையான சண்டை மூண்டுள்ளது.

    இதில் ஒரு லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் தாக்கப்பட்டு அவர்களது சட்டைகள் கிழிக்கப்பட்டது. மேலும் கார்டு ரூமின் போட்டு உடைக்கப்பட்டு கண்ணாடிகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த சண்டை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த கோஷ்டி மோதல் பிரச்சனைக்கு இன்னும் ரெயில்வே தீர்வு காணவில்லை என்று தெரிகிறது. 

    • கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
    • நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மாதம் ரூ.12,000 சம்பளம் வாங்கும் கணவன் குழந்தை பராமரிப்பு செலவாக மாதம் ரூ.10,000 வழங்க வேண்டும் என்ற மனைவியின் கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் விவாகரத்து வழக்கு ஒன்றில் கணவரிடம் இருந்து பராமரிப்புச் செலவுக்குப் பணம் கோரி மனைவி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது கணவன் ரூ.12,000 மட்டுமே சம்பளம் வாங்குவதை அறிந்த நீதிபதி, உங்களுக்கு ரூ.10,000 கொடுத்துவிட நீதிமன்றம் உத்தரவிட்டால் அவரால் எப்படி வாழ முடியும்? என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கணவரின் ஊதியம் அதிகரித்தால், குழந்தை பராமரிப்பு செலவை அதிகரிக்கக்கோரி மனைவி மற்றொரு வழக்கு தொடரலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • Hawk Tuah என்பது நெட்டிஸின்களுக்கு பரிட்சயமான ஒரு சொல்
    • ஆபாச நடிகை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்

    ஹா தூ[Hawk Tuah] என்பது நெட்டிஸின்களுக்கு பரிட்சயமான சொல்லாக மாறிப் போயுள்ளது. இணையத்தில் பரவிய வைரல் வீடியோ ஒன்றில் பெண் ஒருவரிடம் பாலியல் உறவு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலே ஹா தூ [Hawk Tuah]. இதுதொடர்பான மீம்கள் இணையத்தில் உலா வரும் நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பையும் Hawk Tuah வார்த்தையையும் இணைத்து டீ - சர்ட் அணிந்த நபர் விமானத்தில் இருந்து இறங்கிவிடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸில் ஏறிய இளைஞர் ஒருவர் தான் செக்யூரிட்டியைத் தாண்டி வரும்வரை உள்புறம் வெளியிலும் வெளிப்புறம் உள்ளே இருக்குமாறு தான் அணிதிருத்த டி சர்ட்டை கழற்றி டிரம்ப் மற்றும் Hawk Tuah மீமியை இணைத்து மோசமான வகையில் சித்தரிக்கும் படம் கொண்ட டீ சர்டின் பகுதி வெளியே தெரியுமாறு அணிந்துள்ளார்.

    இதை கவனித்த விமான ஊழியர்கள் அந்த இளைஞரை விமானத்திலிருந்து வெளியேற்றியுள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆபாச நடிகை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது
    • கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர்.

    பாகிஸ்தானில் செகண்ட் ஹேண்ட் துணிகள் மற்றும் பொருட்களை விற்கும் மால் திறக்கப்பட 30 நிமிடங்களுக்குள் மொத்தமாக கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில்  கடந்த வெள்ளிக்கிழமை அன்று ட்ரீம் பஜார் என்று அழைக்கப்படும் மால் திறப்புக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது.

    ஆரம்ப சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15 க்கும் குறைவாக [PKR 50] பொருட்கள் வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில் மால் திறப்பு விழாவில் ஆயிரக்கணக்கோர் திரண்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் மால் ஊழியர்கள் கதவை அடைத்தனர்.

    ஆனால் கண்ணாடியை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த மக்கள், துணிகள், பொருட்கள் என அனைத்தையும் திருடி அதை வீடியோவும் எடுத்து மகிழ்ந்துள்ளனர். மதியம் 3 மணிக்கு மால் திறக்கப்பட்ட நிலையில் 3.30 மணிக்குள் மால் முற்றிலுமாக காலி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×