search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயநாடு நிலச்சரிவு"

    • தற்போது வரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் உடல்கள் அடங்கும்.
    • 67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. இன்னும் 206 பேரை காணவில்லை.

    கேரள மாநிலம் வயநாட்டில் மோசமான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. கடந்த 29-ந்தேதி இரவு கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. 30-ந்தேதியில் இருந்து மீட்புப்பணிகள் தொடங்கின. தற்போது வரை மாயமான மக்களை தேடுதல் மற்றும் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

    இந்த நிலையில் தேடுதல் மற்றும் மீட்புப்பணி கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பினராயி விஜயன் கூறுகையில் "தற்போதுவரை 215 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகள் உடல்கள் அடங்கும். அவற்றில் 148 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இன்னும் 206 பேரை காணவில்லை. 81 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    67 உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பஞ்சாயத்து சார்பில் இறுதிச்சடங்கு நடத்தப்படும். பாதுகாப்பான பகுதி கணடறியப்பட்டு நகர்ப்புறம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    • நடிகர் மோகன்லால் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    • சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம்.

    டெரிடோரியல் ஆர்மியில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் நடிகர் மோகன்லால் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை கிராமத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ராணுவ வீரர்களிடம் மீட்பு பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், "சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தை காட்டுவோம், ஜெய்ஹிந்த்" என்று கூறினார்.

    நிலச்சரிவை நேரில் ஆய்வு செய்த பின்னர் நடிகர் மோகன்லால், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ.3 கோடி ரூபாய் அளித்துள்ளார்.

    ஏற்கனவே ஒரு சில தமிழ் நடிகர்கள் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி அளித்துள்ள நிலையில் நடிகர் மோகன்லால் இன்று 3 கோடி ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.
    • விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நடராஜபுரம் தெருவில் உள்ள சிவசக்தி பத்திரகாளியம்மன் கோவில், மலையாளத்து சுடலை மகாராஜா கோவில் ஆடி கொடை விழா மற்றும் பூக்குழி திருவிழா கடந்த 1-ந்தேதி தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாமக்கொடை மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில் கோவில் பூசாரி ஸ்ரீ சங்கர் சுவாமிகள் கை மற்றும் நாக்கு ஆகியவற்றை அறுத்து அதில் வழிந்த ரத்தத்தை உணவில் கலந்து சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையடுத்து ஆட்டினை அறுத்து அது சுடலை மகாராஜா சுவாமிக்கு கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் ஸ்ரீ சங்கர் சுவாமிகள் குழந்தைகளை கையில் வைத்துக் கொண்டு மேளதாளம் முழங்க பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சங்கர் சுவாமிகள் அருள்வாக்கு வழங்கினார்.

    அப்போது அவர் கூறுகையில், தர்மம் அழிந்து அநீதி அதிகரித்த காரணத்தினால் தான் வயநாடு நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் நடைபெற்று வருவதாகவும், அந்த இயற்கை சீற்றங்கள் தமிழகத்தை நோக்கி வருவதாகவும், மக்களின் சுயநலம்தான் இதற்கு காரணம் என்றார். விழாவில் கோவில்பட்டி மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
    • ராணுவ வீரர்களின் மீட்பு பணிகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ந்தேதி கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதால் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 350-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 5-வது நாளாக நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சூழலில் நடிகர் மோகன்லால் இன்று காலை கோழிக்கோட்டில் இருந்து சாலை வழியாக மேப்பாடி சென்றார். அவர் ராணுவ சீருடையில் சென்று நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டார். மோகன்லால் டெரிடோரியல் ஆர்மியில் லெப்டினன்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ராணுவ சீருடையில் சென்ற மோகன்லால், டெரிடோரியல் ஆர்மியின் அடிப்படை முகாமை சென்றடைந்ததும் அங்குள்ள வீரர்களிடம் கள நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், "சவால்களை எதிர்கொண்டாலும், நாங்கள் எப்போதும் வலுவாக இருந்து வருகிறோம். இந்த இக்கட்டான நேரத்தில் ஒற்றுமையாக இருந்து நமது பலத்தை காட்டுவோம், ஜெய்ஹிந்த்" என்றார்.

    life rescue radar என்னும் கருவியுடன் மண்ணில் புதைந்தோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியதில் இருந்தே, பலத்த மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்களின் விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மையம் தினமும் அறிவித்தபடி இருக்கிறது.

    தற்போது கனமழையால் வயநாட்டில் பெரும் உயிர்ப்பலி மற்றும் சேதம் ஏற்பட்ட நிலையில், கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் விவரத்தை தெரிவித்து வருகிறது.

    அதன்படி வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வடகேரள கடற்கரை பகுதியில் மணிக்கு 35 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு 30-ம் தேதி காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்தது.
    • மஞ்சள் நிற எச்சரிக்கையின் அடிப்படையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கமாக அரசு மேற்கொள்வதில்லை.

    கேரளா மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஆனால் அதிகனமழை, நிலச்சரிவு பற்றிய துல்லிய வானிலை எச்சரிக்கையை அளித்திருந்தால், மக்களை அங்கிருந்து இடமாற்றம் செய்திருக்கலாமே என்ற குரல்கள் கேட்கின்றன.

    இதுகுறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, 'கேரள அரசுக்கு கடந்த 23-ம் தேதி, முதல் வானிலை எச்சரிக்கை, மத்திய அரசால் அளிக்கப்பட்டது. அதே எச்சரிக்கை அடுத்தடுத்து 3 நாட்களுக்கு அளிக்கப்பட்டன. அங்கு 20 சென்டி மீட்டர்க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று கேரளா அரசுக்கு 26-ம் தேதி எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு, நிலச்சரிவும் ஏற்படலாம், அதனால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டது' என்று தெரிவித்தார்.

    மத்திய மந்திரி அமித்ஷா கூறியதை மறுத்த கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன், 'இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி.), இந்திய புவியியல் ஆய்வகம் (ஜி.எஸ்.ஐ.) மற்றும் மத்திய நீர் ஆணையம் ஆகிய 3 முகமைகளுமே, வயநாட்டில் 30-ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவிற்கு முன்பு, ரெட் அலர்ட் என்ற சிகப்பு நிற எச்சரிக்கையை (மிகஅதிக அளவிலான மழை பாதிப்பு பற்றிய எச்சரிக்கை) அளிக்கவில்லை.

    நிலச்சரிவு ஏற்பட்ட பிறகு 30-ம் தேதி காலை 6 மணிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்தது. மேலும், 30 மற்றும் 31-ம் தேதிகளுக்கு ஜி.எஸ்.ஐ. கொடுத்தது பச்சை நிற எச்சரிக்கையைத்தான் (மிகக்குறைவான மழை பாதிப்பு பற்றிய எச்சரிக்கை). அதில், சிறிய அளவில் நிலச்சரிவோ அல்லது பாறை வெடிப்போ ஏற்படலாம் என்றுதான் கூறப்பட்டு இருந்தது. மத்திய மந்திரி அமித்ஷா கூறும் கருத்து, உண்மைக்கு முரணாக உள்ளது'' என்று கூறினார்.

    உண்மையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்த செய்திக் குறிப்பு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் உள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

    அதன்படி இந்திய வானியை ஆய்வு மைய ஜூலை 18-ம் தேதி செய்திக்குறிப்பில், 19-ம் தேதி கேரளாவின் வடபகுதியில் வெள்ளம் ஏற்படக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. ஜூலை 23-ம் தேதி செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் மாகேயில் 25-ம் தேதி சில இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும்; சில இடங்களில் 27-ம் தேதிவரை கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அந்த வகையில், ஜூலை 25-ம் தேதிக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் (அதிக மழைக்கான எச்சரிக்கை), 23, 24, 26, 27-ம் தேதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் (சற்று கூடுதல் மழை பாதிப்பு எச்சரிக்கை) அளிக்கப்பட்டது. மஞ்சள் நிற எச்சரிக்கையின் அடிப்படையில் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கமாக அரசு மேற்கொள்வதில்லை.

    ஜூலை 25-ம் தேதி செய்திக்குறிப்பில், கேரளா மற்றும் மாகேயில் இடி, மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை அடுத்த 5 நாட்களுக்கு பெய்யக்கூடும், சில இடங்களில் கனமழை பெய்யலாம் என்று கூறப்பட்டு இருந்தது. ஜூலை 29-ம் தேதி செய்திக்குறிப்பில், அதிக மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டது. ஆனால் 30-ம் தேதியன்று அதிகாலையில் நிலச்சரிவு பேரிடர் நேரிட்டது. அதன் பிறகுதான் 30-ம் தேதி பிற்பகல் 1.10 மணிக்கு ரெட் அலர்ட் என்ற சிகப்பு நிற எச்சரிக்கை அளிக்கப்பட்டது. 

    • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளிரவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    இந்த கோர நிலச்சரிவில் சிக்கி இதுவரை 340க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் அட்டமாலா வனப்பகுதியில் சிக்கித்தவித்த பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேரை 8 மணி நேரம் போராடி கேரள வனத்துறை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

    இந்த சம்பவத்தின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டியுள்ளார்.

    அவரது பதிவில், "இத்தகைய இருண்ட காலத்திலும் இதுபோன்ற சூப்பர் ஹீரோக்களால் கேரளாவின் புகழ் பிரகாசமாக ஜொலிக்கிறது என்பதை இவர்களின் வீரம் நமக்கு நினைவூட்டுகிறது" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    • நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 4வது நாளாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நிவாரணப் பணிகளுக்காகக் கேரளா சென்றுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காகக் கேரளாவுக்குச் சென்றுள்ள நமது இரண்டு IAS அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் முழு முனைப்புடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவர்களது பணிகள் குறித்துக் கேட்டறிந்ததோடு, தவிக்கும் கேரள மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து உதவத் தமிழ்நாடு தயாராக இருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கூறும்படி அறிவுறுத்தியுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 20 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்து நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை கொடுத்தோம்- அமித் ஷா
    • மாநிலங்களவையில் அமித் ஷா சொன்னது தவறு என்பது நிரூபணமாகியுள்ளது- ஜெய்ராம் ரமேஷ்

    கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 29-ந்தேதி நள்ளிரவு கனமழை மற்றும் மேக வெடிப்பு காரணமாக மழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    இதனால் சில கிராமங்கள் மண்ணில் புதைந்தன. தற்போது வரை பலி எண்ணிக்கை 340-ஐ தாண்டியுள்ளது. இதற்கிடையே வயநாடு நிலச்சரிவு தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசும்போது, கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் கேரள அரசு எச்சரிக்கையை செயல்படுத்தவில்லைத் தெரிவித்திருந்தார்.

    இதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜய் மறுத்திருந்தார். 30-ந்தேதி காலையில்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தார்.

    அந்த நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக கூறியதை மறுத்து காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

    ஜெய்ராம் ரமேஷ் வழங்கிய நோட்டீஸில் "மத்திய அரசின் முன்னெச்சரிக்கை குறித்த மத்திய உள்துறை மந்திரியின் அறிக்கைகள் பொய் என நிரூபிக்கப்பட்டதன் மூலம் ராஜ்யசபாவை தவறாக வழி நடத்தியது தெளிவாகிறது. ஒரு அமைச்சர் அல்லது உறுப்பினர் சபையை தவறாக வழி நடத்துவது சிறப்புரிமையை மீறுவதாகவும், அவையை அவமதிப்பதாகவும் அமைகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    கடந்த புதன்கிழமை அமித் ஷா மாநிலங்களவையில் "நிலச்சரிவு ஏற்படுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக ஜூலை 23-ந்தேதி மத்திய அரசு முன்னெச்சரிக்கை கொடுத்தது. ஜூலை 24 மற்றும் 25-ந்தேதி மீண்டும் எச்சரித்தோம். ஜூலை 26-ந்தேதி 20 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டது. மேலும் நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டது" என அமித் ஷா தெரிவித்தார்.

    • தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது.
    • மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தபோது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று நான்காம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ளது.

    மேலும், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும்.

    மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன.
    • நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்.

    நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாட்டிற்கு நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

    மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், " பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நாம் ஒன்றுபட்டு நிற்போம்" என்று நயன்தாரா கூறினார்.

    வயநாட்டில் ஏற்பட்ட சோகமான நிலச்சரிவு சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்கங்களுடன் எங்கள் இதயம் இருக்கிறது.

    சமூகம் அனுபவிக்கும் சீரழிவுகளும் இழப்புகளும் நெஞ்சைப் பிசைகின்றன. மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தை நாங்கள் நினைவுபடுத்துகிறோம்.

    ஒற்றுமையின் அடையாளமாக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான உடனடி உதவிகளை வழங்கவும், மறுசீரமைப்புச் செயல்பாட்டில் உதவி செய்யவும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.20,00,000 (ரூபா இருபது லட்சம் மட்டும்) வழங்குகிறோம்.

    நமது அரசாங்கம், தன்னார்வத் தொண்டர்கள், மீட்புக் குழுக்கள் மற்றும் பல அமைப்புகளின் ஒருங்கிணைந்த உதவியைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    மீண்டும் கட்டியெழுப்பவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் நாம் ஒன்றுபட்டு நிற்போம்!

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மீட்பு பணிகள் நான்காம் நாளை எட்டியது.
    • தேசிய பேரிடராக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்படுகிறது.

    கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நள்ளரிவு வேளையில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது அடுத்தத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டதில் பலநூறு குடும்ங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.

    வீடுகள் இடிந்து விழுந்தும், மரங்கள் வேறோடு சாய்ந்தும், தொடர் கனமழை போன்ற காரணங்களால் மீட்பு பணிகள் இன்னமும் முடிவுக்கு வராத சூழல் நிலவுகிறது. இன்று நான்காம் நாளை எட்டிய மீட்பு பணிகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 316-ஐ கடந்துள்ளது.

     


    மேலும், நிலச்சரிவில் புதைந்தவர்களை தேடுவதற்கு தெர்மல் ஸ்கேனர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தெர்மல் ஸ்கேனர் கொண்டு தேடும் போது சேறு, சகதிகளில் யாரேனும் சிக்கி இருந்தால் அதனை ஸ்கேனர் காட்டிக் கொடுக்கும்.

    நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் உடல் பாகங்கள் சிதைந்து இருப்பது, மண்ணோடு மண்ணாக பலர் புதைந்து உயிரை பறிக் கொடுத்தது, உறக்கத்தில் பலர் உயிரைவிட்டது என வயநாடு முழுக்க மரண ஓலம் ஓங்கி ஒலிக்கிறது. இந்த நிலையில், இந்த இயற்கை அசம்பாவிதத்தை தேசிய பேரிடராக அறிவிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    ×