search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical"

    • 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் உள்ளன.
    • நவம்பர் மாதம் 25-ந் தேதி வெளியிட உள்ளதாக தகவல்.

    மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான பாடப்புத்தகங்களை இந்தி மொழியில் உத்தரபிரதேச மாநிலம் மொழி பெயர்த்தது.

    அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இதேபோல் தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்த பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி, மருத்துவப்படிப்பில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான 5 புத்தகங்கள் கடந்த 2022-ம் ஆண்டில் மொழி பெயர்க்கப்பட்டன. இதில் மருத்துவ உடற்செயலியல் உள்ளிட்ட 2 புத்தகங்கள் அதிக பக்கங்களையும், 3 புத்தகங்கள் குறைந்த பக்கங்களையும் கொண்டவையாக இருந்தன.

    அதன்படி, மருத்துவ உடற்செயலியல் புத்தகம் முதலில் வெளியிடும் போது, முதல் தொகுதி மட்டும் வெளியிடப்பட்டது.

    தற்போது அதன் 2-வது தொகுதியையும் சேர்த்து முழு புத்தகமாக தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு 36 மருத்துவக்கல்லூரிகள், நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு இருக்கின்றன.

    இதனைத் தொடர்ந்து நடப்பாண்டில் மருத்துவப்படிப்புக்கான 700 முதல் 800 பக்கங்களை கொண்ட 'மருத்துவ நுண்ணுயிரியியல்', 'மகப்பேறு மருத்துவம்' ஆகிய 2 புத்தகங்கள், என்ஜினீயரிங் படிப்புக்கான 4 புத்தகங்கள், இதுதவிர அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி சார்ந்த படிப்புகளுக்கான ஆங்கில வழி புத்தகங்கள், தமிழ்வழியில் மொழி பெயர்க்கப்பட்டு இருக்கின்றன.

    அதேபோல், ஆங்கில இலக்கியங்கள் தமிழிலும், தமிழ் இலக்கியங்கள் ஆங்கில மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

    அந்தவகையில் 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு தயார்நிலையில் இருப்பதாகவும், வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி (திங்கட்கிழமை) சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இந்த புத்தகங்களை சசிதரூர் எம்.பி. வெளியிட உள்ளதாகவும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதுபோன்ற உயர்கல்விச் சார்ந்த 200 பாடப்புத்தகங்களை ஒவ்வொரு ஆண்டும் மொழி பெயர்த்து வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இலக்கு நிர்ணயித்து பணிகளை மேற்கொள்கிறது.

    அதன்படி, தற்போது வரை 120 புத்தகங்கள் மொழி பெயர்க்கும் பணிகள் முடிந்து நவம்பரில் வெளியிட உள்ள நிலையில், மீதமுள்ள புத்தகங்கள் வருகிற ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

    • இந்த கடை பொதுமக்களுக்கு சேவை அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
    • கொரனா நோய்த்தொற்று காலங்களில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.

    திருமானூர்

    திருமானூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது பார்கவி மெடிக்கல். இந்த கடை பொதுமக்களுக்கு சேவை அளிப்பதற்காக 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

    மழை, புயல் எந்த காலத்திலும், மக்களுக்கு சேவை அளிப்பதில் இந்த மருந்து கடை முதலிடம் வகிக்கிறது.

    எந்த நேரமாக இருந்தா லும் இந்த கடைக்கு சென்றால் நமக்கு தேவையான மருந்துகளை வாங்கலாம் என்று பொதுமக்கள் நம்பி வருவது பார்கவி மெடிக்கலைதான்.

    திருமானூர் ஒன்றியத்தில் 36 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. அடித்தட்டு மக்களில் இருந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் மருத்துவ சேவை செய்து வருபவர் பார்க்கவி மெடிக்கல் நிறுவனத்தார்.

    கொரனா நோய்த்தொற்று காலங்களில் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.

    வேளான் மக்கள் அதிகமாக வாழ்கின்ற திருமானூர் பகுதியில் நோய்த்தொற்று காலங்களில் சவாலான நாட்களை சந்தித்த பொதுமக்களுக்கு இரவு பகல் பாராமல் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சேவை செய்தனர்.

    நல்ல சமூக சிந்தனை தொலைநோக்கு பார்வை இவற்றை தன்னகத்தே கொண்டு சேவையாற்றி வரும் பார்கவி மெடிக்கல் நிறுவனத்தாரை திருமானூர் பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    மேலும் பார்க்கவே மெடிக்கல் கால்நடைகளுக்கு மருந்துகள் விற்பனை செய்து வருகிறது.

    • நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அரசு சார்பில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • மாதந்தோறும் 250 நோயாளிகள் வரை போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் மனநல சிகிச்சைத் துறை செயல் படுகிறது. இந்த துறையில் போதைக்கு அடிமையான நோயாளிகள் உள்நோயாளி களாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த வார்டில் உள்ள நோயாளிகளை கவனிக்க தற்காலி கமாக தொகுப்பூதி யத்தில் செவிலியர்கள் உள்ளிட்டோர் நியமிக்கப் பட்டனர். அதன்படி செவிலியர், மன நல ஆலோ சகர், தரவு உள்ளீட்டாளர், இரவு காவலர், இதர பணியா ளர்கள் என சுமார் 13 பேர் வரை நியமனம் செய்ய ப்பட்டு இருந்தனர். அவர்க ளுக்கு டாஸ்மாக் நிறுவனம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு போதை மறுவாழ்வு சிறப்பு மையங்கள் செயல்பட்டு வந்தது.

    நெல்லை உள்பட 7 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் அரசு சார்பில் இந்த மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை பழைய கட்டிடத்தில் போதைக்கு அடிமை யானவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் 13 பேரின் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததது. மேலும் அவர்களுக்கு மாதம் ஊதியமாக ரூ.13 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த 22-ந்தேதி வழக்கம்போல் பணிக்கு சென்ற செவிலியர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இனி பணிக்கு வரவேண்டாம். தங்களுக்கு ஊதியம் வழங்க டாஸ்மாக் நிறுவனம் இனி நிதி ஒதுக்காது என தெரிவித்து விட்டதால் இந்த மையத்தை கவனிக்க இனி ஊழியர்களை நியமிக்க முடியாது என்று அவர்க ளிடம் தெரிவிக்கப்பட்டது.

    இதுகுறித்து பாதிக்க ப்பட்ட செவிலி யர்கள் கூறுகையில், குடிப் பழக்க த்தால் பலரும் அடிமை யாகி இளம் தலைமுறை யினரும் சீரழிந்து வரும் நிலையில் மக்களிடம் வரவேற்பு பெற்ற இந்த மறுவாழ்வு மையம் நிதி ஒதுக்கப்படா ததால் முடக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் நிறு வனம் மூலம் உரிய நிதியை பெற்று தந்து எங்களது வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்.

    மாவட்டத்தில் குறைந்த பட்சம் மாதந்தோறும் 250 நோயாளிகள் வரை போதைக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்து வருகிறோம். தற்போது அரசின் முடிவால் எங்களது வாழ்வாதாரமும் கேள்வி குறியாகி உள்ளது. எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதனை கவனத்தில் எடுத்து எங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றனர்,

    • அன்னவாசல் புதுத்தெருவை சேர்ந்த 4 வயது சிறுவன் காதில் இருந்த கல் அகற்றப்பட்டது
    • அரசு டாக்டர் வெற்றிகரமாக காதில் இருந்த கல்லை அகற்றினார்

     புதுக்கோட்டை,

    அன்னவாசல் புதுத்தெருவை சேர்ந்த 4 வயது சிறுவன் நேற்று தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்தான். அப்போது காதுவலியால் அலறி துடித்தான். இதையடுத்து சிறுவனின் பெற்றோர் அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் டாக்டர் மணியன் சிறுவனை பரிசோதித்தபோது அவனது காதில் சிறிய அளவிலான கல் இருப்பதை கண்டறிந்தார். அதன்பின்னர் சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் சிறுவனின் காதில் இருந்த கல்லை வெளியில் எடுத்தார். பின்னர் சிறுவன் சகஜ நிலைக்கு திரும்பினான். இதையடுத்து அரசு டாக்டருக்கு சிறுவனின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.

    • ஸ்டென்டிங் சிகிச்சை மூலம் 2 ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை அகற்றியது.
    • நெல்லையில் ரத்தக்குழாய் மூலமாகவே இந்த நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை காவேரி ஆஸ்பத்திரியில் 77 வயது பெண்ணுக்கு அதிநவீன இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.இதுகுறித்து இதய சிகிச்சை டாக்டர் மகபூப் சுபுஹாணி கூறியதாவது:-

    பாளையங்கோட்டையை சேர்ந்த 77 வயது பெண்ணுக்கு, நடந்து செல்லும் போது மூச்சு திணறல் மற்றும் படபடப்பு ஏற்பட்டு வந்துள்ளது. அவர் காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    முழு உடல் பரிசோதனை செய்த போது அவருக்கு இருதய பெருந்தமணி வால்வில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. ஆஞ்சி யோகிராம் பரிசோதனை செய்து பார்த்ததில், இதயத்துக்கு செல்லும் 2 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து எனது தலைமையில் மருத்துவ குழு ஆஞ்சியோ பிளாஸ்டி என்ற ஸ்டென்டிங் சிகிச்சை மூலம் 2 ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை அகற்றியது. மேலும் பெருந்தமணி வால்வு பகுதியில், 'டேவி' எனப்படும் டிரான்ஸ் கதீட்டர் பெருந்தமணி வால்வு இன்ஸ்பிளான்டேஷன் என்ற நவீன சிகிச்சை முறையில் வால்வு பொருத்தப்பட்டது. வழக்கமாக இத்தகைய பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை செய்து, அடைப்பு நீக்கப்படும். ஆனால் தற்போது மதுரைக்கு தெற்கே நெல்லையில் இந்த ரத்தக்குழாய் மூலமாகவே இந்த நவீன அறுவை சிகிச்சை செய்து சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது. இதய டாக்டர் ஜோப், டாக்டர்கள் செல்வி, கார்த்திக் ஆகியோரின் கூட்டு முயற்சியினாலும்இந்த சிகிச்சை வெற்றிக்கரமாக நடத்தப்பட்டது. இது முதியோருக்கு பாதுகாப்பா னது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது டாக்டர்கள் லட்சுமணன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர்.

    • நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் கண்டறியப்பட்டது.
    • மருத்துவம் பயிலாத நபர்களிடம் சிகிச்சை பெறுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில், சுகாதார நலப் பணிகள் இயக்குனர் மருத்துவர் பிரேமலதா போலி மருத்துவர்களையும், போலி மருத்துவமனைகளையும் ஒழிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், வீ.கே.புதூர் அருகே கழுநீர்குளம் பகுதியில் உள்ள ஒரு மெடிக்கலில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவர் பிரேமலதா அங்கு திடீர் ஆய்வு நடத்தினார்.

    அதில் நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசி, மாத்திரைகள் மற்றும் பொருட்கள் கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து மருந்து கடை உரிமம் மட்டும் பெற்று கொண்டு கிளினிக் நடத்தியதாகவும், மருத்துவ ஸ்தபன சட்டத்தின்படி பதிவு சான்று பெறாமல் மருத்துவம் பயிலாத நபர் பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கி வந்ததாகவும் அதனை தடுக்கும் வகையில், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர், மருத்துவர் அருள் ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் அருண் மற்றும் ஆனந்தராஜ், தென்காசி இணை இயக்குனர் நலப் பணிகள் அலுவலக கண்காணிப்பாளர் மீனா, ஆர்.ஐ. மாலினி, கிராம நிர்வாக அலுவலர் சேர்மப்பாண்டி மற்றும் போலீசார் முன்னிலையில் அந்த மருத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

    இதுகுறித்து இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் பிரேமலதா கூறுகையில், மருத்துவம் பயிலாத நபர்களிடம் சிகிச்சை பெறுவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் அரசு துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவ மனை என சுகாதார கட்டமைப்பு தமிழகத்தில், குறிப்பாக தென்காசி மாவ ட்டத்தில் செயல்பட்டு வரு கிறது. பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்திட வேண்டும் என்றார்.

    • பொதுமக்களுக்கு ஈ.சி.ஜி. மற்றும் பொது மருத்துவம் அளிக்கப்பட்டது.
    • 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

    வட்டார ஆத்மா குழு தலைவர் செல்வ செங்குட்ட வன் முன்னிலை வைத்தார் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல்,இரத்த அழுத்தம் கண்டறிதல், ரத்தக்கொதிப்புக்கான சிகிச்சைகள், தைரா ய்டு,ஆஸ்துமா, சுவாசக் கோளாறு சிகிச்சைகள், தலைவலி, உடல் வலி,காய்ச்சலுக்கான சிகிச்சைகள், உடல் பருமன் அளவீடு, ஈசிஜி மற்றும் பொது மருத்துவம் செய்யப்பட்டது.

    இதில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன்,ஒன்றிய பொறியாளர் செந்தில், ஒன்றிய குழு உறுப்பினர் பேபிசரளா பக்கிரிசாமி,ஊராட்சி செயலர் ஜெய்சங்கர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் திருப்புகலூர் ஊராட்சி பகுதிகளை சேர்ந்த 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் விம்ஸ் மருத்துவமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.

    சேலம்:

    கருணாநிதி நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, போக்குவரத்துக் கழக பணியாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பி னர்களுக்கு விம்ஸ் மருத்து வமனை பங்களிப்புடன் ஜான்சன்பேட்டை கிளை வளாகத்தில் சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று ராம கிருஷ்ணா சாலையில் உள்ள தலைமை அலுவல கத்தில் சிறப்பு முகாம் நடை பெற்றது. முகாமில் போக்கு வரத்து கழக பணியாளர் களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்டறியும் பரி சோதனை, இ.சி.ஜி. மற்றும் இ.சி.ஓ. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், இதில் சுமார் 270-க்கும் மேற்பட்ட பணி யாளர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களும், சேலம் மண்டல பொது மேலாளர், துணை மேலா ளர்கள், கோட்ட மேலாளர், உதவி மேலாளர்கள், அனைத்துத்துறை பணியா ளர்கள், தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் விம்ஸ் மருத்துவமனை மருத்துவ குழுவினரும் பங்கேற்றனர்.

    முகாமை சேலம் மண்டல அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் பொன் முடி தொடங்கி வைத்தார். நாளை(வெள்ளிக்கிழமை) நாமக்கல் கிளை வளாகத்தில் முகாம் நடைபெற உள்ளது. இந்தசிறப்பு மருத்துவ முகா மினை பயன்படுத்தி பணி யாளர்கள் தங்கள் உடல் நலனை காத்திடுமாறு நிர் வாக இயக்குநர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
    • அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ‌ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

    சேலம்:

    சேலம் அரசு மருத்துவக்கல்லூரி உள்பட தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 1000 பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் பதவிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு காரணமாக காலி பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் காலி பணியிடங்களை நிரப்ப கவுன்சிலிங் நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனால் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் உதவி பேராசி ரியர்கள் 423 பேருக்கு இணை பேராசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் வருகிற ஜூலை மாதம் 4-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்ற வரும்படி 423 டாக்டர்களுக்கும் மருத்துவ கல்வி இயக்ககம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங் முடிந்த பிறகு பேராசிரியர் பணியிடங் களுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பாலமேடு அருகே மருத்துவம், காப்பீட்டு திட்ட முகாம் நடந்தது.
    • மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளித்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள வெள்ளையம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட நோயாளிகள் பதிவு செய்யும் முகாம் நடந்தது. வெங்கடேசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி கலைமாறன், ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். வெள்ளையம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முன்னதாக வெள்ளையம்பட்டி அரசு பள்ளியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறையை வெங்கடேசன் திறந்து வைத்தார். முன்னாள் கவுன்சிலர் இளமாறன் நன்றி கூறினார்.

    • பன்னோக்கு மருத்துவ முகாம்களில் உயர்தர பரிசோதனை வழங்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
    • பரிசோதனை இலவசமாக வழங்கப்படுகிறது.

    கீழக்கரை

    கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள டி.மாரியூர் கிராமத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்து வத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    இந்த முகாமில் 32 சிறப்பு மருத்துவர்கள், 167 செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பணி மேற்கொண்டுள்ளனர். தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்கு இணையாக பன்னோக்கு உயர்தர மருத்துவ பரிசோ தனை இலவசமாக வழங்கப் படுகிறது.

    கிராமங்களில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். தேவைப்படும் நபர்களுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் உயர்தர சிகிச்சை வழங்கப்படும். அதுமட்டுமின்றி காப்பீடு அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்து இந்த முகாமில் காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் உள்பட 20 பயனாளிகளுக்கு மருத்துவ உபகரணங்களும், மக்களை தேடி மருத்துவத்திட்டத்தில் 30 பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் கொண்ட தொகுப்புகளையும் அமைச்சர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல்சு, காதாரப்பணிகள் துணை இயக்குநர் இந்திரா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப், காசநோய் பிரிவு துணை இயக்குநர் சிவானந்தவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு அளிப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
    • பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லஞ்செட்டி ஊரணி, கழனிவாசல் நகர்ப்புற நலவாழ்வு மையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து நலவாழ்வு மையத்தில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷாஅஜித், மாங்குடி எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.

    விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

    பொதுமக்களின் உடல் நலனை பேணி காத்திடும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அரசு எண்ணற்ற திட்டங்களை அறிவித்துள்ளது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் போன்ற திட்டங்கள் மக்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.

    புதிதாக திறக்கப்பட்டுள்ள நலவாழ்வு மையத்தில் பொதுமக்கள் சிகிச்சை பெற உரிய வசதிகள் உள்ளன. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தாய்மார்க ளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், 5 பேருக்கு மருந்து பெட்ட கங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    இதில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) விஜய்சந்திரன், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் வீரமுத்து, காரைக்குடி நகராட்சி நகர்நல அலுவலர் திவ்யா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×