search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • நீரை தாயாக போற்றி வணங்கும் திருநாள் தான் ஆடிப்பெருக்கு.
    • காவிரி கரையில் அமைந்துள்ள படித்துறையில் பெண்களும், புதுமண தம்பதிகளும் கூடி மிக சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    "நீரின்றி அமையாது உலகெனின் யார்யார்க்கும் வானின்று அமையாது ஒழுக்கு"-

    என்பது பொய்யாமொழி புலவரான திருவள்ளுவரின் வாக்கு.

    முக்கால் வாசி நீரும், கால் வாசி நிலமும் கொண்ட இந்த பூமியில் நீர் இல்லா விட்டால் நினைத்து பாருங்கள்..

    மதிய வெயிலில் வெளியே சென்று விட்டு அரை மணி நேரமாக தண்ணீர் கிடைக்காமல் நா வறண்டு வீடு வந்ததும் தண்ணீரை மடக், மடக் என வேகமாய் குடிக்கும் நம் அனைவருக்கும் தண்ணீரின் அருமை புரியும்.

    தண்ணீரை தெய்வமாக வழிபடும் மரபு தமிழர்களாகிய நம்முடையது.

    ஏலேய்! மக்கா தாயை பழிச்சாலும் தண்ணியை பழிக்காதே லேய் மக்கா! என கிராமத்தில் பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்பீங்க..

    மண்ணையும், தண்ணீரையும் பெரும் சொத்தாக கருதுவது விவசாயிகளின் வழக்கம்.

    பத்து ஏக்கர் நிலத்தில் தண்ணீர் நிறைந்த கிணற்றை வைத்திருந்தால் மட்டுமே விவசாயி வெள்ளாமை செய்ய முடியும்.

    பத்து ஏக்கர் நிலத்தில் தண்ணீர் இல்லா பாங்கெணறு என பேச்சு வாக்கில் சொல்லும் பாழுங்கிணறு இருந்தால் விவசாய நிலம் வறண்ட பொட்டல் நிலமாகி விடும் என்பது அனைவரும் அறிந்ததே.

    தண்ணீரின் அருமை புரிந்ததால் தானோ என்னவோ நாடுகளுக்கு இடையே, மாநிலங்களுக்கு இடையே ஏன் கிராமங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்சினை நிலவி வருவது அனைவரும் அறிந்ததே.

    ஏலேய்.. சில்வண்டு!! ஆடிப்பெருக்கை.. பற்றி சொல்ல போறேன்னு நெனைச்சா தண்ணியை பத்தி சொல்லிட்டு இருக்குறியேன்னு சலிக்காதீங்க.

    நீரை தாயாக போற்றி வணங்கும் திருநாள் தான் ஆடிப்பெருக்கு.

    சித்திரை, வைகாசி மாதங்களில் கோடை மாத வெயில் முடிந்து ஆனி, ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவக்காற்றால் சாரல் மழை கொட்ட துவங்கும்.

    ஆனியில் தூறலிடும் சாரல் ஆடி மாதத்தில் களை கட்டி சாரலும், தூறலுமாய் பெய்யும்.

    துடிப்பான சாரலால் சிற்றோடை, கால்வாய், வாய்க்கால், ஆறு, நதி போன்ற நீர் நிலைகளில் புதிய தண்ணீரானது நுங்கும் நுரையுமாய் பொங்கி பிராவகத்தோடு ஓடும்..

    ஆடிப்பெருக்கு அன்று மக்கள் ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் பாய்ந்து வரும் புதுப்புனலில் நீரில் நீராடி விவசாயம் செழிக்க நதியை, இறைவனை வணங்குவது வழக்கம்.

    குடகில் பிறந்து தஞ்சையை வளமாக்கி தரங்கம்பாடி வரை சென்ற இடங்களை எல்லாம் செழிக்க வைக்கும் காவேரி அன்னைக்கு கரையோர மக்கள் சீர் வரிசை செய்து நன்றி தெரிவிக்கும் நாளே ஆடிப்பெருக்கு என அழைக்கப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு தமிழகம் முழுவதும் கொண்டாட பட்டாலும் ஆடிப்பெருக்கு பண்டிகையை காவிரி கரைபுரண்டு ஓடும் மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி, குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய பகுதிகளில் வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடுவார்கள்.

    ஆடி பதினெட்டு, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் ஆடி பதினெட்டாம் நாளின் சிறப்பை பற்றி பார்ப்போம்.

    கோடை காலம் முடிந்து சாரல் மழை பொழிந்து நுங்கும், நுரையுமாக பருவப்பெண் துள்ளி வருவது போல் புது வெள்ளமாக காவிரி பாய்ந்து வந்ததும் விவசாய வேலைகளை துவக்குவார்கள்.

    இந்தப் பிரபஞ்சத்தின் ஆதார சக்தியாக நீர் விளங்குகிறது. நீரால் விவசாயம் நடைபெற்று உணவு பொருட்களுக்கான விளைச்சல் உண்டாகிறது.

    உணவே உயிரை வளர்க்கிறது. உணவில்லையேல் ஊனுடம்பும் இல்லை.. உயிரும் இல்லை.

    அத்தகைய நீரைக் கொண்டாடும் ஒரு திருவிழா 'ஆடிப் பெருக்கு'. தமிழர்களுக்கே உரிய தனிப்பெரும் பண்டிகை இது.

    ஆடிப்பெருக்கை காவிரி கரையில் அமைந்துள்ள படித்துறையில் பெண்களும், புதுமண தம்பதிகளும் கூடி மிக சிறப்பாக கொண்டாடுவார்கள்.

    தாலி பிரித்து கோர்ப்பது ஆடிப்பெருக்கின் முக்கிய நிகழ்வாகும்.

    நதிக்கரை படித்துறையில் கூடியிருக்கும் புதுமண தம்பதிகளில் கணவன் தனது மனைவியின் கழுத்தில் இருந்து பழைய தாலியை பிரித்து புதிய மஞ்சள் கயிற்றை கோர்த்து அணிவிப்பார்கள்.

    புதுமண பெண்கள் மட்டுமல்ல முன்பே திருமணம் ஆன சுமங்கலி பெண்களும் ஆடி பதினெட்டு அன்று தாலி பிரித்து கோர்த்து அணிவார்கள்.

    எதற்காக ஆடி பதினெட்டு அன்று காவிரி கரையில் தாலி பிரித்து அணிய வேண்டும்?

    ஆடிப்பட்டம் என அழைக்கப்படும் ஆடிப்பெருக்கு தினத்தில் விவசாய நிலத்தில் ஊன்றும் விதைகள் பல்கி பெருகும்.

    அது போல் தனது வாழ்வும் பல்கி பெருக வேண்டும் என காவிரி அன்னையின் ஆசிகளை வேண்டி அவளின் முன்னிலையில் தாலி மாற்றி அணிவார்கள்.

    ஒரு சுமங்கலி பெண்ணுக்கு வாழ்வில் ஐந்துவிதமான தாலியைச் சூடும் பாக்கியங்கள் வாய்க்கலாம்.

    திருமணம், சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் உள்ளிட்ட ஐந்து முறை மாங்கல்யத்தை பெண்கள் மாற்றி அணிந்து கொள்வது பூரண வாழ்வின் அடையாளம்.

    இந்த ஐந்து வித மாங்கல்யங்களும் தனக்குக் கிடைக்க வேண்டும் எனும் வேண்டுதலின் அடிப்படையிலேயே ஆடிப் பெருக்கு அன்று தாலி பிரித்து கோர்த்து மாற்றி அணியும் வழக்கம் உண்டானது.

    வற்றாது ஓடி விவசாயிகளை காப்பாய்! என அரங்கன் தானே நேரடியாக வந்து ஆசி வழங்கி தங்கையான காவிரி க்கு சீர் வழங்கும் போது அண்ணனின் சீர்வரிசையை ஆவலாய் காவிரி வாங்கி கொள்ளும் நிகழ்வும் ஆடி பதினெட்டு அன்று காவிரிக்கரை அம்மா மண்டப படித்துறையில் நிகழும்.

    பொதுவாக திருமணம், புதிய தொழில் துவங்குவது, வீடு கட்டுவது போன்றவைகளை ஆடி மாதத்தில் தவிர்த்து விடுவார்கள்.

    ஆனால் ஆடிப்பெருக்கு அன்று வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டுவது, கதவு நிலை விடுவது, புதிய தொழில் துவங்கும் நிகழ்வுகளை நடத்துவார்கள்.

    "பெருக்கு" என்றால் பெருகுதல் என்ற அர்த்தம் ஆகும். ஆடிப்பெருக்கில் துவங்கும் தொழில்கள் பலமடங்கு பெருகி நிறைந்த செல்வத்தை தரும் என்பது ஐதீகம்.

    அட்சய திரிதியை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது.

    ஆடிப்பெருக்கு நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம்.

    நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கும் சேமிப்பும் பல மடங்காய் பெருகும்.

    இனி ஜோதிட ரீதியாக ஆடிப்பெருக்கு தினத்தின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.

    கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் புனர்பூசம், பூசம், ஆயில்யம் என மூன்று நட்சத்திரங்கள் உள்ளன.

    இதில் பூசம் நட்சத்திரம் சனி பகவானுக்குரியது.

    சூரிய பகவான், சனியின் பிடியில் இருக்கும் பூசம் நட்சத்தி ரத்தில் இருந்து விடுபட்டு, புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு மாறும் நாள் தான் ஆடி பெருக்கு (ஆடி 18) ஆகும்.

    புதனுக்கு உரிய ஆயில்ய நட்சத்திரத்திற்கு சூரியன் மாறும் போது சூரியனிடமிருந்து ஒரு வித சக்தி வெளியாகிறது.

    ஏனெனில் சூரியனும், புதனும் நட்பு கிரகங்கள். சூரியனின் இந்த சக்தி நிறைந்த கதிர்களால், ஆடி மாதத்தில் விதைக்கப்படும் விதைகளுக்கு ஒரு வித புத்துணர்ச்சியும், வலிமையும் கிடைக்கிறது.

    ஒளிச்சேர்க்கை என அறிவியலில் அழைக்கப்படும் சூரிய கதிர்களின் சக்தியை கொண்டு பயிர்கள் பச்சை பசேல் என சிறப்பாக வளர ஆடி மாத ஒளிக்கதிர்கள் மிகவும் உதவியாக இருக்கிறது.

    ஆடி 18 அன்று சப்தகன்னியரை வணங்கி நாம் எதை நினைத்து வேண்டினாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    திருமணமான பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று ஆற்றுக்கு சென்று நீராடி மஞ்சள் பிள்ளையார் பிடித்து, விளக்கேற்றி, ஏதேனும் ஒரு நைவேத்தியம் படைத்து அம்மனுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வழிபாடு செய்து திருமணமான பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தாலி மஞ்சள், சரடு மாற்றிக்கொள்ளும் வழக்கம் இன்றும் நிலவுகிறது.

    இவ்வாறு ஆடிப்பெருக்கு அன்று தாலி கயிறு பிரித்து கோர்த்து மாற்றி கட்டி கொள்வதால் பெண்களின் இல்வாழ்க்கை சிறப்பாக இருக்குமாம்.

    ஏலேய்! சில்வண்டு ஆடிப்பெருக்கு அன்று ஆறு, குளத்தில் நீராடுவது சிறப்பு ன்னு நீ சொல்வது சரிதான்.

    திருநெல்வேலி காரன் நீ!தாமிரபரணியில் குளிக்க வாய்ப்பு கிடைக்கும். மற்ற ஊர்காரங்க அந்த ஊர்களில் ஓடும் ஆறுகளில் குளிச்சிடுவாங்க..

    சென்னைக்காரங்க ஆறுன்னு நினைச்சு கூவத்துல போய் குளிக்க முடியுமா.. ன்னு கேட்கும் சென்னை வாசிகளுக்காக..

    ஆறுகள் இல்லாத ஊரில் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்து ஆடி பதினெட்டு குளியலை குளிக்க முடியவில்லையே என யாரும் மனம் நோக வேண்டாம்.

    ஒரு செப்பு உலோகத்தில் செய்த செம்பில் அரைத்த மஞ்சளைப் போட்டு நிறைகுடத்தில் இருந்து அந்தச் செம்பில் நீர் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    செம்பில் இட்டிருந்த மஞ்சள் ஆனது நீரில் கரைந்திருக்கும். பூஜை அறையில் விளக்கேற்றி சாமி படத்தின் முன் மஞ்சள் தண்ணீர் செம்பில் பூக்களைப் தூவி கடவுளை வணங்க வேண்டும்.

    கங்கை, காவிரி, யமுனை, நர்மதை ஆகிய புண்ணிய நதிகளை மனதில் நினைத்து, 'எங்கள் மூதாதையர் உங்களைப் புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் நாங்களும் வழிபடுகிறோம்.

    புண்ணிய நதிகளாகிய நீங்கள் எங்கள் முன்னோருக்கு அருள் செய்தது போல எங்களுக்கும் அருள் செய்யுங்கள் என மனதார நதிகளையும், கடவுளையும் வேண்டி கொள்ளுங்கள்.

    பின்னர் காவிரியையும், பொருநை எனும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்தியரை மனதார நினைத்து வழிபடுங்கள்.

    வேண்டுதலும், பூஜையும் முடிந்ததும் செம்பிலுள்ள நீரை தோட்டத்தில் இருக்கும் செடி கொடிகளுக்கு ஊற்றி விடுங்கள்.

    இவ்வாறு செய்வதால் ஆடி பதினெட்டில் ஆற்றில் வரும் புதுப்புனல் நீரில் குளித்த புண்ணியம் கிட்டும்.

    புதிய காரியங்களை ஆடிப்பெருக்கு ஆன இன்று துவங்குங்கள். செய்யும் காரியங்களில் சிவனருளால் ஜெயம் கிட்டட்டும்.

    அனைவருக்கும் ஆடிப்பெருக்கு நல்வாழ்த்து கள்...

    தொடர்புக்கு-isuresh669@gmail.com

    • அதிக மது, புகை இவற்றினை அடியோடு தவிர்த்து விடுவதே நல்லது.
    • கணைய வீக்கம் என்பது திடீரென ஏற்படும் பொழுது அதன் வலி பாதிக்கப்பட்டவரை துடிதுடிக்க வைத்துவிடும்.

    மனித உடல் என்பது எப்படி உருவானது? எப்படி இயங்குகின்றது? என்பதனை நினைக்க நினைக்க ஆச்சர்யம்தான் வருகிறது. இத்தனையையும் ஒருங்கிணைத்து நடத்த ரத்த ஓட்ட மண்டலம் மிக முக்கியமானதாக விளங்கு கின்றது. இந்த மண்டலம் அதிக எடை, ஆரோக்கிய உணவின்மை, குடி, மது போன்றவைகளால் பாதிக்கப்படுகின்றது.

    சர்க்கரை நோய், ரத்தத்தில் சிறு கட்டிகள், இருதயம் சீராக இயங்காமை, இவை எல்லாம் ரத்த ஓட்டம் சீராக இயங்காமல் இருப்பதன் விளைவுகளே.

    குறைவான ரத்த ஓட்டம் சிறுநீரகங்களுக்கு இருந்தால் சிறுநீரக செயல்திறன் குறைந்து விடுகின்றது. இதன் காரணமாகவே கால்களில் வீக்கம் ஏற்படலாம்.

    பொதுவில் கால்களில் வீக்கம் என்பது கர்ப்ப காலத்தில் அதிக உடல் உழைப்பில்லாது வெகு நேரம் அமர்ந்திருப்பது, மாதவிலக்கிற்கு முன்னர் இதுபோன்ற காரணங்களாலும் வீக்கம் ஏற்படலாம். சற்று காலை 2 தலைகாணி மேல் உயர்த்தி வைத்து படுக்கும் போது கூட இவை சரியாகி விடும். ஆனால் எதிலும் சரியாகாது தொடர்ந்து இருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

    வைட்டமின் பி12 குறைபாடு, கை, கால்களில் மரத்து போவது போன்ற உணர்வினை ஏற்படுத்தலாம்.

    கை, கால்களில் சில்லிப்பு உணர்வு இருந்தால் போதுமான சீரான ரத்த ஓட்டம் இல்லாமலும் இருக்கலாம். பொதுவில் இவர்கள் கைகளை தேய்த்து சூடு படுததிக் கொள்வார்கள். ஆனால் அடிக்கடி இவ்வாறு ஏற்பட்டால் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும்.

    காயங்கள் ஆறுவதற்கு கூடுதல் நேரம் ஆனாலும் போதுமான வைட்டமின், தாதுக்கள் கிடைக்கவில்லை என்ற காரணமும் உண்டு.

    சீரான ரத்த ஓட்டம் தலைக்கும் வேண்டும். மசாஜ் செய்வதே ரத்த ஒட்டத்தினை அதிகரிப்பதற்காகத்தான். சீரான ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும், சத்துகள் இல்லாவிட்டாலும், சில மருத்துவ காரணங்களாலும் முடி கொட்டும்.

    நல்ல தூக்கம், ஆரோக்கியமான உணவு, மன அழுத்தம் இன்மை இவையும் சீரான ரத்த ஓட்டத்திற்கு அவசியம்.

    சிலருக்கு வித்தியாசமான ஒரு பிரச்சினை உண்டு. மருத்துவரிடம் செல்லும் போது தனக்கு இருக்கும் உடல்நிலை பிரச்சினைகளை கூற மறந்து விடுவார்கள். இதனாலேயே ஒரு மருத்துவரை காணும் முன்பு அவரது உதவி மருத்துவர்கள் தலை முதல் கால் வரை, பரம்பர, ஒவ்வாமை போன்ற கேள்விகள் மூலம் அவர்களது பிரச்சினைகளை கேட்டு எழுதி பைல் என்ற முறையில் அனைத்தினையும் பதிவு செய்து விடுவர். ஒவ்வொருவரும் தனது சிகிச்சை பேப்ர்கள், உடல்நல குறைபாடுகளின் சிகிச்சை இவற்றினை ஒரு பைல் போல் வைத்து அதனை ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் எடுத்து செல்வது சரியான முறையாகும். இதில் சோம்பேறித்தனம், கவனக்குறைவு கூடாது. அதே போன்று மருத்துவரிடம் செல்லும் போது உடல்நல பிரச்சினைகள், ஐயங்கள் இவற்றினை ஒரு பேப்பரில் எழுதி எடுத்துச் செல்வது நல்லது.

    * இன்று எது கூறினாலும் 'கூகுள்' சென்று விஷயங்களை சேகரிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இது நல்லதுதான். ஆனால் இதனை படித்து சுய சிகிச்சை செய்ய முற்படுவதுதான் தவறு.

    * சுய சிகிச்சையில் தவறான மருந்து, தவறான அளவு என்பது அதிகமாகக் காணப்படுகின்றது.

    * போனிலேயே இருதய அறுவை சிகிச்சை வரை மருத்துவர் அளிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது.

    * உடனடி கவனிக்காமல் ஆரோக்கியம் அதிகம் கெட்ட பிறகு சிகிச்சைக்கு செல்வது உங்கள் உடல் நலனை பாதிக்கும் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

    எந்த சிகிச்சையினையும் அவர்களோ (அல்லது) அவர்களது உறவினர்களோ முழுமையாய் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    இதுவரை நான் எந்த பரிசோதனையும் செய்து கொள்ளவில்லை என்பது கேட்பதற்கு பெருமையாக இருக்கலாம். ஆனால் வயதிற்கேற்ப பரிசோதனைகள் செய்து கொள்வதே நல்லது.

    காலம் சென்ற மருந்துகளை எடுத்துக் கொள்வது விஷம் உண்பதற்கு சமமாகும். தவறுகள் ஏற்படாமல் இருக்க ஒவ்வொருவரும் சில தவிர்ப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

    * நீங்கள் என்ன மருந்துகளை சத்து மருந்துகளை எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பது உங்கள் மருத்துவருக்கு முழுமையாக தெரிய வேண்டும். கையில் மருந்து சீட்டு மருந்து இவற்றினை எடுத்துச் செல்லலாம். ஆயுர்வேதம், ஒமியோபதி, நாட்டு மருந்து என இருந்தாலும் அவைகளையும் குறிப்பிட வேண்டும்.

    * உங்கள் அலர்ஜி பற்றி மருத்துவருக்கு குறிப்பிட வேண்டும்.

    * டாக்டர் எழுதும் மருந்தினை நீங்கள் உங்கள் மொழியில் கூட எழுதி வைத்துக் கொள்ளலாம். அவரது எழுத்து உங்களுக்கு படிக்க கடினமாக இருந்தால் தெளிவாக கேட்டு எழுதிக் கொள்ளலாம். பல மருந்துகள் எழுதப்படும் போது

    * ஒவ்வொன்றும் எதற்கானது

    * இதன் பக்க விளைவின் அறிகுறிகள்

    * உணவு-தவிர்க்கப்பட வேண்டியவை எனக் கேட்கலாம்.

    ஒவ்வொரு மருத்துவரும் இதனை தெளி வாக விளக்குகின்றனர். வேண்டுமெனில் அவரது உதவியாளரிடம் மீண்டும் கேட்டு தெளிவு பெற வேண்டும்.

    * மருந்து வாங்கும் போது அதே மருந்து வேறு கம்பெனி உற்பத்தி மூலமாக இருக்க லாம். சந்தேகம் இருந்தால் கஷ்டம் பார்க்காமல் மருத்துவரிடம் மீண்டும் அதனைக் காட்டி உறுதி செய்து கொள்ளுங்கள்.

    * நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டிருந்தால் மருத்துவரே உரிய நேரத்தில் உங்களை டிஸ்சார்ஜ் செய்வார். பணம் மிச்சப்படுத்துகின்றேன் என்ற பெயரில் அவசரப்படுத்தாதீர்கள்.

    * சிகிச்சையின்போது குடும்ப நபர் ஒருவர் உடன் இருப்பது நல்லது.

    * நம்மீது நாம்தான் அக்கறை கொள்ள வேண்டும் என்பதனை கருத்தில் கொள்ளுங்கள்.

    * டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு வந்தாலும் மருந்து, ஓய்வு, உணவு இவற்றினை முறைபடி செய்யுங்கள்.

    * அதிக மது, புகை இவற்றினை அடியோடு தவிர்த்து விடுவதே நல்லது. சீரான ரத்த ஓட்டம் கிடைக்காது செய்துவிடும். உடனடி மருத்துவர் சிகிச்சை அவசியம்.

    * நெஞ்சில் இறுக்கம், மூச்சு வாங்குதல் இவை உடனடியாக மருத்துவர் கவனம பெற வேண்டியவை ஆகும்.

    கணைய வீக்கம்

    கணைய வீக்கம் என்பது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது முக்கியமான மருத்துவ அறிவுரை என்று கொள்ளலாம். கணைய வீக்கம் என்பது திடீரென ஏற்படும் பொழுது அதன் வலி பாதிக்கப்பட்டவரை துடிதுடிக்க வைத்துவிடும். கணையம் என்ற சிறிய உறுப்பு வயிற்றுக்குள் பின்னால் விலா எலும்பிற்கும் கீழ் உள்ள உறுப்பு ஆகும்.

    பொதுவில் திடீரென ஏற்படும் இந்த வீக்கம் வயிற்றில் கடும் வலி, சோர்ந்து விடுதல், வயிற்றுப் போக்கு போன்ற அறிகுறிகள் காட்டும். பின் முதுகு வரை வலி பரவும். ஏதாவது குடித்தாலோ, சாப்பிட்டாலோ வலி துடிதுடிக்க செய்து விடும்.

    பித்தப்பையில் உள்ள கற்களால் ஏற்படும் கணைய வலி மிக அதிக உணவு உண்ட பின் ஏற்படும். மது அருந்திய பிறகும் ஏற்படும்.

    வயிற்றுப் பிரட்டல், வயிற்றுப் போக்கு, அஜீரணம், அதிக ஜூரம், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகளை காட்டும். திடீரென கணைய வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்து 4-10 நாட்கள் ஊசி மூலம் சத்து, மருந்து கொடுப்பதன் மூலம் தீர்வு பெற முடியும். ஆனால் மிக அதிக பாதிப்பு என்பதற்கு அதிக மருத்துவ கவனம் தேவைப்படுகிறது.

    இதுபோன்று அடிக்கடி கணைய வீக்கம் ஏற்பட்டால் அது நாள்பட்ட கணைய அழற்சி என்று கூறப்படுகின்றது.

    கணைய வீக்கத்தினை தவிர்க்க மது, அதிக கொழுப்பு கொண்ட உணவுகள் இவற்றினை தவிர்க்க வேண்டும். சில வகை மருந்துகளும் இந்த பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால் எந்த மருந்தினையும் மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தைராய்டு

    தைராய்டு குறைபாடு பிரச்சினை என்பது தைராய்டு சார்ந்த பிரச்சினைகளில் சற்று கூடுதலாக காணப்படும் ஒன்று. இதன் அறிகுறிகளாக:

    * அதிக சோர்வு இருக்கும். இரவு 10 மணி நேரம் தூங்கி எழுந்தாலும் அதிக சோர்வுடன் இருப்பர்.

    * திடீ ரென எடை கூடும். முயற்சி செய்தும் எடை இறங்காது.

    * மனச் சோர்வு, படபடப்பு என மனநலம் அடிக்கடி மாறும்.

    * இவர்களுக்கு பிற ஹார்மோன் பிரச்சினைகளும் இருக்கலாம்.

    * எப்பொழுதும் குளிர்வது போல் இருக்கும்.

    * வறண்ட சருமம், எளிதில் உடையும் நகங்கள், வறண்ட பலவீனமான முடி இருக்கும்.

    * மலச்சிக்கல் * கவனிக்கும் கூர்மை திறன் குறையும், மறதி ஏற்படும், கழுத்தில் வீக்கம் இருக்கும்.

    * குறட்டை கனத்த சப்தத்தோடு இருக்கும்.

    * தசைகளில், மூட்டுகளில் வலி இருக்கும். மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை இதற்கு அவசியம் தேவை. கூடவே மருத்துவர் ஜிங்க், செலினியமும் கொண்ட வைட்டமின் சத்து மாத்திரையினை அளிப்பார்.

    * குளூடன் இல்லாத உணவு உதவும். * 8 முதல் 10 மணி நேர உறக்கம் அவசியம். யோகா, தியான பயிற்சி அவசியம், ஆரோக்கியமான ஜீரண மண்டலம் இருக்க வேண்டும். மேலும் சில வாழ்க்கை முறை மாற்றங்களை அவரவர் உடல் நலனுக்கேற்ப மருத்துவர் பரிந்துரை செய்வார்.

    தாதுக்களின் அவசியம்

    ஜிங்க்- நோய் எதிர்ப்பு சக்தி தரும். அயோடின் தைராய்டு சுரப்பி நன்கு இயங்கும். பாஸ்பரஸ் எலும்புகளுக்கு பலம் தரும். சல்பர் நச்சு நீக்கும். கரோலியம் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

    • அப்படித்தான் நானும் முதல் முறையாக பாவாடை சட்டை அணிந்த அந்த நாள் ஞாபகம் இன்றும் பசுமையாக கண்முன் தெரிகிறது.
    • வெளியே செல்லும்போதெல்லாம் தலையில் ஒரு குரங்கு குல்லாவை மாட்டிக்கொண்டு, கம்பளி சட்டையும் அணிந்திருப்பேன்.

    பாவாடை, சட்டை...!

    எவ்வளவோ விதவிதமான கண்ணைக் கவரும் நாகரீக உடைகள் வந்துவிட்டாலும் எல்லா பெண்களுக்கும் குழந்தைப்பருவத்தில் பட்டு பாவாடை சட்டை அணிந்து பட்டாம்பூச்சிகளாக திரிந்த காலம் பசுமை நிறைந்த நினைவுகளாக மனதில் நிலைத்து நிற்கும்.

    அதுவும் முதல் முறையாக பாவாடை சட்டை அணியும் போது ஏற்படும் ஆனந்தத்தை சொல்ல வார்த்தைகளே கிடையாது.

    அப்படித்தான் நானும் முதல் முறையாக பாவாடை சட்டை அணிந்த அந்த நாள் ஞாபகம் இன்றும் பசுமையாக கண்முன் தெரிகிறது.

    'பாலநாகம்மா...' கே.ஷங்கர் சார் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம். கே.ஆர்.விஜயாம்மா, ஸ்ரீதேவி ஆன்டி, சரத்பாபு அங்கிள் எல்லோரும் நடித்த படம். பேபி அஞ்சு, நான் குழந்தை நட்சத்திரங்கள். இதில் அஞ்சு பையனாக நடித்தார்.

    இந்த படத்தின் ஷூட்டிங் சென்ற போதுதான் எனக்கு பாவாடை-சட்டை காஸ்ட்யூம். அதிலும் சட்டையில் நிறைய மணிகள் சேர்த்து தொங்கவிடப்பட்டிருந்தது. அது எனக்கு ரொம்ப பிடித்து போனது.

    பாவாடையை கையில் பிடித்தபடி உற்சாகமாக நான் அங்கும் இங்கும் ஓடியதை பார்த்ததும் 'என்ன பாப்பா... பாவாடை சட்டை ரொம்ப பிடிச்சிருக்கா...?, என்று படப்பிடிப்பு குழுவில் இருந்தவர்கள் என்னிடம் கேட்டதும் 'ம்ம்...' என்று பிடித்திருக்கிறது என்பது போல் தலையை ஆட்டி சிரித்தபடியே ஓடுவேன். அவர்களும் என்னை செல்லமாக தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவார்கள்.

    அந்த படத்தில் ஸ்ரீதேவி ஆன்டிக்கு நான் மகள். ஸ்ரீதேவி ஆன்டியின் அழகு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். இந்த படத்தில் அவருடைய மகளாக.... அதுவும் அவரே தூக்கி வைத்துக்கொண்டு நடந்ததால் நான் மிகவும் சந்தோசப்பட்டேன்.

    நான் அவரையே பார்த்து கொண்டிருந்ததை பார்த்து 'என்ன பாப்பா என்னை அப்படி பார்க்குறீங்க... இந்த ஆன்டியை உனக்கு ரொம்ப பிடிக்குமா?' என்று கேட்டார்.

    பதிலுக்கு நானும் சிரித்து கொண்டே ஆமாம் என்றேன். அவ்வளவு தான்... என்னை வாரி அணைத்து வாஞ்சையுடன் தடவிக்கொடுத்து முத்தம் கொடுத்தார். அப்போது எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா?

    அதன் பிறகு 'இல்லாடு பிரியுராலு' என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார். அந்த படத்தில் சோபன்பாபு-சுஹாசினி ஜோடி.

    படத்தில் அக்காள், தங்கை, தம்பி என்று 3 குழந்தைகள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டயலாக்குகள் படிக்க சொல்லி தந்தார்கள். ரிகர்சல் நடக்கும் போது எல்லோரும் பார்த்து கொண்டிருப்போம். அப்போது ஒருத்தர் பேசுவதை மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருப்போம்.

    அவ்வாறு கேட்டுக் கொண்டிருந்ததில் நான் எல்லோருடைய வசனங்களையும் மனப்பாடம் செய்து கொண்டேன். ரிகர்சலின் போது நான் பேசத் தொடங்கினால் எல்லோரது டயலாக்கையும் சேர்த்து மொத்தமாக கட கட வென்று பேசி முடித்து விடுவேன். அதை கேட்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அதை தொடர்ந்து மற்றவர்களின் வசனத்தையும் என்னை வைத்தே பேச வைத்தார்கள்.

    மலையாளத்தில் 'ஒரு கொச்சு கதை. ஆனால் பிடிபடாத கதை' என்ற படத்தில் நடித்தேன். சத்யராஜ் சார் நடித்த கூனி என்ற படத்தில் நடித்தேன்.

    இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் சிவாஜி சார், நடித்த நெஞ்சங்கள் படத்தில் தானே அறிமுகமானேன். கொஞ்ச நாளில் அப்பாவும், மகனும், (சிவாஜி, பிரபு) சேர்ந்து நடித்த படத்திலும் நடித்திருக்கிறேன்.

    அந்த படத்தின் பெயர் 'சுமங்கலி' திருமணமான பெண் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் சிவாஜி-சுஜாதா, பிரபு-கீதா ஆகியோர் நடித்தார்கள். ஒரே படத்தில் தந்தை-மகன் என்ற இரு பெரும் கலைஞர்களின் அன்பை பெற்ற குழந்தை நான். அந்த படத்தில் ராமதுளசி என்ற குழந்தையாக நடித்தேன்.

    எனது 40 ஆண்டுகால நீண்ட திரைப்பயணத்தை நினைத்து பெருமைப்படுவதை விட உலகமே வியக்கும் மிகப்பெரிய நடிகர்-நடிகைகள் கையை பிடித்து நடந்தும், அவர்களின் அன்பு மழையில் நனைந்தும், அவர்களின் நிழலில் தவழ்ந்து வளர்ந்தவள் என்பது தான் எனக்கு மிகப்பெரிய பெருமையாக இருக்கிறது. அன்று நினைக்க தெரியாத மனது. இன்று அதையெல்லாம் நினைத்தாலே இனிக்கிறது. அந்த நினைவுகளே என்னை பெருமைப்பட வைக்கிறது. அதே வரிசையில் திருப்பம் திரைப்படத்திலும் இருவருடனும் நடித்தேன்.

    அந்த கால கட்டத்தில் வெளிப்புற படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு அழைத்து சென்றார்கள். அப்போது தான் முதல் முதலில் ஊட்டியை பார்த்தேன்.

    அங்கு நிலவிய குளிர், இயற்கை காட்சிகள் எனக்கு அந்த வயதில் ரசிக்க தெரியாவிட்டாலும் ஜாலியாக இருந்தது.

    வெளியே செல்லும்போதெல்லாம் தலையில் ஒரு குரங்கு குல்லாவை மாட்டிக்கொண்டு, கம்பளி சட்டையும் அணிந்திருப்பேன். அதையும் ஊடுருவி ஊட்டி குளிர் என்னை வாட்டியது. குளிரில் பற்கள் டைப் அடிக்கும். காமிராவின் முன் நிற்கும் போது மட்டும் கம்பளியை கழட்டிவிட்டு நிற்பேன். காட்சி முடிந்ததும் ஓடிப்போய் கம்பளியை எடுத்து போட்டுக்கொள்வேன்.

    அந்த காலத்தில் நான் ஓடி விளையாடிய ஊட்டியில் உள்ள இடங்களை இப்போது பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

    அந்த வயதில் எல்லா குழந்தைகளையும் போல்தான் நானும். ஆனால் கொஞ்சம் குறும்புத்தனம் அதிகம். ஒரு படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாடி உடைந்து விழும். அதற்கான கண்ணாடியை அடுக்கி வைத்திருந்தார்கள்.

    நாங்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடி கொண்டிருந்த போது ஒரு பையன் கண்ணாடியில் மோதியதில் கண்ணாடி விழுந்து விட்டது. 'ஜஸ்ட் மிஸ்' என்பதை போல் அந்த இடத்தை நான் கடந்ததும் கண்ணாடி அந்த பையன் மீது விழுந்தது நல்ல வேளையாக நான் தப்பிச்சேன்.

    அதேபோல ஒரு படத்தில் உறுப்பு திருடும் ஒரு கும்பலிடம் நான் சிக்கி கொள்வது போலவும் அவர்கள் கத்தியை எடுத்து குத்த வருவது போலவும் ஒரு காட்சி.

    எல்லாம் ரெடி. கத்தியை எடுத்து கொண்டு அருகில் வந்ததும் கிளாப் என்றதும் பயந்து நடுங்கி கண்ணை இறுக மூடிக் கொண்டு கத்தினேன். அப்படியே சில நிமிடங்கள் கண்ணை திறக்காமலேயே படுத்திருந்தேன். என்ன நடக்கிறது என்றே பார்க்கவில்லை.

    சிறிது நேரத்தில் 'பாப்பா கண்ணை திற.... சீன் முடிந்து விட்டது" என்றதும் மெதுவாக கண்ணை திறந்து பார்த்தேன். அப்போதுதான் அருகில் நின்ற டைரக்டர் "பரவாயில்லையே சின்ன குழந்தையாக இருந்தாலும் நல்லா நடிக்கிறாளே" என்று பக்கத்தில் நின்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

    ஆனால் நிஜமாகவே நான் நடிக்கவில்லை. பயந்துதான் கண்ணை மூடிக் கொண்டேன். ஆனால் காட்சிக்கு இயல்பாகவே தத்ரூபமாக அமைந்து இருக்கிறது.

    அது அவர்களுக்கு எப்படி புரியும்? எனது பயம் எனக்குத் தானே தெரியும். இதை படிக்கும் உங்களுக்கே சிரிப்பு வருகிறதல்லவா? நினைத்து பார்க்கும் போது எனக்கு எப்படி இருக்கும்?

    மறக்க முடியாத மற்றொரு நினைவுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்...

    (தொடரும்)

    • அன்னை மீன் போன்ற அழகிய கண்களால் பக்தர்களுக்குக் காலமெல்லாம் அருள்பாலிக்கிறாள்.
    • மன்னன் திருமலை நாயக்கனின் மடிமேல் உரிமையோடு வந்து அமர்ந்துகொண்ட அவள், மன்னனின் கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றினாள்.

    பாரத தேசத்தின் மிகப் புராதனமான நகரங்களில் ஒன்று மதுரை. மதுரை நகரத்தின் அமைப்பு தாமரை மலரைப் போன்றது. நடுவே ஆலயம். சுற்றிலும் தாமரை இதழ்களைப் போல் வீதிகள்.

    அந்த வீதிகள் பல, தமிழ் மாதங்களின் பெயர்களில் அமைந்துள்ளன. சித்திரை வீதி, ஆடி வீதி, ஆவணி வீதி போன்றவற்றில் மன்னர்கள் காலத்தில் அந்தந்த மாதத்திற்குரிய திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.

    மதுரையில் கோவில் கொண்டிருக்கும் அன்னை மீனாட்சி, பார்வதி தேவியின் அவதாரமாவாள்.

    மன்னன் மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் மகப்பேறில்லாததால் வருந்தினார்கள். புத்திர பாக்கியம் வேண்டி யாகம் நிகழ்த்தினார்கள்.

    அவர்களுக்குப் புத்திர பாக்கியம் கிட்டவில்லை. ஆனால் புத்திரி பாக்கியம் கிட்டியது!

    ஆம். யாகத்தீயிலிருந்து ஒரு சிறுமியாய்த் தோன்றினாள் மீனாட்சி. அவள் திருமுகம் ஆயிரம் கோடி நிலவுகளைப் பிசைந்து செய்தாற்போல் ஒளிவீசியது.

    அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான் அரசன் மலயத்துவசன். ஆனால் என்ன ஆச்சரியம்! தீயிலிருந்து வெளிப்பட்ட சிறுமிக்கு வழக்கத்திற்கு மாறாக மூன்று மார்பகக் குறிகள் தென்பட்டன.

    இயற்கைக்கு மாறுபட்ட இந்தத் தன்மையைக் கண்டு மன்னன் திகைத்தபோது வானில் ஒலித்தது அசரீரி. வீராங்கனையான அவள், என்று ஓர் ஆண்மகனைக் கண்டு நாணத்தால் தலைகுனிகிறாளோ அன்று அவளின் ஒரு மார்பகம் தானே மறையுமென்றும் அந்த ஆண்மகனே அவள் கணவனாகும் தகுதி படைத்தவன் என்றும் சொல்லிற்று அது.

    மகிழ்ச்சி அடைந்த மன்னன் மலயத்துவசனும் அரசி காஞ்சனமாலையும் சிறுமியின் அழகிய விழிகளைக் கண்டு அவளுக்கு மீனாட்சி எனப் பெயரிட்டு அவளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார்கள். ஆண்வாரிசு இல்லாத அவர்கள் தங்கள் பெண்ணுக்கு வில், வாள், வேல் என அத்தனை போர்க்கலைகளையும் கற்பித்தார்கள்.

    வெளிதேசங்களைப் படையெடுத்து வெல்லத் தொடங்கினாள் வீரமங்கை மீனாட்சி. கயிலாயம் வரை உள்ள தேசங்களைத் தன் காலடியின் கீழ் கொண்டுவந்தாள். கயிலைக்கும் சென்று சிவபெருமானோடு போரிட வில்லை வளைத்தாள்.

    அப்போது பொன்னார் மேனியனாய் புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்து அவள் முன் தோன்றினார் சிவபெருமான்.

    அந்தப் பேரழகனின் தெய்வீகப் பொலிவைக் கண்ட அவள் நாணித் தலைகுனிய அவள் மூன்றாம் மார்பகம் தானே மறைந்தது. சிவன் மீனாட்சியின் இதயத்தில் குடிபுகுந்தார். பிறகென்ன, திருமணம்தான்!

    திருமாலின் சகோதரி பார்வதி என்பதாலும் மீனாட்சி பார்வதியின் அவதாரமே என்பதாலும் அண்ணன் திருமால், மீனாட்சி கல்யாணத்தின் பொருட்டு மதுரைக்கு வருகை தந்தார்.

    திருமணத்தை தரிசிக்காமல் தேவர்கள் சிவனே என்றிருக்க முடியுமா! முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த அரிய திருமணக் காட்சியைக் காண மதுரையில் குவிந்தனர். மன்னன் மலயத்துவசன் உபசாரத்தால் அத்தனை பேருக்கும் உணவு, விருந்து அமர்க்களப்பட்டது.

    என்றாலும் எல்லோருக்கும் என்னால் உணவளிக்க முடியும் என்ற ஒரு துளி கர்வம் அவனுக்கு வராமல் இருக்க வேண்டுமே?

    அதன்பொருட்டு தன் பூதகணங்களில் ஒருவனான குண்டோதரனை அழைத்தான் சிவன். வந்த குண்டோதரன் ஒருவனே எஞ்சியிருந்த அத்தனை உணவையும் தின்று தீர்த்துவிட்டுத் தண்ணீர் கேட்டான்! குண்டோதரனின் செய்கையைப் பார்த்து மலைத்து நின்ற மலயத்துவசனின் கர்வம் அடங்கியது.

    அண்டா அண்டாவாகத் தண்ணீர் குடித்தான் குண்டோதரன். அப்படியும் நீர்வேட்கை தீரவில்லையே? தாகம் தாகம் என்று அவன் தவித்தபோது சிவன் தரையில் கை வைத்து அழுத்தினார்.

    தலையில் கங்கை வைத்திருந்த சிவன், தரையில் கை வைத்ததும் பூமியிலிருந்து புதிதாய்ப் புறப்பட்டது ஒரு நதி. அந்த நதிநீரைக் குடித்து தாகம் தணிந்தான் குண்டோதரன். கையை வைத்துத் தோன்றிய காரணத்தால் அது வைகை எனப் பெயர் பெற்றது.

    திருமணத்திற்குப் பின் சொக்கநாதராகிய சிவன் மனைவி மீனாட்சியோடு மதுரையிலேயே வசிக்கலானார் என்கிறது புராணம்.

    *அன்னை மீன் போன்ற அழகிய கண்களால் பக்தர்களுக்குக் காலமெல்லாம் அருள்பாலிக்கிறாள்.

    ஆண்டாள் கரத்தில் உள்ளதைப் போலவே, மீனாட்சி கரத்திலும் ஒரு பச்சைக் கிளி! மீனாட்சியின் கையில் உள்ள கிளியின் வரலாறு சுவாரஸ்யமானது.

    கிளியின் உடலில் கூடுவிட்டுக் கூடுபாய்ந்தார் அருணகிரிநாதர். அவர் மீண்டும் தன் உடலுக்குள் திரும்புவதற்குள் அவரது மனித உடல் அவரின் விரோதி சம்பந்தாண்டான் என்பவனால் எரிக்கப் பட்டுவிட்டது.

    கிளி உருவம் எடுத்த அருணகிரியார் கயிலாயத்திற்குப் பறந்து சென்றார். அன்னை மீனாட்சி அருணகிரிக் கிளியைத் தன் கையில் தாங்கிக் கொண்டாள்.

    அருணகிரி நாதர் தீவிர முருக பக்தர் அல்லவா? அருணகிரிக் கிளியின் மூலம் தன் இளைய மகன் முருகனின் திருப்புகழைக் கேட்டுக் கேட்டு ஈன்ற பொழுதில் பெரிதுவக்கிறாளாம் அன்னை மீனாட்சி.

    மீனாட்சியின் கையில் உள்ள கிளி பக்தர்களின் கோரிக்கையை அன்னைக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி நினைவூட்டிக் கொண்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

    சொன்னதைச் சொல்லும் குணமுடையது அல்லவா கிளிப்பிள்ளை? பக்தர்கள் சொன்னதை அது மீனாட்சியின் காதில் சொல்லிக் கொண்டே இருப்பது இயல்புதானே?

    * மீனாட்சி கோவிலில் பொற்றாமரைக் குளம் உண்டு. இந்தக் குளத்தை அமைத்தவன் தேவர்களின் அரசனான இந்திரன்.

    விருத்தாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள விரும்பினான் இந்திரன். பல திருத்தலங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை வழிபட்டும் அவன் மனத்தில் நிம்மதி தோன்றவில்லை.

    மதுரைக்கு வந்தான். கடம்பவனமாக இருந்த மதுரையில் சுயம்புவாக வெளிப்பட்ட சிவலிங்கத்தை தரிசித்தான். அடுத்த கணம் அவன் மனம் சொல்லவொண்ணா அமைதி கண்டது.

    சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய வேண்டுமே? அதற்கென்றே ஓர் அழகிய குளத்தை நிர்மாணித்தான்.

    அவன் பூஜைக்கு மலர்களைத் தேடியபோது, அவன் அமைத்த அந்தக் குளத்தில் தங்கத் தாமரைகள் தானே பூத்தன. அந்தப் பொற்றாமரைகளைக் கொண்டே இந்திரன் சிவபூஜை செய்ததாகவும் அன்றுதொட்டு அந்தக் குளம் பொற்றாமரைக் குளம் என அழைக்கப் படுவதாகவும் புராணங்கள் சொல்கின்றன.

    பொற்றாமரைக் குளத்து நீர் புனிதத் தன்மை நிறைந்தது. அதைத் தலையில் தெளித்துக் கொண்டால் எல்லாப் பாவங்களில் இருந்தும் விடுதலை பெறலாம். இந்திரனுக்குக் கிடைத்தது போன்ற மன நிம்மதியை நாமும் அடையலாம்.

    *மீனாட்சி அம்மையிடம் பக்தி பூண்ட தமிழ்ப் புலவர்களில் முக்கியமானவர் குமரகுருபரர். திருமலை நாயக்கன் காலத்தில் வாழ்ந்த அவர், மீனாட்சியம்மன் கோவிலில் அமர்ந்து மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் என்ற செய்யுள் நூலை அருளினார்.

    திருமலை நாயக்கன் கனவில் வந்த மீனாட்சி, தன்மேல் இயற்றப்படும் குமரகுருபரரின் மீனாட்சியம்மைப் பிள்ளைத் தமிழ் நூலை ஆலயத்தில் வந்து கேட்குமாறு ஆணையிட்டாள். திருமலை நாயக்கன் அன்னையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஆலயத்தில் வந்து அமர்ந்து மீனாட்சியம்மன் சன்னிதியில் குமரகுருபரர் பாடிய பிள்ளைத் தமிழ் நூலைக் கேட்கலானான்.

    தமிழினிமை சொட்டச் சொட்ட எழுதப்பட்ட அந்த பக்தி நூலில், `தொடுக்கும் கடவுட் பழம்பாடல் தொடையின் பயனே' என்ற செய்யுள் மிகவும் புகழ்பெற்றது. மீனாட்சியைச் சிறுமியாகக் கண்டு `வருக வருக!' என அழைக்கும் வருகைப் பருவத்துச் செய்யுள் அது.

    `ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே!' என அதில் ஒரு வரி வரும். அந்த அழகிய வரியில் மீனாட்சி மனம் பறிகொடுத்தாள். வருக வருக எனத் தன்னை உருகி உருகி அழைத்த குமரகுருபரரின் உன்னதமான பக்தியை மெச்சி மீனாட்சி உண்மையிலேயே அவர் முன் ஒரு சிறுமியாய் வருகை தந்தாள்.

    மன்னன் திருமலை நாயக்கனின் மடிமேல் உரிமையோடு வந்து அமர்ந்துகொண்ட அவள், மன்னனின் கழுத்திலிருந்த முத்துமாலையைக் கழற்றினாள்.

    கொலுசு கொஞ்சக் கொஞ்ச நடந்து குமரகுருபரர் அருகே வந்து அந்த மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள். பின் சன்னிதிக்குள் நடந்துசென்று மீனாட்சியம்மன் சிலையில் கலந்து மறைந்தாள்.

    அவள் நடந்துசென்ற நடையே ஒரு நாட்டியம் போல் இருந்தது. அதுசரி, நடனமாடுவதில் தேர்ச்சி பெற்ற கணவனின் மனைவி அல்லவா அவள்?

    மீனாட்சி அன்னையை ஒரு சிறுமியாக நேரில் தரிசிக்கும் பாக்கியம் பெற்ற நாயக்க மன்னன் பெரும் வியப்படைந்து குமரகுருபரரைக் கொண்டாடினான் என்பது பக்தி இலக்கிய வரலாற்றில் உள்ள குறிப்பு.

    *சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமைக்குரியது மதுரை. இறையனார் என்ற சங்கப் புலவர் சிவபெருமானே என்ற கருத்தும் உண்டு.

    சிவனுக்கும் புலவர் நக்கீரருக்கும் ஏற்பட்ட சச்சரவுகளும் நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என நக்கீரர் முழங்கியதும் அனைவரும் அறிந்த செய்திகளே.

    நரியைப் பரியாக்கிப் பரியை நரியாக்கியது, பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டது, வளையல்காரராக வளையல்கள் விற்றது என மீனாட்சியம்மையின் கணவரான சொக்கநாதர் மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் அறுபத்து நான்கு.

    இந்தத் திருவிளையாடல் கதைகளையெல்லாம் சொல்லும் பழந்தமிழ் நூல் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் என்ற செய்யுள் நூல்.

    அருள்புரியவென்றே காத்திருக்கிறாள் சொக்கநாதரையும் சொக்கச் செய்த அன்னை மீனாட்சி.

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் அவளை தரிசித்து அவள் அருளை வேண்டினால் தடையின்றி எதையும் தரக் காத்திருக்கிறாள் அன்னை. அகிலமெங்கும் நடப்பது அவள் அருளாட்சி தானே?

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • தனது படைகளுடன் சென்ற ராமன் மேற்கு தொடர்ச்சி மலையில் நீராட வேண்டும் என்று நினைத்தபோது, கொண்டுவரப்பட்டதுதான் இந்த வைப்பாறு.
    • அம்பாளை தரிசிக்க விரும்பிய முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்தார்.

    பஞ்சபாண்டவர்கள் பதின்மூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் காலை, மாலை நீராடி இறைவனை பூசை செய்ய அர்ச்சுனன் சூரிய உதய நேரத்தில் கங்காதேவியை தியானித்து, வருணாஸ்தி ரத்தினால் பூமியில் அம்பெய்தான். பூமியில் இருந்து கங்கை பிரவாகமாக வெளிவந்தது. பஞ்சபாண்டவர்கள் நதியில் நீராடி, நித்ய கடமைகளைச் செய்தனர். அன்று முதல் அந்த ஆறு அர்ச்சுனா நதி என்று பெயர் பெற்றது.மற்ற புண்ணிய நதிகளில் மாதம் தோறும் நீராடிப் பெறும் பயனை, இந்நதியில் ஒரு முறை நீராடுவதாலேயே பெறலாம் என்று நாரதர் சொன்னதாக தொல்வரலாறுகள் கூறுகின்றன. இந்த புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும். அர்ச்சுனா ஆறு ஓடிய வழியில் பரசுராம சேத்திரமான கேரள மாநிலத்தில் உருவாகி தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் வழியாக வைப்பாறு என்னும் ஆறு வந்தது.

    வைப்பாறு ராமபிரானினால் உருவாக்கப்பட்டது. தனது படைகளுடன் சென்ற ராமன் மேற்கு தொடர்ச்சி மலையில் நீராட வேண்டும் என்று நினைத்தபோது, கொண்டுவரப்பட்டதுதான் இந்த வைப்பாறு. அகத்திய முனிவர் உலகில் உள்ள புண்ணிய தீர்த்தங்களை எல்லாம் ஒரு குடத்தில் சேமித்து, இந்த இடத்தில் புதைத்து வைத்திருப்பதாக வழிச்செல்பவன் கூறினார். இதைக் கேட்ட ராமன் இடத்தை கண்டுபிடித்து, தனது பானத்தினால் அம்பினை எய்து புண்ணிய தீர்த்தங்களை வெளிவரச் செய்தார். புனித தீர்த்தங்களை ஒன்றாக்கி வைத்திருந்ததால் இந்த ஆறுக்கு வைப்பாறு என்ற பெயர் வந்தது வரலாறு.

    அம்பாளை தரிசிக்க விரும்பிய முனிவர் நீண்ட நாட்களாக தவம் இருந்தார். சித்துகள் கைவரப்பட்ட முனிவருக்கு ஒரு அசரீரீ குரல் அர்ஜுனரி ஆறுக்கும், மற்றும் வைப்பாறுக்கும் இடையே உள்ள மேட்டுப் பகுதிக்கு வரக் கூறியது. மேட்டுப் பகுதியை அடைந்த சித்தருக்கு அம்பாள் காட்சி அளித்தாள். கண்களால் கண்ட அம்பாளின் உருவத்தை சிலையாக வடிவமைத்து, வணங்கினார் சித்தமுனிவர் . நாளடைவில் இயற்கை சீற்றத்தில் ஆற்று மண்ணில் மறைந்து கொண்டது. இரண்டு கங்கை நதிகளும் ஓடி வரும் இடைப்பகுதியில் அடர்ந்த காடு உருவாயிற்று.

    காட்டில் கால்நடைகள் இட்டுச் செல்லும் சாணக்கழிவுகளை அருகில் உள்ள கிராம மக்கள் திரட்டி எடுத்துச்செல்லும் பழக்கம் உண்டு. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் அவ்வாறு ஒரு பெண் சாணிபொருக்கி கூடையிலிட்டு வரும்போது ஒரு நிலையில் கூடையை அசைக்க முடியாத கனம் உண்டானது, அவள் ஊராருக்கு தகவல் சொல்ல ஊராரும் அங்கு சேர்ந்துவிட அப்பொழுது அவள் சாமி வந்து ஆடினாள். சாமியாடிய அந்தப் பெண், அந்தக் கூடை இருக்கும் இடத்தில், சிலையாகப் புதைந்து கிடக்கும் தன்னை வெளியில் எடுத்து, கோவில் அமைத்து வணங்கினால், அனைத்து வேண்டுதல்களையும், நிறைவேற்றுவேனென தெரிவித்தாள், மக்கள் அந்த இடத்தில் புதைந்து கிடந்த சிலையை எடுத்து ஊருக்குள் கொண்டு சென்று வைத்து வழிபடத் துவங்கினர்.

    மூன்று தினங்களில் மீண்டும் அப்பெண்ணின் மீது அருள் வந்து, "நான் வீற்றிருக்கும் இடத்தில் சேவல் கூவக்கூடாது, இருக்குமிடம் சுத்தமாயிருக்க வேண்டுமாதலால் முன்பு தோண்டி எடுத்த இடத்திலேயே கொண்டு வைத்து வழிபடுங்கள்" என்றாள். தொடர்ந்து அம்மனை மீண்டும் ஊருக்குள் இருந்து தற்போது திருக்கோவில் அமைந்து உள்ள இடத்தில் நிறுவி வழிபாடு செய்யத்தொடங்கினர்.

    கோவில் அமைவிடம்: வைப்பாறு, அர்ச்சுனாஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு மத்தியில் , மணல் திட்டில், இந்தக்கோவில் அமைந்துள்ளது.

    பெயர்க் காரணம்: கோவிலின் தெற்குப் பக்கம் வைப்பாறு, வடக்குப் பக்கம் அர்ச்சுனன் ஆறு என்று இரு ஆறுகள் சேர்ந்து வருவதால் இரு கங்கை கூடுமிடம் என்று சொல்லப்பட்டு, இந்த இடத்தில் அம்மன் குடி கொண்டு விட்டதால், 'இரு கங்கை' குடி என்பது, 'இருக்கன்குடி' என்றானது. அங்கு குடி கொண்ட தெய்வம் மக்கள் குறை தீர்க்கும் மாரியம்மனாகும். இந்த அர்ச்சுனா நதி, புராணப் பெருமை வாய்ந்தது.

    கோவில்களில், மாரியம்மன், இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்டபடிதான் இருப்பார். ஆனால் இந்தக் கோவிலில் இருக்கும் கருவறை மாரியம்மனோ, சிறப்பம்சமாக வலது காலை மடித்து, இடது காலைத் தொங்கவிட்டிருக்கிறார்.

    கருவறை அழகிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் நுழைவாசலின் உயரம் குறைவாக இருப்பதால் குனிந்து உள்ளே போக வேண்டும். அம்மன் ஆபரணங்கள் அணிந்து மின்னுகிறாள். அம்மனின் கண்கள் காண்பதற்கே மெய் சிலிர்க்கும்.

    அர்த்த மண்டபம் மற்றும் மகாமண்டபம் கருவறைக்கு அருகில் அமைந்துள்ளன. நந்தீஸ்வரர் மற்றும் கொடிமரம் மகாமண்டபத்தின் முன்புறம் அமைந்துள்ளன. கருவறையின் தென்புறம் அரச மரத்தடியில் சித்திவிநாயகர் சன்னதியும் மற்றும் வடக்குவாய்ச்செல்லியம்மன், ஸ்ரீ வெயிலுகந்தம்மன் சன்னதிகளும் அமைந்துள்ளன. கருவறையின் வடக்குப் பகுதியில் பைரவர், வீரபத்திரர், பேச்சியம்மன், காத்தவராயர் சன்னதிகள் அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தின் தென்கிழக்குப் பகுதியில் கருப்பசாமி சன்னதி அமைந்துள்ளது.

    மூன்று நாட்கள் ஊருக்குள் இருந்து விட்டு கோவில் உள்ள இடத்திற்கு மீண்டும் அம்மன் கொண்டுவரப்பட்டதால் அம்மனின் உற்சவர் சிலை, ஒவ்வொரு ஆடிமாதமும் கடைசி வெள்ளியன்று ஊரில் உள்ள கோவிலில் எழுந்தருளி, மூலவர் உள்ள இடத்திற்கு வந்து தங்கவைக்கப்படுகிறது. மறுநாள் இங்கிருந்து புறப்பட்டு ஊருக்குள் உள்ள உற்சவர் கோவிலை அடைகிறது.

    தனிச்சிறப்புகள்: இருக்கன்குடிக்கு மட்டுமின்றி அதை சுற்றியுள்ள நத்தத்துப்பட்டி, என்.மேட்டுப்பட்டி, கே.மேட்டுப்பட்டி உட்பட சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராமத்து மக்களுக்கும் இப்பகுதியில் இருந்து பிழைப்பு தேடி வெளியூர் சென்று குடியேறிய மக்களுக்கும் அருள்கடாட்சம் தந்து பாதுகாக்கும் குல தெய்வமாக மாரியம்மன் திகழ்கிறாள்.

    இருக்கன்குடி மாரியம்மனின் புகழ் 1600-ம் ஆண்டு முதல் மற்ற பகுதிகளுக்கு பரவத் தொடங்கியது. 1605-ம் ஆண்டு முதல் மதுரை பகுதியை ஆண்ட பாளையக்காரர்கள் இருக்கன்குடி மாரியம்மனுக்கு மானியம் கொடுத்தனர்.

    இருக்கன்குடி மாரியம்மன் தனக்கு ஆடி மாதம் பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர் ஒருவர் கனவில் வந்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 1908-ம் ஆண்டு முதல் அங்கு ஆடி பிரமோற்சவம் நடந்து வருகிறது..

    பாலையம்பட்டி "பெரியிலாந்தாஸ்" என்பவர் அம்மன் மீது தனி கீர்த்தனம் பாடி உள்ளார். முள்ளிக் குளம் வித்வான் சங்கரபாண்டி பிள்ளை "மாலைபதிகம்" இயற்றியுள்ளார் . 1925ல் துலுக்கங்குளம் அருளானந்த கருப்பையா ராஜா என்பவர் 'செந்தமிழ்பதிகம்' ஒன்று பாாடி உள்ளார்.

    பழனி கோவிலுக்கு மக்கள் பாதயாத்திரை செல்வது போல தை மாதம் விரதம் இருந்து ஏராள பக்தர்கள் பாதயாத்திரையாக இருக்கன்குடிக்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். மதுரைக்கு தெற்கே உள்ள தென்மாவட்ட மக்கள் மத்தியில் இத்தலம் மிகச்சிறந்த சக்தி பீடமாகத் திகழ்கிறது்

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள இருக்கன்குடியில் உள்ள மாரியம்மன் கோவிலாகும்.

    ஒவ்வொரு வெள்ளி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் அதிக அளவில் மக்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். இம்மாரியம்மன் கோவில் தென் மாவட்டத்தில் இருக்கும் மிகவும் பிரபலமான கோவில்களில் ஒன்றாகும். இந்தக் கோவிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் உபாதைகள் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது.

    வேண்டுதல்கள்: முடிகாணிக்கை இத்திருக்கோவிலின் பிரதான பிரார்த்தனை ஆகும். குறை நிவர்த்தி வேண்டி திருக்கோவிலில் தங்கி வயனம் காக்கும் பார்வையேற்றோர்க்கு பார்வையளித்தும், தீராத நோய்களைத் தீர்த்து வைத்தும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் அளித்தும், திருமண பாக்கியம் வேண்டியோருக்கு மாங்கல்ய வரம் அளித்தும் அருளாட்சி செய்யும் அம்மனை தரிசித்தால் நிச்சயம் அருள் புரிகிறாள் என்பது பக்தர்களின் சொல்லாகும். குழந்தைவரம் வேண்டியோர் கரும்புத்தொட்டில் வேண்டுதல் நிறைவேற்றுவதும் சிறப்பாகும்.

    திருவிழாக்கள்: இடுக்கண் களையும் இருக்கன்குடியாளுக்கு ஆடி கடைசி வெள்ளியன்று நடைபெறும் பெருந்திருவிழாவை முன்னிட்டு, அதற்கு முந்தைய வெள்ளியன்று கொடியேற்றம் நடைபெற்று, ஆடி கடைசி வெள்ளி அன்று உற்சவர் கோவிலில் இருந்து அன்னை ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, அர்ச்சுனா நதியில் உலாவி திருக்கோவிலில் எழுந்தருள்வாள். இந்த விழாவில் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள்.

    தை கடைசி வெள்ளியிலும், பங்குனி கடைசி வெள்ளியிலும் பெருந்திரளான மக்கள் அம்மன் அருள் பெறக் கூடுவர். விழாக்காலங்களில் அம்மன் அருள் பெற அர்ச்சுனா நதியிலும், வைப்பாறு நதியிலும் கூடும் மக்கள் வண்டிகளிலும் வாகனங்களிலும் வந்து நேர்த்திக்கடனைச் செலுத்துவது மெய்சிலிர்க்க வைக்கும் நிகழ்ச்சியாகும்.

    அம்மனுக்கு அக்கினிச்சட்டியும், ஆயிரங்கண்பானையும், உருவம் எடுத்தல், போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனின் அருளைப் பெற்று, பக்தர்கள் வாயாற வேண்டிச் சென்று வாழ்க்கையில் வளம் பெறுவது இத்திருக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

    • நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக பாளையங்கால்வாய் இருக்கிறது.
    • பாளையங்கால்வாய் மூலம் 57 கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது சுமார் 126 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

    இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் உள்ளிட்ட 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பாசன வசதி பெற செய்கிறது. இது தவிர தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் வரை பாபநாசம் அணை தண்ணீரை நம்பி விவசாயம் நடந்து வருகிறது.

    இதில் நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக பாளையங்கால்வாய் இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில், பழவூர் தடுப்பணையில் இருந்து தொடங்கும் இந்த கால்வாய் சுமார் 43 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இக்கால்வாய் மூலம் 57 கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.

    இந்த தண்ணீர் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயில் மட்டும் 162 மடைகள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் பலவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. ஷட்டர்கள் எங்குமில்லை. இதனால், தண்ணீர் வீணாவதோடு விவசாயிகளும் தங்களது பாசனப்பரப்பை ஆண்டுதோறும் குறைத்து வருகின்றனர்.

    கால்வாயின் தொடக்கம் முதல் கடைசி வரையில் ஆகாயத்தாமரை, அமலை செடிகள், கால்வாய் முழுக்க ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை. குறிப்பாக 56-வது குளமான நொச்சிக்குளம், 57-வது குளமான சாணான்குளம் ஆகியவற்றுக்கு, தண்ணீர் சேரவில்லை.

    இதனால் கடந்த 15 ஆண்டுகளாக பாளையங் கால்வாயின் கடைமடை பகுதியில் கார் பருவ சாகுபடி நடக்கவே இல்லை என்ற விஷயம் வேதனைக்குரியது. இந்த கால்வாய் மாநகர பகுதியில் மட்டும் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த பகுதியில் மாநகராட்சி கழிவுகளும், சாக்கடையும், குடிமகன்களால் வீசப்படும் மது பாட்டில்களும் அடைத்து தண்ணீர் சீராக வழிந்தோட முடியாமல் போய்விடுகிறது.

    குறிப்பாக, மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் மாநகராட்சி ஊழியர்களே, கால்வாயில் கழிவுகளை கொட்டி விடுகின்றனர் எனவும், பெரும்பாலானோர் கட்டிடக்கழிவுகளை கொட்டி பாளையங்கால்வாயில் அகலத்தை சுருக்கி விட்டார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

    தொடர் புகார்களால் பொதுப்பணி துறை, வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தாமிரபரணி ஆற்றிலும், பாளையங்கால்வாயிலும் சாக்கடை கலப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன் பேரில் மாநகராட்சி சில நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

    இந்த நடவடிக்கைகளை விரைவு படுத்தி கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • ஒருவரின் லக்னத்திலிருந்து இரண்டாமிடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.
    • அஷ்டமி திதியில் 27 மிளகை சிவப்பு துணியில் கட்டி நல்லெண்ணையில் இட்டு தீபமேற்றி பைரவரை வழிபட அஷ்டம தோஷம் விலகும்.

    மனித வாழ்வில் மீளமுடியாத பல சந்தர்ப்பங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள பிரபஞ்சம் வழங்கிய உபயமே பரிகாரம். பரிகாரத்தில் பல வகைகள் உண்டு என்றாலும் எளிமையான சில கோவில் பரிகாரங்கள் பலருக்கு சிறப்பான நற்பலன்களை வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் லக்னம் முதல் 12 பாவகங்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் எளிய வழிபாட்டு முறைகளைக் காணலாம்.

    லக்னம்

    லக்ன வலிமை மிக முக்கியம். லக்னம், லக்னாதிபதி நல்ல நிலையில் இயங்கினால் மட்டுமே ஒருவரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். அதாவது கப்பலின் கேப்டன் திறமையானவராக இருந்தால் மட்டுமே பயணித்து இலக்கை அடையமுடியும். ஒருவரின் வாழ்க்கை பயணம் இனிமையாக அமைய அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு எழப் பழக வேண்டும். கழிவுகளை நீக்கி உடலையும், உள்ளத்தையும் சுத்தம் செய்ய வேண்டும்.வீட்டின் வாசலை சுத்தம் செய்து அரிசிமாவினால் கோலமிட்டு பூஜை அறையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி குல தெய்வம், இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சூரிய நமஸ்காரம் செய்து அன்றைய நாளைத் துவ்ஙகினால் தொட்டது துலங்கும். கண்திருஷ்டி பாதிப்பு விலகும்.

    தன ஸ்தானம்

    ஒருவரின் லக்னத்திலிருந்து இரண்டாமிடம் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.

    குடும்பத்தை செம்மையாக நடத்த பணம் மிக அவசியம். தேவையான பொருளாதாரம் இருந்தால் மட்டுமே குடும்பத்தில் கலகலப்பு இருக்கும்.

    முக்கிய தேவைகள் நிறைவேறாத வீட்டில் சலசலப்பு கூச்சல், குழப்பம் நிலவும். வாய் வார்த்தை முத்தி குடும்பத்தில் பிரிவினை உண்டாகும். குளத்து மீன்களுக்கு பொரியிட்டாலும் எறும்பு புற்றில் நொய் அரிசி அல்லது சர்க்கரையிட்டாலும் தாராள தன வரவு உண்டாகும்.

    சகாய ஸ்தானம்.

    லக்ன பாவகத்திலிருந்து மூன்றாம் பாவகம் உப ஜெய ஸ்தானம், முயற்சி ஸ்தானம், சகாய ஸ்தானம், தைரிய, வீரிய, ஜெய ஸ்தானம். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் ஆகிய பழமொழிகள் சகாய ஸ்தானத்திற்கு மிக பொருத்தம். முயற்சியில் வெற்றி பெற, தைரியம் அதிகரிக்க, தொட்டது துலங்க, வீரிய குறைபாடு அகல உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்க, எல்லைத் தகராறு, ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபட, அண்டை அயலாருடன் நல்லிணக்கம் ஏற்பட, எல்லைத் தகராறு நீங்க புதன் கிழமை ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட வேண்டும்.

    சுக ஸ்தானம்

    லக்னத்திலிருந்து நான்காம் பாவகம் சுக ஸ்தானமாகும். ஒருவரின் சொத்து சுகம், தாய் மற்றும், தாய் வழி உறவுகளின் ஆதரவு, பள்ளிப் படிப்பு ஆகியவை பற்றிக் கூறுமிடம். சுக ஸ்தானம் என்றால் சொத்து சுகம் மட்டுமல்ல சொத்து சுகத்தை அனுபவிக்கத் தேவையான ஆரோக்கியத்தைப் பற்றியும் கூறுமிடம். நல்ல ஆரோக்கியமான தேகம், முறையான சொத்துக்கள் அமைய, சொத்துக்கள் மீதான மன உளைச்சல் அகல, தாய், தாய் வழி உறவுகளின் ஆதரவு கிட்ட, படிப்பில் சுட்டியாக திகழ சங்கடஹர சதுர்த்தியன்று தேங்காய் எண்ணையில் வெள்ளெருக்கம் திரியிட்ட தீபம் ஏற்றி விநாயகரை வழிபடவும்.

    பூர்வ புண்ணிய ஸ்தானம்

    ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திலிருந்து ஐந்தாமிடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகும். நல்ல பிள்ளைகள் பிறக்க, பிறந்த பிள்ளைகளால் நிம்மதியடைய, குல தெய்வ அனுகிரகம் கிடைக்க இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டிய அனைத்து இன்பங்களையும் அடைய பவுர்ணமி நாட்களில் சர்க்கரை பொங்கல் படைத்து குல தெய்வத்தை வழிபட வேண்டும். குல தெய்வம் தெரியாதவர்கள் வளர்பிறை வெள்ளிக்கிழமை நெய் தீபம் ஏற்றி தீபத்தை குல தெய்வமாக பாவித்து சர்க்கரை பொங்கல் படைத்து ஆத்மார்த்தமாக வழிபட வேண்டும்.

    ருண, ரோக, சத்ரு ஸ்தானம்

    லக்னத்திலிருந்து ஆறாமிடம் ஒருவரின் நோய், எதிரி, கடன் தொல்லை பற்றிக் கூறும் ருண, ரோக, சத்ரு ஸ்தானமாகும்.

    ஒருவரிடம் எந்த முகாந்திரமும் இல்லாமல் பெற்ற உதவி, பொருள் அல்லது பணம் திரும்பச் செலுத்தாத போது மன அழுத்தத்தால் அது ரோகம் எனும் நோயாக மாறுகிறது அல்லது சத்ரு எனும் எதிரியாக உருவெடுக்கிறது.

    அதே போல் பணம் வைத்திருப்பவன் மட்டும் பணக்காரன் கிடையாது. போதிய பணம் இருந்தாலும் கிடைத்த வசதியை அனுபவிக்க முடியாமல் நிம்மதியாக சாப்பிட முடியாமல் உடல் முழுவதும் நோயை வைத்துக் கொண்டு வாழ்நாளில் பெரும் பகுதியை மருந்துவ மனையில் செலவிடுவது வறுமை, கடனை விட பெரும் தண்டனை. மேலும் சகிப்புத் தன்மை இல்லாமல் அனைவரையும் பகைத்துக் கொண்டு உறவுகளுடன் ஒட்டி உறவாட முடியாமல் வாழ்வதும் நரகம் தான். ருண, ரோக, சத்ரு தொல்லையிலிருந்து விடுபட ஞாயிற்று கிழமை ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட வேண்டும்.

    சப்தம ஸ்தானம்

    லக்னத்திற்கு ஏழாமிடம் என்பது நண்பர்கள், வாழ்க்கைத் துணை, சம்பந்தி, தொழில் கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களைப் பற்றிக் கூறுமிடமாகும். அதன்படி இளம் வயதில் நண்பர்களைத் தரும் ஏழாமிடம் வாலிப பருவத்தில் வாழ்க்கைத் துணையையும், மத்திம வயதில் சம்பந்தம் செய்வதை பற்றியும் கூறும். அதாவது சமுதாய அங்கீகாரம்,

    சமுதாயத் தொடர்பை உருவாக்கிக் கொடுக்குமிடம் ஏழாமிடம். உறவுகளின் உன்னதத்தை உணர்த்துவது ஏழாம் பாவகம். .உறவுகளால் மன உளைச்சலை தருவதிலும் சப்தம ஸ்தானமே முன்னணி வகிக்கிறது.

    உரிய வயதில் திருமணம் நடைபெற, திருமண பந்தத்தில் நிம்மதி நிலைக்க, நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், சம்பந்திகளால் அனுகூலம் பெற வெள்ளிக்கிழமை அவல் பாயாசம் படைத்து நெய்தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட வேண்டும். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் படிக்க வேண்டும்.

    அஷ்டம ஸ்தானம்

    ஒருவர் ஜாதகத்தில்ல் லக்னத்திற்கு எட்டுக்குரியவரே அஷ்டமாதிபதியாவார்.ஒருவருக்கு பிறரின் கோபத்தால் ஏற்படும் சாபத்தை குறிக்குமிடம் 8ம் பாவகமாகும். பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு மனிதனை வாழ விடாமல் விரட்டும் கருணையற்ற தோஷம் அஷ்டமாதிபத்திய தோஷம். எவ்வளவு சாதனை செய்த மனிதர்களையும் இருந்த இடம் தெரியாமல் நிர்கதியாக நிற்க வைப்பது அஷ்டம ஸ்தானமாகும். அந்த அஷ்டமாதிபதியும் அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும் ஒருவருக்கு யோக, அவயோகத்தை தருகிறது. அஷ்டம ஸ்தானம் சுப வலுப்பெற்றால் விபரீத ராஜ யோகத்தால் அதிர்ஷ்டம் ஏற்படும்.

    அஷ்டம ஸ்தானம் அசுப வலுப்பெற்றால் ஆயுள் பயம், தீராத நோய், விபத்து, கண்டம், அவமானம், வறுமை, மன நிம்மிதியின்மை, தற்கொலை எண்ணம், கோர்ட், கேஸ் பிரச்சினை, சர்ஜரி போன்ற பிரச்சினை இருக்கும்.

    ஒரு சிலர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்தாலும் வம்பு பொய்வழக்கு, அவமானம், கண்டம், விபத்து தேடி வருவதற்கு அஷ்டமாதிபதியே காரணம். இதில் இருந்து விடுபட அஷ்டமி திதியில் 27 மிளகை சிவப்பு துணியில் கட்டி நல்லெண்ணையில் இட்டு தீபமேற்றி பைரவரை வழிபட அஷ்டம தோஷம் விலகும்.

    பாக்கிய ஸ்தானம்

    ஒருவரின் ஜென்ம லக்னத்தில் இருந்து ஒன்பதாமிடம் பாக்கிய ஸ்தானமாகும். ஒருவர் பிறந்த மதம், பரம்பரை வம்சம், குலம், கோத்திரம் ஆகியவற்றை தெரிவிப்பது ஒன்பதாமிடம். ஒன்பதாமிடம் எனும் பாக்கியஸ்தானம் வலிமை பெற்றவர்களுக்கு பிறவியிலே அதிர்ஷ்டம், நிறைந்த செல்வம், தானம், தருமம் செய்யும் நற்பண்புகள்,புண்ணிய காரியங்கள் ஈடுபடும் வாய்ப்பு, கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வது, அன்னதானம் செய்வது, நல்லதாய், தந்தை அமைவது, நல்ல மனைவி, நல்ல நண்பர்கள், விசுவாசமான வேலைக்கா ரர்கள், உயிரைக் கொடுக்கும் தொண்டர்கள், முன்னோர்களின் நல்லாசி,நல்ல குரு அமைவது, புனித யாத்திரை, தந்தை வழி சொத்து, பங்காளி வகையான சொத்துகளை அனுபவிப்பது, யானை, குதிரை, உயர் ரக சொகுசு வாகனம் அமைவது, வேதசாஸ்திர சடங்குகளைக் கடைப்பிடிப்பது, உடன் இருப்பவர்களை சுகமாக வைத்துக்கொள்வது, பரம்பரை கவுரவத் தொழில்,கூட்டுத் தொழில்,வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றம், முக்தி போன்ற புண்ணிய பலன்கள் வாழ்நாள் முழுவதும் துணை நிற்கும்.

    பாக்கிய ஸ்தானம் வலிமை குறைவதால் ஏற்படும், கவுரவக்குறைவு, பித்ருக்கள் சாபம், வறுமை, கடன், நிலையற்ற தொழில், உத்தியோகம் போன்ற பாதிப்பிவிருந்து விடுபட அமாவாசைத் திதியில் முன்னோர்களை வழிபட வேண்டும்.

    தொழில் ஸ்தானம்

    ஒருவரின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலிருந்து பத்தாமிடம் தொழில் ஸ்தானமாகும். இதன் மூலம் ஒருவருக்கு அமையக்கூடிய தொழில், அதன் மூலம் உண்டாக கூடிய கவுரவம் , அந்தஸ்து, தொழில் செய்யும் திறன், தொழிலில் ஜாதகருக்கு இருக்கும் ஆர்வம், தொழில் சம்மந்தப்பட்ட நுணுக்கங்கள், நுட்பங்களை வெளிபடுத்தும் திறன் ஆகியவற்றை அறிய முடியும். சிலருக்கு பெரிய வளர்ச்சியை கொடுக்கும். சொந்த தொழில் பலருக்கு தளர்ச்சியை கொடுத்து விடுகிறது.தொழில் ஸ்தானம் பலம் பெற்றால் தொழில் வாய்ப்புகள் தேடி வரும். நிர்வாகத் திறன் அதிகமாகும். அதிகார பலமிக்க அரசாங்க பதவி, அரசியல் செல்வாக்கு, தொழிலில் பெருத்த ஆதாயம் உண்டு. தொழில் ஸ்தானம் பலம் இழந்தால் இவர்களுடைய தொழில் அறிவு பிறருக்கே பயன்படும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சிந்தனை திறன் குறைவுபடும். முன்னேற்றம் இருக்காது. தொழில் ஸ்தானத்தை பலப்படுத்த பவுர்ணமி திதியில் சத்திய நாராயணர் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

    லாப ஸ்தானம்

    ஒருவரின் லக்னத்திலிருந்து பதினொன்றாமிடம் லாப ஸ்தானமாகும். பல்வேறு வகையில் தனபிராப்தி, சொத்து சேர்தல், எதிர்பாராத அசுர வளர்ச்சி, திடீர்யோகம், உழைப்பில்லாத செல்வம், உயில் சொத்து, பினாமி பணம், சொத்து பல வகையில் வருவாய், லாபம் போன்றவற்றை குறிப்பது 11ம் இடம். அதே போல் உப ஜெய ஸ்தானமான இந்த பாவகத்தின் மூலம் சித்தப்பா, மூத்த சகோதரம், இளைய மனைவி,எண்ணங்கள் நிறைவேறுதல் வழக்கு வெற்றி ஆகியவற்றை அறிய முடியும். தேவைக்கு அதிகமாக பணம் பொன், பொருள் உள்ளவர்கள் ஜாதகத்தில் லாப ஸ்தானம் வலிமையாக இயங்கும்.மனித வாழ்வின் அன்றாட தேவைகளான உணவு ,உடை இருப்பிடம் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் வாழ்வாதார சக்தியாக பணம் விளங்குகிறது. ஒருவருக்கு தொழில், வியாபாரம், வேலைவாய்ப்பு, வட்டி, ஷேர் மார்க்கெட், கட்டிட வாடகைகள், புரோக்கர், கமிஷன் ஏஜென்சி என நூற்றுக் கணக்கான வகையில் தன வரவு உண்டாக வாசி தீரவே காசு நல்குவீர் என்ற தேவாரப் பாடலை கேட்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும்.

    விரய ஸ்தானம்

    லக்ன பாவத்தின் பனிரெண்டாம் இடமான அயன, சயன விரய மோட்ச ஸ்தானத்தின் மூலம் ஒருவர் இந்த பிறவியில் அனுபவிக்கும் துயரங்களுக்கு தீர்வு வழங்க முடியும்.இதன் மூலம் முக்தி அல்லது மோட்சம் பிறவிப்பயனை அடைவாரா? மறுபிறவி உண்டா? படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் கிடைக்குமா? வெளிநாட்டு வேலை, தொழில் அமையுமா? போன்றவற்றை அறிய முடியும். அத்துடன் செலவினங்கள், நஷ்டங்கள், இல்லற இன்பம், பிரிவினை, தலைமறைவாகுதல், போன்றவற்றையும் அறிய முடியும்.

    12-ம்மிடம் அசுப பலம் பெற்றால் ஜாதகர் மன விரக்தி, தாழ்வு மனப்பான்மை அதிகமாகும். என்ன வாழ்க்கை என்று அடிக்கடி புலம்புவார்கள். முன்னேற்றத்திற்கு கடுமையாக போராட நேரும்.

    வரவுக்கு மீறி செலவு செய்வார். வீண் வம்பு, வழக்கு, விரோதங்களை தானே உருவாக்குவார். அடிக்கடி மருத்துவ செலவு உண்டாகும். குறிப்பாக மூட்டு, கை, கால் வலி, கண் சிகிச்சை இருக்கும். இவர்கள் சனிக்கிழமை கால பைரவருக்கு சகஸ்ஹர நாம அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.அன்றாடம் சமைத்த உணவில் ஒரு கைப்பிடி உணவை பட்சிகளுக்கு வைத்த பிறகு சாப்பிட வேண்டும்.

    ஒருவர் செய்யும் பரிகாரம் தசா புக்தி சாதகமாக இருந்தால் உடனே பலன் தரும். பிரச்சினையில் இருந்து விடுபடும் வரை தொடர்ந்து வழிபாடு செய்வது நல்லது. தசா புக்தி, கோட்சாரம் பலம் குறைந்தால் கால தாமதமாக பலன் கிடைக்கும். எனவே மனம் தளராமல் நம்பிக்கையுடன் பயன்படுத்தி நலம் பெற நல் வாழ்த்துக்கள்.

    • இதுதான் நடிப்பா? இப்படித்தான் நடிக்கணுமா? என்றெல்லாம் எனக்கு தெரியாது.
    • விளையாட்டுத் தனமாக நடந்துகொண்டதெல்லாம் காட்சிக்கு ஏற்றபடி யதார்த்தமாக அமைந்துவிட்டது என்பது தான் உண்மை.

    ஆன்டி...

    பிளீஸ் ஆன்டி...

    வேண்டாம் ஆன்டி...

    பயப்படாதே... நில்லு...

    வேண்டாம் ஆன்டி சூடு வைக்காதீங்க ஆன்டி...

    கண்ணில் பெருகிவந்த கண்ணீரோடு கதறி அழுதும் விடவில்லை. ராதா ஆன்டி கையில் வைத்திருந்த நெருப்பு குச்சியால் என் கையில் சூடு வைக்க வந்தார். அவ்வளவுதான் என்னை விட்டுடுங்க... விட்டுடுங்க என்று சத்தம் போட்டபடியே `மம்மி...' என்று உரக்க கத்தி விட்டேன்.

    என் சத்தத்தை கேட்டு வெளியே இருந்த என் அம்மாவும் பயந்து உள்ளே ஓடி வந்தார்.

    காட்சி எதுவும் எடுக்கப்படவில்லை. மொத்த படக்குழுவும் அப்படியே நின்று கொண்டிருந்தது. ராதா ஆன்டி சிரித்துக் கொண்டே `ஒண்ணுமில்லை பாப்பா... அழக்கூடாது. ஆன்டி சூடு வைப்பேனா உனக்கு?' இது சும்மா நடிப்பு தான் என்று என்னவெல்லாமோ சொல்லி சாமாதானப்படுத்தி பார்த்தார்கள். நான் சமாதானம் ஆகவே இல்லை. கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அம்மாவை கட்டிப்பிடித்துக்கொண்டு மம்மி சூடு வைக்க வேண்டாம்னு சொல்லு மம்மி என்று அழுதேன். அம்மாவும் என்னை என்னவெல்லாமோ சொல்லி சமாதானப்படுத்தி பார்த்தார்கள்.

    ஆனால் என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை. எனது பயத்தை போக்குவதற்காக ஒரு அங்கிள் தனது கையில் நெருப்பு குச்சியை வைத்து இதோ பார்... சுடவில்லை... என்றார். இருந்தாலும் எனக்கு பயம்.

    ஒரு வழியாக சமாதானப்படுத்திவிட்டு மீண்டும் என் கையில் சூடு போட வந்தார்கள். அப்போதும் நிஜமாகவே அழுது கத்திவிட்டேன். ஆனால் அப்போது காட்சி யதார்த்தமாக அமைந்துவிட்டது.

    `எங்கேயோ கேட்ட குரல்' படத்தில் ரஜினி சாருடன் நடித்த படத்தில் இந்த சம்பவத்தை என்னால் என்றுமே மறக்க முடியாது. அது மட்டுமல்ல ராதா ஆன்டியின் வளர்ப்பு குழந்தை நான். அவர் என்னை தூக்கி வைத்துக்கொண்டு ஒரு பாடல் காட்சியில் நடிக்க வேண்டும்.

    நான் அந்த பருவத்தில் கொளு கொளு என்று குண்டாக இருப்பேன். அதனால் அவரால் என்னை தூக்க முடியவில்லை. சிறிது நேரம் தூக்கி வைத்தாலும் எனது வெயிட்டையும் தாங்கிக்கொண்டு உணர்ச்சிகளை காட்டி அவரால் நடிக்க முடியவில்லை.

    அவரது சிரமத்தை பார்த்து வேறு வழி ஒன்றை கண்டு பிடித்தார்கள். அதாவது நான் ஒரு ஸ்டூலில் ஏறி நிற்பேன். என் அருகில் நின்று என்னை தூக்கி வைத்துக் கொண்டிருப்பது போல ராதா ஆன்டி நிற்பார். ஆனால் படத்தில் நான் ஸ்டூலில் நிற்கிறேன் என்பது தெரியாது. இப்படி தான் அந்த பாடல் காட்சியை படமாக்கினார்கள்.

    படத்தின் கதைப்படியும், அம்பிகா, ராதா இருவரும் அக்காள்-தங்கை தான்.

    பெண்ணின் சிறு சபலம் கூட பெரிய பிரச்சினையை உருவாக்கி விடும் என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

    கதையில் நான் அம்பிகாவுக்கு பிறக்கும் குழந்தை. ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையான அம்பிகா தனது கணவர் (ரஜினியை) உதறிவிட்டு மனைவியை பிரிந்து வாழும் வேறொருவருடன் ஏற்பட்ட சபலத்தால் அவருடன் சென்னைக்கு சென்றுவிடுவார். ஆனால் அங்கு போனதும் மனம் மாறி விடுவார்.

    ரஜினிக்கு அவரது தங்கையான ராதாவை திருமணம் செய்து வைப்பார்கள். அவரிடம் தான் நான் வளர்வேன். இப்படியே செல்லும் வலுவான கதைக்களம் அந்த படத்திற்கு மிகப் பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.

    அம்மாடி... அப்போது நீ சின்ன குழந்தை தானே! உனக்கு கதையெல்லாம் தெரிந்ததா? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. உண்மைதான். பெரியவளாக ஆன பிறகு நான் நடித்த படங்களை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

    எங்கேயோ கேட்ட குரல் தெலுங்கில் 'வா வா மரதள்ளு' என்ற பெயரில் வெளியானது. அதில் சோபன்பாபு, ராதிகாம்மா, சுஹாசினி நடித்தார்கள். அந்த படத்திலும் நான்தான் குழந்தை நட்சத்திரம்.

    தமிழில் ராதாம்மா என்னை தூக்கி கஷ்டப்பட்டதுபோல் தெலுங்கில் ராதிகாம்மா கஷ்டப்பட்டார்கள். அவர்கள் சிரமத்தை குறைத்ததும் ஸ்டூல் தந்திரம்தான்.

    மீனா-40 நிகழ்ச்சியில் ராதிகாம்மா அந்த சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

    நடிப்பதற்கு பயந்து இவ்வளவு அழுது இருக்கிறேனே என்பதை நினைக்கும்போது இப்போதும் எனக்கு சிரிப்பு வரும்.

    அப்புறம் முக்கியமான ஒரு விசயத்தை சொல்ல மறந்து விட்டேன். சூடு வைக்கும் காட்சியை எடுக்க எனக்கு `சாக்லேட்' வாங்கி தருவதாக கூறி தான் சமாதானப்படுத்தினார்கள்.

    சாக்லேட் என்றதும் அழுகையை நிறுத்திவிட்டேன். உடனே நான்கைந்து சாக்லேட்டும் வாங்கி தந்தார்கள்.

    அப்புறம் சாக்லேட்டை சாப்பிடுவதிலேயே குறியாக இருந்து டயலாக்கை மறந்துவிட்டேன்.

    இதை பார்த்து கவலைப்பட்ட எஸ்.பி.முத்துராமன் அங்கில் என்னிடம் `பாப்பா, சாக்லேட் சாப்பிடணும், அப்படியே பேசுவதற்கு சொல்லித்தந்தையும் மறக்காம பேசணும் சரியா? என்று சொல்லி காட்சிகளை படமாக்கினார்.

    இதுதான் நடிப்பா? இப்படித்தான் நடிக்கணுமா? என்றெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நான் விளையாட்டுத்தனமாக நடந்து கொண்டதே அற்புதமான நடிப்பாக இருந்திருக்கிறது.

    `பாபுலு தபா' என்ற தெலுங்கு படத்திலும் குழந்தை நட்சத்திர மாக நடித்தேன். அப்போது ஒரு காட்சியில் சாப்பிடும் உணவு தட்டை தூக்கி வீச வேண்டும். அதற்காக ஒத்திகை நடத்தப் பட்டது. என்னிடம் ஒரு காலி தட்டை தந்திருந்தார்கள்.

    அந்த தட்டை நாங்கள் கீழே போடு என்றதும் போட வேண்டும். சரியா என்றார்கள்.

    நானும் சரி என்பது போல் தலையை ஆட்டினேன். அவர்கள் சொன்னது போலவே தூக்கி போட்டேன். ரிகர்சல் கச்சிதமாக அமைந்ததாக கூறினார்கள்.

    ஓ.கே. இனி ஷாட் போயிடலாம் என்றார்கள். ரிகர்சலில் தந்தது போலவே என்னிடம் ஒரு தட்டை தந்தார்கள். இப்போது அந்த தட்டில் சோறு வைக்கப்பட்டிருந்தது.

    கேமரா வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்த என்னிடம் ரெடி... தட்டை தூக்கி போடு என்றதும் போட்டேன். ஆனால் அதில் இருந்த சோறு கொட்டியதால் அய்யய்யோ... சோறு கொட்டிடுச்சு... சோறு கொட்டிடுச்சு என்று பதறிவிட்டேன்.

    காட்சிப்படி உண்மையிலேயே சோறுடன் இருக்கும் தட்டை நான் கோபத்தில் தூக்கி வீச வேண்டும். அதெல்லாம் சொன்னால் புரியும் வயசா அது?

    இதனால் மீண்டும் படமாக்கினார்கள். இப்படித்தான் தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக ஓடிக்கொண்டிருந்தேன். எதுவும் நான் காட்சியை பற்றி புரிந்து நடித்தது கிடையாது. விளையாட்டுத் தனமாக நடந்துகொண்டதெல்லாம் காட்சிக்கு ஏற்றபடி யதார்த்தமாக அமைந்துவிட்டது என்பது தான் உண்மை.

    குழந்தை பருவத்தில் உங்கள் மீனா இன்னும் என்னவெல்லாம் சேட்டை செய்தாள்? என்ற தகவல்களுடன் அடுத்த வாரம் சந்திக்கிறேன்....

    (தொடரும்)

    • திதி என்பது வானில் சூரியன் மற்றும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும்.
    • திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்பதால் சூன்யம் அடைந்த திதியின் அதி தேவதையை வழிபடலாம்.

    தினமும் பஞ்ச அங்கங்களான திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் பற்றி தெரிந்து கொள்வதால் ஏற்படும் நன்மைகளை அளவிட முடியாது. பஞ்சாங்கத்தின் முதல் அங்கமான திதி சில குறிப்பிட்ட நிகழ்வுகளை நடத்த உகந்ததாகும். மேலும் திதி செல்வ விருத்தியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    ஒருவரின் செல்வ வளத்தைப் பெருக்கிக் கொள்ள திதித் தேவதைகளை பிறந்த திதி வரும் நாளில் வணங்குவதால் அளப்பரிய நல்ல பலன்கள் நடக்கும். இந்த கட்டுரையில் திதிகளைப் பற்றிய சில தகவல்களைக் காணலாம்.

    திதி என்பது வானில் சூரியன் மற்றும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரமாகும். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்து இருப்பார்கள். பவுர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேர் எதிரில் 180 டிகிரியில் இருப்பார்கள். சூரியன், சந்திரன் ஒவ்வொரு நாளும் எவ்வளவு தூரம் விலகி செல்கிறார்கள் என்பதை குறிப்பதே திதியாகும். அமாவாசையன்று சேர்ந்து இருக்கும் சூரியனும் சந்திரனும் பிரதமையன்று பிரிந்து மீண்டும் சேர்வதற்கு 30 நாட்களாகும். இந்த 30 நாட்களும் 30 திதியாகும். அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் (15 நாட்கள்) தொடங்கி பவுர்ணமி வரை சுக்லபட்ச திதிகள் (வளர்பிறை) பவுர்ணமிக்கு மறுநாள் தொடங்கி அமாவாசைக்கு முந்தைய நாள் வரை கிருஷ்ண பட்ச திதிகள் (15 நாட்கள் ) (தேய்பிறை) என்றும் அழைக்கப்படும். ஆக மொத்தம் 30 திதிகள்.

    பஞ்சபூதங்களில் நீர் தத்துவத்தை குறிப்பது திதி. ஒருவரின் உணர்ச்சிகள், ஆசைகள் மற்றும் உறவுமுறை பேணுவதில் அவருக்கு உண்டான தகுதியை சுட்டிக்காட்டும். திதி சந்திரனின் நாளாகும். பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்தத் திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும் அந்தத் திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த திதிகளுக்கு ஏற்ற காரியங்களில் ஈடுபடுவது சிறப்பு.

    பிரதமை:

    இந்த திதியின் அதிதேவதை அக்னி என்பதால் அக்னி சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். வாஸ்து காரியங்கள் செய்வதற்கு உகந்தது. திருமணம் போன்ற சுப காரியங்களை செய்யக் கூடாது. இந்த திதியில் பிறந்தவர்கள் சிவ பெருமானை வழிபட வேண்டும். துலாம், மகரம் ராசியினருக்கு இது சூன்ய திதி என்பதால் முக்கிய பணிகளை தவிர்க்கலாம்.

    துவிதியை:

    இந்த திதியின் அதிதேவதை பிரம்மன். அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம் ஆடை, அணிகலன்கள் அணியலாம். விரதம் இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டிட அடிக்கல் நாட்டலாம். நிரந்தரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அம்பிகை யை வழிபட முன்னேற்றமான பலன் உண்டு. தனுசு, மீனம் ராசியினருக்கு இது சூன்ய திதி என்பதால் நன்மை தராது.

    திருதியை:

    இதன் அதிதேவதை கவுரி (பராசக்தி). சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி. குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்க லாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அம்மனை வழிபடுவது சிறப்பு. சிம்மம், மகர ராசியினருக்கு சூன்ய திதி என்பதால் கவனமாக செயல் பட வேண்டும்.

    சதுர்த்தி :

    இதன் அதிதேவதை விநாயகர். முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி. ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும். ரிஷப, கும்ப ராசியினர் இந்த திதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    பஞ்சமி:

    இதன் அதிதேவதை நாகம் என்பதால் இது நாக வழிபாட்டுக்கு உகந்த திதியாகும். நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வழிபட்டால், நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி மிக விசேஷமானது. எல்லா சுப காரியங்களையும் செய்ய ஏற்ற திதியாகும். குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். இந்த திதியில் புற்று வழிபாடு செய்வது சிறப்பு. மிதுனம், கன்னி ராசியினருக்கு பஞ்சமி திதி சிறப்பான பலன் தராது.

    சஷ்டி:

    இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன். முருகனை சஷ்டி விரதம் இருந்து வழிபட சகல நலன்களும் உண்டாகும். புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும். சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம். ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். மேஷம், சிம்ம ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய திதியாகும்.

    சப்தமி:

    இதன் அதிதேவதை சூரியன் என்பதால் இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும். பயணம் மேற்கொள்ள உகந்த திதி. இதில் வீடு, வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்யலாம். ஆடை, ஆபரணங்கள் இசைக்கருவிகள் வாங்கலாம். தனுசு, கடக ராசியினருக்கு சூன்ய பலன்களை வழங்கும் திதியாகும்.

    அஷ்டமி:

    ஐந்து முகம் கொண்ட ருத்ரன் இதற்கு அதிதேவதை என்பதால் தீராத பிரச்சினைக்கு இந்த நாளில் சிவ வழிபாடு செய்யலாம். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவர்கள் சிவ பெருமானை வணங்குவது நன்மை இரட்டிப்பாகும். மிதுனம்,கன்னி ராசிக்கு இந்த திதி நன்மை தராது.

    நவமி:

    இந்த திதியின் அதிதேவதை அம்பிகை என்பதால் சத்ரு ஜெயம் உண்டாகும். சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் ஸ்ரீ ராமரை வணங்கலாம். சிம்ம, விருச்சிக ராசிக்கு சூன்ய திதி என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    தசமி:

    இந்தத் திதிக்கு அதி தேவதை எமதர்மராஜன். அனைத்து விதமான சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப் பயணங்களுக்கு உகந்த நாளிது. கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் சக்தி வழிபாடு செய்யலாம். சிம்மம், விருச்சிக ராசிக்கு இந்த திதி சுப பலன் தராது.

    ஏகாதசி:

    இதன் அதிதேவதை மகா விஷ்ணு ஆவார். விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.

    இதில் பிறந்தவர்கள் பெருமாளை வழிபடலாம். தனுசு, மீனம் ராசியினர் இந்த திதியை விலக்குவது நல்லது.

    துவாதசி:

    இதன் அதிதேவதை விஷ்ணு ஆவார்.மதச்சடங்குகளில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் மகாவிஷ்ணுவை வணங்க காரிய சித்தி உண்டாகும். துலாம்,மகரம் ராசியினருக்கு இந்த திதி சூன்ய பலன் வழங்கும்.

    திரயோதசி:

    இதன் அதிதேவதை நந்தி தேவர். இந்த திதியினர் சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.ரிஷபம், சிம்ம ராசிக்கு இந்த திதி சிறப்பான பலன் வழங்காது.

    சதுர்த்தசி:

    இந்த திதியின் அதிதேவதை காளி, ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. சுபகாரியங்களை தவிர்ப்பது நல்லது. துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுக்கலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் பைரவர், காளி போன்ற தெய்வங்களை வணங்கலாம். மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ராசிக்கு இந்த திதி சூன்ய பலன்களை வழங்கும்.

    பவுர்ணமி:

    இதன் அதிதேவதை பராசக்தி. மங்கள காரியங்களில் ஈடுபடலாம். காரியசித்தி தரும் விரதங்களை மேற்கொள்ளலாம். இந்த திதி அனைத்து ராசிக்கும் பயன்படும்.

    அமாவாசை : இதன் அதிதேவதை சிவன், சக்தி.பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான,தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். இந்த திதி அனைத்து ராசிக்கும் பயன்படும்.

    திதிகளை சுப , அசுப மற்றும் மத்திம திதிகள் என மூன்றாக வகைப்படுத்தலாம். துவிதியை திருதியை, பஞ்சமி, தசமி, திரயோதசி , சதுர்த்தசி ஆகிய திதிகள் சுப நிகழ்வுகளுக்கு மிக மிக உன்னதமானது.பிரதமை, சதுர்த்தி, அஷ்டமி, நவமி மற்றும் அமாவாசை ஆகிய திதிகளில் அசுபத்துவம் நிறைந்து இருப்பதால் சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். சஷ்டி, சப்தமி , ஏகாதசி, துவாதசி, மற்றும் சதுர்த்தசி ஆகியவை மத்திமமான திதிகள் என்பதால் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளுக்கு பயன்படுத்தலாம்.

    திதி சூன்யம்

    சூரிய சந்திரர்களின் கதிர்வீச்சுகள் 12 ராசிகளுக்கும் பரிபூரணமாக கிடைக்கும் போது மட்டுமே ஒவ்வொரு ராசியும் அதில் நின்ற கிரகங்களும் தத்தம் வேலையை பரிபூரணமாக நடத்தும். சூரிய சந்திரருடைய கதிர்வீச்சு கிடைக்காத ராசியே திதிகளின் விஷ சூன்ய ராசிகள் எனப்படும்.

    அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மட்டுமே பன்னிரு ராசிகளுக்கும் பரிபூரண கதிர் வீச்சு கிடைக்கிறது. மற்ற திதிகளில் பிரதமை முதல் திரயோதசி வரையான நாட்களில் 2 ராசிகள் சூன்யம் அடைகின்றன சதுர்த்தசி திதியில் மட்டும் 4 ராசிகள் சூன்யம் அடைகின்றன. திதி சூன்ய ராசிகள் ஜாதக பலன்களை தீர்மானம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம் அடைந்து வலிமை பெற்ற லக்ன சுப கிரகங்கள் கூட மிகுதியான அசுப பலனையும் அசுப கிரகங்கள் சுப பலனையும் தந்து விடும். சூன்யமடைந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகமும் வலிமை இழக்கும்.

    இரண்டு ஆதிபத்யம் கொண்ட கிரகத்தின் ஒரு வீடு சூன்யமடைந்தாலும் மற்ற வீட்டிற்கு சுப பலம் ஏற்படும். ஒரே கால கட்டத்தில் 2 பாவகம் பாதிக்கும் சூழலும் சில சமயம் உருவாகும்.

    திதியை பிடித்தால் விதியை வெல்லலாம் என்பதால் சூன்யம் அடைந்த திதியின் அதி தேவதையை வழிபடலாம் அல்லது சூன்யம் அடைந்த கிரகத்தை வலிமைப்படுத்த பாதிப்பு குறையும். பலர் தங்களின் ராசி, நட்சத்திரம், லக்னம் என்னவென்று கேட்டால் உடனே கூறி விடுவார்கள். ராசி, நட்சத்திரம் அல்லது லக்னம் இவற்றை வைத்து தான் பெரும்பாலும் பொதுப்பலன்கள் பார்க்கப்படுகின்றன என்பதால் பிறந்த திதிக்கு முக்கியத்துவம் தருவதில்லை.அவரவர் பிறந்த திதியை தெரிந்து கொண்டு அதற்குரிய வழிபாடுகள் மேற்கொண்டல் உங்கள் விதிப்படி அமைய வேண்டிய மகிழ்ச்சியான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.

    • தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர்.
    • மூன்று கடல்களும் சங்கமிக்கும் புனித நீரில் நீராடுவோர் காசி சென்று கங்கையில் நீராட அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    நம்பினோர் கெடுவதில்லை

    நான்கு மறைத் தீர்ப்பு

    அம்பிகையைச் சரண் புகுந்தால்

    அதிக வரம் பெறலாம்

    மூன்று கடல் சங்கமத்தில் ஒரு தலம்

    நீலத்திரைகடல் ஓரத்திலே நின்று நித்தம்

    தவம் செய்யும் குமரி எல்லை

    என்று மகாகவி பாரதியாரால் போற்றப்படும் குமரி எல்லையில் கோவில் கொண்டு தேவி அருள் பாலிக்கும் திருத்தலமே கன்னியாகுமரி..

    பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்துமா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.

    சக்திபீடங்களில் முக்கியமானது:- இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது.

    பிரஜாபதி தட்சனுக்கு மகளாக அவதரித்த தாட்சாயிணி தனது தந்தை புரியும் யாகத்திற்குத் தன் கணவனான சிவபிரானை அழைக்காதது குறித்து பெரிதும் வருத்தமும் கோபமும் கொள்கிறாள்.

    தான் மட்டும் யாகத்திற்குச் செல்கிறாள். ஆனால், தட்சன் செய்த அவமரியாதை காரணமாகயாக குண்டத்தில் விழுந்து தன் உயிரை விடுகிறாள். இதை அறிந்த சிவபிரான் மிகுந்த கோபம் கொண்டு சதியின் உடலை ஏந்தியவாறே தாண்டவம் ஆடி அலைகிறார்.

    இதைக் கண்ணுற்ற மகாவிஷ்ணு சதியின் உடலை தனது சக்கரத்தால் 51 துண்டுகளாக ஆக்க, அவை பாரத தேசத்தின் பல்வேறு பகுதிகளில் விழுகின்றன. பெரும் வரங்களை நல்கும் சக்தி பீடங்களாக அந்த இடங்கள் மாறி அந்த இடங்களில் எல்லாம் அன்னை ஆட்சி புரிந்து பக்தர்களுக்கு இன்றளவும் அருள் பாலித்து வருகிறாள்.

    தேவியின் முக்கிய அங்கமான முதுகுப் பகுதி விழுந்த இடமே சக்தி பீடமான கன்னியாகுமரி!

    கன்னியாகுமரி தல வரலாறு:

    இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா.

    மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.

    சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர்.

    அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்னியாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.

    கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.

    ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.

    மண நாளன்று தாணுமாலயன் கன்னியாகுமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.

    சிவபிரான் விடிந்துவிட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.

    திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.

    இதுவே கன்னியாகுமரி கடற்கரை வண்ண மயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பாணாசுரன் கன்னியாகுமரி அழகில் மயங்கித் தன்னை மணக்கு மாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவி யானவள் வானுயர வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.

    தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள்.

    குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.

    தேவியின் மூக்குத்தி:- தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அம்மன் அணிந்திருக்கும் மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது.

    தேவியின் மூக்குத்தி பற்றி லலிதா சஹஸ்ரநாமத்தில் 20வது நாமமாக வருவது - ஓம் தாராகாந்தி திரஸ்காரி நாஸாபரண பாஸுரா என்பதாகும்.

    இதன் பொருள் : சுக்ர நட்சத்திரத்தின் ஒளியைத் தோற்கடிக்கக்கூடிய பிரகாசமான மூக்குத்தியுடன் விளங்குபவள் என்று பொருள்.

    அவள் சூரியனையும் சந்திரனையும் தனது இரு காதுகளில் தாடங்கங்களாய் (ஓலைகளாய்) தரித்துக் கொண்டிருப்பவள்.

    கதம்பத்தின் துளிர்களை தன் காதுகளில் கர்ணப்பூப்போல தரித்திருந்து தெய்வீகப் பேரழகுடன் மனதை மயக்கும் உருவத்தை உடையவள். ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களைக் கொண்டவள். இப்படிப்பட்ட தெய்வீக திருவுருவத்திற்கு மூக்குத்தி அதிக சோபையைத் தருவதில் ஆச்சரியமில்லை.

    கோவில் அமைப்பு: இப்படிப்பட்ட ஒளி பொருந்திய மூக்குத்தியின் ஒளியால் தூரத்தில் வரும் கப்பல்கள் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.

    கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்ப்பகிரகத்தில் எழுந்தருளி உள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள். கோவிலின் உள்பிரகாரத்து தென் மேற்குக் கோடியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அங்குள்ள மணி மண்டபம் ஆறு தூண்களுடன் அமைந்திருக்க அதன் முன்னே சபா மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    திருமணம் கைகூடும் தலம்: திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்தத் தலத்தில் வந்து அம்மனை வழிபட்டால் வெகு விரைவில் நல்ல முறையில் திருமணம் நடக்கும் என்பது காலம் காலமாக பெரியோர்கள் கண்ட அனுபவம்.

    இங்கு மூன்று கடல்களும் சங்கமிக்கும் புனித நீரில் நீராடுவோர் காசி சென்று கங்கையில் நீராட அனைத்துப் பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

    அம்பிகையைப் பற்றி அறநூல்கள் குறிப்பிடும்போது வெவ்வேறு ரூபங்களை உடையவள் அவள் என்று குறிப்பிடுகின்றன. அத்தோடு அவரவர் வேண்டுதலுக்குத் தக்க பலன்களை அளிக்கும் அவளுக்கு வெவ்வேறு வர்ணங்களும் உண்டு என்பதோடு எண்ணிக்கையற்ற திருப்பெயர்களால் அவள் குறிப்பிடப்படுகிறாள் என்றும் கூறுகின்றன.

    இந்த வகையில் மூன்று கடல்களும் சங்கமிக்கும் சங்கமத்தில் கன்னியாகுமரி என்ற நாமத்தோடு சக்தி வாய்ந்த சக்தி பீடத்தில் எழுந்தருளி இருக்கும் அம்மன் பக்தர்களின் வழிபாட்டை உகந்து ஏற்று அவர்களின் வேண்டுதலுக்குத் தக்கபலன்களை அளிப்பாள் என்பது இறுதியான உறுதி ஆகிறது.

    விவேகானந்தர் தவம் புரிந்த இடம்: கன்னியாகுமரி இந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் சுவாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டு அவரது திருவுருவச் சிலை நிறுவப்பட்டு 1972-ல் இது திறக்கப்பட்டது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.

    ஸ்ரீ பாதப் பாறை: இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப் பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

    கன்னியாகுமரியில் 133 அடி உயரமுள்ள கம்பீரமான திருவள்ளுவர் சிலையும் உள்ளது.குமரியில் கடல் கூடும் சங்கம இடத்தில் இருந்து சூர்யோதயமும் சூர்யாஸ்தனமும் பார்ப்பது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும். அம்மனின் தரிசனத்தோடு அம்மனின் படைப்பு அற்புதத்தையும் இங்கு பார்த்து வியக்கலாம்.

    ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!

    ஓம் சக்தி ஓம் பராசக்தி ஓம் சக்தி ஓம்!!

    தொடர்புக்கு:-

    snagarajans@yahoo.com

    • மறைத்தும் ஒளித்தும் செல்போனை பயன்படுத்தி வேண்டாத பல குப்பைகளை மண்டையில் இறக்கி வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளம் பிராயத்தினர் ஏராளம்.
    • செல்போனைவிட சிறந்த வழிகள் உறவு, நட்பு, புத்தகம் என்பதால் இவற்றின் முக்கியத்து வத்தினை உணரச் செய்ய வேண்டும்.

    அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்வினை பலர் அறிந்திருக்கலாம். இருப்பினும் அதனை மீண்டும் இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    ஒரு இளம்பெண் போலீஸ் அவசரப் பிரிவிற்கு போன் செய்கிறாள். எனக்கு ஒரு பீட்சா வேண்டும் எனக் கூறுகின்றாள். மறுபுறத்தில் இருந்த ஆபீசர் தவறான போன் என்று நினைத்து 'ராங்க் நம்பர்' என்று கூறி வைத்து விடுகின்றார். அப்பெண் மீண்டும் போன் செய்கின்றாள். நான் சொல்வதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. எனக்கு ஒரு 'பீட்சா' வேண்டும் என்கின்றாள்.

    ஆபீசர் ஒரு சில நொடிகளில் நிலைமையை புரிந்து கொண்டார். உடனே அவர் "நான் கேட்பதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள்" என்றார்.

    உங்கள் வீட்டில் மர்ம நபர்கள் உள்ளார்களா?'

    ஆமாம். எனக்கு பெப்பர் தூள் போட வேண்டும்

    உங்களை உடல் ரீதியாக காயப்படுத்தி உள்ளானா?

    இல்லை. எனக்கு கொடை மிளகாய் வேண்டாம்

    இப்படி பல கேள்விளை அவர் கேட்க அந்த இளம்பெண் கெட்டிக்காரத்தனமாக பதில் கூறினாள்.

    சிறிது நேரத்தில் அவள் வீட்டில் அழைப்பு மணி ஒலித்தது. கதவை திறந்தவுடன் 'பீட்சா' கொண்டு வருபவர் போல் உடை அணிந்த போலீஸ் 'பீட்சா'வுடன் வாசலில் இருந்தனர். நொடிப் ெபாழுதில் ஒளிந்திருந்த மற்ற போலீசார் உள்ளே நுழைந்தனர். மர்ம நபர்களை சுற்றிப் பிடித்தனர். அப்பெண்ணை காப்பாற்றினார்கள். அப்பெண் பாராட்டப்பட வேண்டியவள்.

    நம் குழந்தைகளுக்கு நாம் இது போல் சில ரகசிய தற்காப்பு முறைகளை சொல்லிக் கொடுத்துள்ளோமா? சிறு குழந்தைகளுக்குக் கூட சொல்லிக் கொடுக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதனை உணர்ந்து செயல்படு வோமாக...

    இதே போன்று மற்றொரு நிகழ்வினையும் பார்ப்போம். இதுவும் வெளிநாட்டில் நடந்தது தான்.

    வெளிநாடுகளில் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவியரின் ஸ்கூல் பஸ் என்பதற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பள்ளி பஸ் என்றால் முன்னும், பின்னும் பக்கவாட்டில் மிக தள்ளியே மற்ற வாகனங்கள் செல்லும். பஸ் நின்றால் பின்னால் வெகு தொலைவில் தள்ளி மற்ற வாகனங்கள் நிற்கும். குழந்தைகளின் பாதுகாப்பு என்பதில் மிக கண்டிப்பாய் இருப்பர்.

    இந்த நிலையில் ஒரு ஸ்கூல் பஸ்சினை ஒரு டிரைவர் ஓட்டி செல்கிறார். திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு விட்டது. அவரும் குழந்தைகள் நலன் கருதி பஸ்சை நிறுத்த முயலுகிறார். அவரால் முடியவில்லை. இதை கவனித்த பஸ்சில் இருந்த 7-ம் வகுப்பு சிறுவன் ஒருவன் ஓடி வந்து அவருக்கு உதவி பஸ்சை ஓரமாக நிறுத்துகிறார். வண்டியில் யாருக்கும் பாதிப்பில்லை. வெளியில் எந்த வண்டியுடனும் மோதவில்லை. அதற்குள் போலீஸ் ஆம்புலன்ஸ் வந்து நிைலமை கட்டுக்குள் வந்தது.

    டி.வி., பேப்பர், உலகம் அந்த சிறுவனை பாராட்டியது. பஸ்சில் இத்தனை பேர் இருக்க இந்த பையன் மட்டும் டிரைவரை எப்படி கவனித்தார்? எப்படி உதவினார்? என்று கேட்ட போது கிடைத்த பதில் என்ன தெரியுமா? வண்டியில் அனைத்து சிறுவர்களும் செல்போனில் மூழ்கி இருந்தனர். இச்சிறுவனின் பெற்றோர் கடும் முயற்சி எடுத்து இப்பையன் செல்போனுக்கு அடிமை ஆகாமல் வைத்துள்ளனர். இதனால் இச்சிறுவன் வெளிஉலகை, தன்னை சுற்றி நிகழ்பவனவற்றை பார்க்கிறான். இதனால் தான் பல உயிர்களை அச்சிறுவனால் காப்பாற்ற முடிந்தது. மற்றவர்கள் தன் உயிரை காத்துக் கொள்ள கூடிய விழிப்புணர்வு கூட இல்லாமல் இருந்துள்ளனர்.

    நம் ஊரில் இந்த நிலை மிக அதிகமாக உள்ளது. மறைத்தும் ஒளித்தும் செல்போனை பயன்படுத்தி வேண்டாத பல குப்பைகளை மண்டையில் இறக்கி வாழ்க்கையை அழித்துக் கொள்ளும் இளம் பிராயத்தினர் ஏராளம்.

    பெற்றோர்கள் இதனை கடுமையாக போராடி ஜெயிக்கத் தான் வேண்டும்.

    நல்ல முன் மாதிரிகள் தேவை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் விட சிறந்த முன் மாதிரிகள் யார் இருக்க முடியும். எனவே அவசியமின்றி செல்போனில் மூழ்குவ தனை பெற்றோர்கள் தவிர்த்தாலே போதும். பிள்ளைகளை கட்டுப்பாட்டிற்குள் நம்மால் கொண்டு வர முடியும்.

    இவ்வளவு நேரம் விளையாட்டு, இவ்வளவு நேரம் செல்போன் என எதனையும் முறையாக வரையறுத்து அதனை பழக்கப்படுத்த வேண்டும்.

    * செல்போனைவிட சிறந்த வழிகள் உறவு, நட்பு, புத்தகம் என்பதால் இவற்றின் முக்கியத்து வத்தினை உணரச் செய்ய வேண்டும்.

    * இதைச் செய்யாதே எனக் கூறும் பொழுது இதனைச் செய் என்ற மாற்று வழியையும் காட்ட வேண்டும்.

    * சாப்பிடும் பொழுது இதனை பயன்படுத்தக் கூடாது. உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

    * அடிக்கடி சில நிமிடங்கள் ஆழ்ந்து மூச்சை இழுத்து விடுவது செய்யும் வேலையில் கவனத்தைக் கூட்டும்.

    * இந்த நொடியில் இருக்க வேண்டும். கடந்த காலம், எதிர்காலம் என்ற நினைப்புகள் வேண்டாம்.

    * அன்றாடம் குறித்த நேரத்தில் தியானம் செய்யுங்கள்.

    * சில நிமிடங்கள் என ஆரம்பித்து உங்களால் முடியும் நேரம் வரை தொடரலாம்.

    * யோகா கண்டிப்பாய் 'ஸ்ட்ரெஸ்' பாதிப்பினை குறைக்கும்.

    தூக்கம் நன்கு இருக்கும். உயர் ரத்த அழுத்தம் குறையும். இவைகளைச் செய்யும் பொழுது மனம் கட்டுப்படுவதால் செல்போனில் மூழ்க மாட்டார்கள்.

    நல்ல முன் மாதிரிகள் கண் எதிரே குழந்தைகளுக்கு அன்றாடம் தேவை. நல்ல பழக்க வழக்கங்கள் தேவை. இவைகள் இல்லாத பொழுது மனிதன் மனம் போன போக்கில் போய் கொடூர தவறுகள் செய்பவனாகிறான். தேவையா? சிந்திப்போம் முயன்று வருங்கால சந்ததியினரை நல்வழி படுத்துவோம்.

    காலையில் உங்கள் பிள்ளைகளுக்கு உங்களால் கீழ்க்கண்ட பழக்கங்களை ஏற்படுத்த முடிகிறதா? உங்களை கண்டிப்பாக சமுதாயம் பாராட்டும்.

    மற்றொரு செய்தியினை நான் காண நேர்ந்தது. ஒரு கல்யாண விருந்தில் 11-ம் வகுப்பு படிக்கும் பையனுக்கு பாட்டி ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார். பையனோ செல் போனில் மூழ்கி இருந்தார்.

    நம் நாட்டில் தாய், தந்தை பாசம், தாத்தா, பாட்டி பாசம் இதற்கு வானம் தான் அளவு. செய்தி உண்மையோ, பொய்யோ தெரியாது. ஆனால் நான் பார்த்த பல வீடுகளில் இவ்வாறு நிகழ்கின்றது. இந்த இடத்தில் நாம் வலியுறுத்த விரும்புவ தெல்லாம் செல்போன் வேண்டாமே என்பதுதான்.

    இன்றைய இளம் பெண்கள் தங்களின் போட்டோக்களை பகிரும் பொழுது அவர்களை அறியாமலேயே அவர்களுக்கு ஆபத்து ஏற்படுகின்றது. ஒரு இளம் பெண் காலர் டியூனாக ஒரு கவர்ச்சியான பாட்டினை வைக்க அதன் மூலம் அப்பெண் வரவழைத்துக் கொண்ட பிரச்சினைகள் ஏராளம், ஏராளம்.

    இன்று அனைவரின் வாழ்விலும் தவிர்க்க முடியாத ஒன்றாக செல்போன் ஆகிவிட்டது. இதன் நன்மைகளும் ஏராளம்தான். கூடவே இளைய தலைமுைறக்கான கடுமையான பாதிப்புகளையும் நாம் பார்க்க வேண்டி உள்ளது.

    முக்கியமாக எந்நேரமும் செல்போனில் மூழ்குபவர்கள் கோபம், படபடப்பு, மனச்சோர்வு இவற்றிற்கு ஆளாகின்றனர். கண் சோர்வு, முதுகுவலி, கழுத்து வலி, கதிர்வீச்சு என ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    ஒருவரின் திறமையை வளர்த்துக் கொள்வதில் பாதிப்பு, உறவுகளுடன் கலந்து பழகாத பாதிப்பு, தனிமை என ஒருவரை நரகத்திற்குள் தள்ளி விடுகின்றன.

    இதனை எப்படி சரி செய்வது?

    எந்த விதத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும் இப்பிரச்சினையை கையாளலாம்? ஆம், நாம் தானே இதனை சரி செய்தாக வேண்டும். கீழ்கண்ட முறைகளை முயற்சி செய்து பார்ப்போம்.

    முதலில் குழந்தைகள் திருந்த வேண்டும் என்றால் அவர்களுக்கு காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் நீர் அருந்துகின்றார்களா?

    * செல்போனை பார்க்காமல் இருக்கின்றார்களா?

    * 20 நிமிடம் உடற்பயிற்சி செய்கின்றார்களா?

    * 20 நிமிடம் மூச்சுப் பயிற்சி செய்கின்றார்களா?

    * அன்றைய நாளின் வேலைகளை குறிப்பெடுத்து செய்கின்றார்களா?

    * காலையில் குளிக்கின்றார்களா?

    * காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்கின்றார்களா?

    * உண்மையில் நீங்கள் சிறந்த பெற்றோர்தான். வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கிறீர்களா?

    * குறிக்கோள் இருக்க வேண்டும்.

    * உயர்வான, பண்பான குறிக்கோள்கள் வேண்டும்.

    * கடினமாய் உழைக்க வேண்டும்.

    * செய்யும் வேலையினை, படிக்கும் படிப்பினை விரும்பி செய்ய வேண்டும்.

    * படிப்பு, விளையாட்டு, பொழுது போக்கு, நண்பர்கள் இவைகளை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * தகுதியானவர்களிடம் இருந்து அறிவுரை பெற வேண்டும்.

    * உடல் நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

    * அவர்களின் மூலதனம் அவர்களின் மூளைதான். இது தெரிந்தால் அவர்கள் மனம் கண்ட கேளிக்கைகளில் மூழ்காது.

    * ரத்த உறவுகளை கொல்லும் குடும்ப உறுப்பினர்கள், பாலியல் தொல்லையால் சிறுமிகளை நாசமாக்கும் சிறுவர்கள் என பயங்கரமான செய்திகளை அன்றாடம் கேள்வி படுகின்றோமே இவை அனைத்துமே மனம், புத்தி இவைகளின் கோணல்கள்தான் காரணமாகின்றன.

    இப்படி ஒரு வாழ்க்கை தேவையா? இது கண்டிப்பாய் ஒரு மனிதனுக்கு நிம்மதி தராது. மாற்றுவோம். அவரவரால் ஆன முயற்சியினை செய்து மாற்றுவோம்.

    இளைய சமுதாயத்தினரின் மன நலத்தினை ஆரோக்கியமாக மாற்றுவோம். இது இல்லாமல் உடல் நலம் மட்டுமே என்பது ஓட்டை பானையில் அமிர்தம் ஊற்றுவதற்கு சமம். எனவே முயற்சிப்போம்! மாற்றுவோம்!!

    • டைரக்டர் என்று ஒருவர் இருப்பார். அவர் சொல்லித்தருவார். அதை கேட்டு நடிக்கணும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது.
    • நினைவு தெரியாத காலத்தில் நடந்த அந்த நினைத்தாலே இனிக்கும் காட்சிகளை இப்போதும் போட்டு பார்த்து என்னைப் பார்த்து நானே ஆச்சரியப்படுவது உண்டு.

    அச்ச்சோ...

    பாப்பா...ம்கூம்...

    என்று என் அருகில் அமர்ந்து இருந்த சிவாஜி சார் நான் ஒரு பொறித்த மீனை எடுத்ததும் எடுக்க கூடாது என்பது போல் சைகை காட்டினார்.

    ஆசைப்பட்டு சாப்பிட எடுத்ததை தடுத்துவிட்டாரே என்று நினைத்து என் முகம் வாடிவிட்டது.

    அதை கவனித்தவர் சிரித்துக்கொண்டே `அங்கிள் இப்படி மீனை எடுப்பேனா... இப்படி முள்ளை எடுப்பேனா... அதை இப்படி வைப்பேனா... அப்புறம் மீனை மட்டும் பாப்பாவுக்கு ஊட்டுவேனா... என்றபடி எனக்கு ஊட்டியதும் சிரித்தபடியே சாப்பிடுவேன்.

    இப்படித்தான் மீன் மற்றும் இறைச்சி துண்டுகளை முள், எலும்பு இல்லாமல் பக்குவமாக பிய்த்து எடுத்து எனக்கு ஊட்டுவார்.

    படப்பிடிப்பு தளத்தில் சிவாஜி சார் இருந்தால் மதிய சாப்பாடு அவரோடுதான். தனது பேத்திக்கு ஊட்டுவது போல் எனக்கு அவ்வளவு பக்குவமாக ஊட்டுவார். அந்த நினைவுகளை இன்று நினைக்கும் போதும் நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று பெருமைபடுவேன்.

    நெஞ்சங்கள் படத்தில் நடிக்க அம்மாவும், அப்பாவும் தான் என்னை தினமும் ஷூட்டிங் அழைத்து செல்வார்கள்.

    கேமரா முன்பு இப்படி நிற்க வேண்டும். டைரக்டர் என்று ஒருவர் இருப்பார். அவர் சொல்லித்தருவார். அதை கேட்டு நடிக்கணும் என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

    முதல் சீன்... மஞ்சள் நிறத்தில் பூ போட்ட ஒரு பிராக்கை கொடுத்து அணிய சொன்னார்கள். அந்த உடை எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது.

    ஒரு அறையில் என்னை கொண்டு நிற்க வைத்தார்கள்.

    `பாப்பா, நான் ஓ.கே. ரெடி என்றதும் நீ டாடி என்று கூப்பிட்டுக்கொண்டே பக்கத்து அறைக்கு ஓட வேண்டும். சரியா? என்றார்கள்.

    சரி என்பதுபோல் நானும் தலையை ஆட்டினேன். அவர்கள் சொன்னதும் ஓடினேன். அவ்வளவு தான். எப்படி படமாக்கினார்கள். அது திரையில் எப்படி வரும்? என்பதெல்லாம் எனக்கு தெரியாது.

    படத்தின் கதைப்படி நான் பணக்கார வீட்டு குழந்தை. எனது பெயர் பாலா. சிவாஜி சார், லெட்சுமி ஆண்டி, மஞ்சுளா ஆண்டி, விஜயகுமார் அங்கிள் எல்லோரும் என்னை தூக்கி வைத்து கொஞ்சுவார்கள். கையை பிடித்துக்கொண்டு அங்கும் இங்கும் அழைத்து செல்வார்கள். கையை பிடித்தபடி என்னோடு டான்ஸ் ஆடுவார்கள். அப்போது நானும் சந்தோசமாக ஆடுவேன்.

    நெஞ்சங்கள் படத்தை தயாரித்ததும் விஜயகுமார் அங்கிளும் மஞ்சுளா ஆண்டியும் தான். அப்போது அவர்கள் வீடு வேளச்சேரியில் இருந்தது. அந்த வீட்டிலும் படப்பிடிப்பு நடந்தது.

    படம் முழுக்க கதை என்னை சுற்றியே வரும். என்னை தியாகராஜன் சார் கடத்தி செல்வார். சிவாஜி சார் மீட்பார். அம்மா-அப்பா என்னை தேடிக்கொண்டிருப்பார்கள்.

    படத்தில் சிவாஜி சார் பாப்பா... பாப்பா... என்று என்னை அழைப்பார். ஒருமுறை நான் கோபத்தில் என் பெயர் பாப்பா இல்லை... பாலா... என்று சொல்லிவிடுவேன். நிஜமாகவே படத்தில் அப்படி ஒரு டயலாக் தேவைப்பட்டிருந்தது. அது யதார்த்தமாக அமைந்ததும் அப்படியே வைத்துவிட்டார்கள்.

    படப்பிடிப்பு தளத்தில் எல்லோருக்கும் நான் தான் செல்லப் பிள்ளை. ஆச்சி மனோரமா, லெட்சுமி ஆண்டி, மஞ்சுளா ஆண்டி எல்லோருமே ஷூட்டிங் வரும்போது எனக்காக `சாக்லேட்' வாங்கி வருவார்கள். அவர்களிடம் சாக்லேட் வாங்குவதற்காகவே காத்திருப்பேன்.

    சாக்லேட்டை வாங்கியதும் ஓட முயன்றால்.... பாப்பா... தேங்க்ஸ் எல்லாம் கிடையாதா என்று பாவமாக கேட்பது போல் கேட்பார்கள்.

    தேங்க்ஸ் என்றதும், வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா? உம்மா... என்று கன்னத்தை காட்டி கொஞ்சுவார்கள். நான் ஒரு முத்தம் கொடுத்தால் போதும் அவர்கள் என்னை தூக்கி வைத்து முத்தம் தந்து கொஞ்சி மகிழ்வார்கள்.

    மதியம் உணவு இடைவேளை வந்தால் போதும். சிவாஜி சார் என்னை அழைத்து பாப்பா... வாங்க என்று அவர் அருகில் அமர வைத்துவிடுவார்.

    அவர் வீட்டில் இருந்து பெரிய டிபன் கேரியரில் நிறைய சாப்பாடு வந்திருக்கும். மற்றவர்களுக்கும் கொடுப்பார். எனக்கு காரம் இல்லாமல் பார்த்துக்கொள்வார். பருப்பு, நெய் போட்டு பிசைந்து தருவார். எனக்காக பிரத்தியேகமாக கொண்டுவருவார் என்று நினைக்கிறேன்.

    நான் போதும் என்று சொன்னால் `அதற்குள் பாப்பாவுக்கு வயிறு ரொம்பிடுச்சா...' இன்னும் கொஞ்சம் என்று குழந்தை மாதிரியே பேச ஆரம்பித்துவிடுவார்.

    யாருக்கு இப்படிப்பட்ட பாக்கியம் கிடைக்கும்?

    தியாகராஜன் சார் என்னை கடத்தி செல்வது, அப்புறமாக என்னை அவரிடம் இருந்து சிவாஜி சார் மீட்பது, அவரது பாதுகாப்பில் இருக்கும் போது என்னை மீண்டும் கடத்த வருவது... அப்போது சண்டை நடக்கும். அதை பார்த்து நிஜமாகவே பயந்து அழுது விடுவேன். காட்சிக்கு அதுவே தத்ரூபமாக அமைந்து இருந்தது.

    நினைவு தெரியாத காலத்தில் நடந்த அந்த நினைத்தாலே இனிக்கும் காட்சிகளை இப்போதும் போட்டு பார்த்து என்னைப் பார்த்து நானே ஆச்சரியப்படுவது உண்டு.

    இன்னும் ஆச்சரியமான நினைவுகளை அடுத்தவாரம் பகிர்கிறேன்.

    ×