கிரிக்கெட் (Cricket)

மூத்த வீரர்களுக்கு ஓய்வு- இளம் வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி?

Published On 2024-06-19 09:09 GMT   |   Update On 2024-06-19 09:09 GMT
  • சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை நாளை எதிர் கொள்கிறது.
  • டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

பிரிட்ஜ்டவுன்:

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.

குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரை இறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். இதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முன்னேற இந்திய அணி முயற்சிக்கும்.

இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், கோலி, பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், சாம்பியன்ஸ் டிராஃபி தொடர்களில் கவனம் செலுத்த ஓய்வு வழங்கப்பட உள்ளதாகவும், புதுமுக, இளம் வீரர்களை உள்ளடக்கிய அணி ஜிம்பாப்வேவுக்கு செல்லும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

Similar News