கிரிக்கெட்
null

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இருந்து வெளியேறும் ரிஷப் பண்ட்?

Published On 2024-07-20 09:05 GMT   |   Update On 2024-07-20 09:40 GMT
  • டெல்லி அணிக்கு அதிக ரன்கள் அடித்தவராக ரிஷப் பண்ட் உள்ளார்.
  • சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனத் தகவல்.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும், அதிக ரன்கள் அடித்தவராகவும் ரிஷப் பண்ட் உள்ளார்.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் ரிஷப் பண்ட்-ஐ விடுவிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டைரக்டர் சவுரவ் கங்குலி ரிஷப் பண்ட்-க்கு ஆதரவாக உள்ளார். இருந்த போதிலும் டெல்லி அணி இதற்கு தயாராகி வருகிறது.

ஒருவேளை டெல்லி அணி ரிஷப் பண்ட்-ஐ விடுவித்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை மெகா ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே அணியில் இருந்து எம்.எஸ். டோனி ஓய்வு பெற இருக்கிறார். இதனால் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை சிஎஸ்கே அணி அடுத்ததாக தயார் செய்ய வேண்டும். இதனால் ரிஷப் பண்ட்-ஐ ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News