செய்திகள் (Tamil News)

திருவள்ளூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளை

Published On 2018-05-13 11:32 GMT   |   Update On 2018-05-13 11:32 GMT
திருவள்ளூர் அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அகரம் தெருவை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (51). தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு வேப்பம்பட்டில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இரவு வீடு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 8 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் கொள்ளை போனது தெரிந்தது.

இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News