செய்திகள்

மாமல்லபுரம் அருகே கார் மோதி வாலிபர் பலி

Published On 2018-05-18 08:25 GMT   |   Update On 2018-05-18 08:25 GMT
மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் உள்ள அடுக்கு மாடி கட்டுமான நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தவர் கமல நாதன் (வயது 36). இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் மேலகுமாரமங்கலம் ஆகும்.

இவர் கல்பாக்கத்தில் உள்ள நண்பரை பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். கடம்பாடி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் வந்த போது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி நோக்கி சென்ற கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கமலநாதன் பலியானார்.#tamilnews
Tags:    

Similar News