செய்திகள் (Tamil News)
மதுரை வில்லாபுரத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் ரூ.2 லட்சம் பொருட்கள் கொள்ளை
மதுரை வில்லாபுரத்தில் மத்திய அரசு அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றனர். #Robbery
மதுரை:
மதுரை வில்லாபுரத்தில் மத்திய அரசின் மண்டல நெடுஞ்சாலை ஆய்வு மையம் உள்ளது. சம்பவத்தன்று மாலை வழக்கம் போல் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அலுவலக அறையில் இருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள ஆய்வக பொருட்கள், கம்ப்யூட்டரை திருடிக் கொண்டு தப்பினர்.
இது குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் செய்யது முகமது கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். #Robbery