உள்ளூர் செய்திகள்
- 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பயணிகளிடம் காசு கேட்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தார்.
- அவர் உடல்நிலை சரியில்லாமல் சாலையோரம் படுத்து கிடந்தார்.
சேலம்:
சேலம் புதிய பஸ் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பயணிகளிடம் காசு கேட்டு பிச்சை எடுத்து கொண்டிருந்தார். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லாமல் சாலையோரம் படுத்து கிடந்தார். கடந்த வாரம் அவரை பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் அந்த முதியவர் திடீரென உயிரிழந்தார். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.