உள்ளூர் செய்திகள்

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2023-05-21 09:03 GMT   |   Update On 2023-05-21 09:03 GMT
  • வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
  • மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார்.

மதுரை

திடீர்நகரை சேர்ந்த ஜெயராஜ் மகன் சாலமன் ராஜா (40). இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பவத்தன்று மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். இதற்கு மனைவி மறுத்துவிட்டார். இதில் மனமுடைந்த சாலமன் ராஜா வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஜெய்ஹிந்த்புரம் முதல் தெருவை சேர்ந்த முகமது இக்பால் மகன் முபிஸ் ரகுமான் (24). இவருக்கு சிறு வயது முதல் உடல் நலக் கோளாறு இருந்தது. மூச்சு திணறலும் இருந்து வந்தது. சம்பவத்தன்று இவர் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே வாலிபர் முபிஸ்ரகுமான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

Similar News