உள்ளூர் செய்திகள் (District)
தூய்மை பணியாளர்களுக்கு மனநல பயிற்சி முகாம்
- தேர்வு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட மனநல திட்டம் சார்பில் போதை பொருள் அடிமையில் இருந்து மீளுவது, தொடர்பான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை மாவட்ட மனநல மருத்துவர் அளித்தனர்.
- முகாமில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை தேர்வு நிலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட மனநல திட்டம் சார்பில் போதை பொருள் அடிமையில் இருந்து மீளுவது, மனச் சிதைவு பாதிப்பிலிருந்து மீளுவது போன்ற நோய்களுக்கு மனநல திட்டம் தொடர்பான அறிவுரைகள் மற்றும் பயிற்சிகளை மாவட்ட மனநல மருத்துவர் ஜெயந்தி, மனநல ஆலோசகர் ரமேஷ் ஆகியோர் அளித்தனர். நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி தலைவர் சேரன், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். முகாமில் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.