உள்ளூர் செய்திகள்

சேலம் புதிய பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த முதியவர் சாவு

Published On 2023-05-01 10:02 GMT   |   Update On 2023-05-01 10:02 GMT
  • கடந்த மாதம் 15-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், மயங்கி கிடந்தார்.
  • 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சேலம்:

சேலம் புதிய பஸ் நிலையத்தில், கடந்த மாதம் 15-ந் தேதி சுமார் 60 வயது மதிக்கத்தக்க நபர், மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம், சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரை பரிசோதித்த டாக்டர்கள், முதியவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தனர். உயிரிழந்த முதியவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரி யவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News