உள்ளூர் செய்திகள்
சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த முதியவர் திடீர் சாவு
- 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார்.
- தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த அரசு ஆஸ்பத்திரி போலீசார் முதியவரின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். அவரது 2 கால் முட்டி பகுதிகளில் காயத்தழும்பு உள்ளன. முதியவர் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.