உள்ளூர் செய்திகள் (District)

பொள்ளாச்சியில் வாலிபர் தற்கொலை

Published On 2023-05-06 09:58 GMT   |   Update On 2023-05-06 09:58 GMT
  • அடிக்கடி தனது தாயிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்
  • விரக்தி அடைந்து அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோவை,

கோவை பொள்ளாச்சி, பாலக்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் விமல்பிரபு (24). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் என்ஜினீயரிங் படித்து விட்டு ஐ.டி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வருகிறார்.

விமல்பிரபுவிற்க்கு குடிபழக்கம் உள்ளது. இவர் அடிக்கடி தனது தாயிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். அத்துடன் பணம் தராவிட்டால் விஷம்குடித்து இறந்து விடுவதாகவும் மிரட்டி வந்தார்.

நேற்று மீண்டும் தனது தாயிடம் ரூ.2 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசார் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News