செய்திகள் (Tamil News)

தமிழ்நாட்டில் 12, 13, 16-ந்தேதிகளில் மோடி 3 நாள் சூறாவளி பிரசாரம்

Published On 2019-03-30 06:31 GMT   |   Update On 2019-03-30 08:30 GMT
பிரதமர் மோடி தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 12,13 மற்றும் 16 ஆகிய 3 தேதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம், கோவை, தேனி, சேலம் உள்பட 5 பிரசார கூட்டங்களில் அவர் பேச உள்ளார் #LokSabhaElections2019 #Modi
சென்னை:

பிரதமர் மோடி தமிழகத்தில் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

ஏற்கனவே தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு திருப்பூர் மற்றும் கன்னியாகுமரியில் பிரசார கூட்டங்களில் பேசினார்.

தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா 5 இடங்களில் போட்டியிடுகிறது. எனவே பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டும் வகையில் மோடி 3 நாட்கள் பிரசாரத்தில் ஈடுபடுகின்றார்.


அடுத்த மாதம் (ஏப்ரல்) 12, 13 மற்றும் பிரசார நிறைவு நாளான 16 ஆகிய 3 தேதிகளில் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். ராமநாதபுரம், கோவை, தேனி, சேலம் உள்பட 5 பிரசார கூட்டங்களில் அவர் பேச உள்ளார்.

ராமநாதபுரம், கோவையில் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும், தேனியில் அ.தி.மு.க. வேட்பாளரையும் சேலத்தில் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க வேட்பாளர்களுக்கும் அவர் ஆதரவு திரட்டுகிறார்.

அவரது சுற்றுப்பயண திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். #LokSabhaElections2019 #Modi
Tags:    

Similar News