இந்தியா

டெல்லி சுனக்ரி பாக் சாலையில் ராகுலுக்கு பங்களா ஒதுக்கீடு

Published On 2024-08-07 06:40 GMT   |   Update On 2024-08-07 06:40 GMT
  • 3 மாதங்களில் குடியேற ராகுல்காந்தி திட்டம்.
  • டெல்லி சுனக்ரி பாக் சாலையில் அமைந்துள்ளது.

புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்திக்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் புதிய பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லி சுனக்ரி பாக் சாலை எண்.5 என்ற முகவரியில் அவருக்கு பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளதாக பாராளுமன்ற இல்லங்கள் குழு வட்டாரங்கள் கடந்த மாதம் தெரிவித்தன.

இந்த பங்களாவை ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா வதேரா ஏற்கெனவே பார்வையிட்டு சென்றார். எனவே ராகுலுக்கு இந்த பங்களா ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

புதிய பங்களா ஒதுக்கப்பட்டு இருப்பது தொடர்பாக ராகுல் காந்திக்கு தகவல் அனுப்பியுள்ளதாகவும், அவரது பதிலுக்கு ஏற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாராளுமன்ற இல்லங்கள் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவில் ராகுல்காந்தி குடியேற இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த பங்களாவில் தங்குவதற்கு ராகுல்காந்தி சம்மதம் தெரிவித்ததையடுத்து வீடு ஒதுக்கீடு தொடர்பாக அவருக்கு அதிகாரப்பூர்வமாக கடிதம் வழங்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு அதில் அலுவலகமும் அமைக்கப்பட்ட பிறகு அதில் குடியேற ராகுல்காந்தி முடிவு செய்துள்ளார். அதற்கு இன்னும் 3 மாதம் ஆகலாம்.

எனவே புதுப்பிப்பு பணிகள் முடிந்ததும் இன்னும் 3 மாதங்களில் புதிய பங்களாவில் குடியேற ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். அதுவரை அவர் ஜன்பத் இல்லத்தில் தங்கி இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News