6-வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்தார் கெஜ்ரிவால்
- ஐந்து முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
- தற்போது 6-வது முறையாகவும் ஆஜராகுவதை தவிர்த்துள்ளார்.
டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில், அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.
இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி, அமலாக்கத்துறை அலுவலகம் வந்து விசாரணைக்கு ஆஜராகும்படி அதில் குறிப்பிட்டிருந்தது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.
ஐந்து முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராக நிலையில், அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றம் ஆஜராகும்படி தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து 6-வது முறையாக சம்மன் அனுப்பியது. அந்த சம்மனில் இன்று நேரில் ஆஜராகும்படி கேட்டுக்கொண்டிருந்தது.
இதனால் இன்று நேரில் ஆஜராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கெஜ்ரிவால் இந்த முறையும் நேரில் ஆஜராவதை தவிர்த்துள்ளார்.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் "இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான சம்மன் சட்டவிரோதமானது என அக்கட்சி தெரிவித்து வருகிறது.