இந்தியா (National)

டெல்லி மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து இளைஞர் பலி

Published On 2023-07-08 20:18 GMT   |   Update On 2023-07-08 20:18 GMT
  • கிழக்கு கைலாஷில் வசித்து வந்த அஜய் அர்ஜுன் ஷர்மா என தெரியவந்துள்ளது.
  • சிசிடிவி காட்சிகளை சேகரித்து வருகின்றனர்.

டெல்லியில் உள்ள கைலாஷ் காலனி ஸ்டேஷனில் நேற்று மெட்ரோ ரயில் முன் பாய்ந்து 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலியானவர், கிழக்கு கைலாஷில் வசித்து வந்த அஜய் அர்ஜுன் ஷர்மா என தெரியவந்துள்ளது.

இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிசிடிவி காட்சிகளை சேகரித்து வருகின்றனர்.

இதனால் சிறிது நேரம் நிறுத்தப்பட்ட மெட்ரோ ரெயில்கள் பின்னர் இயக்கப்பட்டன.

இதைதொடர்ந்து, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News