இந்தியா

செருப்பு தைக்கும் தொழிலாளி அனுப்பிய காலணியை அணிந்துகொண்ட ராகுல் காந்தி

Published On 2024-08-05 14:07 GMT   |   Update On 2024-08-05 14:07 GMT
  • ராம்சேட்டுக்கு தையல் மெஷின் ஒன்றை ராகுல் காந்தி அனுப்பி வைத்தார்.
  • ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அவர் அனுப்பி வைத்தார்.

கடந்த 2018-ம் ஆண்டு கா்நாடக சட்டசபைத் தோ்தல் பிரசாரத்தின்போது அமித்ஷா கொலை வழக்கின் குற்றவாளி என ராகுல் காந்தி கருத்து தெரிவித்தாா்.

இதையடுத்து ராகுல் காந்தி மீது உத்தரபிரதேச மாநில பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக ஜூலை 26 ஆம் தேதி சுல்தானப்பூருக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார்.

அப்போது சுல்தான்பூரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டை சந்தித்து பேசினார். அவரின் வேலைகள் அன்றாடம் அவர் சந்திக்கும் சவால்கள் குறித்து அவரிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

இந்நிலையில், நேற்று செருப்பு தைக்கும் தொழிலாளி ராம்சேட்டுக்கு ராகுல் காந்தி புதிதாக தையல் மெஷின் ஒன்றை அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து இனி கைகளில் செருப்புகளை தைக்கத் தேவையில்லை என மகிழ்ச்சி தெரிவித்துள்ள ராம்சேட், ராகுல் காந்திக்கு 2 ஜோடி காலணிகளை பரிசாக அனுப்பி வைத்தார்.

ராம்சேட் பாசமாக அனுப்பிய காலணிகளை ராகுல் காந்தி அணிந்து கொண்டுள்ளார். 'எனக்காக அழகான காலணிகளை தைத்து அனுப்பியுள்ளீர்கள்' என தொலைபேசி வாயிலாக அவருக்கு ராகுல்காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

Tags:    

Similar News