இந்தியா (National)
ஆந்திராவில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி
- விபத்தில் 5 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியானார்கள்.
- பஸ்சில் மொத்தம் 45 பேர் பயணித்தனர்.
அமராவதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இன்று அதிகாலை திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 5 பெண்கள், 6 வயது சிறுமி உள்பட 7 பேர் பலியானார்கள். 15 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்சில் மொத்தம் 45 பேர் பயணித்தனர்.